J.S. ரிபாய் அவர்களே! மேலப்பாளையம் தமுமுகவினரை ஏமாற்றினீர்களா இல்லையா?

கடித எண் - 6. மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S. ரிபாய் அவர்களே தமுமுக தலைமை உங்களுக்கு துரோகம் செய்தது உண்மை என்றால் அதை மேலப்பாளையம்வாசிகளிடம் சொல்லி இருப்பீர்கள். மேலப்பாளையம்வாசி என்ற முறையில் அனைவரும் உங்கள் பின் நின்றிருப்பார்கள். நானும் நின்றிருப்பேன்.
J.S. ரிபாய் அவர்களே உங்கள் சுயநலனுக்காக தகுதியற்ற உங்கள் வரட்டு கவுரவத்திறகாக நீங்கள் மோத நினைத்தால் தனிப்பட்ட முறையில் நீங்கள் மோதி இருக்க வேண்டும். உங்கள்  எடுபிடிகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை பள்ளிவாசல் பிரச்சனையாக ஏன் ஆக்கினீர்கள்? தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்  என்று கூறி என் போன்றவர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்?

தமுமுகவிலுள்ளவர்கள் பள்ளி அமைப்பதாக இருந்தால் தமுமுக டிரஸ்ட் பெயரால்தான் இடம் பதிய வேண்டும் என்ற சட்டத்தை J.S. ரிபாய்யாகிய நீங்கள் தமுமுக தலைவராக இருந்தபொழுதுதானே கொண்டு வந்துள்ளீர்கள்.

அதற்கு மாற்றமாக செயல்பட தமுமுகவில் இருந்து கொண்டே மேலப்பாளையம் தமுமுகவினர் மண்டையை ஏன் கழிவி(கழுவு)னீர்கள்

தமுமுக டிரஸ்ட் பெயரால் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னபொழுது நானே தமுமுக தானே. மாநில துணைத் தலைவராக உள்ள நான் அல்லவா சொல்கிறேன் என்று மேலப்பாளையம் தமுமுகவினரை ஏமாற்றினீர்களா இல்லையா? மேலப்பாளையம் தமுமுகவினரை ஏன் ஏமாற்றினீர்கள்

ரய்யானில் இருந்து கொண்டு அல்லாஹ் என்று தஃவா பணி செய்யப் போவதாக சொன்ன J.S. ரிபாஇயாகிய தாங்கள் திடீரென மஜக போவதாகச் சொன்னீர்கள்

பள்ளி விவகாரம்தானே அதுதான் தீர்ந்து விட்டதே. நீங்கள்தான் பள்ளி தலைவராக இல்லையே! என்றேன். பள்ளி விஷயம் என்றுதான் உங்களிடம் சொல்லி வந்தேன். அது அல்ல வேறு விஷயங்கள் உள்ளன என்று என்னிடம் சொன்னீர்களா? இல்லையா?

அப்படியானால் இல்லாத பள்ளி விவகாரத்தை உண்டு பண்ணி என்னையும் ஊர் உலகத்தையும் ஏமாற்றிய J.S. ரிபாய் மீதும் அவருக்கு துணை நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி வைப்பாயாக என்று உங்களால் ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் ஏன் துஆச் செய்யக் கூடாது?

அவர்கள் மனம் நொந்து துஆக் கேட்டால் நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் என்ன கதிக்கு ஆவீர்கள்?


ஏங்க இந்த மாதிரி என உங்கள் உடன் உள்ளவர்கள் கேட்டபொழுது. .மு.மு..வுக்கு ஷாக் கொடுக்கப் போகிறேன். மற்றபடி கட்சி கட்சி என்று அலைய மாட்டேன் என்று கூறினீர்களா? இல்லையா? இது ஏமாற்று வார்த்தையா? இல்லையா? 

.மு.மு..வுக்கு ஷாக் கொடுக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய நீங்களும் உங்கள் அடிவருடிகளும் சேர்ந்து ஷாக் கொடுங்கங்கள். அல்லாஹ்வின் பள்ளியை ஏன் பயன்படுத்தினீர்கள்? 

தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன் என்று வருடக்கணக்கில் என்னைப் போன்றவர்களை ஏன் ஏமாற்றினீர்கள்?

J.S. ரிபாய் அவர்களே தமுமுக துணைத் தலைவராக இருந்த தாங்கள் ரய்யான் வசூலுக்காக மலேசியா விஸா எடுத்து வைத்திருப்பதாகச் சொன்னீர்கள். அதை உண்மை என்று நம்பினோம்

உங்கள் பொய்யை அறியாத நான் ரய்யான்  நிர்வாகி ஒருவரை உடன் அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு போங்கள் என்றேன். துபை வந்து விட்டு போகிறேன் என்று எங்களை ஏமாற்றினீர்கள். விஸா வந்து ஏழு மாதத்திற்குப் பிறகு ம... சார்பில் ம...வினருடன் மலேசியா சென்றீர்கள்.

தங்களை தமுமுக துணைத் தலைவராக மக்களிடம் காட்டிக் கொண்டு ம...வுடன் கள்ளத் தொடர்பில் இருந்து கொண்டே எங்களையும் ஏமாற்றி பள்ளி தலைவர் மற்றும் பதவிகளை பெற்றுள்ளீர்கள். நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் எவ்வளவு நல்லவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன நான்று வேண்டும்?

நீங்கள் எந்தக் கட்சிக்கும் போங்கள் அது உங்கள் உரிமை. குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்று என்னிடம் வாய் கிழிய பேசிய  நீங்கள் போய் விழுந்த இடம் எது?

எந்த அன்சாரி கூட்டத்தை கழிவுகள், கழிசடைகள், சாக்கடை  என்று கூறினீர்களோ அந்த  சாக்கடையில் அல்லவா போய் விழுந்து விட்டீர்கள்

அன்சாரி கூட்டத்தை கழிவுகள், கழிசடைகள் என்று சொன்னதுடன் நின்றீர்களா? அன்சாரியை விமர்சித்தும் குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமானவர் அன்சாரி என்று அடையாளம் காட்டும் விதமாகவும் என்னை எழுதச் சொன்னீர்கள். அதை மக்கள் உரிமையிலும் போட்டீர்கள். 

J.S. ரிபாய் அவர்களே! நீங்களே சொல்லுங்கள். நீங்கள் இப்பொழுது யார்?  கழிவா? கழிசடையா? உங்களிடம் கமழும் வாடை கஸ்த்துாரி வாடையா? கழிசடை வாடையா? 

நல்லறங்களை, நற்செயல்களைச் செய்து விட்டு நிச்சயமாக நான் முஸ்லிம் என்று யார் கூறினாரோ அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்?  என்கிறான் அல்லாஹ்  (அல் குர்ஆனில் 41:33)  

அல்லாஹ்வின்  இந்தக் கூற்றுக்கு நேர் எதிராக தன்னை முஸ்லிம் என்று அடையாளம் காட்டாதீர்கள் தமிழன்  என்று அடையாளம் காட்டுங்கள் என சொன்ன அன்சாரிக்கு கீழ் குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற நீங்கள் எப்படி பணியாற்றப் போனீர்கள். 



கடித எண் 4

J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடிதம் -3 JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.