பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்- குணங்குடிஹனீபா

தோழர் உமர்கயான் Umarkayan SJ மற்றும் தோழர் பழனி ஷஹான் Palani Shahan ஆகியோரது 4 வருடங்களுக்கும் மேற்பட்ட கடும் உழைப்பிலும் ஆய்விலும் மாவீரன் பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

"பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்" என்ற அந்த நூல் வெளியிடும் நிகழ்ச்சி  25.2.2018 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. 

அதில் உரையாற்றிய த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்கள் பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். CBI விசாரணை வேண்டும் என்று பேசினார். அந்த வீடியோ தான் இணைப்பில் உள்ளது. 
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_34.html



பழனிபாபா மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வந்தது. அதில் அடிக்குறிப்பில் உள்ளபடி இன்றுள்ளவர்கள் புரியும்டபடி அமைத்துள்ளோம். 
-------------------------------
01- 08- 1996 ல், அல் முஜாஹித் பத்திரிகையில் வந்ததிலிருந்து இன்றைய மக்கள் புரியும் வண்ணம் இந்த ஆக்கம் உள்ளது.

என் இனிய தோழர்களே!
நீண்ட நெடுநாளுக்குபின் உங்களுடன் பொது தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது இந்த தொடர்பறுந்த இரண்டு ஆண்டுகளுக்குள் என்மீது பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் பல அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர்.

எல்லாமே ஆதாரங்கள் இல்லாத அவதூறுகள்
ஃபஸாத் கொலையைவிட கொடியக் குற்றம்- (அல் குர் ஆன்) என்று திருமறை கூறியும் அதன் வழியில் நடப்பதாக மார்த்தட்டும் சிலர் அதற்கு முரண்பட்ட வேலைகளையே செய்து வந்துள்ளனர்.

தடா கைதிகளுக்கு என்று பல லட்சம் ரூபாய் வசூலித்து அதை அவர்களுக்கு தராது உல்லாச வாழ்வு வாழ்கிறேனாம்.

இதில் துளியளவேனும் ஆதாரம் உண்டா? ஒரு லட்சரூபாய் முழுமையாய் தந்த எவராவது ஒரு நபரின் விலாசத்தை சொல்ல முடியுமா?

உண்மையான நிலவரம் என்னவென்று ஏற்கனவே அனுப்பிய சுற்றறிக்கையில் (ரமலானின் போது) தெளிவாக கூறியுள்ளேன்.

சென்ற ரமலானுக்குமுன் சட்டப்பாதுகாப்பு நிதி கேட்டு ஒரு சுற்றறிக்கை தயார் செய்து அதை 10,000 நகல் எடுத்து நமது தோழர்கள் உள்நாடு வெளிநாடு என்று அனைவருக்கும் தபாலில் அனுப்பினேன்.

வெளிநாட்டு சந்ததாரர் விலசங்களை வைத்து 3716 பேருக்கு ஒரு கவருக்கு ரூ13/- (பதிமூன்று) தபால்தலை ஒட்டினேன். மொத்தம் ஸ்டாம்பு செலவே 3716 x 13 = ரூ48308/-. இதர செலவுகள் உள்பட சுமார் ரூ 50,000. செலவிட்டு காத்திருக்க காத்திருக்க வந்தது ஊதியத்தை உதிரக் காணிக்கையாக்கிய உத்தமர்கள் அனுப்பியது ரூ 22,545 (இருபத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று நாற்பத்து ஐந்து மட்டுமே)

இதில் இமாம் அலியின் சகோதரி பிரசவத்துக்கும் மருந்துக்கும் அறுவைசிகிச்சைக்கும் என சுமார் ரூ15,000மும் ரபிக்பாய் வீட்டுக்கு மீதியையும் தந்தேன்.

மேலே உள்ளது ஒருதுளி மட்டுமே. ஆனால் புதிதாக கிளம்பி உள்ள முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கிளப்பிய வதந்தியோ பலகோடி வசூலித்து விட்டேன் என்று தடா சிறைவாசிகளிடம் கூறி அவர்களும் அதை நம்பி 6 பேர் கைப்பட கடிதம் எழுதி அதையும் ஊர் முழுக்க வினியோகித்து உள்ளனர்.

