கல்லுாரி மேனேஜ்மெண்ட்டின் விளக்கமா? CMN சலீமின் நாடகமா?


அதிருப்தியாளர்களாக உள்ளவர்கள் தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு கல்லூரியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பது சரியா?

அன்னை கதீஜா கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளத அப்பதிவு சி எம் என் சலீம் எழுதியதுதான் 

திரு. சி எம் என் சலீமின் பதிவிற்கான பதில்..! இப்படியாக நமக்கு வந்து கொண்டே இருக்கின்றன.

நாம் CMN சலீமின் ஆதரவாளரும் இல்லை எதிர்ப்பாளரும் இல்லை. குர்ஆன் ஹதீஸ் அல்லாதவைகளை இஸ்லாத்தின் பெயரால் எவன் திணித்தாலும் அந்த மாதிரி பல பட்டறைகளான வேதம் சுமக்கும் கழுதைகளின் கொள்கைகளை எதிர்ப்பவன் நான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/cmn.html

CMN சலீம் அவர்களுக்கும் ஷேர் சேர்ந்தவர்களுக்கும் உள்ள பிரச்சனையில் உங்களை சிலர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசி வருகின்றனர் என்றார்கள். 

இது பரவக் கூடாது என்பதற்காக. CMN சலீம் அவர்கள் நிறுவனங்களுக்கும் நமக்கும் எந்த  தொடர்பும் கிடையாது. சவூதியில்  சிறைபட்டார்  என்பதால் அனுதாபம் ஏற்பட்டது. இலங்கை, கேரள மவுலவிகளை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் சட்டப்படி ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார்.  அவரது நிறுவனங்கள் பற்றி எதுவும் எனக்கு தெரியாது என்று சுருக்கமாக Broadcast வாட்ஸப் குழுவில் பதிவு போட்டோம்.

இலங்கை, கேரள மவுலவிகளை தொடர்பு கொண்டு பேசினோம் என்பது பொய். இல்லாத பிரச்சனையை இருப்பதாக பரப்புகிறார் என்று சிலர் கூறியதாக நொடிப்பொழுதில் பதில்களும் கேள்விகளும் வந்தன. அதனால் மஸ்கட் சல்மான் உடைய பதிவை பதிலாக அனுப்பினோம்.

மஸ்கட் சல்மான் மனைவி சார்ந்த விஷயத்திற்கு CMN சலீம் பதில் சொல்ல வேண்டும். ஜெயிலை ஆய்வு செய்கிறார், மற்ற நாட்டு ஜெயிலையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மஸ்கட் சல்மான் நையாண்டி செய்துள்ளது கண்டிக்கத் தக்கது இப்படி ஒரு சகோதரர் பதில் தந்து இருந்தார்.

தமிழிலும் சரி மற்ற மொழிகளிலும் வரக் கூடிய கதைகளில் கதாநாயகனாக வரக் கூடியவன் மிகப் பெரிய சக்தி உள்ளவனாகத்தான் இருப்பான். 

அவன் கண் முன்னால் ஆயிரமாயிரம் கொடுமைகள் நடக்கும். அனாதைகளை கொலை செய்வார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். அதையெல்லாம் பார்த்து விட்டு அவர் பொங்கவே மாட்டார்.

அமைதியாக, கிறுக்குத் தனமாக, வேடிக்கை பார்த்து விட்டு ஜாலியாக போய்க் கொண்டே இருப்பார். எப்பொழுது பொங்கி விஸ்வ ரூபம் எடுப்பார்? 

அவர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரையோ, அவர் காதலிக்கிற பெண்ணையோ எவனாவது கை வைத்து விட்டான் என்றால். அப்பதான் அவர் பொங்கி எழுவார். விஸ்வரூபத்தைக் காட்டுவார். 

அதன் பிறகு இந்த கொள்ளை அடிக்கும் கள்ளக் கூட்டங்களையெல்லாம் வேரறுக்க வேண்டும் என்று வீர வசனம் பேசுவார். அது மாதிரிதான் மஸ்கட் சல்மான் பேச்சு இருக்கிறது.  இப்படி ஒரு சகோதரர் பதில் தந்து இருந்தார்.

