P.J,TMMK, இலாஹி பற்றி பாஷா பாய் சொன்னது என்ன?

கோவை குண்டு வெடிப்பில்  பீ.ஜே, இலாஹி, தமுமுக பங்கு  உண்டா?  த.மு.மு.க.வில் உள்ள புதியவர்களே நடந்தது என்ன உங்களுக்குத் தெரியுமா?
மேலப்பாளையம் சகோதரர்களின் வாக்கு மூலத்தில்   பீ.ஜே   இலாஹி  பற்றி என்ன இருந்தது?


கோவை பாஷா பாய் போன்ற சிறைவாசிகளின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்பதற்காக நாம் மறைத்த உண்மைகளை போட்டு உடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வழிப்பறி கொள்ளைக் கூட்ட கள்ள ஜிகாத்திகள் ஏற்படுத்தினார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/pjtmmk.html

2020 பிப்ரவரியில் எழுத துவங்கியபொழுது உண்மையான ஜிஹாதிகள் வேண்டாம் என்று தடுத்தார்கள். பாஷா பாய் வருத்தம் தெரிவித்த பின் நீங்களும் பீ.ஜே.யும் விட்டு விட்டதை மீண்டும் கிளற வேண்டாம் என்றார்கள். 

அல்லாஹ்வின் சாபத்துக்குரிய கயவர்களான கள்ள ஜிகாத்திகளின் ஆட்டங்கள் அளவுக்கு அதிகமாகி விட்டன. ஆகவே  உண்மையான ஜிஹாதிகள் ஹக்கை போட்டு உடையுங்கள். இனிமேல் எங்களுக்காக நீங்களிருவரும் கேவலப்பட வேண்டாம் என்று அனுமதி தந்து விட்டார்கள். ஆகவே எழுதுகிறேன்.

கள்ள ஜிகாதிகளுடன் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தவ்ஹீது வேடதாரிகள் கைகோர்த்துள்ளது ஆச்சரியம் இல்லை. த.மு.மு.க.வில் உள்ள புதியவர்கள் வரலாறு தெரியாததால் கள்ள ஜிகாதிகள் கூற்றை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் கள்ள ஜிஹாதிகளின் செய்திகள் த.மு.மு.க. குரூப்களில் வந்து கொண்டிருக்கிறது. அவர்களும் அறியவே இந்த விளக்கம். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இலாஹியை கோர்த்து விட்டது த.மு,மு.க.வா?

2000த்தில் நான் தாயகம் வந்துள்ளதை அறிந்த சிறைவாசிகள் பலர் எனக்கு கடிதம் அனுப்பினார்கள். அதில் முக்கியமானது   மூத்த   குடிமகனான  சிறைவாசி ஒருவர் எழுதியது. அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அதிராம்பட்டிணம் சென்றேன். அங்கு வரதட்சணை ஒழிப்பு மாநாட்டுக்கு வந்திருந்த பீ.ஜே. அதிரை ஜமீல் சகோரர் நஸ்ருத்தீன் வீட்டில் இருந்ததை அறிந்தேன்.

த.மு,மு.க. மற்றும் தவ்ஹீது சகோதரர்களுடன் பேசிக் கொண்டிருந்த பீ.ஜே.யை தனியாக அழைத்தேன். எல்லாரும் வெளியில் இருக்க தனியாக சந்தித்தேன். இந்த நிகழ்வின் போது வெளியில் நின்றவர்கள் இதை படித்தால் அன்று நடந்தது என்ன என்று இன்று  தெரிந்து கொள்ளுங்கள்.

மூத்த குடிமகன் கடிதத்தை கொடுத்தேன் அதில் நீங்கள்  (இலாஹி) த.மு.மு.க.வுக்கு பணம் அனுப்பியதை கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையைில் சம்பந்தப்படுத்திக் கூறி உங்களை மாட்டி விட்டார்கள். த.மு.மு.க.வினரான பீ.ஜேஜவாஹிருல்லாஹைதர் அலி ஆகியோர். உங்களை மாட்டி விட்ட அவர்களிடத்தில் நீங்கள் உஷாராக இருங்கள் என்று எழுதி இருந்தார். 

அது உண்மை இல்லை. என்னை மாட்டி விட்டவர்கள் அவர்கள் இல்லை. பீ.ஜேஜவாஹிருல்லாஹைதர் அலி  ஆகியோர் என்னை நிரபராதி என்றே கூறி உள்ளார்கள் என்று  நடந்ததை  சிறையில் போய் பார்த்து பின்னாளில் மூத்த குடிமகனுக்கு புரிய வைத்தேன். நடந்தது என்ன? 

