சிந்திப்பது இதயமா? மூளையா? குர்ஆன் இறை வேதம் என்றால் முரண்பட்டு பலவீனப்படலாமா?

எண்ணுவது,  சிந்திப்பது,   சந்தேகிப்பது,   மறப்பது,    நினைப்பது  எல்லாம்      மூளையின்  வேலை தான்

நெஞ்சுக்கும்,   (ரு)தயத்துக்கும்   அந்த   வேலை    கிடையாது.   இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம்

இதை எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில்  எவ்வாறு கூறுவது? 

நெஞ்சங்களில்(ரு)தயங்களில்  என்றுள்ள குர்ஆன் மொழி   பெயா்ப்புகள்  சரிதானா?

23:14, 40:67,  75:38   ஆகிய   வசனங்களில்   ஃஅலக  என்பதற்கு கரு என்று மொழி பெயர்த்த    .கா.   அப்துல்    ஹமீது    பாகவி  அவா்கள்  96:2ல்  ஃஅலக் என்பதற்கு .கா..  அவா்கள் இரத்தக்கட்டி என்று மொழி பெயா்க்க வைத்தது யாருடைய நிர்ப்பந்தம்?

https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_14.html

ஃகல்ப் என்பதற்கு ஒரு இடத்தில்  இதயம்  என்று மொழி பெயா்த்த அதே  அறிஞரேஅதே அறிஞர்கள்  குழுவே இன்னொரு இடத்தில்  நெஞ்சம்  என்றும்  இன்னொரு  இடத்தில் உள்ளம்  என்றும் மற்றொரு  இடத்தில் மனம்என்றும்  மொழி பெயா்த்துள்ளார்கள்இதனை கவனத்தில் கொண்டு நாம்  தரும் விபரங்களை  ஆய்வு செய்வீர்களா?



எதை பலவீனம் எனக் கருதி கேள்வி கேட்கிறார்களோ அதுவே குர்ஆன் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது எப்படி? 

வீடியோவில் கேட்கப்பட்டுள்ள உள்ளம், இதயம் இரண்டும் ஒன்றா? உள்ளத்தில் என்று சொல்லும்போது நெஞ்சில் கை வைத்து சொன்னீர்களே? என்ற  கேள்வி 2020 மே 10ல் வெளியாகி உள்ளது. 

சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் இரத்தத்தை ரத்தக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது தான் இதயத்தின் வேலை.

நிரூபிக்கப்பட்ட இந்த விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக மக்களின்   நிலைப்பாடுகள்,    நம்பிக்கைகள்   இருக்கலாம்.   இறை    வேதம்   அப்படி   இருக்கலாமா?

"உன்  இதயத்தில் - நெஞ்சத்தில்  எனக்கு இடம் இல்லையா?"

உனக்கு இதயமே - நெஞ்சமே இல்லையா?

"என்  இதயத்தை - நெஞ்சத்தைக் கேட்டுப் பார்த்தாயா?"  என்பதெல்லாம் சரியா?

மனிதர்களின்  சிந்தனை  எங்கே நிகழ்கிறது?

அகம், இ(ரு)தயம்,  நெஞ்சம்.  உள்ளம்,   மன(ம்)து, அறிவுமூளை எது சரி?



இதனை  படித்து விட்டு உலமாக்களோடு தொடா்பு கொண்டு பேசுங்கள். தா்ஜமா வெளியீட்டாளா்களுடன்  தொடர்பு உடையவா்கள் அவா்களை தொடா்பு கொண்டு  பேசுங்கள். இப்படியாக நாம் வைத்த கோரிக்கை எட்டு  ஆண்டுகளுக்கு முந்தையது. 
  
சிந்திப்பதுமகிழ்ச்சியடைவது,  இரக்கம் காட்டுவதுபொறாமை கொள்வது  உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் - நெஞ்சத்தில் தான் நிகழ்கின்றன என்ற கருத்து மக்கள் மத்தியில் இன்றும் நிலவி வருகிறது.