இந்த நிலையில் கல்லுாரி மேனேஜ்மெண்ட்டின் விளக்கம் என்று ஒரு சகோதரர் அனுப்பி இருந்தார். அதை பார்வேடு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு முன்னாள் வக்ஃபு வாரிய தலைவர் ஹைதர் அலியை வைத்து சலீம் மிரட்டினார் என்று ஒருவர் எழுதி இருந்தார். 

அவர் போன்றோருக்கு பதில் அளிக்கும் விதமாக சலீம் எதிர்ப்பாளர்கள் Annai Kadjeeja Welfare Society என்ற பேஸ்புக்கில் நேற்று (08-05-2020) போட்டு நேற்றே எனக்கு வந்திருந்த பதிவை பதிலாகப் பார்வேடு செய்திருந்தேன். தலைப்பு கல்லுாரி உன் அப்பன் வீட்டு காசில் கட்டியதா?

அதைப் பார்த்த ஒரு சகோதரர் ஹைதர் அண்ணன் அழகாக சூப்பராக பேசி இருக்கிறார். இந்த ஏரியா ஆட்களையே டிரஸ்ட்டியாக போடாமல் என்று நாசூக்காக சொல்லி இருக்கிறார். 60 சதம் ஷேர் பற்றி சொல்லிக் காட்டி உள்ளார். எலுமிச்சை பழம் மற்றும் ராமதாஸ் உதாரணங்கள் கூறி உள்ளார்.

கல்லுாரி மேனேஜ்மெண்ட்டின் விளக்கம் என்ற பெயரில் வந்துள்ளதில். அதிருப்தியாக உள்ளவர்கள் தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்  என்பது நியாயமில்லை. 

10 ஆண்டுகளுக்கு முன் 20 லட்சம் கொடுத்தவர் அதை திரும்ப பெற்றால். அந்த 20 லட்சம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பில் இருக்குமா? ஆகவே ஷேர் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 

10 ஆண்டுகளுக்கு முந்தைய பணத்தை மட்டும் அப்படியே வாங்கினால் அது மகா நஷ்டமே. இதை வெளிநாட்டு வாழ் மக்கள் எப்படி ஏற்று ஆதரிக்கிறார்கள் நமக்குத் தெரியவில்லை. சாபம் கேட்டுள்ளார்களே சரியா என்று சிலர் விமர்சனம் செய்து இருந்தார்கள். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக டிரஸ்ட்டை உருவாக்கி பள்ளிகளை திருடிய வேதம் சுமந்த கழுதையைக் கண்டவன் நான். 

யா அல்லாஹ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக பள்ளிவாசல் தலைவனாக ஆனவன், டிரஸ்ட் பெயரால் பள்ளிகளை திருடியவன் மீதும் அவனுக்கு துணை நின்றவர்கள் மீதும் அவனை கூட்ணியாக ஆக்கிக் கொண்ட கொள்கையற்ற கூட்டத்தார் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன் என்று நானும் இந்த புனித ரமழானில் துஆச் செய்கிறேன்.

அன்னை கதீஜா கல்லூரி குறித்து ஒரு சிறு விளக்கம். என்று நாம் அனுப்பியதற்கு வந்துள்ள பதில்

திரு. சி எம் என் சலீமின் பதிவிற்கான பதில்..!

திரு. சி எம் என் சலீமின் ஃபேஸ்புக் பக்கத்தில் அன்னை கதீஜா கல்லூரி நிர்வாகத்தின் பெயரில் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 

என்னை அவர் ப்ளாக் செய்துள்ளதால், அப்பதிவில் என்னால் பதிலளிக்க முடியவில்லை. திரு. சி எம் என் சலீம் முதலில் என்னை அவர் பதிவுகளில் பதிலிட அனுமதிக்க வேண்டும். 