தமுமுக வளர்ச்சிக்காக அரபகத்திலிருந்து இலாஹி மூலமாக ஆரம்ப காலத்தில் வந்த பணத்தை பாஷா பாய் எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்டதில் இருந்தே பிரச்சனைகளும் பிரிவும். தொடங்கியது.

பீஜே அவர்களை கோவை வழக்கில் பொய்யாக சேர்க்க பாஷா பாயும் அவர் மருமகனும் வாக்கு மூலம் கொடுத்தார்கள். அதை சரியாக கோர்வையாக வலுவானதாகக் கொண்டு வர துபையிலிருந்த இலாஹியிடமிருந்து ஆரம்பித்து பீ.ஜே. யிடம் கொண்டு போய் முடித்தார்கள்.

கோவை  வழக்கின் பீ.ஜே. வாக்கு மூலத்தை பரப்பி படிக்க வைத்த பல இயக்கத்தவர்கள்.  பாஷா பாய் கொடுத்த வாக்கு மூலத்தை அப்படி பரப்பிவில்லை. பீ.ஜே. வாக்கு மூலத்தை படிக்கும் முன். பாஷா பாய்  கொடுத்த வாக்கு மூலத்தை படிக்க வேண்டும்.

அதில் உள்ள  தேதி   மற்றும்  விபரங்களை   படியுங்கள். அதன் பிறகு பீ.ஜே. வாக்கு மூலத்தை படியுங்கள். அந்த தேதியையும்  பாருங்கள்.  (மூத்த குடிமகனே) உங்களுக்கு உண்மை புரிந்து விடும். (இதை  இப்பொழுது படிப்பவர்களே உங்களுக்கும்தான்)

பீ.ஜே.  அவர்களை  சிக்க வைத்து மாட்டி விட பாஷா பாய் கொடுத்த வாக்கு மூலத்தினால் தான் பீ.ஜே.யை விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் போலீஸுக்கு ஏற்பட்டது. 

விசாரணையில்  பீ.ஜே. அளித்த   பதில். சாட்சியமாக ஆனது  பீ.ஜே.வை  வழக்கின் சாட்சியாக சேர்க்க வேண்டிய அவசியமும் போலீஸுக்கு  ஏற்பட்டது

தேவை இல்லாமல்  பீ.ஜே.வை  வழக்கில் சேர்க்க  அல் உம்மாவினர் எடுத்த முயற்சி தான் பீ.ஜே.யிடம் SIT வாக்குமூலம் வாங்க வைத்தது. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பீ.ஜே வாக்கு மூலம்  கொடுத்தார் என்று அதையே கூவித் திரிந்தார்கள். 

பீ.ஜே விசாரணைய நேர்மையாக எதிர் கொண்டார். நடந்த உண்மைகளைக் கூறினார்.. கோவை பாஷா பாயுடன்  எப்போதும் கூடவே இருந்த மேலப்பாளையம் சகோதரர்களின் வாக்கு மூலத்தில்  பீ.ஜே. பற்றியும்  இலாஹி  பற்றியும் என்ன கூறப்பட்டுள்ளது என்று   பீ.ஜே.  சுட்டிக் காட்டினார்.  

பீ.ஜே. தன்னையும் சிறைவாசிகள் குடும்ப வகைக்காக ரகசியமாக உதவிய இலாஹியையும் கைதாவதில் இருந்து அல்லாஹ்வின் அருளால்  பாதுகாத்தார். 

வேறு யாராவதாக இருந்திருந்தாலும் டவுசர் கழண்டு உளறிகொழறி, கதறி  தானும் கைதாகி கூட துணைக்கு கொஞ்ச பேர்களையும் கூட்டி வந்திருப்பார்கள். இப்படி சிறையில் உள்ள அல்லாஹ்வின் அருளுக்குரிய உண்மையான ஜிஹாதிகள் சொன்னதையும் மூத்த குடிமகனிடம் சொன்னேன். ஒரே நாளில் அல்ல பல சந்திப்புகள் மூலம். சிறுகச் சிறுக சொன்னேன்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களில் தலைமறைவாகி இருந்த ஒவ்வொருவராக பிடிபட்டனர். ஒவ்வொருவர் பிடிபடும் போதும் அவர்களைக் காட்டிக் கொடுத்தது பீ ஜே தான்,  தமுமுகதான் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். 