ஆனால் மனித உட­லின்   முழு    இயக்கமும்  மூளையில்  தான் தீர்மானிக்கப்படுகின்றன. நினைப்பதும்,   சிந்திப்பதும்கவலைப்படுவதும்,        மகிழ்ச்சியடைவதும்பேராசைப்படுவதும்,   கோபப்படுவதும்      மூளையின்  வேலை தான்.


அனைத்து  செயல்களையும்  மூளை  தான்  தீர்மானிக்கிறது.  உண்மையில்  மூளை தான்  சோகம்,  துக்கம்,  அன்பு,  பாசம்,  காதல்,  இரக்கம்,  மகிழ்ச்சி   போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் காரணம்.

ஒருவன் ஒரு செயலில் உறுதியுடன் இருக்க வேண்டுமானால் அவன்  சிந்தனை,  செயல்பாடுகளில் உள்ள உறுதியை தீர்மானிப்பது மூளை தான்அதனால்  தான்  அதனை  தலைமைச் செயலகம்  என்கிறோம்

உண்மை இப்படி இருக்க "இதயத்தில்நெஞ்சத்தில் உனக்கு இடம் இல்லை" " உனக்கு இதயமேநெஞ்சமே இல்லையா", "என் இதயத்தைநெஞ்சத்தைக் கேட்டுப் பார்போன்ற வசனங்களை  நாம்  தினமும் கேட்கிறோம்.  இப்படி  ஒரு  தவறான  கூற்று  எப்படி உருவாயிற்றுஎன்று ஆய்வாளா்கள் ஆய்வு செய்து கொண்டே இருக்கிறார்கள்.


நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக மக்களின் நம்பிக்கைகள் இருக்கலாம். அப்படி இருப்பது பெரிய விஷயமே இல்லை இறை  வேதம்  குர்ஆன்  அப்படி இருக்கலாமா? என்ற கேள்வி 2000ல் டாக்டா் ஜாகிர் நாயக் அவா்களிடம் கேட்கப்பட்டது.

பதில் அளித்த  டாக்டா் ஜாகிர் நாயக் அவா்கள் அரபியில் உள்ள ஃகல்ப் என்ற வார்த்தைக்கு இதயம் என்ற பொருள் இருப்பது போலவே மூளை என்ற பொருளும் இருக்கிறது என்று பதில கூறினார்டாக்டா் ஜாகிர் நாயக் அவா்களின்  உரையை ஆங்கிலம் தெரிந்தவா்கள் பிரபலமாக பேசினார்கள்

சிந்திப்பதற்கு இதயத்தையும்  (23:78என்று IFT  போன்ற தர்ஜமாக்களை ஒட்டி நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக இறை  வேதம்  இருக்கலாமாஎன்ற கேள்வி தமிழ் மக்களிடமும் பரவியது.  அதற்கு அன்றைய தினம்  பதில் அளித்தவர் மவுலவி P.J. அவா்கள் மட்டுமே. அது பற்றி  முஸ்லிம் டிரஸ்ட்டில் ஆய்வுரை ஆற்றினார். 

அதன் பிறகு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் இந்து சகோதரர்   குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள வசனங்களை சுட்டிக் காட்டி சிந்திப்பது இதயமாமூளையா? குர்ஆன்  இறை வேதம் என்றால்  முரண்பட்டு பலவீனப்படலாமா? என்று கேள்வி கேட்டார். அதற்கு அதே ஆய்வுரையை பதிலாக முஸ்லிம் அல்லாதவர்கள் விளங்கிடும் வகையில் வழங்கினார் P.J. 

அது முஸ்லிம் மீடியா டிரஸ்ட் வெளியிட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் என்ற தலைப்பிலான நுாலில் 46வது கேள்வியாக இடம் பெற்றது. அதன் பிறகு ஏகத்துவம் இதழிலும் தொடராக வந்தது.  

47:24  வசனங்களை பிற மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும் என்று  தர்மபுரி, எஸ்.ஏ. இர்பான் பாஷா, என்பவர் கேட்டுள்ளார். 

