பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை உண்மை எப்போதும் துாங்குவதுமில்லை


அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாக அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது.

செய்திகளை முந்தித் தருவது தினத்தந்தி என்பது போல் தான் கொரோனா பற்றிய செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு அவசர குடுக்கைகளாக செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.  
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_93.html


மேலப்பாளையம் சாத்திகள் 17 பேர் இன்று (11-4-20) விடுதலையாகிறார்கள்? ரிலீஸ் ஆகிறார்கள் வெளிவருகிறார்கள். (ஜெயிலிலா இருந்தார்கள்?) அவர்களுக்கு நெகடிவ்  என்று செய்தியை கலெக்டர் மேடம் (என்னிடம்) சொன்னார்கள் என்று நேற்று காலையிலிருந்தே பலரும் அவரவர் பங்குக்கு செய்திகளை பரப்பினார்கள். அந்த மேதாக்களான மேதாவிகளின் நற்செய்திகளை  நாமும் பார்வேடு செய்தோம்.

உண்மை நிலை என்ன? அது தவறான தகவல். நேற்று மதியம் 12-20க்குதான்  சாத்திகளுக்கு டெஸ்ட்டே எடுத்துள்ளார்கள். 

நேற்று மதியம் டெஸ்ட் எடுக்கப்பட்ட 23 பேரில் 17 பேருக்கு நெகடிவ் என்ற ரிசல்ட் இன்று (12-04-20ல்) தான் வந்துள்ளது. நாளையும் (13-04-20) திங்கள் அன்று  ஒரு ரிசல்ட் எடுக்க உள்ளார்கள். அதிலும் நெகடிவ் என்று வந்து விட்டால் (14-04-20)  செய்வாய் அன்று டிஸ்சார்ச் ஆக வாய்ப்புகள் இருக்கின்றது. என்று ADMK பகுதிச் செயலாளர் ஹயாத் அவர்கள் மூலம் அறிந்தேன்.

நேற்றைய ரிசல் சாத்திகள் குடும்ப பெண்களுக்கு எடுத்த டெஸ்ட். அதில் 16 பேருக்கு  நெகடிவ் என்று வந்துள்ளது. அதைத்தான் கலெக்டர்  அம்மா என்னிடம் சொன்னார் கலெக்டர்  அம்மா என்னிடம் சொன்னார்  என்று ஆளாளுக்கு சொல்லி விட்டார்கள். .

1400 ஆண்டுகளுக்கு முன்பே அல் குர்ஆன் சொல்லி விட்டது

25:73. அவர்கள் தமது ரப்பு (இறைவன்) உடைய வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டாலும்  அவற்றின் மீதும் செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள் (அவர்கள் தாம் றஹ்மானுடைய அடியார்கள்)




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.