தப்லீக் ஜமாஅத்துக்கு வந்தவர்களால் கொரோனா பரவவில்லை.

கேரள அரசு வெளியிட்ட செய்தி, “மார்ச் 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த ரயில் எண் 12622 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸின் எஸ் 7 பெட்டியில் யாராவது பயணம் செய்தீர்களா? 

டில்லி தப்லீக் ஜமாஅத் மாநாடுக்கு முன்பே  கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என அகில இருந்தியாவிலும் கொரானா பரவி  விட்டது. மார்ச் 10ஆம் தேதியே  700க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி விட்டது்.

அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை.

உண்மை தானாக வெளிப்படும்  ஆனால் தாமதமாக வெளிப்படும். தப்லீக் ஜமாஅத்துக்கு வந்தவர்கள் சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண்ணிடமிருந்து தான் கொரோனா தப்லீக் ஜாஅத்தினர் மீது தொற்றி உள்ளது. அந்த செய்திகள் இன்ஷாஅல்லாஹ்  விரைவில் வெளிப்படும்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_8.html

பேப் பய ஊரில் பெருச்சாளி காவடி எடுத்து ஆடியதாம். எப்படிடா? என்று கேட்டதற்கு எழுந்து நின்று ஆடியது என்றானாம். அது தான் நாட்டில் நடக்கிறது.

கொரோனா பாதித்த நபருடன் ரயிலில் பயணித்த 193 பேரை கண்டறிந்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் இருந்து வந்த நபருக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்று தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.


சென்னை -திருப்பதி ரயில் திடீரென ரத்து: வேறென்ன கொரோனா தான் காரணம்!! 17 Mar 2020, 10:14:00 PM


ரயிலில் பயணித்தவர் கொரோனாவால் உயிரிழப்பு... சக ரயில் பயணிகளை தேடும் அரசு..!



17 Mar 2020, 10:14:00 PM

கொரோனா: சென்னையில் பிரபல வணிக நிறுவனத்துக்கு "சீல்"

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு வழித்தடங்களில் இயக்கிவரும் ரயில்களில் 17 ரயில்களை நாளை (மார்ச் 18) முதல் இம்மாதம் 31 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இவற்றில், சென்னை சென்ட்ரல் - திருப்பதி, திருப்பதி - சென்னை சென்ட்ரல் மார்க்கங்களில் தினமும் இயக்கப்படும் ரயில்கள், திருச்சிராப்பள்ளி -ஹைதராபாத், ஹைதராபாத் -திருச்சிராப்பள்ளி வாராந்திர ரயில்கள் உள்ளிட்டவை அடங்கும்.

MARCH 22, 2020, 11:46 AM IST
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல, ஜபல்பூர் வரை செல்லும் கோட்மேன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

March 22, 2020 10:52:44 am 

தமிழகத்தில் ஆறு பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிய இப்போது தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

உத்தரபிரதேசத்தின் ராம்பூரிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு பயணம் செய்த 20 வயது இளைஞரின் விஷயத்தில் இந்த சிக்கல் தீவிரமாகியுள்ளது.

அந்த இளைஞருக்கு நாட்டிற்கு வெளியே பயணம செய்த வரலாறு இல்லாததால், இது சமூகப் பரவலுக்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன. இருப்பினும் சுகாதார அமைச்சர் இந்த காரணத்தை மறுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, கேரள அரசு ஒரு செய்தியை வெளியிட்டது, அதில், “மார்ச் 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த ரயில் எண் 12622 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸின் எஸ் 7 பெட்டியில் யாராவது பயணம் செய்தீர்களா? 

அப்படியானால், மாநில கட்டுப்பாட்டு அறை எண் 04712309250 முதல் 55 ஐ தொடர்பு கொள்ளவும். தயவுசெய்து இத்தகவலை பகிருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தது. 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர், பயணத்தின் போது எஸ் 5 மற்றும் எஸ் 7 பெட்டிகளுக்கு இடையே சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அவர் மூன்று நண்பர்களுடன் பயணம் செய்தார். அதில் இருவர் எஸ் 5 மற்றும் இரண்டு எஸ் 7 பெட்டிகளில் பயணம் செய்தனர். எனவே கொரோனா பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்த பெட்டிகளுக்கு இடையே சென்று வந்திருக்கிறார். 

அந்த நபர், மார்ச் 7 அன்று ராம்பூரிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவர் மார்ச் 10 வரை அங்கேயே இருந்தார். டெல்லியில் இருந்தபோதும் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார், மேலும் அங்குள்ள ஒரு உள்ளூர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். 

சென்னைக்கு வந்தபின், அவரது உடல்நிலை மோசமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வரை அவர் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார். அவரது உடல்நிலை இன்னும் மோசமாக, ஆர்.ஜி.ஜி.எச். ஐ அணுகிய போது கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அறிவித்து, மாநிலங்கள் போக்குவரத்தை குறைப்பது ஒரு பீதி சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “கடந்த மூன்று நாட்களில் பயணிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது உண்மையில் சவாலானது மற்றும் கவலை அளிக்கிறது.”
சர்வதேச இடங்களிலிருந்து வந்த முதல் மற்றும் மூன்றாவது பாதிக்கப்பட்டவரின் விஷயத்தில் கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் மிகவும் எளிதாக இருந்தன.

பாதிக்கப்பட்ட முதல் நபர், காஞ்சீபுரத்தில் வசிப்பவர், ஓமானில் இருந்து வந்தார், பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் சென்னையில் விருகம்பாக்கத்தில் வசிப்பவர், டூப்ளினில் இருந்து திரும்பி வந்தார். சனிக்கிழமையன்று தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரை பொறுத்தவரை, அவர்களின் தொடர்புகளைத் தனிமைப்படுத்தவும் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேரிடமும் நேரடியாக தொடர்பு கொண்ட நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஐ.ஆர்.டி மருத்துவமனையில் இரண்டு தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். முஸ்லிமாக இருந்தால் இரண்டு முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என்று கூறி இருப்பார்.










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.