இந்த  கேள்விக்கு ததஜ சைட்டில் உள்ள பதிலும் P.J. பதிலுரையிலிருந்துதான் சுருக்கமாக தந்துள்ளார்கள்.  ஆகவே இந்து சகோதரர் கேள்விக்கு  P.J. கூறிய பதில் விளக்கம் என்ன? என்பதை மூலத்தில் இருந்தே பார்ப்போம்.


இறைவனை மறுப்பவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. (குர்ஆன் 7:179)

(அநியாயத்துக்கு எதிராக போரிட கூப்பிட்டால், போருக்கு வராமல்) வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்தி கொண்டனர். அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 9;87)

(போரில் உங்களின் எதிரிகள்) உங்கள் மேற் புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப் புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பல விதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப் பட்டார்கள். (குர்ஆன் 33:10)

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்தி போகும்.

ஆனால் இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். 

இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப் பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்து இருக்காது.

ஆனால் மூளைதான் சிந்தனைக்கு காரணம் என்று நிரூபிக்கப் பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய அறிவியல் உலகம் பழைய நம்பிக்கைப் படி இதயம் என்று பொருள் படுத்தினால் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்று மறுக்க வாய்ப்பாகி விடும்

எனவே இது போன்ற இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது இதயம் என்றும் குறிப்பிட முடியாது ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் கூற வல்லவன்.


அரபு மொழியில் ஃகல்ப்என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும்இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது

மூளை தான் எல்லாக் காரியங்கைளயும் நிகழ்த்துகிறது என்பைதக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப்முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன்,  மூளை,  இதயம் ஆகிய அர்த்தங்கள் கல்ப்என்ற இச்சொல்லுக்கு உள்ளன  எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது


5:13, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தைனயுடன் தொடர்புபடுத்தியே ஃகல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 


இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே (ஃகல்ப் எனும்)  இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான்   பயன்படுத் தப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும்

அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது. எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் என்ற உண்மையை அறிந்தவனால்தான் இவ்வாறு கூற முடியும். 

அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப் பட முடியாமல் காப்பாற்றி- உண்மை கண்டறியப் படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப் படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன் படுத்தி இருப்பது இறை வேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு பதில் அளித்த  P.J. அவா்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக  20 ஆண்டுகளுக்கு  முன்பு கூறப்பட்ட பதில்தான் 2020 மேயிலும் கேள்வியாக வந்துள்ளது. வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

அல்குா்ஆன்  96:2 இல்  உள்ள  அலக்  என்பதற்கு இரத்தக்கட்டி என்பது தவறான மொழி பெயர்ப்பு என்று கூறிய  P.J. அவா்கள்  அவரது மொழி பெயா்ப்பில் கருவுற்ற சினை முட்டை என்று மற்ற மொழி பெயா்ப்புகளிலிருந்து  மாற்றம்   செய்து  காட்டினார்.

ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு காட்டியவர்கள் அந்த நிலையிலிருந்து மாறினார்கள்.  அட்டைப் பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் என்று சவூதி மதீனா முனவ்வரா வெளியீட்டில் 75:38 க்கு  மட்டும் மாற்றினார்கள்.

சவூதி மதீனா ரியாத்  வெளியீட்டில் (கருவரைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடிய  என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.  

23:14க்கு  கரு முட்டை என்ற றஹ்மத் அறக்கட்டளை 40:67,75:38  இரத்தக்கட்டி என்றுள்ளது.

23:14, 40:67,  75:38   ஆகிய   வசனங்களில்  அலக  என்பதற்கு கரு என்று .கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள்  மொழி பெயா்த்துள்ளார்.  

இப்படி மொழி பெயர்த்த .கா.   அப்துல்  ஹமீது   பாகவி  அவா்கள் 96:2 இல் உள்ள அலக் என்பதற்கு .கா.அவா்கள் இரத்தக்கட்டி என்று ஆக்க வைத்ததுஅன்றைய  மவுலவிகளின் நிர்ப்பந்தமே. பிறகு  23:14, 40:67,  75:38   ஆகிய  வசனங்களிலும்  இரத்தக்கட்டி  என்று ஆக்கினார்கள். 

