TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹாவுக்கு கா.அ..முஹம்மது பஸ்லுல் இலாஹியின் பகிரங்க கடிதம்


மவுலவிகளின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்புகள் பீ.ஜே.யின் ஹிக்மத்தில் உருவானவையா?

காசுக்காக ரகசிய ஆடியோக்களை என்னிடம் விற்ற முதல் கழிசடைகள் யார்?

.மு.மு.. பெயரை பயன்படுத்தி முதன் முதலில் மோசடி செய்தவர்கள் யார்?

பீ.ஜே.யின் கள்ளப்பிள்ளை என்று நான் சொன்னது உண்மையா?

TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹா அவர்களே! J.S. ரிபாய் வீட்டு வாசலில் நின்ற பைக்கை எரித்தவர்கள் TNTJ யினர் தான் என்று அதிகமானவர்கள் சொன்னார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதை உண்மைபடுத்தும் விதமாக அமைந்தது.  நானும் பிளாக்கில் போட்டேன்.  
அதன் பின்னர் பைக்கை எரித்தவர்கள் ததஜவினர் அல்ல.  அது இஸ்லாம் கூறும்  ஜிகாத் செய்வதாகக் கூறி.  இந்த மாதிரி செய்து வரும் (மேலப்பாளையம் சைனின் முகநுால் கூட்டாளிகளான) ஜிகாத்திகள் செய்தது என்று தெரிந்தது. 

உடனே J.S.  ரிபாய்க்கு போன் போட்டு ததஜ மீது போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கூறினேன்.  தாயகம் வந்த பிறகு பேசிய மீட்டிங்குகளிலும் பைக்கை எரித்தவர்கள் ததஜவினர் இல்லை என்று வரட்டு கவுரவம் பார்க்காமல் சொல்லிக் காட்டினேன்.  

கடந்த ஆண்டு ததஜ மாவட்ட தலைவராக இருந்த சுபேர் என்ற பழைய கார் வியாபாரியின் மூன்று கார்களை ததஜவினரே எரித்துக் கொண்டார்கள். சுன்னத் ஜமாஅத்தின் மீது கம்ளைண்ட் கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி பரவியது. சந்தர்ப்பவாத சாட்சியங்கள் ததஜவினரே எரித்தார்கள் என்று உறுதிபடுத்தியது.

உங்களைப்  போல  ஆடியோ ஆடியோ என்று ஆட்டித் திரிந்த கூட்டத்தைச் சார்ந்தவரும். இதோ ததஜ சுபேரிடம் பேசிய ஆடியோ ஆதாரம். சி.சி.டி.வி கேமராவை ஆப் பண்ணி விட்டு ததஜ சுபேர் தனது கார்களை தானே எரித்துக் கொண்டார். பலமான ஆடியோ ஆதாரம் என்றார்கள் நாமும் நம்பினோம்.

தாயகம் வந்த இடத்தில் பழைய மற்றும் மூத்த அதிகாரிகள் சிலரை நேரிலும் சிலரிடம் போனிலும் பேசும் வாய்ப்புகள் கிடைத்தது.  முஸ்லிம் அல்லாத அந்த அதிகாரிகளுக்கு  லுஹாவாகிய உங்கள்  மூலம் அவர்களுக்கு கொடுத்த கார்டு லெஸ் போன்,  மிக நீளமான பேட்ரி லைட் போன்றவற்றை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்கள். உங்களைப் போல் அவர்கள் நன்றி கெட்ட ஜென்மங்களாக நம்பிக்கை துரோகிகளாக இருக்கவில்லை. 

அவர்கள் மூலம்தான் முதலில் அறிந்தேன். மூன்று கார்களை எரித்தவர்கள் ததஜவினர் அல்ல என்று.  (உங்களைப் போன்றவர்களின் எழுத்து பினாமி சைன்.  எந்த ஜிகாத் கூட்டத்துடன் முகநூலில் உறவாடி வருகிறானோ. அந்த) ஜிகாத் குரூப் தான் மூன்று கார்களை எரித்தது என்றார்கள்.  

இந்த உண்மை தெரிந்ததும்.  வரட்டு கவுரவம் பார்க்கவில்லை. மூன்று கார்களை எரித்தவர்கள் ததஜ இல்லை என்தை சொல்லவும் பதிவாக போடவும் தயங்கவில்லை.

