இஸ்லாமிய இளைஞர்களை ஏவி விட்டு காட்டியும் கொடுத்தவர்கள் யார்?


நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றால்  காட்டிக் கொடுக்கலாம் என்ற பத்வா கொடுத்தவர்கள் யார்? பொம்பளை விவகாரத்தால் நஷ்டம் அடைந்த ஜிஹாத் கம்பெனி எது? இறந்து விட்ட முஸ்தபா ரஷாதியே மணியார்டர் அனுப்பியது போல் பணம் அனுப்பியது யார்? தமிழக அளவில்  இளைஞர்களை வழி கெடுத்து குண்டு வைக்கவும் கொலை செய்யவும் ஏவி விட்டவர்கள் யார் யார்?

அடுத்து உங்கள் பார்வைக்கு முதலில் தர உள்ளது நாம் எழுதியது அல்ல. ஜிஹாத் கமிட்டி முஹம்மது காமில் அவர்களால் 26.01.2019 அன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. ததஜவினரின் கமாண்டுகள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஜிஹாது வரலாற்றுச் செய்திகளைத் தான் பார்க்கப் போகிறீர்கள்.
1993 ல் RSS அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், வெளி நாடு சென்று விட்ட  சகோ. இமாம் அலியை பிஜெ அழைத்து வந்து, காரைக்காலில் தங்கவைத்து, கோவை, மதுரை, மேலப்பாளையம் (நாகூர்) போன்ற பகுதிகளில் இருந்து இஸ்லாமிய இளைஞர்களை அழைத்து வந்து காரைகாலில் தங்க வைத்து, அவர்களை மார்க்க அடிப்படையில் மூளைச் சலவை செய்து, சகோ. இமாம் அலி மூலம் ஆயுதப் பயிற்சியும், வெடி குண்டு பயிற்சிகளையும் கொடுத்து, அந்த இளைஞர்களை வழி கெடுத்து குண்டுவைக்கவும்கொலை செய்யவும் ஏவி விட்டார். இவ்வாறு காமில் அவர்கள் எழுதி உள்ளார்கள்.

காமில் அவர்கள் எழுதி உள்ள இந்த வரலாற்றில் மறைந்து உள்ள உண்மைகளைத்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெளிவாகச் சொல்லி வருகிறோம்

பீ.ஜே. முன்னின்று எம்மைக் கேவலப்படுத்தினார் என்பதற்காக அவரை மட்டும் பலிகடாவாக ஆக்கி, அவரை மட்டும் குற்றவாளியாகக் காட்ட நாம் தயாராக இல்லை

காரைக்காலில் மட்டுமல்ல தமிழக அளவில் இளைஞர்களை வழி கெடுத்து குண்டு வைக்கவும் கொலை செய்யவும் ஏவி விட்டது பீ.ஜே. மட்டுமல்ல ததஜ உட்பட பல இயக்கங்களில் உள்ள தவ்ஹீது மவுலவிகள் பலரும் சேர்ந்துதான் செய்தார்கள்.

இப்படிப்பட்ட தீவிரவாதிகளான தவ்ஹீது மவுலவிகளின் புகலிடமாக த.மு.மு.க. ஆனதால்தான் அதிகாரிகளின் கவனம் த.மு.மு.க.வின் பக்கம் திரும்பியது. இந்த தவ்ஹீது மவுலவிகள் இருந்ததாலேதான் த.மு.மு..வுக்கு தடை என்ற நிலை வந்தது. இந்த உண்மையை நான் சொன்னால் காழ்ப்புணர்வு அவதுாறு  என்று ததஜவினர் சொல்லி விடுவார்கள். ததஜ தலைவர் லுஹாவின் வாயிலிருந்து வெளியானதையே ஆதாரமாகத் தருகிறோம். பாருங்கள்.