2002 தாருல் ஹுதா பதிப்பில் மூன்று வசனத்துக்கு  கரு  என்றும்  96:2க்கு  இரத்தக்கட்டி  என்றும் வந்தது.



பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பு மற்ற அறிஞர்களின் மொழி பெயர்ப்புக்கு  மாறுபடுகிறது  முரண்படுகிறது என்பவர்கள். காழ்ப்புணர்வின் காரணத்தாலேயே விமர்சிக்கிறார்கள். 

பீ.ஜே.க்கும் எமக்கும் உள்ள நிர்வாகப் பிரச்சனையில் எதில் எதிர்க்க வேண்டுமோ அதில் மட்டுமே அவரை எதிர்ப்போம் வரம்பு மீற மாட்டோம். மற்றவர்களின்    மொழி   பெயர்ப்புகளை  விட   பீ.ஜே.   மொழி   பெயர்ப்பு  சிறந்தது  என்பதே  நமது  நிலைப்பாடு.

ஒருவருக்கொருவா்  மாறுபடுவது  முரண்படுவது பெரிய விஷயமல்ல.  ஒரு இடத்தில் ஒரு விதமாக மொழி பெயா்த்த அதே அறிஞரே,  அதே அறிஞர்கள் குழுவே இன்னொரு   இடத்தில்   இன்னொரு  விதமாக  மற்றொரு   இடத்தில்   மற்றொரு விதமாக    மொழி பெயா்த்துள்ளார்கள்.  

இதனை நாம் குறை சொல்ல மாட்டோம். அந்தந்த இடத்தில் அவர்கள் அறிவின் ஆய்வு அடிப்படையிலானது என்றே எடுத்துக் கொள்வோம். இருந்தாலும் நமது பார்வையில் தவறு என்று அறிவதை சுட்டிக் காட்டுவோம். வரட்டு கவுரவம் பார்க்காமல் திருத்தம் செய்பவருக்கு அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக ஆமீன்.

இதயமா? மூளையா? என்ற விஷயத்தில் 
P.J. அவா்கள் 33:10, 40:18    இரு  வசனங்களைத்   தவிர  கல்ப்,   ஸுதுார்,    புஆத்   என   அனைத்திற்கும்  உள்ளம்   என்றே மொழி   பெயா்த்துள்ளார்கள்.   ஃஅஹ்வா,  Fப்ஸு, அமனதன், வழாஃக,  ஷஹவாத் போன்றவற்றுக்கும் மனம் என்றே மொழி பெயா்த்துள்ளார் P.J.  உள்ளம்  என்ற மொழி பெயா்புக்கு .கா.அவா்களே முன்னோடி.

ஃகல்ப் விஷயத்தில் .கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள் பெரும்பாலும் உள்ளம் என்று மொழி பெயா்த்த மாதிரியே P.J. அவா்களும்  உள்ளம் என்றே மொழி பெயா்த்துள்ளார்

எண்ணுவது,  சிந்திப்பது, சந்தேகிப்பது, மறப்பது, நினைப்பது  எல்லாம் மூளையின் வேலை தான்நெஞ்சுக்கும், (ரு)தயத்துக்கும் அந்த வேலை கிடையாது. இது நிரூபிக்கப்பட்ட அறிவியல். 

எனவே
 நெஞ்சங்களில், (ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆகவே
  ஆய்வு செய்ய வேண்டுகிறோம். என்ற தலைப்பில் 2012ல் சூரதுந் நாஸில் உள்ள Fபீஸுதுாரின்னாஸ் சம்பந்தமாக  நாம் எழுதியதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறோம்


ஃகல்ப் என்ற வார்த்தைக்கு  ஒவ்வொரு அறிஞா்களும் ஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு  விதமாக  மொழி பெயா்த்துள்ளார்கள்.