தனியாக தாம் எது சொன்னாலும் ஆமாம் அண்ணா எனத் தலையாட்டி நம்பும் ரசிகர்களை வைத்துக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருக்கக்கூடாது. நியாயமும் நீதியும் தம் பக்கமிருந்தால், ப்ளாக் செய்து கொண்டு ஒளிந்திருப்பதேன். முதலில் வெளிவாருங்கள். அவரவர் தரப்பு நியாயத்தைப் பொதுவில் மக்கள் மன்றத்தில் பேசுவோம். பயமெதற்கு?

இனி அப்பதிவின் உள்ளடக்கமோ, எப்போதும் போன்ற பசப்பு வார்த்தைகளுடன் கொஞ்சமும் கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல், நன்றியில்லாமல் அவதூறுகளைத் தாங்கி வந்துள்ளது. அதற்கான பதில் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும். இல்லையேல், அதையும் நம்பி ஏமாறும் மக்கள் இருப்பர்.

பிரச்சனை என்னவென்றால், அப்பதிவு சி எம் என் சலீமின் விளக்கமாக இல்லை. அன்னை கதீஜா கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அப்பதிவு சி எம் என் சலீம் எழுதியதுதான் என்பது அவரின் எழுத்துகளைத் தெரிந்த அனைவருக்கும் நன்கு புரியும். 

இது அவரின் வழக்கம்தான். பதில் சொல்ல முடியாத நிலை வரும்போது, கல்லூரி பிரின்ஸிபால் பெயரில், கல்லூரி நிர்வாகம் பெயரில், கல்வி சங்கத்தின் பெயரில் என பல பெயர்களில் ஒளிந்து கொண்டு அல்லாஹ், ரசூல், உம்மத், கல்வி என பசப்பு வார்த்தைகளுடன் அவதூறு வீசுவார். 

நாம் பதில் அவர்களுக்குக் கொடுத்து கல்லூரிக்கு எதிராக செயல்படுகிறோம் என்றத் தோற்றத்தை மக்கள் மத்தியில் எப்படியாவது உருவாக்குவதே அவரின் லட்சியம்.

அந்தச் சாமர்த்தியமெல்லாம் இனி நம்மிடம் பலிக்காது.

அப்பதிவு அப்துல் ரஹ்மானாகிய என்னையும் சேர்ததே குறிப்பிட்டுள்ளதால், நான் தனிப்பட்ட முறையில் அதற்கு விளக்கமளித்துதான் ஆக வேண்டும். ஆனால், நான் யாருக்கு பதில் கொடுக்கிறேன், என்னுடன் பேசுவது யார் என்பதை நான் தெரிய வேண்டுமா இல்லையா? 

அன்னை கதீஜா கல்லூரி நிர்வாகிகள் யார் யார்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நிஜமாகவே இது அதன் நிர்வாகத்தால்தான் எழுதப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பிரச்சனை என்னவென்றே தெரியவில்லை என்றும் அரைகுறையாக யாரோ சொல்லிக் கொடுத்ததைக் கொண்டு அவதூறு கூறுகிறார்கள் என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கும். 

அப்பாவிகளுக்கு நியாயமான முறையில், உரிய ஆதாரங்களுடன் விளக்கம் கொடுப்பதுதான் முறையாக இருக்கும். எனவே, அன்னை கதீஜா கல்லூரியின் அந்த நிர்வாகம் எது? யார் யாரெல்லாம் நிர்வாகிகள்? ஒரு ஷேர் ஹோல்டரான எனக்கே தெரியாத அந்த நிர்வாகிகள் தம் பெயரைப் போட்டு அந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நியாயவான்கள் அவரிடம் இக்கோரிக்கையை முன் வையுங்கள். ஒருநாள் அவகாசம் கொடுப்போம்.

ஷேர் ஹோல்டர்களாகிய எங்களுக்கும் சலீமுக்கும் தான் பிரச்சனை. எங்களிடமிருந்து நேரடியாக பணம் பெற்றவர் அவர்தான். கல்லூரி வரவு, செலவு கணக்கு, அதன் நிர்வாகம் என எதுவுமே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது, கல்லூரி நிர்வாகம் எங்களுக்குப் பதில் தருவதாக ஒரு பதில் எழுதி வெளியிடுவதே எவ்வளவு பெரிய மோசடித்தனம்?!

