2:33. முதலில் உங்கள் தமிழ் ஞானத்திற்கு சில சோதனைக் கேள்விகள். பிறகு குர்ஆன் சொல்லுக்கு சொல்.

8 தர்ஜமாக்கள் வந்திருக்க 9 வது தர்ஜமா தேவையா என்று சண்டையிட்ட சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு இது சமர்ப்பணம். 

மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதியாக ஆக முடியாது என்பதற்கு ஆதாரமாக முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அருள் மொழிகளைக் கண்ட நாம். குர்ஆனிலுள்ள மற்ற வசனங்களில் வரும் ஃகலீFபா என்பதிலிருந்து உள்ள வார்த்தைகளுக்கு  எப்படி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள் என்றும் பார்த்து வருகிறோம். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/233.htmlஅந்த தொடரில் 6:165, 10:14, 10:73, 35:39. ஆகிய 4 வசனங்களில்  உள்ள  ஃகலாஃயிFப
خَلٰٓٮِٕفَ
என்ற ஒரு வார்த்தைக்கு யார் யார் எப்படி எப்படி மொழி பெயர்ப்பு  செய்துள்ளார்கள்? ஒரு பதிப்பினரே எத்தனை விதமாக தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்று பார்க்க உள்ளோம்.  

முன்னதாக உங்கள் தமிழ் ஞானத்திற்கு ஒரு சில கேள்விகள். பர்வதம், உப்பு ஜலம், நல்ல ஜலம், குடாக் கடல், உரோமக் கடல், சேமம் இவற்றுக்கு என்ன அர்த்தம்? இவற்றை படித்த உடனேயே உங்களுக்கு புரிந்து விட்டதா? என்பதை உங்களுக்கு நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள். குர்ஆன் வார்த்தை தொடரில் இது தேவையா? என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுகிறதா? 

இணைப்பில் உள்ள 1950ல் வெளியான ஹமீதிய்யாவின் தப்ஸீரில் உள்ள தர்ஜமாக்களை பாருங்கள். அதில் தான் மேற்கண்ட வார்த்தைகள் உள்ளன. இதை ஏன் பதிகிறேன்? ஏற்கனவே 8 தர்ஜமாக்கள் வந்திருக்க 9 வது தர்ஜமா தேவையா? இப்படி உம்ராவுக்கு வந்த இடத்தில் என்னிடம் சண்டையிட்டவரின் கனிவான கவனத்திற்கு இதை பதிகிறேன்.. 

உத்தமபாளையம் S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி அவர்கள் அன்றைய அல்லாமா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரது அன்றைய தமிழ் நடை மட்டுமல்ல எழுத்து முறைகளும் இன்றைய மக்களுக்கு புரியுமா?. 

ஆகவே அந்த அந்த காலத்திற்கு ஏற்ற நடைமுறைத் தமிழில் தர்ஜமாக்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் இதை உணர்த்தவே பர்வதம், உப்பு ஜலம், நல்ல ஜலம், குடாக் கடல், உரோமக் கடல், சேமம்  பற்றிய கேள்வி இனி தொடருக்கு செல்வோம்



 ஃகலாஃயிFப
خَلٰٓٮِٕفَ

என்ற ஒரு வார்த்தைக்கு 

டாக்டர். முஹம்மது ஜான்   
பின்தோன்றல்களாக என்று 6:165, 10:14, 35:39. ஆகிய  3 வசனங்களிலும் அதிபதிகளாக்கவும் என்று 10:73, க்கும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.


