பீ.ஜே, த.மு.மு.க. பற்றி பாஷாபாய் கொடுத்த வாக்கு மூலம் என்ன? -2

C    செய்தியை  கோவை பாஷா பாய்க்கு போய் சேர்த்தது யார்?
வரலாற்றுக்  கடிதம் தரும்  பதில் என்ன?


வழிப்பறிக் கொள்ளை செய்யும் 
கள்ள ஜிகாதிகள். விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆகி விட்டு ஜிகாதி என்று ஏமாற்றித் திரியும் போலி ஜிகாதி பற்றி பல முறை எழுதி உள்ளேன்.  கடந்த வெளியீட்டில் அல் உம்மா தலைவர் அன்சாரி அவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் பற்றி பத்திரிக்கையில் கொடுத்த அறிக்கையை போட்டிருந்தோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/05/2.html

அதைப்  பார்த்த பலர்.  உங்கள் எழுத்துக்கள் மூலம் கடந்த ஆண்டுதான் உங்களால் கள்ள ஜிகாதிகள் என்று விமர்சிக்கப்படுபவர்கள்  வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று எண்ணினோம்.  அன்சாரி அறிக்கை மூலம்  பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்பே இப்படித்தான்  என அறிந்தபொழுது அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறினர்.


புகாரி எந்த புகாரி?  மூத்த குடிமகன் யார்?  சொல்ல பயமா? இப்படி கேள்விகளும்  நீதி(?) போதனைகளும் வந்த வண்ணம் உள்ளன.  நான்  குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என்பதில் உறுதியாக உள்ள முஸ்லிம். இன்றுள்ளவர்களுக்கு புரியும் வார்த்தையில் சொல்வது என்றால். முதலில்  நான் தவ்ஹீது வாதி.  உண்மையைச் சொல்ல உண்மையான தவ்ஹீது வாதி தயங்கவோ, எவனுக்கும்  பயப்படவோ மாட்டான்.

சொல்லப் போவது எதுவும் புதியது கிடையாது. ஆரம்ப கால த.மு.மு.க.வினருக்குத் தெரிந்தவைதான். நாம்  பல முறை சொன்னவைதான்.  பெரும்பாலும் 2004வரை பீ.ஜே. த.மு.மு.க.வில் இருந்தபொழுது உணர்விலும் எழுதப்பட்டவைதான். பெயர்கள் குறிப்பிட்டு எழுதுவதன் நோக்கம் சமப்தப்பட்டவர்களை கேட்டு உறுதி செய்து கொள்ளத்தான்.

முஸ்லிம் டிரஸ்ட் உருவாக்குவது சம்பந்தமாக சவூதி சகோதரர்கள்  முடிவு செய்தார்கள்.  அதிரை ஜமீல் காகா மூலம் யு.ஏ.இ.க்கு தகவல் வந்தது. டிரஸ்டுக்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அமைப்பின் அவ்வப்போதைய செலவுகளுக்கு தொண்டர்கள் மூலம் வசூல்தான் செய்ய வேண்டும். அதுதான் அமைப்பு மென்மேலும்  வளர்ச்சி அடைய வழி வகுக்கும்.

சொந்த செலவில் 200 ரூபாய் வாடகையில் மண்டபத்தில் கூட்டம் போட வசதி இருந்தும் கடை, கடையாக நபர் நபராக  ஒரு ரூபாய் அல்ல நாலனா (25 பைசா) தந்தாலும் வாங்குவேன்.

காரணம் கூட்டம் பற்றி பிட் நோட்டீஸ் போட்டு ஆயிரம் பேருக்கு கொடுத்தாலும். எல்லாருக்கும் அதில் ஈடுபாடு வராது. ஒருவர் தருவது பத்துப் பைசாவாக இருந்தாலும் அது அவரை இன்வாலாகச் செய்யும். அவரே  பத்துப்   பேருக்கு செய்திகளைச் சேர்ப்பார். முடிந்தால் அவரும் வருவார்.


அதுமாதிரி தான் அமைப்பும். அது செய்யும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் அவ்வப்போது தொண்டர்கள் மூலம் நன்கொடை வசூலித்தால் தான். தொண்டர்களை தலைமை மதிக்கும். தலைமை பற்றியும் செயல்பாடுகள் பற்றியும்  தொண்டர்கள் மூலம்  மக்கள் அறிவார்கள்.

நிருபர்களுக்கு பணம் கொடுத்து செய்திகள் போடுவதை விட பல மடங்கு நன்மை. அவ்வப்போது மக்களிடம்  நன்கொடை வசூலிப்பதில்தான் இருக்கிறது என்றேன். யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் ஒரு சி வசூலுக்கு நானும் ஒப்புக் கொண்டு செயல்பட்டேன்.