இந்த ஒளிந்து ஓடிப்பிடித்து விளையாட்டெல்லாம் விட்டு, திரு. சி எம் என் சலீம் அவர்கள் நேரடியாக பிக்சருக்கு வரவேண்டும். நமக்குள்ளான கொடுக்கல், வாங்கல் குறித்த எந்த விவரமும் தெரியாத மற்றவர்களை இடையில் இழுத்துவிட்டு ஒளிந்துகொள்வதைக் கைவிடவும். 

நான்கு மாதங்கள் சவூதி சிறையில் கிடந்து, தற்போது ஜாமீனில் வெளிவந்து ஊருக்குத் திரும்ப முடியாமல் சவூதியிலேயே ரூமில் அடைபட்டுக் கிடக்கும் நிலையிலும் இந்தக் குறுக்குப்புத்தி மட்டும் போகாதது ஏன்?

மேற்கண்ட அம்மோசடி பதிவுக்கான விளக்கமும் அதிலுள்ள மோசடித்தனமும் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து வரும்.

சமுதாய மக்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பொருளாதாரத்தைப் பாதுகாத்து கொள்ளுங்கள். எந்தப் பசப்பு வார்த்தைகளுக்கும் பலியாகி விடாதீர்கள். உங்கள் காசில் வாழ்ந்து கொண்டே, உங்கள்மீது அவதூறு வழக்கும் கூடுதலாக சிறு கூச்சமோ, மான உணர்வோ, நேர்மையோ, இறையச்சமோ சிறிதும் இன்றி அவதூறுகளும் அள்ளிவிடும் சாமர்த்தியர்கள் சூழ் உலகில் வாழ்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறேன்.

- அப்துல் ரஹ்மான். ஜ
9.5.2020

(இப்பதிவின் லிங்கை, கல்லூரி வருமானத்திலிருந்து ஊதியம் பெற்று வாழ்ந்துவிட்டு, திரு. சலீம் சொல்வதை மட்டுமே நம்பி ஜால்ரா அடித்து நடப்பவர்களின் பதிவுகளில் பதிவிட்டு என்னை டேக் செய்யுங்கள். அக்கல்லூரி எங்கள் பொருளாதாரத்தில் கட்டப்பட்டக் கல்லூரி. அதிலிருந்து வரும் வருமானம் என்பது, எங்கள் இரத்தத்தின் வாடை கொண்டது. அதனை உண்டுவிட்டு, எங்களுக்கு எதிராக ஜால்ரா அடித்து நடப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 

நீங்களும் உழைக்கிறீர்கள் எனில், அதற்குத்தான் ஊதியம் பெறுகிறீர்கள். அத்துடன் ஒதுங்கியிருங்கள். எங்கள் ஊழியர்கள் என்ற மரியாதை உங்கள் மீதிருக்கும். ஆனால், ஏதோ அந்த ஊதியம் தருவது திரு. சலீமின் சொந்தச் சொத்திலிருந்து என்ற ரீதியில் ஜால்ரா அடித்து நடந்தால், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் அல்லாஹ்வின் முன்னிலையில் எங்களுக்குப் பதில் சொல்ல வந்து நிற்பீர்கள்
-------------------------------------------------------------

[10/05, 1:37 am] +974 6642 6696: திரு. சலீம் அவர்கள் மீதான குற்றச்சாட்டு பங்கு 
அடிப்படையில் நிதி திரட்டி கல்லூரி கட்டுவதாக வாக்குக் கொடுத்து, பணம் 
வசூல் செய்ததும் அதைக் கடனாக மாற்றிக்கொண்டார் என்பதுதான்.         

"கடன்-னு சொன்னா யாரும் பணம் தர மாட்டாங்க. அதனால ஷேர்-னு சொன்னேன்" என்று அவரே ஒரு வீடியோவில் சொல்கிறார். 

இப்படியாக அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் மாறு செய்தார் என்பதுதான் அவர் மீதுள்ள பிரதானமான குற்றச்சாட்டு.

இது என்ன பெரிய பிரச்சனையா என்று நாம் நினைக்கலாம்.  பங்கு என்பதற்கும் கடன் என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டால் இதில் உள்ள பிரச்னை நமக்குத் தெரியவரும்.  