அப்துல் ஹமீது பாகவி 
முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான் என்று  6:165,க்கும்  அதிபதிகளாக்கி   என்று   10:14,    10:73,  ஆகிய    2  வசனங்களிலும்(முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக என்று     35:39.   க்கும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)   
பிரதிநிதிகளாக  என்று 6:165, 10:73,   35:39.         ஆகிய 3 வசனங்களிலும் அவர்களுடைய இடத்தில் என்று   10:14,    க்கும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

மதீனா-சவூதி   பிரதிநிதிகளாக  என்று  6:165 க்கும்  பின்தோன்றல்களாக  என்று   10:14, 10:73, 35:39. ஆகிய 3 வசனங்களிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 

ரியாத்- சவூதி 
தலைமுறையினர்களாக என்றே  6:165,   10:14,    10:73,    35:39.   நான்கு வசனங்களுக்கும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 



மலிவு பதிப்பு
பிரதிநிதிகளாக என்று 6:165,க்கும் பின்தோன்றல்களாக என்று 10:14, 10:73,   35:39. ஆகிய 3 வசனங்களுக்கும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 

பஷாரத்
பிரதிநிதிகளாக என்று 6:16610:14,10:73, ஆகிய 3   வசனங்களுக்கும்  பின்தோன்றல்களாக என்று 35:39.க்கும் மொழியாக்கம் செய்துள்ளார்கள். 

றஹ்மத் 
வாழையடி வாழையாக வரும் தலைமுறையினர்களாக  என்று  6:165, 35:39. ஆகிய இரண்டு     வசனங்களுக்கும்  வழித்தோன்றல்களாக  என்று 10:14, 10:73,  ஆகிய இரண்டு  வசனங்களுக்கும் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.


ஸலாமத்
பிரதிநிதிகளாக என 6:165,10:14,10:73, ஆகிய 3 வசனங்களுக்கும்   பின்வரும் மக்களுக்கு பிரதிநிதிகளாக என  35:39.க்கும் தமிழாக்கம் தந்துள்ளார்கள்.

திரீயெம்
பிரதிநிதிகளாக என்றே  6:165,   10:14,    10:73,    35:39.   நான்கு வசனங்களுக்கும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.


உமர் ஷரீப்
வழித்தோன்றல்களாக என 6:165 க்கும் பிரதிநிதிகளாக என 10:14,  10:73, 35:39. ஆகிய 3 வசனங்களுக்கும் தமிழாக்கம் தந்துள்ளார்.


அன்வாருல் குர்ஆன்

பிரதிநிதிகளாக என்றே  6:165,   10:14,    10:73,    35:39.   நான்கு வசனங்களுக்கும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.


(ஹமீதிய்யா)
கலீபாக்களாக(பிரதிநிதிகளாக) 35:39.

P. ஜைனுல் ஆபிதீன்
வழித்தோன்றல்களாக என்றே  6:165,   10:14,    10:73,    35:39.   நான்கு வசனங்களுக்கும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

இவை யாவும் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதியாக ஆக முடியாது என்பதற்கு ஆதாரங்களாக உள்ளன. இன்னுமுள்ள வசனங்களை அடுத்ததில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ் இனி 2:33. சொல்லுக்கு சொல்

 قَالَ - ஃகால 
கூறினான் - சொன்னான் 

 يَا آدَمُ யா ஆதமு 
ஆதமே! - ஓ ஆதம்

 اَنْۢبِئْ- அ(ன்)ம்பிஃ 
கூறு - விவரி -அறிவி - எடுத்துரை - எடுத்துக் கூறு

هُمْ- ஹும் 
அவர்களுக்கு

بِأَسْمَائِபிஅஸ்மாஃயி 
பெயர்கள் - 

هِمْ‌ ஹிம்
 இவற்றின்-அவற்றின்-அவைகள்
فَلَمَّآ-  Fபலம்மாா
போது
أَنْبَأَஅ(ன்)ம்பாஃ அ
கூறிய -விவரித்த - அறிவித்த
 فَلَمَّآ اَنْۢبَاَ- Fபலம்மாா அ(ன்)ம்பாஃ அ
கூறியபோது -விவரித்தபோது - அறிவித்தபோது 
هُمْ- ஹும்
அவர்களுக்கு

 بِاَسْمَآٮِٕهِمْۙ- பிஅஸ்மாஃயிஹிம்
அவற்றின் பெயர்களை - அப்பெயர்களை 

 قَالَ - ஃகால 
கூறினான் - சொன்னான் என்பவை நேரடி பொருள்  வினவினான் - கேட்டான் என்பவை வசனத்துக்கு தகுந்த தமிழ் நடை.
اَلَمْ اَقُل- ஃஅலம் அஃகுல் 
நான் கூறவில்லையா? -  நான் சொல்ல வில்லையா


