சத்தான உணவு வழங்கிய முத்தான நண்பர்

மதியம் பிரியாணி, நெய்சோறு, அசைவ, சைவ சாப்பாடு, 

இரவில் தோசை, சப்பாத்தி, இட்லி

காலையில் இட்லி, ஆப்பம், பூரி 
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_20.html மறக்க முடியுமா ம.தி.மு.க. நிஜாம் அண்ணனை. 








1994 டிசம்பர் 6 அன்று மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து கடை அடைப்பு பேராட்டங்கள் நடந்தன.  

அதே பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தில் தான் நெல்லை மாவட்டம் சுத்தமல்லிக்  காட்டில் அன்று ஒரே தலைமையின் கீழ் இருந்த தப்லீக் இஜ்திமா - மாநாடு நடந்தது.   (இன்று இரண்டாகி விட்டார்கள்)

அன்று  தப்லீக் ஜமாஅத் பற்றி அறியாத இளைஞர்கள். பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தப்லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அல்லது டிசம்பர் 6 அல்லாத வேறு தினத்தில் மாநாடு நடத்துங்கள் என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டி எதிர்ப்பு காட்டினார்கள். அவர்களை அமைதிப்படுத்தியவர் கே.எம்.ஏ.,நிஜாம். 

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி  காட்டை தப்லீக் ஜமாஅத் மாநாடு நடத்த சுத்தப்படுத்தி கொடுத்தது முதல் அனைத்துப் பணிகளையும் கடைசி வரை செய்து கொடுத்தவர்  கே.எம்.ஏ.,நிஜாம்.   அவர்கள். அன்று முதல் அவரது சமுதாயப்பணி மற்றும் தப்லீக் ஜமாஅத்தாருக்கான சேவைப் பணி  தொடர்கிறது.  இன்று அவரைப் பற்றி மதுரை மைதீன் உலவி பிரண்ட்ஸ் குரூப்பில் வந்த செய்தி 


திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் 60 பேருக்கு மூன்று வேளைகள் சத்தான உணவளிக்கிறார், நெல்லையை சேர்ந்த மனிதநேயர் கே.எம்.ஏ.,நிஜாம்.  

தமது சொந்த பொறுப்பில் 60 நோயாளிகளுக்கும் காலையில் இட்லி, ஆப்பம், பூரி உள்ளிட்ட டிபன், 

மதியம் பிரியாணி, நெய்சோறு, அசைவ, சைவ சாப்பாடு, 

இரவில் தோசை, சப்பாத்தி, இட்லி என தினமும் வழங்கி வருகிறார்.  

தினமும் ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழை, திராட்சை பழங்கள், குடிநீர் பாட்டில் என ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி பைகளில் போட்டு வழங்குகிறார். நிஜாமின் சேவையை மருத்துவக்கல்லுாரி டீன் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பாராட்டினர்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.