ஷேர் ஹோல்டர்கள்.. அதாவது பங்குதாரர்கள் அல்லது முதலீட்டாளர்கள் என்போர் ஒரு நிறுவனத்தின் அல்லது டிரஸ்டின் பகுதி உரிமையாளர்கள். அந்தநிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் இவர்கள் தலையிடமுடியாதே தவிர சட்டப்படி வேறு பல உரிமைகள் இவர்களுக்கு உண்டு.

ஆண்டிற்கொருமுறை பங்குதாரர்களின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆடிட் செய்யப்பட்ட கணக்கு வழக்குகள் அதில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிர்வாக இயக்குனர்களை நியமிக்கவோ நீக்கவோ பங்குதாரர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும். டிரஸ்டின் பெயரில் சொத்துக்கள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட மேலும் பல முக்கியமான முடிவுகள் இந்தக் கூட்டத்தில்தான் எடுக்க முடியும். நிறுவனத்தின் / டிரஸ்டின் லாப, நட்டத்திலும் பங்குதாரர்களுக்கு பங்கு உண்டு.   

ஆனால் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கேட்பதைத் தவிர வேறு உரிமை எதுவும் கிடையாது. அவர்களிடம் கணக்கு காட்ட வேண்டிய அவசியமும் நிர்வாகிகளுக்கு இல்லை.  

திரு சலீம் ஷேர் என்ற பெயரில் வாங்கிய பணத்தை கடன் என்று பத்திரத்தில் பதிவு செய்தபோது, அந்த முதலீட்டாளர்களுக்கான மேற்கண்ட அத்தனை உரிமைகளையும் மறுத்திருக்கிறார்.  இதுதான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டே தவிர மொத்தப் பணத்தையும் அவர் மோசடி செய்து விட்டார் என்று யாரும் சொல்வதாகத் தெரியவில்லை. 

அவர் இன்று வெளியிட்டிருக்கும் மறுப்பு அறிக்கையில் கூட  'முதலீட்டாளர்கள்' என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார்.  ஆனால் அவர் அந்த 'முதலீட்டாளர்களுக்குக் கொடுத்திருப்பதோ  'கடன் பத்திரம்'.  அதன்படி அவர்கள் முதலீட்டாளர்களே அல்லர்.  வெறும் கடனாளர்கள்தான்.      

ஒருவேளை ஷேர் என்பதற்கும் கடன் என்பதற்கும் அவருக்கே வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் அவருடைய ஆடிட்டர்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.  நடந்தது ஒரு genuine mistake என்றால்கூட அதை நிவர்த்தி செய்ய திரு சலீம் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.  மாறாக தம் உரிமையை கோருபவர்களின் கோரிக்கைகளை திரித்துக் கூறுவதும் அவர்கள் மீதே வழக்குத் தொடுப்பதும் அவர் மீதான நம்பகத்தன்மையை மேலும் மேலும் குலைப்பதாகத்தான் இருக்கிறது.       

- Salah Uddin

(இந்தக் கருத்தைச் சகோ. சலாஹுதீன், திரு. சலீமின் பேஜில் போட்டு கேள்வி கேட்டதற்காக அவர் கமெண்டையும் டிலிட் செய்து, அவரையும் திரு. சலீம் ப்ளாக் செய்துவிட்டார். இப்பதிவு சரிதான் எனக் கருதும் சகோதரர்கள் இதனைத் திரு சலீமின் பதிவில் கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பிப் பார்க்கவும். முகமூடிகள் அவ்வாறுதான் அவிழ்க்க முடியும்)https://m.facebook.com/story.php?story_fbid=3108291189233651&id=100001584020310
[10/05, 1:44 am] +91 96007 78520: கண்டிடிப்பாக , 
பொதுவில் ஏன
[10/05, 1:46 am] +91 96007 78520: *பொதுவில் ஏற்படும் ஒரு கேள்விதான்....
என் நண்பர் ஒருவர் நான் முகநூலில் பதிந்த்தைப்பாரத்து எண்ணிடம் கேள்விக்கு வந்தார் , அதில் 
" கடன் " என டாக்குமெண்ட் தயார் செய்யப்படும் போது ஏன் இவர்கள் எதிர்கவில்லை . என கேட்கிறார்.
அதற்கு நான் முந்தைய வீடியோக்களை  அனுப்பி சலீம்மீதான நம்பிக்கைதான் காரணம் எனவே கேள்வி எழுப்பவில்லையாக இருக்கலாம் என்றேன் .