 لَّـكُمْ - லகும்  

உங்களிடம் - உங்களுக்கு 

 اِنِّىْٓ - இன்னீ 
 (உறுதியாக) நான்

 اَعْلَمُ- அஃலமு ஃகைப 
அறிவேன்


غَيْبَ -ஃகைப
மறைத்தது - மறைந்தது - மறைவானது 


السَّمٰوٰتِ- (அ)ஸ்ஸமாவாதி 

வானங்கள்



 وَ -     
ளிலும் - யிலும் -  இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி , மற்றும்
 ( வாவு பற்றிய விபரங்களை 2 : 5ல் விளக்கி உள்ளோம்

الْاَرْضِۙ -(அ)ல் அர்ழி
பூமி

 السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ-  (அ)ஸ்ஸமாவாதி வல் அர்ழி

"வானங்களிலும், பூமியிலும் 
وَ -     


اَعْلَمُ- அஃலமு ஃகைப 

அறிவேன் 


 مَا - மா? 

எதை?

 تُبْدُوْنَ - துப்துான


வெளிப்படுத்துகிறீர்கள்  
 وَ -     
 مَا - மா? 
எதை?

كُنْتُمْ- குன்தும்
இருந்தீர்கள்


 تَكْتُمُوْنَ - தக்துமூ(ன)ன்

மறைக்கிறீர்கள் 





ஆதமே ! இவற்றின் பெயர்களை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! என்று (இறைவன்) சொன்னான். அவர் அப்பெயர்களை அவர்களுக்குச் (சரியாகச்) சொன்னபோது, "வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றைத் திண்ணமாக நான் அறிவேன்; நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைத்துக் கொள்வதையுங்கூட நன்கறிவேன் என்று உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) வினவினான். (அதிரை ஜமீல்)


2:33. "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது"வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும்நீங்கள் வெளிப்படுத்துவதையும்மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான். P.J

"ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' என (அல்லாஹ்)  கூறினான். அவர்   அவற்றின் பெயர்களை   அவர்களுக்கு    அறிவித்த போதுநிச்சயமாக  வானங்களிலும் பூமியிலும் உள்ள  மறைவானவற்றை நான் நன்கறிந்தவன். என்றும்நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும்  மறைத்துக்  கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிவேன். என்றும் உங்களுக்குக்  கூறவில்லையா?''  என  (அல்லாஹ்  கேட்டான். (தாருஸ்ஸலாம்ரியாத்)



( அப்போது அல்லாஹ் ) "ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களிடம் எடுத்துக் கூறுக என்றான். அவர்   அவற்றின் பெயர்களை எடுத்துக் கூறியபோது. நான்  வானங்கள் மற்றும்  பூமியில்  மறைந்திருப்பவற்றை  அறிவேன் மேலும்நீங்கள் வெளிப்படுத்தக் கூடிய மற்றும்   மறைத்து வைக்கக் கூடிய  அனைத்தையும்  அறிவேன் என்று       உங்களுக்கு   நான்   சொல்லவில்லையா?  என்று அல்லாஹ்   கேட்டான்.  (றஹ்மத் அறக்கட்டளை)


"ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக்  கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது"வானங்கள் இன்னும் பூமியின்  மறைவானவற்றை நான் அறிவேன் இன்னும்நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் அறிவேன் என்று  நான் உங்களுக்கு  கூறவில்லையா?'' எனக் கூறினான். (உமர் ஷரீFப் இப்னு அப்துஸ்ஸலாம்)இப்னு அப்துல் மஜீது இப்னு ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி)



(அப்போது)  "ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக்  கூறினான். (அவ்வாறே)   அவற்றின் பெயர்களை   அவர்களுக்கு  அவர் அறிவித்தபொழுது, (மலக்குகளை நோக்கி)   நிச்சயமாக  நான்  வானங்களிலும் பூமியிலும்  மறைந்திருப்பதை அறிவேன்   இன்னும்,  நீங்கள் வெளிப்படுத்துகிறதையும்  மறைத்துக்  கொள்கிறதையும்  நான்  அறிவேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்று அவன் கூறினான்.  (திரீயெம் பிரிண்டர்ஸ்)


திரீயெம் பிரிண்டர்ஸும்  மலிவு பதிப்பும் ஒன்று போல் இருக்கும் . வித்தியாசம் (மலக்குகளை நோக்கி) என்று (திரீயெம் பிரிண்டர்ஸிலும்  (வானவர்களை நோக்கி) என்று  மலிவு பதிப்பிலும் இருக்கும்.


