பீஜே மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த - வலுவான ஆதாரம் எது? ஆடியாக்களா? ஆலிம்ஸாக்களா?


முபாஹலாவில் முளைத்தது முபாஹலாவில் நிலைத்தது என்று சொன்ன மாதிரி. மாநாட்டில் முளைத்த பெண்கள் பிரச்சனை மாநாட்டில் முடிந்தது என்றாக்குவார்களா? பழையதான புளித்துப் போனவைகளையே சொல்லிச் சொல்லி உளுத்துப் போன செய்திகளைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பார்களா?

ஆடிட்டர் அப்துர்றஹ்மான் சாட்சியம், அப்பல்லோ அனீபா சென்னை எக்மோர் அசோகா ஹோட்டலில் ரூம் போட்டது உட்பட எல்லா மேட்டர்களுமே 2017க்கு முன்பாகவே 2014லில் இருந்து வெளி வந்து விட்டவை. முஹம்மது காமில், முஹம்மது பாஸித், முஹம்மது ரைசுத்தீன், கம்பம் ஜபருல்லாஹ், தவ்பீக் ரபியுத்தீன், இலங்கை அமீர்ஷாஹித் என நாம் உட்பட பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தி விட்டவை.
ரொம்ப பழைய சோறு மாதிரி புளித்துப் போன சொல்லிச் சொல்லி அலுத்தும் உளுத்தும் போன செய்திகள் அவை. இந்த மாதிரியான அத்தனை பழைய செய்திகளைத்தான் மீண்டும் ஒரு சாரார் வெளியிட்டு புதியது போல் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

யார் இவர்கள்? இதே செய்திகளை முஹம்மது காமில், முஹம்மது பாஸித், முஹம்மது ரைசுத்தீன், கம்பம் ஜபருல்லாஹ், தவ்பீக் ரபியுத்தீன், இலங்கை அமீர்ஷாஹித் போன்றவர்கள் வெளியிட்டபொழுது அவற்றையெல்லாம் பொய்ப்படுத்திய ததஜவினர். இவர்கள்தான் புளித்துப் போனதை வெளியிட்டுக் கொண்டு புதிய கண்டு பிடிப்புகள் போல் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் காட்டுவது படம் என்பதால்தான்  பீஜே பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக ஏதாவது தகுந்த ஆதாரம் இருந்தால் கொடுக்க முடியுமா? என்று அவர்களிலிருந்தே ஒருவர் நம்மிடம் கேட்டுள்ளார்.

தகுந்த - வலுவான ஆதாரம் என்று மண்ணடி அப்துல்லாஹ், ஆடிட்டர் அப்துர்றஹ்மான், அப்பல்லோ அனீபா, வக்கீல் என எத்தனை சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவர்கள் அத்தனை பேர் மீதும் இவர்கள் செய்த பஞ்சயாத்தை ஒட்டிய ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆகவே இவர்கள் சாட்சியத்தை ஒட்டு மொத்த ததஜவினரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இந்த விஷயத்தில் இன்றைய ததஜவிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய TNTJவினரின்  நம்பிக்கைக்குரிய சாட்சிகள் மவுலவி ஷம்சுல் லுஹா, M.S. சுலைமான் ஆகிய ஆலிம்ஸாக்கள் தான். மற்றவர்களின் வீடியோ, ஆடியாக்களைவிட இந்த ஆலிம்ஸாக்கள் தான் வலுவான ஆதாரமாகும். ஆகவே அவர்கள் திரு குர்ஆன் மாநாட்டில் குர்ஆனின் கூற்றுப்படி உண்மைகளை போட்டு உடைக்க வேண்டும்.

மவுலவி ஷம்சுல் லுஹா, M.S. சுலைமான் ஆகியவர்கள் 2000த்திற்கு முன்பே பீ.ஜே. பெண்கள் விஷயத்தில் சரி இல்லை என்று தெரிந்து இருந்தார்கள். அதனால்தான் இர்ஷாத் மாணவிகளை 2000ல் நடந்த மதுரை இஸ்லாமிய மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றார்கள் என்ற உண்மையை போட்டு உடைக்க வேண்டும்.

மதுரையில் நடந்த மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்ததை,. மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்ததை. மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்ததை. கண்ணால் பார்த்த எல்லா தவ்ஹீது மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம் என்று ஷம்சுல்லுஹா ஒருவரிடம் கூறியதை திரு குர்ஆன் மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். போட்டு உடைக்க வேண்டும். எல்லா மவுலவிகள் என்பது யார்? யார்? ஹாமித் பக்ரி, அலி அக்பர் உமரி போன்றவர்களும் அடங்குவார்களா? என்பதையும் தெளிவுபடுத்தி போட்டு உடைக்க வேண்டும்.

இந்த உண்மைகளை  லுஹாவும் சுலைமானும்  தெளிவுபடுத்தி விட்டால் ஆடிட்டரும் தேவை இல்லை ஆடியோக்களும் தேவை இல்லை.

முபாஹலாவில் முளைத்தது முபாஹலாவில் நிலைத்தது என்று சொன்ன மாதிரி. மாநாட்டில் முளைத்த பெண்கள் பிரச்சனை மாநாட்டில் முடிந்தது என்றாக வேண்டும். செய்வார்களா? ததஜவினர்தான் செய்யச் சொல்வார்களா?