இதயம்  என்று ஒருவா் மொழி பெயா்த்த அதே வசனத்தில் இன்னொருவா் நெஞ்சம்  என்றும்  இன்னொருவா்  உள்ளம்   என்றும்   மற்றொருவர்  மனம்  என்றும்  மொழி பெயா்த்துள்ளார்கள்


உதாரணத்திற்கு 2:10 ஆவது வசனத்தில்  வரும் குலுாபிஹிம்  என்பதற்கு  .கா., பஷாரத்,  P.J. ஆகியோர் உள்ளம்  என்றும் 


IFT வெளியீட்டில்  நெஞ்சம் என்றும்  திரீயெம்  இதயம்  என்றும்  மொழி பெயா்த்துள்ளார்கள். இப்படி ஒருவருக்கொருவா்  மாறுபடுவது  பெரிய விஷயமல்ல


ஃகல்ப் என்பதற்கு ஒரு இடத்தில்  இதயம்  என்று மொழி பெயா்த்த அதே அறிஞரேஅதே அறிஞர்கள்  குழுவே இன்னொரு இடத்தில்  நெஞ்சம்  என்றும்  இன்னொரு  இடத்தில் உள்ளம்  என்றும் மற்றொரு  இடத்தில் மனம்  என்றும்  மொழி பெயா்த்துள்ளார்கள்இதனை கவனத்தில் கொண்டு நாம் தரும் விபரங்களை பாருங்கள் ஆய்வு செய்யுங்கள்.


.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள்  16:108. ஆவது வசனத்தில் வரும் அலா குலுாபிஹிம் என்பதற்கு இதயங்களின் மீதும் என்று மொழி பெயா்த்துள்ளார்கள்

22:46. 
ஆவது வசனத்தில் வரும்  தஃமல் குலுாபு  என்பதற்கு  (அகக்) கண் என்று .கா.. மொழி பெயா்த்துள்ளார்கள்

9:60 
ஆவது வசனத்தில் வரும்  முஅல்லபதிகுலுாபுஹும்  என்பதற்கு புதிதாக இஸ்லாமைத்  தழுவியவர்களுக்கும்  என்று  .கா.  மொழி பெயா்த்துள்ளார்கள்.

ஃகல்ப் என்பதற்கு  2:204. 3:167. 22:54. 33:5. 48:12. 50:33 ஆகிய வசனங்களில் மனது என்று  .கா.  மொழி பெயா்த்துள்ளார்கள்.

2:7,10,74,88,93,97,118,225,260,283. 3:7,8,103,126,151,154,156,159. 4:63,155. 5:13,41, 52,113. 6:43,46. 7:100,101,179. 8:2,10,11,12,24,49,63,70. 9:8,15,45,64,77,87,93,110,125. 10:74,88. 13:28. 15:12. 16:106. 17:46. 18:14,28,57. 21:3. 22:32,35,46,53, 23:63. 24:37,50. 26:89,193,200. 28:10. 30:59. 33:4,:10,12,26,32,51,53,60. 34:23. 39:22, 23, 45. 40:18, 35. 41:5. 42:24. 45:23. 47:16,20,24,29. 48:4,11,18,26. 49:3,7,14. 50:37. 57:16,27. 58:22. 59:2,10,14. 61:5, 63:3. 64:11. 66:4. 74:31. 83:14.
ஆகிய பெரும்பாலான இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு  உள்ளம் என்று  .கா.  மொழி பெயா்த்துள்ளார்கள்.


ஃகல்ப்  என்பதற்கு  பஷாரத் வெளியீட்டில் 2:7, 74, 88, 93, 118, 3:8,126, 151,156, 4:155, 5:13, 41, 113, 6:43, 46,  7:100, 101,179,  8:2,11,12,24,49,63,70,    9:15,45,60,77,87,93,110. 10:74,88. 13:28. 16:108, 17:46.  18:28, 57. 21:3. 22:32,35,46,53,54.  23:63. 24:37, 26:194, 28:10. 33:4,5,12,26, 33:10,51.53, 39:22,23,45. 40:18,35. 41:5. 42:24. 45:23. 47:16,24. 48:12. 49:3, 50:33,37. 57:16,27. 58:22. 59:14. 61:5. 63:3. 83:14. ஆகிய பெரும்பாலான இடங்களில்   இதயம்  என்று   மொழி பெயா்த்துள்ளார்கள்.