ஆக லுஹாவின் வாக்கு மூலப்படி தவ்ஹீது மவுலவிகள் என்று எழுத வேண்டிய இடத்தில் காமில் அவர்கள் பிஜெ என்று எழுதி உள்ளார்கள். இந்த உண்மையைத்தான் லுஹாவின் உரை எடுத்துரைத்து ஆதாரமாக நிற்கிறது. இனி மேலும் காமில் அவர்கள் எழுதி உள்ளதைப் பார்ப்போம்,

பிஜெ கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்ட போது, பிஜெ அதிகாரவர்க்கத்துடன் கள்ள ஒப்பந்தம் செய்து கொண்டு, பிஜெவை கைது செய்யக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு....  என்று காமில் எழுதி உள்ளார்.

இப்படி எழுதி உள்ளதால் காமில் அவர்கள் பொய் சொல்கிறார் என்று நாம் சொல்லவில்லை. காமில் அவர்கள் அவருக்கு தெரிந்ததை அவருக்கு சொல்லப்பட்டதை எழுதி உள்ளார்

அதில் ஒழிந்துள்ள உண்மைகளை மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய உண்மைகளை லுஹா வீடியோ ஆதாரத்துடன் நாம் தருகிறோம்.

ஜிஹாதை துாண்டி விட்ட தவ்ஹீது மவுலவிகள் கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது,  நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றால்  காட்டிக் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு தவ்ஹீது மவுலவிகள் வந்தார்கள்.  

தவ்ஹீது மவுலவிகள் சார்பாக அதிகாரவர்க்கத்துடன் கள்ள ஒப்பந்தம் செய்து கொண்டு, தவ்ஹீது மவுலவிகளை கைது செய்யக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு காட்டிக் கொடுத்தார்கள். 1994லிருந்து ஏவி விட்டவர்கள் காட்டிக் கொடுக்கும் வேலையை 1996லிருந்து ஆரம்பித்து விட்டார்கள்.


தவ்ஹீது மவுலவிகளை நம்பி 1994லிருந்து  கல்வியை விட்டும், தொழிலை விட்டும், நண்பர்களை விட்டும், பெற்றோர்களை விட்டும், சொத்து சுகத்தை விட்டும், உற்றார் உறவினர்களை விட்டும், இளம் மனைவி மக்களை விட்டும்... தவ்ஹீது மவுலவிகள் கூறுவதே... வேதவாக்கு, தவ்ஹீது மவுலவிகள் கூறுவதே... இஸ்லாமிய வழி, தவ்ஹீது மவுலவிகள் கூறுவதே...சுவனத்திற்கான வழி என நம்பியவர்களை...நயவஞ்சகத்தனமாக காட்டிக்கொடுத்தும்,நயவஞ்சகத்தனமாக பிடித்தும் கொடுக்கப்பட்ட இளைஞர்கள், இன்றும்...இருபது ஆண்டுகளுக்கு மேலாக  சிறையில் சித்திரவதை படுகின்றனர். சிறையில் சோதனைக்கு மேல் சோதனை அனுபவிக்கின்றனர். இதுதான் உண்மை.

பீ.ஜே. மட்டும்தான் தனியாக செய்தார் என்பது தவறான தகவல். அதனால்தான் ஜிஹாது செய்யத்தான் பீ.ஜே. தலைமையிலான மவுலவிகள் ஜாக்கிலிருந்து விலகினார்கள் என்ற உண்மையை எல்லா இயக்கத்திலும் ஊடுறுவி ஒழிந்துள்ள தவ்ஹீது மவுலவிகள் அனைவரும் சொல்லாமல் மறைத்து வருகிறார்கள்.

காமில் அவர்கள் சொல்லிக் காட்டி உள்ள காரைக்காலில் பயிற்சி எடுத்தவர்தான் நாகூர் ஜாக் பள்ளி இமாமாக இருந்த முஸ்தபா ரஷாதி அவர்கள். முஸ்தபா ரஷாதி குண்டு வெடிப்பில் உடல் சிதறி இறந்தார். அதன் பிறகும் அவரது வீட்டுக்கு முஸ்தபா ரஷாதியே பம்பாயிலிருந்து மணியார்டர் அனுப்பியது போல் பணம் அனுப்பியது பீ.ஜே.யா? வேறு யாருமா?