உண்மையில் ஏன் கேள்வி எழுப்பவில்லை ?
[10/05, 2:03 am] +974 6642 6696: கேட்கப்பட்டது.

ட்ரஸ்ட் ஆக்ட்படி ஷேர் ஹோல்டர் என ட்ரஸ்டில் சேர்க்க முடியாது. இது இந்தியச் சட்டத்தின் ஃபார்மாலிட்டிக்காக மட்டும்தான். நீங்கள் ஷேர் ஹோல்டர்கள்தான்.

அதற்காக அன்னை கதீஜா வெல்ஃபேர் சொசைட்டி ஒன்று சட்ட ரீதியாக பதிவுசெய்யப்பட்டு, அதில் நீங்களெல்லாம் ஷேர் ஹோல்டர்களாக சேர்க்கப்படுவீர்கள். இப்போது தந்துள்ளது வெறுமனே பணம் பெற்றதற்கான ஆதாரம் மட்டும்தான். உங்கள் சேஃப்டிக்காகத்தான் என்றார்.

அவர் கூறியதை நம்பும் வகையில்,

அவர் லெட்டர் பேடில் எழுதித்தந்த அந்தப் பேப்பரில், 

ஷேர் ஹோல்டர்களை அன்னை கதீஜா வெல்ஃபேர் சொசைட்டியின் மெம்பர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரஸ்ட், சொசைட்டி சட்டமேதும் அறியாதவர்கள் அவர் மீதான நம்பிக்கையில் அவர் சொன்னதை மொத்தமும் நம்பினோம்.

சந்தேகம் ஏற்பட்டுக் கேள்விகள் ஆரம்பித்து எதற்கும் அவர் பதில்தராத நிலையில்தான்,

ஆர் டி ஐயில் கேள்வி கேட்டுப் பல விசயங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொண்டோம்.

அதில்தான்,

ட்ரஸ்டில் அவர் இருவர் மட்டும்தான் ஓனர்கள் என்பதும்

ஷேர் ஹோல்டர்கள் அவர் கூறியது போல் சட்டப்படி எங்குமே பதிவு செய்யவில்லை என்பதும் அன்னை கதீஜா வெல்ஃபேர் சொசைட்டி என ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுமெல்லாம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்தே பிரச்சனை அதிகமானது. அவர் நியாயமாக அதனைச் சரி செய்ய முன்வராமல்,

கடந்த பிப். 14, 2019 ல் தமுமுக தலைவர் ஹைதர் அலியை அழைத்து வந்து ஷேர் ஹோல்டர்களை மிரட்டி மேட்டரைக் கமுக்கமாக முடித்துவிடலாம் என ப்ளான் போட்டார்.

ஆனால், சகோ. ஹைதர் அலி அவரின் நோக்கத்தைப் புரிந்ததாலோ என்னமோ அந்தக் கூட்டத்திலேயே சலீமைக் கண்டித்து, இது உன் வாப்பா வீட்டு காசில் கட்டிய கல்லூரி இல்லையே? ஷேர் ஹோல்டர்களில் சிலரையாவது ட்ரஸ்டில் சேர்த்து நிர்வாகம் உண்டாக்கு. ஆண்டுக்கு ஒருமுறை ஷேர் ஹோல்டர்கள் கூட்டம் போடு. இது சாதாரணமாக முடிக்க முடியுமான பிரச்சனை என அறிவுரைக் கூறினார்.

அக்கூட்டத்தில்தான்,

கடன் எனக் கேட்டால் தரமாட்டார்கள். அதனால், 2011 ல் இருந்த நாலெட்ஜுக்கு ஷேர் எனக் கேட்டுவிட்டேன் என உளறி வைத்தார்.