2:10, 204, 225,260, 283, 3:103,154,167. 4:63, 5:52, 8:10, 9:8,64.  15:12. 16:106. 18:14, 24:50, 26:89,200. 30:59. 33:32, 60, 34:23. 47:29. 48:4,11,18,26. 49:7,14. 59:2,10. 64:4. 74:31. 
ஆகிய  இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு  உள்ளம்  என்று பஷாரத் மொழி பெயா்த்துள்ளார்கள்.



2:97. 9:125. 47:20 ஆகிய  இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு  நெஞ்சம் என்றும் 3:159இல்  மனது  என்றும் பஷாரத்  மொழி பெயா்த்துள்ளார்கள்.



திரீயெம் வெளியீட்டில்  2:7,10,74,88,93,97,118,225,260,283. 3:7,8,103,126,151,154,167. 4:155. 5:13,41. 6:43,46. 7:100,101,179. 8:2,11,12,24. 9:8,15,45,60,87,93,110. 10:74,88. 13:28. 16:108. 17:46. 18:28,57. 21:3 22:32,35,46,53,54. 23:63. 24:37. 26:89,194,200. 28:10. 30:59. 33:4,10. 39:22,23,45. 40:18,35. 41:5. 42:24. 45:23. 47:16,24. 48:11,12. 49:3. 50:33,37. 57:16. 59:10,14. 61:5. 63:3. 64:11. 66:4. 74:31 ஆகிய  பெரும்பாலான  இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு இதயம்  என்று  மொழி பெயா்த்துள்ளார்கள்.

3:156, 4:63, 5:52,113. 8:10,49,63,70. 9:64. 15:12. 16:106. 18:14. 33:5,12,26,32,51,53. 47:20,29. 48:4,18,26. 49:7,14.57:27. 58:22. 59:2 ஆகிய   இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு  உள்ளம்  என்று  திரீயெம் மொழி பெயா்த்துள்ளார்கள்.


9:77,125. 24:50. 33:60. 34:23. 83:14. ஆகிய  இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு நெஞ்சம்  என்றும்  

2:204
இல்  மனது  என்றும்  திரீயெம் மொழி பெயா்த்துள்ளார்கள்.


IFT  வெளியீட்டில்   2:7,74,88,283. 3:7,8,126, 154. 4:63. 6:46. 7:179. 8:10,11,70. 10:88. 16:108. 17:46. 18:28,57. 22:32,35,46,46. 22:53, 54. 24:37. 26:200. 30:59. 33:4,10. 40:18, 42:24. 45:23. 47:24. 48:4. 49:14. 50:37. 57:16. 58:22. 59:14. ஆகிய   இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு  இதயம்  என்று  மொழி பெயா்த்துள்ளார்கள்.


2:93,97,225. 3:103,151,156. 4:155. 5:41, 52,113. 6:43. 7:100,101. 8:2,12,24,49,63. 9:8,15,45,60,64,77,87,93,110,125. 10:74,13:28,28. 15:12. 16:106. 18:14. 21:3. 22:53. 24:50. 26:89,194. 28:10. 33:12,26,32,51,53,60. 34:23. 39:22,23,45.40:35. 41:5. 47:16,20,29. 48:11,12,18,26. 49:3,7. 50:33. 57:16,27.  59:2,10. 61:5. 63:3. 64:11. 66:4. 83:14 ஆகிய பெரும்பாலான இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு  உள்ளம்  என்று IFT  மொழி பெயா்த்துள்ளார்கள்.


2:10, 3:159,167. 5:13. 74:31 ஆகிய  இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு நெஞ்சம்  என்று IFT   மொழி பெயா்த்துள்ளார்கள்.