ஏற்கனவே சென்னை சிறையில் உள்ளவர்கள் 3 அணிகளாக உடைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்று P.J கோஷ்டி, மற்றொன்று பாஷா கோஷ்டி, இன்னொன்று பாபா கோஷ்டி

ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு TOO MANY COOKS WILL SPOIL THE SOUP பலசமயற்காரனும் பண்ணாட்டு பண்ணி பண்டத்தை கெடுத்த கதையானது.

ஆரம்பத்தில் கோவை + சென்னை சிறைவாசிகள் அனைவருக்குமே நானே எனது சொந்த செலவில் சில திறமையான அதுவும் தடா வழக்குகளில் (ராஜிவ் காந்தி, பத்மநாபா கொலைவழக்குகளில்) ஆஜராகி அனுபவப்பட்ட எக்ஸ்பர்ட் வக்கில்களாக பார்த்து பீஸ் கொடுத்து நியமித்தேன் 6 மாதமானபின்பு திடீரென்று நஜாத் (பி.ஜே.) பிரிவினர் அரசியல் பிரவேசம் என்று களம்புகுந்தனர். முதலில் அவர்கள் எடுத்த எடுப்பில் ஒருமுதலீடு செய்ய சில தடா சிறைவாசிகளை தத்து எடுத்தனர்.

ஆந்திராவிலிருந்து ஒரு வக்கீல் நியமித்தனர். என்னை கலந்து ஆலோசிக்காமலே திடீரென்று திறந்த கோர்ட்டில் வக்கீலை மாற்றுவதாக கூறினார்கள். அதனால் நான் வைத்த ஏற்கனவே வக்காலத்து போட்ட வக்கீல்களுக்கு பேருத்த அவமானம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வக்காலத்துக்களை வாபஸ் பெற்றனர்.

CBIஎதை நினைத்ததோ அது அப்படியே நிறைவேறியது.

கூட்டாக ஒரு JOINT EFFORT ஒரு குழுவின் கூட்டு அமைப்பு மூன்றாய் உடைக்கப்பட்டது.
இது கிரிமினல் வழக்குகளில் வழக்கமாய் CBI கடைபிடிக்கும் ஒரு தந்திரம். ஒரே அமைப்பாய் ஒரே குழுவாய் செயல்பட்டாலொழிய கொலை வழக்குகள் வெற்றி பெறுவது கடினம். மத்திய CBIயும் CBCIDயும் (மாநில புலனாய்வு) செய்த சதிக்கு அப்பாவி சிறைவாசிகள் அறியாமலே பலியாயினர்.

இன்று 4 வழக்கறிஞர் குழுக்கள் தனித்தனியே செயல்படுகிறார்கள். நான்கு குழுக்களும் கலந்து ஆலோசிக்காது அவரவர் போக்கில் யார் பெரியவர் என்று காடிக்கொள்வதில்தான் காலம் கடக்கிறது.

கோவை பாஷா குருப் சில வக்கீல்களையும் ரஹீம் அஸ்லம் இரு வக்கீல்களையும். நான் ரபீக் அஹமது, இமாம் அலி, ஷகாபுதீன், அமினுதீம், ஷரிப் ஆகிய ஐந்துபேர்களுக்கும் ஆரம்பத்தில் வைத்த(ராஜீவ் கொலைவழக்கு நடத்தி வரும்) அதே வக்கீல்களையும், ஹைதரலிக்கு அரசு இலவச வக்கீலையும் வைத்தது.

இந்த 4 வக்கீல்களுக்கும் தெரியும் தனித்தனியே வழக்கை நடத்தினால் நிச்சயம் வழக்கு நாஸ்த்தி ஆகிவிடும். எனவே நடந்தது நடந்து விட்டது வக்கீல் S துரைசாமி அவர்கள் தலைமையில் கலந்து ஆலோசித்து கூட்டாய் செய்ய வேண்டும் என்று எண்ணி நானே முன்னின்று 4 வக்கீல் குழுக்களையும் ஒன்றுகூட வைத்து திரு துரைசாமி அவர்கள் அலுவலகத்தில் கூடி பேசி முடிவெடுத்தோம். ஆனால் (பி.ஜே.உடைய) நஜாத்காரர்களின் தலையீட்டில் அதுவும் முரண்பாடுக்கு உள்ளானது.