தமுமுகவுக்கும், அல்உம்மாவுக்கும் ஏற்பட்ட பகை. ல்உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. தமுமுக கொடிக் கம்பங்களை அல்உம்மாவினர் வெட்டிச் சாய்த்தது. பற்றியெல்லாம்  மக்களுக்கு சொல்லாமலே இருந்தது  த.மு.மு.க.  இதை  எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள்.

துபையிலிருந்த இலாஹியின் வற்புறுத்தலால் இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டது. அலி அக்பர் உமரி கேள்வி கேட்க. பீ.ஜேஜவாஹிருல்லா,    ஹைதர் அலி, பாக்கர், விஞ்ஞானி அப்துல் ஜலீல் பதில் அளிக்க . சூடான கேள்விகளுக்கு சுவைான பதில்  என்ற தலைப்பிட்டு இலாஹி அந்தக் கேஸட்டை வெளியிட்டார்.   டைட்டில்.  மேலப்பாளையம் தமீம். இளையான்குடி அஹ்மது கபீர்.


பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது அரசு என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்தார்கள். 

சமுதாய துரோக அமைப்புகள் வற்புறுத்தல்கள் ஒரு புறம்.  வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து பீ.ஜேயை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தது


பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதிமன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றது. மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் பீ.ஜே. வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவு பெற்றது.

திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் பீ.ஜே. வீட்டிலும் அல்லாஹ்வின் ஒரு நாள் முழுவதும் ரைடு நடத்தினார்கள். சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர். 

பீ.ஜே. வீட்டில்  எதுவும் கிடைக்கவில்லை. தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றது. அத்துடன் பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, பாக்கர் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றது.  

சிறைவாசிகள் குடும்பத்திற்கு ரகசியமாக உதவிய அல்லாஹ்வின் அருளுக்குரியவர் தாயார் மீது ஹவாலா வழக்கு பாய்ந்தது.

ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீது பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். பீ.ஜே. மீது மட்டும் கடுமையான குற்றச்சாட்டு.  நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டார்கள்.  

விசாரிக்கப்பட்டதில் பீ.ஜே.யிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி முக்கியமான கேள்வி.

குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே கொடுத்து விட்டார். அதை மேலப்பாளையம் புகாரி பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். 


பீஜே தந்த அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது தான் அல் உம்மா பாஷா பாய் தரப்பு  பீஜே மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, மிக முக்கியமான குற்றச்சாட்டு.  

பீஜேயிடம்  இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை  மேலப்பாளையம் புகாரியும் உறுதி செய்து விட்டார். என்று கூறி SIT பீஜேயிடம் விசாரணை செய்தார்கள்.

குண்டு வைப்பதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டது பொய் என்றால் அதை  நீங்கள் (பீஜே) தான் நிரூபிக்க வேண்டும். 

அப்படி நிரூபிக்கத் தவறினால் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக நீங்கள்  (பீஜே) சேர்க்கப்படுவீர்கள் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். 

பீ.ஜே. சொன்ன பதில் என்ன?  அதிரையில் வைத்து மூத்த குடிமகன் கடிதத்தைப் படித்துப் பார்த்த பீ.ஜெ. என்ன சொன்னார்? மேலப்பாளையம் சகோதரர்களின் வாக்கு மூலத்தில்   பீ.ஜே   இலாஹி  பற்றி என்ன இருந்தது? இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்.

மேற்கண்டவைகளை மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் கேட்டு மறுக்க வேண்டும்.

யா அல்லாஹ்! வெறுமனே யார் மறுத்தாலும் மறுக்கும் அந்த  பொய்யனையும்  அவனை ஆதரிக்கக் கூடியவர்களையும்  கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

இப்பொழுது இது தேவையா? என்று கேட்கும் புண்ணியவான்களே 22 ஆண்டுகளாகியும் விடுதலை ஆக முடியாதவர்கள் நிலையை எண்ணிப் பாருங்கள். பொய்யான குற்றச்சாட்டில் நீங்கள் போயிருந்தால் இப்பொழுது இது தேவையா?? என்று கேட்பீர்களா?

நாம் மறைத்த உண்மைகளை போட்டு உடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வழிப்பறி கொள்ளைக் கூட்ட கள்ள ஜிகாத்திகள் தான் ஏற்படுத்தி உள்ளார்கள் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.