இமாம் அலி தலைமையிலான ஜிஹாது பணிக்கு பணம் கொடுப்பதற்கென்றே காரைக்காலில் ஹை கிரிப் டயர் கம்பெனி துவங்கப்பட்டது. இந்தக் கம்பெனியும் பொம்பளை விவகாரத்தால் தான் நஷ்டம் அடைந்தது என்று தவ்ஹீது ஜமாஅத் சார்பில்தான் வீடியோ வெளியிட்டார்கள். 

இந்த டயர் கம்பெனியின் சேர்மனாக இருந்த தவ்ஹீது மவுலவி யார்? மேனேஜிங் டைரக்டராக இருந்தது யார்? பீ.ஜே.யா?

'எத்தனை காலத்திற்குத்தான் மக்கா வாழ்க்கை! மக்கா வாழ்க்கை!! என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள். ரசூல்(ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கை இல்லையா?' இந்திய ராணும் என்ன செய்யும் இந்திய ராணும் நம் முன் நூலாம் பூச்சிகள் என்று பேசிய பிர்தவ்ஸியார் யார்?

PJ காட்டிக் கொடுத்தார் என்று காமில் போன்ற சிறைவாசிகள் சார்பில் குற்றச் சாட்டுக்கள் கூறும்பொழுதெல்லாம் 2018 வரை அதைப் பொய்ப்படுத்திவர் யார்


கோவை பாஷா, அவரது மைத்துனர் சுபைர் போன்ற சிறைவாசிகள் தான் பீ.ஜே.யை மாட்டி விடப் பார்த்தார்கள் என்று ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் சொல்லி வந்தவர் யார்? இணைப்பு வீடியோவிலேயே பதில் உள்ளது. 

அதனால் தான் பீ.ஜே.க்கு எதிராக ததஜவினர் போலீஸ், கோர்ட் என போக மாட்டார்கள். பாம்பாட்டிகளும் வித்தைக்காரர்களும் கூட்டத்தைக் கூட்ட பாம்பையும் கீரியையும் சண்டைக்கு விடப் போகிறேன் என்று கூவி கூட்டத்தைக் கூட்டி மக்களை ஏமாற்றுவது போல் ஏமாற்றும் வேலையைத்தான் செய்வார்கள்.

காமில் அவர்கள் சொல்லி உள்ள ஆயுதப் பயிற்சியும், வெடி குண்டு பயிற்சிகளையும் கொடுத்து, இளைஞர்களை வழி கெடுத்து குண்டுவைக்கவும்கொலை செய்யவும் ஏவி விட்டவர்களில் இரண்டு பேர் இன்று இரண்டு தவ்ஹீது அமைப்புகளில் தலைவராக உள்ளார்கள். ஒருவர் மவுலவி, இன்னொருவர் மவுலவி அல்லாதவர். 3 பேர் பிரிந்த கட்சயில் மாநில பொறுப்பில் உள்ளார்கள்.
  
நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றால்  காட்டிக் கொடுக்கலாம் என்ற பத்வாவை ததஜவில் உள்ள தவ்ஹீது மவுலவிகளும் சேர்ந்துதான் கொடுத்தார்கள். காட்டியும் கொடுத்தார்கள்.

த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை காரணத்தினாலே என்று கிண்டல் செய்துள்ள லுஹா, கருணாநிதியின் காட்டுக் தர்பாரின் காரணத்தினாலே என்று பேசியுள்ள இந்த லுஹாதான் 1998ல் த.மு.மு.க. தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறும் முன்பே அறிக்கை விட்டார். 

1998ல் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தி.மு,க. சார்பில் போட்யிட்ட நடிகர் சரத்குமாருக்கு எங்கள் ஓட்டு என்று. 

இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் நம்பியவர்களை...நயவஞ்சகத்தனமாக காட்டிக் கொடுத்தும்நயவஞ்சகத்தனமாக  பிடித்தும் கொடுத்தவர்கள் யாரெல்லாம் என்று. 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.