இன்னும் ஏன் தயக்கம், என்ன தயக்கம் உங்கள் தலைமைக்கு?.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
கீழக்கரை எஸ்.எல். நசீருத்தீன் காகா அவர்களுக்கு கா.அ. முஹம்மதுபழுலுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பொதுவான ஆள் போல் தாங்களாகத்தான் எனது டெலி போன் உரையாடலை பதிவு செய்ததாகவும் த.த.ஜ. தலைமைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறியுள்ளீர்கள். எனது டெலி போன் உரையாடலை மட்டும்தான் பதிவுசெய்துள்ளீர்களா? இது போல் முன்பும் பலரிடம் பேசி பேச்சு வார்த்தையில் ரெக்கார்டிங் செய்துள்ளீர்களா? 2011 ஏப்ரலிருந்து பொதுவான ஆள் போல் போனில் என்னிடம் பேசி வந்தீர்கள்.
தாங்கள் டி.என்.டி.ஜே.காரர் என்பது இப்பொழுதுதான் தெளிவாகி உள்ளது. ஜவாஹிருல்லாஹ்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாருங்கள் எனநீங்கள் அழைத்தபோதே தாங்கள் டி.என்.டி.ஜே.காரர் என்பதை கூறி இருக்கலாம் அல்லவா. ஹஸன் அலி ஆள் போல் அல்லவா பேசினீர்கள் ( பாக்கி பின்னர் வரும் ஏற்கனவே எழுதியதுதான்)



கீழக்கரை எஸ்.எல். நசீருத்தீன் காகா அவர்களே!  இரு தரப்பு ஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் ஒரு நாளும்  பிரார்த்திக்க மாட்டேன்.  என்று எழுதியுள்ளீர்கள். எந்த ஒரு  தரப்பு ஆட்களும் நாசமாக வேண்டும் என்று நான் பிரார்திக்கச் சொல்லவில்லை.

இட்டுக் கட்டி அவதூறு பரப்புவதை வாடிக்கையாகக் கொண்ட பி.ஜெ.யை நாசமாக்கு என்றோ. பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன லுஹாவை நாசமாக்கு என்றோ நான் கூறவில்லை.  நான் குறிப்பிட்டுள்ள விசயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் நாசமாகட்டும் என்றுதான் பிரார்த்திக்கச் சொன்னேன். பொய்யர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்   நாசமாகப்  போவதுதான்  சமுதாயத்துக்கு  நல்லது.


மேலும் எங்களுக்கு தேவை ஹக் கானது மட்டுமே பொய் யாரிடம்  இருந்தாலும் அல்லா பார்த்துக் கொள்வான். என்று எழுதியுள்ளீர்கள்  அல்லாஹ் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே சம்பவங்களைக் குறிப்பிட்டு அதில் யார் பொய்யர்களோ அந்த பொய்யர்களை நாசமாக்கு என துஆச் செய்யச் சொல்கிறேன். 

நான் உண்மையாளன் என்பதால்தான் இவ்வளவு தைரியமாக எழுதுகிறேன். லுஹாவும் பி.ஜெ.யும் உண்மையாளர்கள் என்றால் அறிக்கை விடட்டுமே. த.மு.மு.க. அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும்போது அவதூறுபரப்பினால் மறுமைக்கு பயன்படும் என்றாரே. தூய்மையான த.த.ஜ.வின் 3000 பொதுக்குழு உறுப்பிளர்களின் துஆவோடு லட்சக்கணக்கான உறுப்பினர்களின் துஆவும் சேர்ந்தால் மிகுந்த நன்மை கிடைக்குமே. இன்னும் ஏன் தயக்கம். என்ன தயக்கம் உங்கள் தலைமைக்கு.





சுன்னத் ஜமாஅத்தினர் வழி கேடர்கள். காரணம் குர்ஆன் ஹதீஸுடன் ஸஹாபாக்கள் மற்றும் இமாம்களின் இஜ்மாவு கியாஸ்களையும் ஏற்கனும் என்கிறார்கள். அதனால் சுன்னத் ஜமாஅத்தினர் வழி கேடர்கள் என்றார்கள்.

ஜாக் மாதிரியான தவ்ஹீது அமைப்புகளும் வழி கெட்டு விட்டார்கள். காரணம் குர்ஆன் ஹதீஸுடன் ஸஹாபாக்கள் என்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ்களுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்கிற நாங்கள் மட்டுமே நேர்வழியாளர்கள். இப்படிச் சொல்லி ஆள் சேர்த் ததஜவினர். அவர்கள் உருவாக்கிய பைலாவுக்கும் கட்டுப்பட வேண்டும் என்கிறார்கள்.

நீதியை நிலையாட்டுங்கள் என்பது குர்ஆன் ஹதீஸின் கட்டளையாகும். அல்லாஹ்வும் அவனது துாதரும் இட்ட இந்தக் கட்டளைக்கு மாற்றமாக நீதி நேர்மை என்றெல்லாம் பார்க்காமல் நாங்கள் உருவாக்கிய பைலாவுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றால் இவர்கள் யார்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.