பீ.ஜே. வெட்டுப்பட்ட போது லுஹாவின் நிலை என்ன? பீ.ஜே.யை எதிர்ப்பதற்காக ததஜவை ஆதரிக்கலாமா?


அறிவு இருக்கிறதா உனக்கு என்று லுஹாவைப் பார்த்து கேட்டது யார்? (திரி நாட் செவன்) 307 பற்றி தெரியாது என்கிறாரே லுஹா அது உண்மையா?
பீ.ஜே. பற்றி ததஜவினரும் ததஜ பற்றி பீ.ஜே.யும் என்றாகி நமது பணியை எளிதாக்கி விட்டார்கள். ஆகவே நாம் எதுவும் எழுதாமல் இருக்கிறோம். பீ.ஜே. வெட்டுப்பட்ட சமயத்தில் லுஹாவும் வெட்டுப்பட்டிருந்தார். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் என்று ஒரு சாரார் எழுதி உள்ளார்கள். அதன் மூலம் பீ.ஜே.யைப் பொய்ப்படுத்தி உள்ளார்கள். நடந்தது பற்றி உண்மைகளை மறைத்து  பேசிய லுஹா கூட இந்தப் பொய்யை சொல்லவில்லை. லுஹா பேச்சில் மோத்தை மீராப்பிள்ளை தெருவில் ஒரு வீட்டில் என்கிறார். அது மோத்தை சிபகதுல்லாஹ் வீடு என்பதை சொல்லாமல் மறைக்கிறாரே ஏன்?

1986லிருந்து பிரச்சனைகளின் போது விட்டு விட்டு ஓடாமல் தொடர்ந்து ஜமாஅத்தில் இருந்தவர்களில் முதன்மையானவர்கள் காலித், சிபகத், மன்சூர் ஆகியவர்கள்தான். அல்லாஹ்வின் அருளுக்குரியவரோ அவரது உறவினரோ ஊரில் இருந்தால் அவரது வீடு அவரது தம்பி வீடு, அவரது அக்காள்கள் வீடுகள் மற்றும் அவரது மனைவியின் கடைதான் தவ்ஹீதுக்கு  பயன்படுத்தப்படும். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் ஊரில் இல்லாதபொழுது மோத்தை சிபகதுல்லாஹ் அவர்கள் வீடுதான் தவ்ஹீது மர்க்கஸாக இயங்கும்.

மஸ்ஜிதுர்றஹ்மான் மூல பத்திரத்தில் முதல் பத்திரத்தில் கூட தவ்ஹீது வேலைக்கு வந்த லுஹா பெயர் இருக்காது. மோத்தை சுல்தான் குமாரர் எம்.எம். சிபகதுல்லாஹ் பெயர்தான் இருக்கும். அவர் வீட்டு முகவரிதான் மஸ்ஜிதுர் றஹ்மான் இடம் வாங்க வசூலித்த பவுண்டேஷன் கமிட்டிக்கு பயன்படுத்தப்பட்டது. அப்படிப்பட்டவர் பெயரை மறைத்து சொல்வதற்குக் காரணம்? பள்ளிப் பணத்தில் லுஹாவின் பண மோசடிகளை சொன்னவர்களில் முதன்மையானவர் சிபகதுல்லாஹ் என்பதால்தான்.

அந்தக் கூட்டம் நடந்த நேரத்தில் வளைகுடா போரில் பிரபலமான ஸ்கட் பேட்ரியாட்கள் பற்றி நான்தான் பேசினேன். அப்பொழுதுதான் துாரல் விழுந்து எனக்கு மைக்கிலிருந்து ஷாக் அடித்தது. அதன் பிறகு நான்தான் கதவுகளுக்கிடையில் நின்று பேச வைத்தேன். நான் இருக்கும் போது லுஹாவே ஒப்புக் கொண்டுள்ள அவரை மாதிரி முட்டாள்களை பெரும்பாலும் பேச விடுவதில்லை.