எனக்கு வேதனையாக இருக்கிறது பல வழக்குகளை சுமார் 30 ஆண்டுகாலம் நடத்தி வரும் என்போன்ற சட்ட அனுபவமுள்ளவருக்கு இதன் கஷ்டம் + நஷ்டம் புரியும் கைர்அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய நான் என் வழிக்கு யார் ஒத்துப்போகிறார்களோ அவர்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு மீதி உள்ளவர்களைவிட்டு நான் விலகிக்கொண்டாலும் கண்காணிக்க தவறாதவனாகவே இன்றளவும் உள்ளேன்….

ஏற்கனவே ரமலானுக்கு முன் அனுப்பிய தடாகைதிகளில் இமாம் அலி ரபிக்பாய் அஸ்லம் ஷகாபுதீன் அமீனுதீன் ஆகியோருக்கு மட்டுமே நான் உதவுவதாக கூறியுள்ளேன்

இன்றுள்ள நிலையில் தீடீரெம்று மார்தட்டும் சில அமைப்புகள் குறிப்பாக தடாகைதிகளை நாங்கள் தான் ஜாமீனில் எடுத்தோம் என்று கூறி அதையே முதலீடாக்கி பிழைப்பு நடத்துவதுடன் இல்லாது ஜிஹாத் தோழர்களையும் குழப்ப ஆரம்பித்தனர்- பலர் எனக்கே கடிதமும் எழுதி உள்ளனர். அதனால் ஒரு தன்னிலை விளக்கமளிப்பது நலமாயிருக்கும் என்று பல நல்ல நண்பர்கள் வேண்டிக் கொள்ளவே நானும் இதை கூற முற்படுகிறேன்.

இந்த மூன்று பிரிவு தடா கைதிகளில் 3வது வகையினர் நெடுநாள் சிறையில் இருந்தால் அவர்களை தடா நீதிபதியே கண்டிஷன் பெயிலில் குற்றத்தன்மையைப் பொறுத்து இடைக்கால ஜாமீனில் விடவேண்டும் என்று 3 மாதம் முன்பு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பென்ச் ஒரு தீர்ப்பை நல்கி உள்ளது.

அதன் அடிப்படையில் தான் இந்த 3வது பிரிவிலுள்ள குறைந்த அளவு குற்றத்தன்மை பிரிவுகளுக்கு உட்பட்டவர் ஜாமின் பெறுகிறார்கள். இதன் தீர்ப்பிலும் வழக்கு வாதாட்டத்திலும் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியும். (இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பம்பாய் சிறைவாசிகளுக்கு பொறுந்தாது என்றும் அதே தீர்ப்பில் ஒரு வரி உள்ளது)

இதை பெரிதாக்கி ஏதோ செய்யவே முடியாததை செய்து விட்டதாக பி.ஜே. அணி தம்பட்டம் அடித்துக் கொண்டது. நகைப்பிற்குறிய முனாபிக்தனம்.

இதே பி.ஜே. அணி ஏன் கோவை சிறைவாசிகளுக்கு ஜாமீன் கேட்டு எடுக்கவில்லை. கோவை தடாகைதிகள் எந்த கொடுஞ் செயலையும் செய்யாதவர்கள் சென்னை தடா சிறைவாசிகளாவது ஒரு குண்டு வைத்து 11 பேர் மரணமடையச் செய்த கொலைபாதகத்தை செய்த தீவிரவாதிகள் (அப்படித்தான் CBI கூறியுள்ளது) என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ஆனால் கோவை தடாசிறைவசிகள் குற்றம் ஏதையாவது செய்யக்கூடும் என்று கருதப்பட்டு கடுங்காவலில் வைக்கப்பட்டவர்கள். உலகிலேயே குற்றமே செய்யாது குற்றச்சம்பவமே ஏதும் நடக்காதபோது நடத்திவிடக்கூடும் என்று கருதி காவலில் தடாவில் சிறைவைக்கப்பட்ட கொடுமை கோவையில் தான் நடந்தது அதுவும் முஸ்லீம் இளைஞர்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டது.

இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டுவந்திருக்கலாம் (உதாரணமாக தாராபுரத்தை சார்ந்த ஒரு இளைஞரையும் ஈரோட்டை சார்ந்த ஒரு இளைஞரையும் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் தடாவில் கைது செய்து சென்னை சிறைக்குள் வைத்தது. அந்த இருவரையும் விடுவித்து (3மாதத்தில்) நமது முக்குல முரசு பத்திரிக்கையில் போட்டதை நினைவு கூர்க)

ஆனால் கோவை சிறைவாசிகள் நாம் வைத்த வக்கீல்களை நிராகரித்து விட்டு பி.ஜே.யின் நஜாத் ஆட்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு ஒத்துழைக்க மறுத்த போது அவர்களையும் ஒதுக்கி விட வேண்டிய சூழ்நிலை வந்தாலும் அவர்களையும் வுடுவிக்க வேண்டும் என்று தற்போதைய மாநில அரசுக்கு பல்வேறு முறைகளில் எடுத்துக்கூறி வருவதை நான் நிறுத்தவில்லை என்பதையும் பணிவுடன் கூறிக் கொள்கிறேன்.

இதில் உள்ள வேறுபாட்டைக் கூர்ந்து கவனிக்கவும்:-
கோவை சிறைவாசிகள் மாநில அரசு
சென்னை சிறைவாசிகள் மத்திய CBIயால் சிறைப்பட்டவர்கள்.
இந்த சிறைவாசிகளின் புரிவின்மையாலும் ஒத்துழைப்பின்மையாலும் அழக்கு நசிவடைவதாலும் நான் பட்ட மனக்கஷ்டமும் பிறகஷ்டன்ங்களும் கொஞ்ச நஞ்சமல்ல அத்தனையும் விரிவாய் எழுத இது தருணமும் இல்லை.

இதுதான் சுருக்கமாக சொல்ல முடிந்தது. இதுதான் அல்லாஹ் மீது ஆணையாக நடந்த உண்மைகள். நிலைமை இவ்வாறு இருக்க என்னை கண்டு பேசியே இராத என்னோடு பழகியே இராது சிலர் வீண்வதந்திகளை கிளப்பி விட்டு விட்டதுடன், நான் ஆடம்பர வாழ்வு வாழ்வதாகவும் மார்க்கத்துக்கு புறம்பான வாழ்வு வாழ்வதாகவும் சில சிறைவாசிகளைவிட்டு எழுதி அதை வினியோகித்தும் வருகிறார்கள்.

அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் 6 பேர்களில்பாஷாவை தவிர மற்ற 5 பேர்களை அதற்கு முன் கண்டது கூட கிடையாது. அவர்களும் வெளியில் இருக்கும்போது என்னோடு ஒரு நிமிடம் கூட பழகியவர்கள் அல்ல சிறைக்குள் இருப்பவர்களுக்கு எப்படி வெளியில் நடப்பதை அறிய முடியும்? கண்ணில் பார்காது அபாண்ட பழி கூறுபது முறையா

அவர்களுக்கு தெரியும் நான் அப்படிப்பட்டவனல்ல என்று பின் யார் தூண்டி எழுதுகிறார்கள்? பாவம் வாங்கும் காசுக்கு விசுவாசமான பொய்களை கூறுகிறார்கள் சூழ்நிலை அப்படி.
ஏற்கனவே அவர்கள் எனக்கு ஒத்துழைத்தபோது உதவிகள் புரிந்தேன். பின்னர் இவர்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் உதவி பெறுவது கண்டு பிரதான குற்றவாளிகளாகக்கப்பட்டவர்கள மட்டும் உதவுவது என்று நானே முடிவெடுத்து சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளேன். அதன்பின் பாபா உதவவில்லை உதவவில்லை என்று கூப்பாடு போடுவது முனாபிக்தனம் என்னோடு ஒத்துழைக்க மறுக்கும் நபர்களுக்கு நான் ஏன் உதவ வேன்டும்?

இப்போது உதவிகள் பெறுபவர்களில் இமாம் அலியே தானே சிலரைவைத்து வசூலித்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு உதவவேண்டாம். அதற்கு பதில் தன் வழக்கறிஞ்ருக்கு மட்டும் பீஸ் கொடுத்தால் போதும் என்று சொல்லி அனுப்பியதால் கடந்த இரண்டு மாதமாக அவருடைய வழக்கறிஞரை தவிர அவருடைய குடும்பத்தினருக்கு உதவிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்துக்கே படியளக்க நான் ஒரு டாட்டாவோ பிர்லாவோ அல்ல.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுமார் ஆயிரம் பள்ளிவாசலுக்கு மேல் பயான்செய்தும் இரண்டே இரண்டு மசூதிகள் R.Sமங்கலம் + ராயபுரம் மட்டும் தலா ஆயிரம் ரூபாய் சிறைவாசிகளுக்கு உதவிகள் புரிந்தன! வேறு யாராவது உதவியதாக ஒரு 100 ரூபாய் உதவியாக ஒரு விலாசம் கூறமுடியுமானால் உடனே நான் பொது வாழ்க்கையினை இத்துடன் முடித்துக் கொள்ளத் தயாராக உள்ளேன்.
இது அல்லாஹ் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்
இதைப்படிக்கும் அனைவரும் உங்கள் ஊர் ஜமாத்துக்கு எழுதி இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