இந்த சி ச் செய்தி கோவை பாஷா பாய்க்கு போய் விட்டது. பாஷா பாய் அவர்களை சுற்றி அன்று பாடிகாட்டாக  இருந்தவர்கள் மேலப்பாளையம் இளைஞர்கள் தான்.  அதனால்  பீ.ஜே. உட்பட எல்லாருக்குமே டிரஸ்டு ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்த  இலாஹி மூலம் தான் செய்தி பாஷா பாய்க்கு போய் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.  நடந்தது என்ன?  எனக்கு  வந்த  வரலாற்றுக்  கடிதம்  பதில்  சொல்கிறது பாருங்கள்.


நீங்கள் MUSLIM TRUSTல் டிரஸ்டி ஆவதற்காக(?) உங்கள் மூலமாக அரபகத்தில் இருந்து வரும் சி விசயத்தை கமாலுதீன் மதனீ உங்க ஊர் புகாரியிடம் புதுப் பேட்டை தவ்ஹீது பள்ளியில் வைத்து  எதார்த்தமாக சொல்லி  உள்ளார். உங்க ஊர்  புகாரி தான் அதை பாயிடம் சொல்லித் தொலைத்தான்.

உடனே புகாரியுடன் காரை எடுத்து கொண்டு கிளம்பிய பாஷா பாய் PJ  யிடம் போனார்.  பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார்.  PJ. பாஷா பாயிடம் யாரு சொன்னார்கள்? என கேட்டுள்ளார்.  பாய், சத்தியமங்களம் அலி கான் குட்டி சொன்னதாக சொல்லி உள்ளார். 

PJ சத்தியமங்களத்து குட்டிக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்று  கூறி உள்ளார். சொன்னது மேலப்பாளையத்து காரர்கள்தான் என்பதை  PJ  கணித்து விட்டார். குறிப்பாக பாயுடன் சென்ற புகாரியாகத்தான் இருக்கும் என்றும் யூகித்து முடிவு செய்து விட்டார். 

நாங்களும் சிரமத்தில் இருக்கிறோம் என பாய் அந்த பணத்தில் பங்கு கேட்டிருக்கிறார்.  PJ பங்கு தர வழி இல்லை என தெளிவாக மறுத்து விட்டார். இது துபையிலிருந்து மட்டுமல்ல துபை, அபுதாபி,  அலைன், ராசல்கைமா, உம்முல் குவைன், ஃபுஜைரா,  என எல்லா இடங்களில் உள்ள கோதரர்களிடம் இருந்து TMMK க்கு என வரும் வளர்ச்சி நிதி  அதை இலாஹி தான் அனுப்பி வைக்கிறார்.

அடுத்த முறை உங்கள் வகைக்கு என்று கேட்போம் கண்டிப்பாக செய்வார். நானே இலாஹியிடம் சொல்லி வாங்கி தருகிறேன் இப்போது  இல்லை என  PJ உறுதியா சொல்லி உள்ளார். 

கடைசியாக
10 வரை பாய் இறங்கி வந்து கேட்டும் அது TMMK வின் ஹக்கு என்று PJ முடிவாக கூறி இருக்கிறார். இந்த பணப் பிரச்சினையும். வாக்கு மூலத்தில்  இலாஹியிடம் ஆரம்பித்து  PJ  வரை  கொண்டு வர வைத்தது.

வாக்கு மூலத்தில் உங்கள் (இலாஹி)  பெயரையும்  PJ,  பெயரையும் சேர்க்க பாஷா பாய்  விரும்பவே இல்லை. வாக்கு மூலத்தில் சொல்லச் சொன்னது  வெண்ணைய் வெட்டி - வெள்ளை வேட்டி வீரர்கள் என்பார்களே அதைப் போன்றவர்கள் தான். திரும்பத்  திரும்ப  பாயிடம் வலியுறுத்தி  சொன்னார்கள். அதனால் தான். பீ.ஜே. மீதும் உங்கள் (இலாஹி) மீதும்  பொய்யான வாக்கு மூலம் கொடுக்கப்பட்டது.  

பாயின் மகளை திருமணம் செய்துள்ள உங்களூர் (மேலப்பாளையம்)  மருமகனார்  முஹம்மது  அலியும்   பாயுமாக   இணைந்து தான் வாக்கு   மூலமளித்தார்கள். 

நீங்கள் சிறைவாசிகள் விசயமாக பேசியவைகள். (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, பாக்கர் போன்ற) மற்ற த.மு.மு.க.தலைமையினருக்குத் தெரியாமல் பீ.ஜே. மூலம்   சிறைவாசி குடும்பங்களுக்கு செய்த  பண  உதவிகள் பற்றியெல்லாம் முஹம்மது அலிக்கு அவ்வளவாகத்  தெரியாது. அதனால்  அவர்களால்  பொய்களை  கோர்வையாக   சொல்ல   முடிந்ததில்லை.