(திரி நாட் செவன்) 307 பற்றி தெரியாது என்கிறாரே அது மகாத்தான பொய். அறிவு இருக்கிறதா உனக்கு என்று லுஹாவைப் பார்த்து கேட்டதாகச் சொல்கிறாரே! அப்படி லுஹாவைப் பார்த்து அறிவு இருக்கிறதா உனக்கு? என்று கேட்டவன் நான்தான். சண்டை போட்டவனும் நான்தான்https://www.youtube.com/watch?v=-eP9BPfG4k8

ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு வந்த போலீஸ் அதிகாரி ஆடிய பாதம் சொன்னார். கோட்டூர் ஜிந்தா குரூப்தான் வெட்டியுள்ளார்கள். அவர்களது டூ வீலர் ரிப்பேர் ஆகி விட்டது. குரிச்சியில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள். எல்லா விபரமும் எடுத்து விட்டேன். கண்ணால் பார்த்த லுகாவும் அலியும் நான் சொல்கிறபடி வாக்கு மூலம் தந்தால் போதும் அவர்களை கைது செய்து விடுவோம் என்றார்.

எப்படி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். எந்த மாதிரி வார்த்தைகளால் வாக்கு மூலம் கொடுத்தால் 307 வரும். இந்த விபரங்களை ஆடிய பாதம் ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து திருப்பி திருப்பி பாடமாக நடத்தினார். 

கண்ணால் பார்த்த சாட்சிகளான லுஹாவும் அவரது மச்சான் அலியும் கோட்டூர் ஜிந்தா குரூப்புக்கு பயந்து சாட்சி சொல்ல மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து அல்லாஹ்வுக்கு பயப்படாமல் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்வதில் வல்லவரான லுஹா ஜிந்தாவுக்கு பயந்து இப்படி சொல்ல மாட்டோம் என்று நழுவினார். பொய் சொல்லத் தெரியாது என்று புதியவர்களை ஏமாற்றி உள்ளார்.

லோகல் போலீஸ் ஒத்துழைக்க தயாராக இருந்தும் கோழை லுஹாவால்தான் அந்த வழக்கு செயல் இழந்தது. அப்பொழுது SPயாக இருந்த கலீமுல்லாகான் அவர்களால் எல்லாம் கேஸ் செயல் இழக்கவில்லை. 1992ல் மதுரை  தமுக்கம் மைதான ஜாக் மாநாடு கோர்ட் மூலம் தடை செய்யப்பட்டது. அப்பொழுது மதுரையில் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் இதே  கலீமுல்லாகான்தான்.

அவர் பீ.ஜே, S.K.  போன்றவர்களை அழைத்துப் பேசினார். தனது ஆபீஸில் வைத்திருந்த தர்ஜுமாவை எடுத்துக் கொடுத்து பீ.ஜே. கூறும் ஆதார ஆயத்துக்களை எடுத்துக் காட்டக் கூறினார்

கோர்ட் ஆர்டர் அதனால் அதை மீறி என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று கணிவாகக் கூறி வருந்தினார். மாநாடு தடையானதற்கு  ஆறுதல் கூறினார்

கோர்ட்டில் நீங்கள் ஆர்டர் வாங்கி விட்டு வாருங்கள் நான் நின்று நடத்தி தருகிறேன் என்றார் கலீமுல்லாகான். ஜாக்தான் அந்த முயற்சியை எடுக்கவில்லை. தடையான மாநாட்டு மிச்ச காசில் அண்ணா நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள பள்ளிக்கு ஜாக் இடம் வாங்கியது.

மைக் மாவீரன் கோழை லுஹாவால்தான் அந்த வழக்கு உயிர் பெறாமல் போனது. எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வம்பு பேசி திரிந்த நரவன் மீரான் மைதீன் மன்பஈ என்ற அ.தி.மு.க. ஆலிம்ஸாவை பிடித்து உள்ளே போடச் சொன்னோம். தென்கலத்தில் பேஷ் இமாமாக இருந்தவரின் பள்ளிவாசலுக்கு தெங்கம்புதுார் காஜா பாய் என்ற போலீஸ் ரைட்டர் பஜ்ர் தொழுது முடித்ததும் பிடித்து வந்தார்.

