அண்ணனுக்கு ஒரு நாள் பெருநாள் தம்பிக்கு இன்னொரு நாள் பெருநாள் என பெருநாட்கள் பல ஆனது போல் தப்லீகும் ஆகி விட்டதா?


தப்லீக் ஜமாஅத் மட்டும் தான் பதவி ஆசையின்றி ஒரே தலைமையின் கீழ் இயங்குகிறது என்ற பாராட்டைப் பெற்றிருந்தது. ஒரே வீட்டில் இருந்த அண்ணன் தம்பிகள் என்ற தவ்ஹீதுவாதிகள்(?) ஆளாலுக்கு ஒரு நாள் பெருநாள் கொண்டாடுகிறார்கள் என்று எள்ளி நகையாடினார்கள்

ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன் தம்பிகள் என்ற தப்லீக்காரர்கள்(?) அண்ணன் கூட்டி வரும் தப்லீக் ஜமாஅத்தில் தம்பி இருப்பதில்லை. தம்பி கூட்டி வரும் தப்லீக் ஜமாஅத்தில் அண்ணன்  இருப்பதில்லை என்று ஆகி விட்டது.
130 ஆண்டு கால தப்லீக் இஜ்திமா வரலாற்றில் சென்னை மாகாணம் என்ற பெயரில்  12 முதலமைச்சர்களையும் சென்னை மாநிலம் என்ற பெயரில் 7 முதலமைச்சர்களையும் தமிழ்நாடு என்ற பெயரில் 19 முதலமைச்சர்களையும் கண்டுள்ளது.  

இந்த வரலாற்றில் முஸ்லிம்களின் நண்பர் என்று ஒரு சில பணக்காரர்களால் சொல்லப்பட்ட கருணாநிதி, வேறு சில பணக்காரர்களால் முஸ்லிம்களின் நண்பர் என்று சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர் உட்பட எந்த முதலமைச்சருக்கும்  தப்லீக் இஜ்திமா அழைப்பு கொடுக்கப்பட்ட வரலாறு இல்லை.  முதல் முறையாக எடப்பாடி கே. பழனிச்சாமி என்ற முதலமைச்சருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு மேலுள்ளவை பற்றி சிந்திக்காமல், வானுக்கு மேலுள்ள மறுமை வாழ்க்கை பற்றி சிந்திப்பார்கள். பூமிக்கு கீழுள்ள கபுறு வாழ்க்கை பற்றி சிந்திப்பார்கள். அந்த இரண்டை மட்டுமே பேசி இறையச்சத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தக் கூட்டத்தினரைக் காட்டி சில அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முற்பட்டார்கள். 

அல்லாஹ் என்று சொல்லத் தெரியாத சொல்ல வெட்கப்பட்டவர்கள். ஆயிரமாயிரம் முறை அம்மா என்று சொன்னவர்கள் செயல்பாட்டின் வெளிப்பாடுதான், 130 ஆண்டு கால தப்லீக் வரலாற்றில் கொடுக்கப்படாத அவர்கள் சிந்தித்திராத பூமிக்கு மேலுள்ள முதலமைச்சருக்கான அழைப்பு. இருந்தாலும் அப்பாவிகளான சில நல்லவர்கள் சொன்னார்கள்.

தண்ணீர் ஏற்பாடு, வாகனப் போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்கள் மேலும் இதில் கலந்து கொள்ள அழைப்பு உட்பட நிர்வாக காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று சரி அப்படியே நல்லெண்ணம் வைப்போம் என்று இருக்க விடுகிறார்களா? அடுத்து வந்துள்ளதைப் பாருங்கள். அதை கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாது. 

( ~மெளலானா~ ) ஸஃது ஸாஹிப் காந்தலவி" என்ற நபரின் தலைமையின் கீழ்  நடக்க இருக்கும் இந்த இஜ்திமா பற்றி. இஸ்லாமிய அறிவகம் வழங்கும்...           *அழிவின் பாதையில்*          *டெல்லிப் போதை!!!@*    *திருச்சி இனாம்குளத்தூரில் ஜனவரி 26,27,28 நடக்க இருக்கும் "இஜ்திமா" செல்லுவதற்கு அதிக ஆர்வத்துடன்* *இருப்பவர்களே...!* என அழைத்து நிறைய எழுதி உள்ளார்கள். தேவ்பந்த் போன்ற மதரஸாக்களிலிருந்தும்  பத்வாக்கள் பவனி வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை என்று இருக்க முடியவில்லை. காரணம்,