2:118,204,260 30:5  ஆகிய  இடங்களில்  ஃகல்ப் என்பதற்கு மனது  என்று IFT  மொழி பெயா்த்துள்ளார்கள்.


ஸுதுார் என்பதற்கு தாருல் ஹுதா வெளியீட்டில் 3:154. 5:7. 7:43. 9:14. 10:57. 11:5,12. 27:74. 28:69. 29:10.31:23. 35:38. 39:22. 40:56. 59:13. 64:4. 67:13. 94:1. 100:10. 114:5. ஆகிய இடங்களில் உள்ளம் என்றும் 

3:154. 57:6. 
ஆகிய இடங்களில் மனது என்றும் 

22:46
இல் நெஞ்சம் என்றும் .கா. மொழி பெயா்த்துள்ளார்கள்.


ஸுதுார் என்பதற்கு பஷாரத் வெளியீட்டில் 5:7,7:43, 9:14, 11:12.22:46. 27:74. 29:10. 31:23. 35:38. 57:6. 59:13. 64:4. 67:13. 94:1. 100:10. 114:5. ஆகிய  இடங்களில் நெஞ்சம் என்றும்

10:57, 11:5,5, 28:69. 39:22. 40:56. ஆகிய  இடங்களில் இதயம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்

ஸுதுார்  என்பதற்கு திரீயெம் வெளியீட்டில் 3:154.5:7. 7:43. 9:14. 10:57, 11:5,12. 22:46. 27:74. 28:69. 35:38, 39:22. 40:56. 57:6. 59:13. 64:4. 67:13. 94:1. 100:10. ஆகிய  இடங்களில்  நெஞ்சம்  என்றும்

29:10, 31:23. 114:5. ஆகிய  இடங்களில்  இதயம்  என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்

ஸுதுார்  என்பதற்கு  IFT வெளியீட்டில் 5:7.9:14.10:57. 67:13. 94:1 ஆகிய இடங்களில்  இதயம்  என்றும்

3:154. 7:43. 12. 11:5,5.12.22:46. 27:74 . 31:23. 35:38. 39:22. 40:56. 57:6. 100:10. ஆகிய இடங்களில்  நெஞ்சம்  என்றும்

3:154.  28:69. 29:10. 42:24. 59:13. 64:4. 114:5.ஆகிய  இடங்களில்  உள்ளம்  என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்

புஆத்  என்பதற்கு தாருல் ஹுதா வெளியீட்டில் 6:110,113. 11:120. 14:37,43.  17:36. 23:78. 25:32. 28:10. 32:9. 46:26. 53:11. 67:23. 104:7. ஆகிய இடங்களில்உள்ளம் என்றும்

16:78 இல் அறிவு என்றும் .கா. மொழி பெயா்த்துள்ளார்கள்.

புஆத்  என்பதற்கு பஷாரத் வெளியீட்டில் 6: 111, 114. 11:120. 14:37,43. 16:78. 17:36. 23:78. 28:10. 32:9. 46:26. 53:11. 67:23. 104:7. ஆகிய இடங்களில் இதயம்என்றும்

25:32 இல் உள்ளம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.

புஆத் என்பதற்கு  திரீயெம் வெளியீட்டில் இதயம்  என்று மொழி பெயா்த்துள்ளார்கள். பார்க்க 6:110,113. 11:120, 14:37,43. 16:78, 17:36, 23:78. 25:32. 46:26, 53:11, 67:23, 104:7,28:10.

புஆத் என்பதற்கு  IFT வெளியீட்டில் 11:120. 14:43.  17:36. 23:78. 25:32. 32:9. 46:26,26. 104:7. ஆகிய இடங்களில் இதயம்என்றும் 16:78.ல் சிந்திக்கும் இதயங்களையும் என்றும்

6:110 14:37 28:10. 28:10. 53:11. 67:23. 
ஆகிய இடங்களில் உள்ளம் என்றும் 

6:113
இல் மனம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்
 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.