அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா தமிழர்களா?- சீமான்


நாம் தமிழர்கள் நம்மை ஆண்டவர்கள் தமிழர்களா? 

இனி நம்மை ஆளப் போகின்றவர்களாவது தமிழர்களாக இருக்க வேண்டாமா? 

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தை வந்தேறிகள் ஆள்வதா? 

பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தமிழர்களாகிய நம்மை ஆளக் கூடாது
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_9.html 






இப்படியாக சீமான். ரஜினி காந்தை குறி வைத்துப் பேசினார். ரஜினி எதிர்ப்பாளர்கள், ரஜினியால் தங்கள் அரசியலுக்கு ஆபத்து - பாதிப்பு என எண்ணியவர்கள் ஏற்றார்கள். வரவேற்றார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையானது.

பெரியார், தமிழை நாவில் நடனமாட விட்டவர் என சொல்லப்பட்ட அறிஞர் அண்ணா, மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ என போற்றப்பட்ட மு.கருணாநிதி, உலகத் தமிழ் மாநாடு மூலம் உயர்வைப் பெற்றவர் என்று புகழப்பட்ட ஜெ.ஜெயலலிதா, ஸ்டாலின், வாழும் நடமாடும் பல்கலைக் கழகம் வை.கோ, கேப்டன் விஜயகாந்த் என்று ஒருவர் விடாமல் தமிழர்கள் இல்லை என்று பிரகடனப்படுத்தினார். இவர்கள் தமிழர்களாகிய நம்மை ஆளக் கூடாது என்று தீர்ப்பு வழங்கினார்.  

சீமானின் இந்த வாதத்துக்கு பெரியாரின் தி.க,களாகட்டும். அண்ணாவின் தி.மு.கவாகட்டும்  அ.இ.அ.தி.முக, தே.மு.தி.க. ம.தி.முக. ஆகிய இந்தக் கட்சிகளாகட்டும் பதில் சொல்ல முடியாமல் தான் இருந்தார்கள்.. அவர்களின் தலைவர்கள் தமிழர்கள் இல்லை என்ற வாதத்தில் பதில் அளிக்க முடியாமல் திணறிப் போய்தான் நின்றார்கள்.

சீமானுக்கு யார் பதில் சொல்வது? என்று தெரியாமல் தான் இருந்தது. காரணம் அவ்வளவு கடுமையாக அழுத்தமாக பேசிக் கொண்டிருந்தார் சீமான். அதனால் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. யாருமே பதில் சொல்லவில்லை.

சீமான் சங்பரிவார்களின் பினாமி என்று நீண்ட நாளாக நண்பர்களிடம் வாதித்து வந்துள்ளேன். மேலப்பாளையம் சுலைமான், Er இலியாஸ் போன்ற பலரிடம் பாராளுமன்ற தேர்தலின் போது ரொம்ப அதிகமாகவே பேசி இருக்கிறோம். 

இஸ்லாமிய சட்டத்தை இரண்டாம் பட்சமாக ஆக்கிக் கொண்டு அரசியல் ஆதாயத்துக்காக வழிகெட்டுப் போனவர்கள் ஏராளம். சீமான் பின்னால் வழிகெட்டுச் சென்றவர்களோ அளவுக்கு அதிகமாக இஸ்லாத்தின் வரம்பை மீறி விட்டார்கள். 

நம்மை அந்நியன் என்று சங்பரிவார்கள் சொன்னபோது. யாராடா சொன்னது? நம்மை அந்நியன் என்று யாராடா சொன்னது? என்று சீறிப் பாய்ந்து  எதிர்த்து  நின்றவன். சீமான் பின்னால் போனதும்.

தனது இஸ்லாமிய சகோதரனை உருது முஸ்லிம் என்று அந்நியப்படுத்தினான். இஸ்லாம் வழங்கிய கண்ணியத்தைக் கெடுத்தான். 

இப்படிப்பட்ட நாம் தமிழர்கள் கூட்டத்தை தமிழக மவுலவிகள் யாருமே கண்டு கொள்ளவில்லை. பீ.ஜே.யும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார். கண்டு கொள்வில்லை என்றால் சீமானை யாரும் ஒரு பொருட்டாக கருதவே இல்லை. ரசூலுல்லாஹ்வை விமர்சிக்க வைத்து. பீ.ஜே.யை சீமான் மீது சாட்டி விட்டான் அல்லாஹ்.

மம்முட்டி மகன் நடித்த படத்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது. திட்டமிட்ட செயல் அல்ல. பிரபாகரன் பற்றி கேரள மக்களுக்கு அவ்வளவாக தெரியாது. அதில் அரசியல் ஆதாயம் தேடப் போய் வசமாக மாட்டிக் கொண்டார்கள் சீமானும் அவரது தடம் புரண்ட தம்பிகளும். இது அல்லாஹ் ஏற்படுத்தியது.

இதுவரை சீறிப் பாய்ந்த சீமான் பம்முகிறார். மற்றவர்களை நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்த சீமான் இப்பொழுது பீ.ஜே.யை நேருக்கு நேர் சந்திக்க திராணி இல்லாமல் திண்டாடி  நிலை குலைந்து நிற்கிறார்.

சீமானுக்கு பீ.ஜே. அவர்கள் கூறி வரும் பதில் மிகச் சரியான பதில். தமிழர்கள் என்பதற்கு அளவுவுகோல் என்ன?  சேர, சோழ, பாண்டியர்களை தமிழின் மூவேந்தர்கள்  என்கிறீர்கள். சேரன் யார் கேரளத்தை ஆண்டவன் தானே!. அப்படியானால் கேரள மக்கள் யார்? தழிழர்கள் தானே.

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி! அது எப்படி அய்யா, கல் தோன்றி, மண் தோன்றா முன்னரே, தமிழ் தோன்றும்? பூமி-ன்னு ஒன்னு தோன்றி, மக்கள் தோன்றி, அதன் பிறகு தானே-ய்யா மொழியே தோன்றும்? என்னய்யா “பகுத்தறிவு”? என்ற கேள்வி வேண்டாம்.

உனது இந்த வாதப்படியே  பார்த்தாலும் உலமே தமிழனின் பிள்ளைகள் தானே, என்பன போன்ற பீ.ஜே.யின் கிடுக்கிப் பிடி கேள்விகளில் சிக்கித் தவியாய் தவிக்கிறார் சீமான். .  ஜோலி முடிந்து போன சீமானை துாக்கி நிறுத்தச்  சிலர் பாடுபடுகிறார்கள்.

இஸ்லாமிய விரோதி சீமானின் முகத்திரை முழுமையாகக் கிழிக்கப்பட வேண்டும். அந்த விஷயத்தில் பீ.ஜே. முழுமையாகக் களம் இறங்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.