அத்துடன் அவர் திட்டமிட்டுத்தான் ஏமாற்றியுள்ளார் என்பது எங்களுக்கு உறுதியானது. அதனால் , உடனே ஷேர் ஹோல்டர்கள் கூட்டம் நடத்த நெருக்குதல் கொடுத்தோம்.

அதற்கு, கல்லூரி கட்டக் கடன் தந்தவர்கள் தங்களின் கடன் தொகையைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதனை எதிர்த்துக் கடுமையாக விமர்சனம் செய்து, ஆகஸ்ட் 4, 2019 ல் ஷேர் ஹோல்டர்கள் கூட்டத்தை நாங்கள் கூட்டி சலீம் மோசடி செய்தார் என்ற விவரத்தை ஊடகங்களிடம் வெளிப்படுத்தி வழக்கு தொடுக்க தயாரானோம்.

உடனே முந்திக் கொண்டு,

இதையெல்லாம் முன்னணியில் நின்று செய்த எங்களில் நால்வர் மீது 5 லட்சம் கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்தார்.
[10/05, 2:08 am] +91 96007 78520: தெளிவான விளக்கம் , நன்றி.
அவருக்கும் எத்தி வைப்பேன்.
இன்ஷா அல்லாஹ்.
[10/05, 2:16 am] +974 6642 6696: முதலில் திரு. சி எம் என் சலீமுக்கு எத்தி வையுங்கள். அவர் ஃபேஸ்புக்கில் பதிந்து, இப்படி சொல்கிறார்களே, உண்மையா எனக் கேள்வி எழுப்புங்கள். உடனே கமெண்ட் டிலிட் செய்யப்பட்டு ப்ளாக் செய்யப்படுவீர்கள். இவ்வாறு கேள்வி கேட்டு ப்ளாக் செய்யப்பட்டவர்களின் ஒரு சங்கமே தொடங்கும் அளவு நீள்கிறது.

தமிழகத்தில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்தோம். சாமர்த்தியமாக எங்கள் மீது முதலில் வழக்குப் பதிவு செய்து, எங்கள் புகாருக்கு வழக்கறிஞர்களை வைத்து சமாளித்து ஹாயாக சவூதி சென்றார்.

அல்லாஹ் சூழ்ச்சியாளர்களிலெல்லாம் பெரிய சூழ்ச்சியாளனில்லையா? வாய் நிறைய அல்லாஹ், உம்மத், சமுதாயம் என இப்படி ஏமாற்றி நடப்பதற்கு இறையச்சமற்ற, இறைவன் இல்லை என நினைக்கும் ஒருவனால் மட்டுமே முடியும்.

அல்லாஹ்வை மறந்த அவரின் செய்கைக்கு அல்லாஹ் அவரை வெளிநாட்டுச் சிறையில் நான்கு மாதம் களிதின்ன வைத்துவிட்டான். ஆனாலும் கொஞ்சமாவது அல்லாஹ்வின் மீதான அச்சம் வந்துள்ளதா எனப் பாருங்கள். ஜாமீனில் இறங்கி சவூதியில் அடைபட்டு இருக்கும்போதே மீண்டும் ஆரம்பித்துவிட்டாரே?

சமுதாயத்தை அந்த அளவுக்குக் கேன சமுதாயமாக நினைத்து வைத்துள்ளாரா?

இப்படித்தான் வேறொரு எவ்வளவு காலம் சமுதாய மக்களை நம்ப வைத்து யோக்கியன் போல் சமாளித்து வந்தார். அவரை அல்லாஹ் எந்த நிலைமைக்கு இன்று ஆளாக்கியுள்ளான்?

இதெல்லாம் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இறைவன் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறது. ஆனால், இந்நபர் போன்றவர்களுக்கு?
[10/05, 3:31 am] +91 93622 22786: யாராவது சலீமுடன்  நட்பு  வட்டத்தில்  அல்லது  பழக்கம் உடையவர்கள்  இருக்குறீர்களா இந்த குழுமத்தில் 🤷🏽‍


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.