ஷம்சுல்லுஹாவாகிய நீங்கள், J.S.ரிபாஈ,  தென்காசி M.S சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி இன்னும் பல மவுலவிகள் ஜாக்கில் இருக்கும் போது தமிழ் கூறும் முஸ்லிம் உலகு முழுமைக்கும் நீங்கள் யார் என்று தெரியாது. ஒரு சில ஊராருக்கு மட்டுமே தெரியும்

.மு.மு.. மூலம் உலக தமிழ் முஸ்லிம்களிடம் பிரபலமானீர்கள். .மு.மு.. மூலம் அறியப்பட்ட உங்களைப் போன்ற மவுலவிகளெல்லாம் த.மு.மு..வில் இருந்து கொண்டே. தவ்ஹீது பிரச்சாரக்குழு, தாருல் ஹதீஸ், இஸ்லாமிய கல்விச்சங்கம் என பல உள் அமைப்பு கண்டீர்கள். அதில் மவுலவிகள் மட்டுமே இருந்தீர்கள்.


உங்களைப் போன்ற மவுலவிகளின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அந்த மவுலவிகளின் நல வாரியங்கள் மூலம் பல பெயர்களில் வசூல் செய்து மோசடி செய்தீர்கள். எந்த அளவுக்கு என்றால் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட ரகசிய ஆடியோக்களையும் காசுக்காக என்னிடம் விற்று பணம் பெற்ற முதல் கழிசடைகளும் நீங்கள் தான்

நீங்கள் 1997லேயே என்னிடம் விற்று காசு பார்த்து விட்டீர்கள் என்று அறியாத பீ.ஜே. 2002ல் எனக்கு எதிராக வெளியிட்ட 2 வீடியோக்களிலும் 2004ல் அரபகம் வந்து த.மு.மு..வுக்கு எதிராக பேசிய இடங்களிலும் ஆறு ஆடியோ இருக்கிறது. இன்னும் வெளியிடாமல் வைத்து இருக்கிறோம் என்றார். பாவம் பீ.ஜே.

1992ல் தடை செய்யப்பட்ட தவ்ஹீது மாநாட்டை அதே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்களின் இந்த மவுலவிகள் இயக்கத்துக்கு வரவில்லை. 

மாநாடு நடத்தாமல் மாநாடுகள், பயிற்சி முகாம்கள், தஃவா பணி என்று மக்களை ஏமாற்றி வசூல் பண்ணி திண்பதிலேயே குறியாக இருந்தீர்கள். உங்களின் இந்த திருட்டுத்தனங்களை பீ.ஜே.யிடம் சொல்லி தடுத்து வந்தவன் நான்

உங்களின் இந்த திருட்டுத்தனத்திற்கு பீ.ஜே.யும் உடந்தை என்றும் எங்களிடம் சரி கண்டு அணுமதி வழங்கி விட்டு உங்களிடம் மறுக்கிறார் என்றுமே என்னிடம் கூறி வந்தீர்கள்.

உள் நாட்டில் வசூல் மோசடிகளை செய்து வந்த உங்கள் மவுலவிகள் இயக்கம். கடல் கடந்து வந்தும் உங்கள் (லுஹா) ஹதீஸ்கள் வெளியிட ஷேர் என்ற பெயரில் மோசடி செயலில் இறங்கியது. அப்பொழுது பீ.ஜே.க்கு போன் போட்டுக் கேட்டேன். தனக்கும் இந்த ஹதீஸ் ஷேர் வசூல் மோசடிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

லுஹா ஹதீஸுக்கு பங்குதாரார்களை (ஷேர்) சேர்க்க வந்தவரிடம் கேட்டேன். இது த.மு.மு..வின் கீழ் இயங்கும் அமைப்பா? என்று. அவர் இல்லை என்றார். அப்படியானால் நீங்கள் .மு.மு.. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இடமோ, .மு.மு.. மாநில அமைப்பாளர் பீ.ஜே. இடமோ லட்டர் வாங்கி வந்திருக்க வேண்டும் என்றேன்.

அதற்கு அவர்.  நாங்களே த.மு.மு..தானே என்றார் இதுதான் த.மு.மு..வின் பெயரால் முதன் முதலில் நடந்த மோசடி (இப்படித்தான் J.S.ரிபாஈயும் நானே த.மு.மு.. தானே என்று மேலப்பாளையம் த.மு.மு..வினரை ஏமாற்றி காசடிக்கும் கூட்டத்தை சூழ வைத்துக் கொண்டு ரய்யான் பள்ளியை மோசடி செய்து விட்டார்)

அப்பொழுது வசூலிக்க வந்தவரிடம் சொன்னேன். நீங்களெல்லாம் த.மு.மு.. மூலமே அறிமுகம் ஆகி த.மு.மு.. என்றே அறியப்பட்டுள்ளீர்கள். .மு.மு..வுக்கு சம்பந்தமில்லாத ஒரு அமைப்புக்கு நீங்கள் வசூல் செய்யும் போது த.மு.மு.. மீது உள்ள நம்பிக்கையிலேயே மக்கள் பணம் தருவார்கள்.