மேலப்பாளையம் தடா புகாரி  பீ.ஜே.யிடம் தொடர்பு கொண்டவைகளை  மேலப்பாளையம் முஹம்மது   அலி   தொடர்பு  கொண்டதாக  மாமனார்  பாயும் மருமகனார் அலியும் வாக்கு மூலம் அளித்தார்கள். 

பாய், அலி போன்றவர்களின் வாக்கு மூலத்திற்கு   வலு   சேர்க்கும்  விதமாக மேலப்பாளையம் தடா புகாரி வாக்கு மூலம் அமையும் வர்களைப் போல் PJ  மற்றும் உங்களு(இலாஹி)க்கு  எதிராக  வாக்குமூலம் அளிப்பார்  என்று  மற்றவர்கள் எல்லாரும் எதிர்பார்த்தார்கள், நம்பினார்கள்

அவர்கள் நம்பி எதிர் பார்த்த மாதிரி. மேலப்பாளையம் தடா புகாரி PJ மற்றும் உங்களை(இலாஹியை)ப் பற்றி  கூறவில்லை. உண்மையை மட்டுமே கூறினார். அது  அவர்களுக்கு அவர்களின்  பொய்  வாக்கு மூலத்திற்கு  வலு  சேர்க்காமல் எதிராகப் போய் விட்டது.


TMMK க்கு வந்த உதவி விசயமாக சொன்ன விளைவின் தொடர்ச்சி தான் பேராசிரியர், ஹைதர் அண்ணன்நல்ல முகமது காக்கா என பல பேருக்கு வேறு வழியில் வழக்கு வந்தது. (இவைதான்  வரலாற்றுக்  கடிதத்தில் உள்ளவை)  

ஆக  மேலப்பாளையம் தடா புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது உண்மையை உள்ளபடி சொல்லி விட்டார்.  பீ.ஜே.யுடன் நட்பாக இருந்தபொழுது தொழில் செய்வதற்காக பாஷா பாய் அவர்கள் பீ.ஜே.யிடம்  இரண்டு லட்சம் கொடுத்து வைத்து இருந்தார்.

பாஷா பாய் பீ.ஜே. நட்பில் விரிசல் ஏற்பட்டதும். ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த இரண்டு லட்சத்தைத் தான்  பீ.ஜே. திருப்பி கொடுத்தார்.  தவிர. அது குண்டு வைடிப்புக்காக கொடுத்த பணம் அல்ல

இப்படியாக தடா புகாரி போன்ற மேலப்பாளையம் சகோதரர்கள் அளித்த வாக்கு மூலம் தான் பீ.ஜே, இலாஹி. மற்றும் த.மு.மு.க.வை பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணமாகும்.  இந்த உணமை  இன்றைய    த.மு.மு.க. வினருக்கு , குறிப்பாக கள்ள ஜிகாதி பதிவுகளை  த.மு.மு.க. குரூப்பில் இடம் பெறச் செய்பவர்களுக்கு தெரியாது. 




பாஷா பாய் பீ.ஜே.யிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் பீ.ஜே.  திரும்பக் கொடுத்தார் என்று கோவை பாஷா பாயுடன்    எப்போதும்  கூடவே  இருந்த மேலப்பாளையம் சகோதரர்களின் இந்த வாக்கு மூலங்களில்  பீ.ஜே. பற்றியும்  இலாஹி  பற்றியும் என்ன கூறப்பட்டுள்ளது என்று   பீ.ஜே. அதிகாரிகளிடம்  சுட்டிக் காட்டினார். 

த.மு.மு.க. அலுவலகத்தில் தங்கி இருந்த அல் உம்மாவினர் வெளியேற்றப்பட்டது. 
பீ.ஜே.
க்கும் அல் உம்மாவுக்கும் உள்ள கடும் பகை,

அல் உம்மா
கொலை மிரட்டல் காரணமாக 
பீ.ஜே.க்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு.

இப்படி பலவற்றையும்  சொல்லிக் காட்டி இவ்வளவு பகை இருக்கும் போது   எப்படி அவர்களுக்கு உதவ முடியும்?  இவ்வாறு கேள்விகள்  கேட்டு    அதிகாரிகளுக்கு  பீ.ஜே.  தெளிவுபடுத்தினார்.

பீ.ஜே.யிடம் விசாரித்தது போலவே  தனியாக இன்னொரு டீம் இது குறித்து ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, பாக்கர் ஆகயோரிடம் விசாரணை செய்தது. அவா்களும் பீ.ஜே. கூறியது போலவே கூறினார்கள்.


