ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?


கடித எண் 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! ஸலபியை பள்ளியில் சேர்க்காதீர்கள்அவன் அஹ்லே குர்ஆன், ஆள் சேர்த்து விடுவான் என்று தக்வா பள்ளி நிர்வாகி ஒருவர் சொன்னதாக சொன்னீர்கள் அல்லவா?

தாயகம் வந்த நான் நண்பருடன் தக்வா இனாயதுல்லாஹ் அவர்களை சந்தித்தோம். M.A.S. ஸலபி, உஸ்மானி ஆகியோர் அஹ்லே குர்ஆன்கள் ஆகவே தான் உஸ்மானியை முன்பே நீக்கி விட்டோம் என்றார்.

எப்படி அஹ்லே குர்ஆன் என்கிறீர்கள் என்று கேட்டோம்? கபுர் வேதனை சம்பந்தமான ஹதீஸ்கள் அறிவுக்கு பொருந்தவில்லை என பேசினார் என்றார். நான் உடனே பதில் விளக்கம் சொன்னோம். உங்களை மாதிரி பதில் விளக்கம் சொல்ல அந்த இடத்தில் ஆள் இல்லை என்றார்.
அஹ்லே குர்ஆன்கள் மறுக்கும் கபுர் வேதனை உண்டு என்பதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களையே எடுத்துக் காட்டி பஜ்ரிலும் இஷாவிலும் தொடராக ரையானில் விளக்கம் கூறினோம்.


நீங்கள் என்ன சொன்னீர்கள். உங்கள் சுய நலத்தை மனதில் வைத்துக் கொண்டு அமைப்பு சாரா பள்ளி என்று எங்களை ஏமாற்றிய மாதிரி, கருத்து வேறுபாடுகளான விஷயங்களை இந்த பள்ளியில் பேசக் கூடாது. பேச மாட்டோம் என்று அறிவித்துக் கொண்டே இருந்தீர்கள். நாம் பேச வேண்டும் என்று ஜும்ஆவில் அறிவித்தோம்.  
 
ரிபாஈ மஸ்ஜிதுர்றஹ்மானில் பொருளாளராக இருந்தபொழுதும் இப்படித்தான் வீட்டில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வர மாட்டார். தக்வா பள்ளியில் செயலாளராக இருந்தபொழுதும் பள்ளிக்கு தொழ வந்ததில்லை. அதே மாதிரிதான் இப்பொழுதும் ரய்யான் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்.

வீட்டில் இருந்து கொண்டே பள்ளிக்கு தொழ வராமல் இருக்கிறார். நாங்களும் பல தடவை சொல்லி விட்டோம். அண்ணே பள்ளிக்கு வாங்க என்று கெஞ்சாமல் கெஞ்சி விட்டோம். தலைவராக இருந்தால் பள்ளிக்கு வரணும் என்பது சட்டமா? என்று ரிபாயி கேட்கிறார்.  இப்படியாக ரய்யானில் புறம் பேசிக் கொண்டவர்கள் யார்?

மஸ்ஜிதுர்றஹ்மான், தக்வா பள்ளி என தொழ வராமல் பதவியில் இருந்த கடந்த கால உங்கள் வரலாற்றை புறமாகப் பேசியவர்கள் யார்? நிச்சயமாக புதியவர்களால் பழைய வரலாறு பேச முடியாது புரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் யாரையெல்லாம் ரய்யான் நிர்வாகிகளாகப் போட்டால் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் உங்களைச் சார்ந்தே இருப்பார்கள் என்று எண்ணி பதவி கொடுத்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் தான். இன்றைய இறை வசனம் என்ற தலைப்பில் புறம் வேண்டாம் என்று FBயில் போட்டு விட்டு பள்ளியில் வைத்து புறம் பேசியவர்கள்.

அண்ணே பள்ளிக்கு வாங்க என்று உங்களை கெஞ்சாமல் கெஞ்ச அஷ்ரபுக்கு தலை எழுத்தா? பழைய வரலாற்றைச் சொல்லி அசன் போன்றவர்களை பள்ளியில் புலம்ப யார் காரணம். ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள் 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?

கடித எண் 4

J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடிதம் -3 JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.