1 நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்விடம் நேரடியாக உரையாட சென்றதினால், பனீ இஸ்ரவேலர்களி 5,88,000 நபர்கள் காளை மாட்டை வணங்கி வழி கெட்டுப் போனார்கள். இதற்கு மூஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களே பொறுப்பு.*

2 குர்ஆன், ஹதீஸ், மற்றும் மார்க்கக் கல்வியைப் போதிக்கும் மதரஸாக்கள் (ஹிதாயத்) நேர்வழியை போதிப்பதில்லை. மாறாக ஊர் ஊராக ஜமாஅத் சென்றால்தான்* *(ஹிதாயத்) கிடைக்கும்.*    

3 ஒரு மனிதன் ஒரு பெரும் பாவம் செய்து விட்டால் அவர் அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) கேட்கின்றான் அது மட்டும் போதாது. அவரின் பாவம் மன்னிக்கப்பட வேண்டும் என்றால், அவர் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டும் (அதாவது, ஜமாஅத் செல்ல வேண்டும்).*  
                     
4. சம்பளம் பெற்றுக் கொண்டு மார்க்கக் கல்வி கற்றுக் கொடுத்தால் அது விபச்சாரம். அப்படி செய்கின்ற ஆலிம்களைவிட விபச்சாரிகள் முதலில் சொர்க்கம் செல்வார்கள்.*

*(இவைகள் அவரின் கொள்கைகளில் சிலதுதான். இன்னும் நிறைய இருக்கு).*

*இதன் மூலம் அவர் சொல்ல வருவது....*

*1) நபிமார்கள் செய்த வேலையை செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இப்போது, "மூஸா நபியே வழிகேட்டிற்கு பொறுப்பு (அல்லாஹ் பாதுகாப்பானாக!) நாங்கதான் நேர்வழி காட்டுகின்றோம்.*

*2)*
*குர்ஆன், ஹதீஸ், மார்க்கக் கல்வி எல்லாம் தேவை இல்லை. ஊர் ஊராக சென்று அமல்கள் செய்தால் போதும். மதரஸாக்களை இழுத்து மூட வேண்டும்.*

*3)*
*உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர்தான் என்று " நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஆலிம்களை "விபச்சாரி"களை விட கேவலம் என்கிறார்.*

**4)*
*என்னதான் நீ அல்லாஹ்விடம் அழுது புலம்பினாலும் 40 நாள் ஜமாஅத் போகாமல் உன் பாவம் மன்னிக்கப்படாது.*
*---*

*இவரின் இந்தக் கொள்கைகள் முற்றிலும் "வழிகேடு"என்று நாம் மட்டும் சொல்லவில்லை.*

*"தப்லீக் ஜமாஅத் தலைமையகம் "ஜாமிஆ தாருல் உலூம் தேவ்பந்த் "மதரஸாவின் உலமாவும் சொல்கிறார்கள்.*

*மற்றும் தமிழகத்தின் தாய்க் கல்லூரி "பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்"ஆலிம்களும் சொல்லியுள்ளார்கள்.*

*(ஃபத்வா கடிதம் உள்ளது) ஆகவே நடக்க இருக்கும் இஜ்திமாவின் நோக்கம் ( ~மெளலானா~) ஸஃது ஸாஹிப்"அவர்களுக்கு...*

*"எத்தனை ஒட்டு...? என்பதே நோக்கம்.*

*நிதானமாக சிந்திப்பீர்!*

*நல்ல முடிவெடுப்பீர்!!!*
*-------------------*
*By :*
*இஸ்லாமிய அறிவகம்,*
*+91 86100 86062.*
*15/01/2019///Tuesday.*
*-------------------*

*குறிப்பு :*

*சகோதரர் டெல்லி ஸஃதுவின் "இச்திமா" ரிப்போர்ட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் இரண்டு பேர் :*

*1) ஸூரா கமிட்டி. ஏனெனில் அவர்களுக்கு இது மானப் பிரச்சனை.*
*(சென்னை, விஷாரம் வழியாக இவர்களுக்கு ரிப்போர்ட் போகும்).*

*2) திரு. மோடி. ஏனெனில் இது அவர்க்கு எதிர்வரும் எலெக்‌ஷன் பிரச்சனை.*
*(ஆள்பவர் மூலம் போகும்).*

*இவை பொய்யல்ல;*

*இன்ஷாஅல்லாஹ்*
*காலம் பதில் சொல்லும்!.*


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.