ஜமாஅத்துல் உலமா மாவட்டச் செயலாளராக இருந்த அ.தி.மு.க. ஆலிம்ஸா ஹம்ஸா தங்கள் போன்றோர் முயற்சியில் விடுதலையானார். பீ.ஜே.யை வெட்ட வந்தவர்கள் லுஹா ஒரு கோழை என்று தெரியாமல் கையிலிருந்த அருவாளின் பின் பகுதியால் லுஹாவின் கையை தட்டினார்கள். அப்படியே தலை சுற்றி மயங்கி உட்கார்ந்து விட்டார். கை வீங்கி இருந்தது. நான்தான் இரண்டு பிரச்சாரகர்களுக்கு வெட்டு என்று பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்தேன்.

கேட்க நாதியில்லாத நிலையில் பீ.ஜே.க்காக தவ்ஹீதுவாதிகள் உலகம் முழுவதும் கொந்தளித்தது போல் S.K, PJ.பெயரால் நோட்டீஸ் போட்டோம்.

மண்டியிட்டு தவழ்ந்து வந்து சசிகலா காலில் விழுந்த எடப்பாடி மாதிரிதான் பீ.ஜ.யிடம் அடிமை வேஷம் போட்ட லுஹா. ததஜவில் உள்ளவர்கள் இறையச்சமுடையவர்கள் கிடையாது. ததஜவினரின் பண மோசடிகளை பீ.ஜே. சொல்லுகின்றவரை பீ.ஜெ. பெரும்பாவம் செய்யவில்லை என்று அவரை துாக்கிப் பிடித்தார்கள். அதற்கு முன்பு அல்லாஹ்வின் மீது ஆணையாக பீ.ஜே. விபச்சாரம் செய்யவில்லை என்றார்கள். பீ.ஜே.க்காக நான் குடும்பத்துடன் முபாஹலாவுக்கு வருகிறேன் என்றார்கள்.


கோடிக்கணக்கில் இவர்கள் செய்துள்ள மோசடிகளை பீ.ஜே. வெளிப்படுத்தியதும். அவர் மீது உள்ள நம்பிக்கையால் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சத்தியம் செய்தோம். முபாஹலாவுக்கு  அழைத்தோம் என்கிறார்கள். 

நபி(ஸல்) அவர்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி சொன்ன குஸைமா(ரலி) என்ற ஸஹாபியை பல ஆயத்துக்கள் ஹதீஸ்கள் அடிப்படையில் பொய் சொன்னவர் என்று அந்த ஹதீஸை தள்ளுபடி செய்தவர்கள்தான் இந்த ததஜவினர். 

அப்படியானால் குஸைமாவை(ரலி) பொய்ப்படுத்திய இவர்கள் யார்? இவர்களை உண்மையாளர்கள் என்று உண்மைபடுத்துபவர்கள் சிந்தித்து ஒதுங்க வேண்டும். ததஜவினர் மீது இனி இறங்க உள்ள அல்லாஹ்வின் லஃனத்து ததஜவை நல்லவர்கள் என்று சொல்பவர்கள் மீதும் இறங்காமல் அவர்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்.

கோட்டூர் ஜிந்தா, கவுது போன்றவர்களுக்கு எதிராக துஆச் செய்த மாதிரிதான் பீ.ஜே.க்கு எதிராக துஆச் செய்தோம். இனி அனாதை பிள்ளைகள் பெயரால் வசூலித்த பணத்தில் மதரஸா கட்டியவர்கள். மதரஸா உஸ்தாதுகளுக்கு வீடு கட்டியவர்கள். கமிஷன் அடித்தவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக! ஆமீன் என்று துஆ கேட்போம்.

நபிமார்களுக்கு உள்ள தைரியம் பீ ஜே க்கு அல்லாஹ் கொடுக்கிறான் என்று 

பீ.ஜே.யின் புகழ்பாடிய மேலப்பாளையம் எடப்பாடி உரையைக் காண கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=GhRd1J7maeo&t=3s




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.