த.மு.மு.கவை நிறுவி கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்தவர் குணங்குடி ஹனிபா! அவரே என்னிடம் வந்து தான் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகிக்கொண்டு முழுக்க முழுக்க சமுதாயப் பணியாக நடத்தப் போவதாக கூறிக் கொண்டு பி.ஜே.யின் நஜாத் இயக்கத்தினர்களுடன் சென்றார் அவருக்கு விடைகொடுத்து அனுப்பினேன். சில மாகங்கலேயே இருந்த தலைவர் பதவியும் கையில் இருந்த த.மு.மு.க வையும் பறிக் கொடுத்து விட்டு ஆபாண்ட பழி சுமத்தப்பட்டு அப்பாவியாய் திரும்ப வந்து ஜிஹாது பணிகளை செய்கிறார்.

அதுமட்டுமல்ல அவரிடம் பலமுறை கூறியுள்ளேன் யாரோ காபீரான டாக்டருக்கு உதவும் போது நான், ஏன் இஸ்லாமான இயக்கத்துக்கு ஒத்துழைக்க மறுக்க போகிறேன் என்று கூறி உள்ளேன்.

ஒரு முஸ்லீமை இன்னொரு முஸ்லீம் சாடுவது செத்த சகோதரனின் சவத்தை உண்பதற்கு சமம் அல்-குர் ஆன். (ஆனால் முனாபிக்கை சாடலாம்)

மேலும் டாக்டர் சேப்பன் அவர்கள் நடத்தி வந்த உணர்வுஎன்ற மாத இதழை த.மு.மு.க. தத்து கேட்டப்போது டாக்டர் சேப்பன் என்னிடம் ஏதாவது ஆட்சேபனை உண்டா என்று கேட்டபோது தாராளமாக தாருங்கள் டாக்டர் எங்கும் எதிலும் எப்போதும் எவர்மூலமாவது இஸ்லாம் ஒலித்தால் சரியே என்று அவரை தரும்படி ஊக்குவித்தேன் (இதை அவருக்கே டெலிபோன் செய்து சென்னை 8279905 எண்ணுடன் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்).

நிலமை இப்படி இருக்க ஏதோ பி.ஜே. அணி, கட்சி தமிழகத்தில் வளராது பழனிபாபா தடுக்கிறான் என்று வதந்திகளை திட்டமிட்டு உலவவிடுவது நயவஞ்சகத்திலும் கடுமையான நயவஞ்சகம்.

ஜிஹாத் அமைப்பை உடைத்து துடைத்து எரிந்து விட்டு ஏவராவது முன்னுக்கு வந்து விடலாம் என்று கருதினால் அது கார் உள்ளவறை பார் உள்ளவறை காலம் உள்ள்வரை நிச்சயம் முடியாது.

கடந்த 6 ஆண்டுகளாய் ஜிஹாத் அமைப்பை ஒடுக்க மத்திய மாநில அரசுகளும் ஆதிக்க சக்திகளும் ஆரிய வர்க்கங்களும் முயன்றதைவிட முஸ்லீம் லீக்குகளும் முஸ்லீம் அமைப்புகளும் செய்யாத ஜாலம் இல்லை. இருந்தாலும் ஜிஹாத் கமிட்டியின் உறுதிமிக்க இளைஞனின் உறுதியின் இறுதித் துளிகளைக்கூட தொடமுடியாததுதான் நடைமுறையில் உணர்ந்த நிலைமை.

- என்றும் உங்கள் ஊழியன்.
நிறம் மாறாதவன் 

பாபா குறிப்பிட்டுள்ள சிறைவாசிகள் கடிதங்களை கீழ் காணும் தலைப்பை கிளிக் செய்து பார்க்கவும்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.