பீ.ஜே, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, பாக்கர்  போலீஸ் கஸ்டடியில் இருக்கும் அதே   நாளில் இன்னொரு டீம் அதிகாரிகள். அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தை   சோதித்தனர்.  அதில் கோவை பாஷா பாய் பெயரில் பீ.ஜே. பணம் முதலீடு செய்த விபரம். அது திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்தன.  

அதனால் பீ.ஜே.யும் மேலப்பாளையம் சகோதரர்களும் குறிப்பாக தடா புகாரியும்  கொடுத்த வாக்கு மூலம் உண்மை என்று போலீசார்  அறிந்து கொண்டனர்.

அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் பீ.ஜே.யும் 21 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது அன்றைய சூழலில் சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்பட்டிருக்கவும் கூடும். அல்லாஹ் பீ.ஜே.க்குச் செய்த மாபெரும் கருணையால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து பீ.ஜே.  தப்பிக்க முடிந்தது.


சும்மா இருந்த என்னை கள்ள ஜிகாதி சீண்டி விட்டு இந்த வரலாற்றை எழுதும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய மாதிரிதான். தேவை இல்லாமல்  பீ.ஜே. அவர்களை  வழக்கில் சேர்க்க  அல் உம்மாவினர் எடுத்த கடும்  முயற்சிகள் தான்  பீ.ஜே.யிடம்      SITயை    வாக்குமூலம்   வாங்க  வைத்தது. இதுதான் உண்மை. 


பீ.ஜே.யையும் தவ்ஹீது கொள்கைகளையும் த.மு.மு.க, வையும் எதிர்த்தவர்கள், எதிர் இயக்கத்தவர்கள். த.மு.மு.க.வுக்கு மாற்றாக தங்கள் இயக்கத்தை வளர்க்க முயற்சித்தவர்கள்.  பீ.ஜே. வாக்கு மூலக் காப்பியை புளு அட்டையில் புத்தகமாகப் போட்டு பரப்பினார்கள். 

பிறகு ஈ.மெயில்கள், பிளாக்கர்கள், பேஸ்புக்குகள் என போட்டார்கள்.  இவர்கள் எல்லாம்  பாஷா பாய் கொடுத்த வாக்கு மூலத்தை பரப்பவில்லை. என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

பாஷா பாயின் மருமகன் மேலப்பாளையம்  முஹம்மது அலி கொடுத்த வாக்கு மூலம் போல் பாஷாவின் மைத்துனர் ஜுபைர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது  இதை  விடக்  கடுமையானது,  கொடியது.



ஜுபைரிடம் கைப்பற்றிய  ஜெர்மன் துப்பாக்கி பற்றி  காவல்துறை விசாரித்தது.  (தமுமுக அமைப்பாளர்)  பீஜேயை உணா்வு அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது பீஜே. ஐம்பதாயிரம் ரூபாயும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் தந்தார்  என்று பாஷா பாயின் மைத்துனர் ஜுபைர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இது குறித்தும் பல அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில்  பீ,ஜெ.  விசாரிக்கப்பட்டார்.


இதிலிருந்து பீ.ஜே. எப்படி மீண்டார்?  பீ.ஜே.யிடம் பண உதவி பெற்றுக் கொண்டே சிறைவாசிகளில் சிலர்  பீ.ஜே. எங்களுக்கு உதவவில்லை என்று சொன்னார்களா?   தமுமுக அமைப்பாளராக  இருந்து கொண்டு  பீ.ஜே.  சிறைவாசிகளுக்கு   உதவியதற்கு தவ்ஹீது  மவுலவிகள் எதிர்ப்பு தெரிவித்தார்களா?   உண்மைகள் போட்டு உடைக்கப்படும். இன்ஷாஅல்லாஹ்.

மேற்கண்டவைகளை மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் கேட்டு மறுக்க வேண்டும்.

யா அல்லாஹ்! வெறுமனே யார் மறுத்தாலும் மறுக்கும் அந்த  பொய்யனையும்  அவனை ஆதரிக்கக் கூடியவர்களையும் ஒருவர் விடாமல்  கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

இதை மறுப்பது போல் சம்பந்தம் இல்லாததை எழுதி ஏமாற்றுபவர்களையும் சும்மா விட்டு விடாதே. யா அல்லாஹ்!  
இப்படிப்பட்டவர்களுக்கு நீ வழங்கும்  அந்த தண்டனையை ஏனைய மக்களுக்கு பாடமாக ஆக்குவாயாக ஆமீன்.

சிறைவாசிகளாகி விட்டார்கள் என்பதற்காக நாம் மறைத்த உண்மைகளை போட்டு உடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வழிப்பறி கொள்ளையர்களான கள்ள ஜிகாத்திகள் கூட்டத்தினர் தான் ஏற்படுத்தி விட்டார்கள் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே 
சிறைவாசிகளே  கள்ள ஜிகாத்திகளுக்கு எதிராக கையேந்துங்கள்.






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.