(அப்போது)  "ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக்  கூறினான். (அவ்வாறே)   அவற்றின் பெயர்களை   அவர்களுக்கு  அவர் அறிவித்தபொழுது, (வானவர்களை நோக்கி)   நிச்சயமாக   நான்   வானங்களிலும், பூமியிலும்  மறைந்திருப்பதை அறிவேன்  இன்னும்,   நீங்கள்   வெளிப்படுத்துகிறதையும்    மறைத்துக்  கொள்கிறதையும் நான்  அறிவேன் என்று உங்களுக்குச்  சொல்லவில்லையா?”   என்று   அவன் கூறினான்.   (மலிவு பதிப்பு )


"ஆதமே! அ(வ்வான)வர்களுக்கு  அவற்றின் பெயர்களை அறிவிப்பீராக!'' என்று  (அல்லாஹ்) கூறினான். அவர்  அவற்றின் பெயர்களை  அவர்களுக்கு  அறிவித்தபொழுது, (வானவர்களை நோக்கி)  நிச்சயமாக   நான்  வானங்களிலும்,பூமியிலும் மறைந்திருப்பதை நன்கறிவேன். நீங்கள்  வெளிப்படுத்துபவற்றையும்    மறைத்துக்  கொண்டிருப்பவற்றையும்  நன்கறிவேன். என்று நான் உங்களுக்குக்  கூறவில்லையா?''     என்று    என்று (அல்லாஹ் வானவர்களை நோக்கி  கூறினான். (பஷாரத்)


. ஆதமே!  அப் பொருட்களின்  பெயர்களை  அவர்களுக்கு  விவரிப்பீராக!  என்று  (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு  விவரித்தபோது  நிச்சயமாக  நான்  வானங்களிலும் பூமியிலும்  மறைந்திருப்பவற்றை  அறிவேன்  என்றும் நீங்கள்  வெளிப்படுத்துவதையும், நீங்கள்  மறைத்துக்  கொண்டிருப்பதையும்  நான்  அறிவேன்  என்றும்  உங்களிடம்  நான்  சொல்லவில்லையா?”  என்று (இறைவன்) கூறினான்.  ((KSRஇம்தாதி) 


. ஆதமே! அ(வ்வான)வர்களுக்கு  அவற்றின் (அப் பொருட்களின்) பெயர்களை அறிவிப்பீராக!  என்று   (அவ்விறைவன்)  கூறினான். அவர்   அவற்றின் பெயர்களை   அவர்களுக்கு  அறிவித்தபொழுது (மலக்குகளை நோக்கி)  மெய்யாக நான் வான்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை  அறிவேன் ன்னும்நீங்கள் வெளியாக்குகிறததையும் நீங்கள் மறைத்துக்  
கொண்டிருப்பதையும் அறிவேன் என்று  உங்களுக்கு  நான்   கூறவில்லையா?'' என்று (அல்லாஹ்)  சொன்னான்; (அன்வாருல் குர்ஆன்)


"ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பீராக!'' என்று  அவன்  கூறினான். (எனவே) அவர்   அவற்றின் பெயர்களை   அவர்களுக்கு  அறிவித்து கொடுத்த போது, (வானவர்களிடம்)   நிச்சயமாக  நான்  வானங்களிலும் பூமியிலும்   மறைந்திருப்பவற்றை அறிவேன்  இன்னும்நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் நீங்கள்   மறைத்துக்  கொண்டிருப்பவற்றையும்  அறிவேன்   என்று நான்  உங்களுக்கு சொல்லவில்லையா?   என  அவன்  கூறினான்  (ஸலாமத் பதிப்பகம்)









Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.