பீஜே பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக ஏதாவது தகுந்த ஆதாரம் இருந்தால் கொடுக்க முடியுமா? என்று கேட்டுள்ள சகோதரரே!  2011ல் குபுரா மேட்டரால் ததஜ குலுங்கியது அப்பொழுது 11.12.11ல் கூடவிருந்த ததஜ பொதுக்குழுவில் மேற்கண்ட செய்திகளை அறிவிக்கும்படி வேண்டி லுஹாவுக்கு கடிதம் எழுதி இருந்தோம்.

2014ல் பஞ்சாயத்து செய்யப்பட்ட ஜெரீனா மேட்டர் 2015 பூகம்மாக வெடித்து ததஜவில் பதட்டத்தை ஏற்படுத்தியது. உடனே லுஹா மேலாண்மைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். 

தனக்கு ஈ-மெயில் மூலம் அனுப்பினால் தான் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். பீ.ஜே. மீது M.S. சுலைமான் லுஹா கூறியவற்றையே ஆதாரமாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி இ.மெயில் அனுப்பினோம்.

காரணம் லுஹா பல உண்மைகளை நேரடியாக மக்களுக்கு சொல்லாமல் மறைமுகமாகச் சொல்வார். சம்பந்தப்பட்டவர்களையும் இலைமறை காயாக இடித்துரைப்பார். 

குபுரா மேட்டர் வெடித்தபொழுது கொள்கைவாதிகளை குறி வைக்கும் ஷைத்தான்என்ற தலைப்பில் 2011 டிசம்பர் ஏகத்துவம் இதழில் தலையங்கம் எழுதி குபுரா மேட்டரை மறைமுகமாக உண்மைப்படுத்தினார். அத்துடன் சந்தடி சாக்கில் சம்பந்தப்பட்டவரையும் இடித்துரைத்திருந்தார். அந்த விபரங்களை ஆதாரத்துடன் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.https://mdfazlulilahi.blogspot.com/2011/12/blog-post_10.html

2015ல் ஜெரீனா மேட்டர் சீறிப் பாய்ந்து வந்தது. அப்பொழுது 2015 ஏப்ரல் ஏகத்துவம் இதழில் பெண்கள் மதரஸா பயம் நிறைந்தது பலன் குறைந்து என்று தலையங்கம் எழுதி ஜெரீனா மேட்டரை மறைமுகமாக உண்மைப்படுத்தியதோடு சந்தடி சாக்கில் சம்பந்தப்பட்டவரையும் இடித்துரைத்திருந்தார். https://mdfazlulilahi.blogspot.com/2015/04/tntj.html

2017 ஆகஸ்டு 21 அன்று 28 நிமிட ஆடியோ வெளியானது. உடனே அவரது இயல்புப்படி 28 நிமிட ஆடியோவை மறைமுகமாக உண்மைப்படுத்தியதோடு சந்தடி சாக்கில் சம்பந்தப்பட்டவரையும் ஜும்ஆவில் இடித்துரைத்துப் பேசினார்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முந்தைய நாள் ஜும்ஆ. அந்த ஜும்ஆவில் ஹஜ்ஜுப் பெருநாள், குர்பானி சம்பந்தமான சட்டங்களைப் பேசாமல் விபச்சாரம், கல்யாணம் பண்ணியவன் செய்யும் விபச்சாரம், கிழவனின் விபச்சாரம் என்று லுஹா பேசினார். 

இப்படி மறைமுகமாகப் பேசியும் எழுதியும் வந்த லுஹா அவர்கள். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே தெளிவாகச் சொல்லுங்கள் என்ற குர்ஆனின் கூற்றுப்படி திரு குர்ஆன் மாநாட்டில் தெளிவாகச் சொல்லி விட்டால் முத்தாய்ப்பாக அமைந்து விடும். அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விடும்.


இல்லை என்றால், பேர்ணாம்பட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய  கோவை ரஹ்மத்துல்லாஹ் குரலாய்வு நீங்களாக செய்து கொள்ள முடியாது. அதற்கென துறை இருக்கின்றது. அங்கு தான் செய்ய வேண்டும். பீஜே அங்கு வருவாரா? என கேள்வி   எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்தவர்கள், அடிப்படை அறிவற்றவர்களாக இது போன்ற வாதங்களை முன் வைக்கின்றனர். வழக்கு இல்லாமல், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் குரலாய்வு சாத்தியமில்லை என்பதை அறிந்து கொண்டே இவர்கள் இதை துணிந்து பரப்புகின்றனர்.

குரல் மாதிரி சோதனை நடத்துவதற்கு முன் ஒரு வழக்கில் குரல் மாதிரி தேவை என்பதை நீதிமன்றம் முடிவு செய்தால் மட்டுமே இத்தகைய சோதனை நடத்த முடியும் என்று எழுதியதோடு ரஹ்மதுல்லாஹ்  கேள்வியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்களை விமர்சித்தும் உள்ளார்கள். 

ஆகவே ததஜ தலைவர் லுஹா 2000ல் தன் கண்ணால் கண்டதை, 2002ல் ஒருவரிடம் மட்டும் தனியாகச் சொன்னதை ததஜவினருக்கு பகிரங்கமாக சொல்லி விட்டால், தகுந்த - வலுவான ஆதாரத்துக்கு ஆடிட்டரும் தேவை இல்லை. ஆடியோக்களும் தேவை இல்லை.  அப்பல்லோ ஹனீபாவும் தேவை இல்லை. 












Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.