ஆகவே நாங்களே த.மு.மு..தானே என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு யு.ஏ.இ.ல் வசூல் பண்ண விட மாட்டேன். நீங்கள் வசூல் செய்து விட்டு போன பிறகு லுஹா ஹதீஸ்களை மொழி பெயர்த்து தரவில்லை. அதனால் வெளியிட முடியவில்லை என்றால் கெட்ட பெயர் த.மு.மு..வுக்குத்தான்.  ஆகவே பீ.ஜே.யிடம் கேட்பேன் அவர் சரி என்றால் வசூலுக்கு ஒத்துழைப்பேன் என்றேன்.

அவரை அருகில் வைத்துக் கொண்டு பீ.ஜேக்கு போன் போட்டேன். அவர் சம்பந்தம் இல்லை என்றார். அப்பொழுது உங்கள் மவுலவிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் நீங்களும் சொன்னது பீ.ஜே.க்கு தெரியும் அவர் சொல்லித்தான் அவர் அணுமதி அளித்துதான் வந்தோம் என்று.

நீங்கள் பலர் சொல்கிறீர்கள் உங்கள் திருட்டு வேலை  பீ.ஜே.க்கு தெரியும் என்று. பீ.ஜே. என்ற ஒருவர் மட்டும் தெரியாது என்றார். அதனால் மெஜாரிட்டியினர் சொன்னதை நம்பினேன். 

காயல்பட்டிணம் கல்விச் சங்கம் பீ.ஜே.யின் கள்ளப்பிள்ளை என்று எழுதினேன். நான் எழுதியதை ஆதாரமாகக் கொண்டு பலரும் எழுதினார்கள். காயல்பட்டிணம் கல்விச் சங்கம் பீ.ஜே.யின் கள்ளப்பிள்ளை என்று நீங்கள் அத்தனை மவுலவிகளும் கூட்டாக சொன்னது பொய் என்பதற்குரிய ஆதார ஆடியோ 21-11-2019 அன்று கிடைத்தது.

தெரு நீள தாடி வைத்துக் கொண்டு.  தொப்பி, ஜுப்பா, பைஜாமா போட்டுக் கொண்டு. ஜிகாத்தி போராளிகள் என்று   ஊர் உலகை ஏமாற்றிக் கொண்டு செக்ஸ் ஆடியோக்களை விற்று பிழைப்பு நடத்தும் கேடு கெட்டவர்களிடம் விலைக்கு வாங்கப்பட்ட டியோ மாதிரி அல்ல அந்த ஆடியோ.  

பீ.ஜே. க்கு எதிரான ஆதாரங்கள் தருகிறோம் என்று காசு பார்த்து ஏமாற்றிய கயவர்களிடம் விலைக்கு வாங்கிய ஆதாரங்கள் அல்ல அது.

பத்து ஆடியோ தருகிறேன் பணத்துடன் வாருங்கள் என்று கூறி விட்டு. பணத்தை வாங்கி விட்டு ஆடியோ தராமல் ஏமாற்றிய ஜிகாத்திகளிடம் வாங்கிய ஆடியோ அல்ல.  

இது சுடச்சுட கிடைத்த ஆடியோ. ஆர்டர் கொடுத்து ஆறு மாதம் கழித்து கிடைத்த ஆடியோ அல்ல.  அட்வான்ஸ் பணம்  வாங்கி விட்டு இன்று நாளை என பல நாள் கழித்து  தந்தார்களே அந்த மாதிரி ஆடியோ அல்ல.
  
உங்களுடன் சேர்ந்து பீ.ஜே.பெயரை கூறி தவ்ஹீது சகோதரர்களை ஏமாற்றி காசு பார்த்த மவுலவிகள் கூட்டத்தில் இருந்த ஒருவர் தானாக பேசி ரிகார்டு செய்து அனுப்பிய ஆடியோ. 

அதில் உள்ள ஒரு முக்கிய வார்த்தை. காயல்பட்டிணம் கல்விச் சங்கம் போன்றவை பீ.ஜே. ஹிக்மத்தில் உருவானவை அல்ல என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அதை நான் யாரிடமும் விற்பனை செய்து காசடிக்கவில்லை. என்னை நம்பி கல்விச் சங்கம் போன்றவை பீ.ஜே. ஹிக்மத்தில் உருவானவை என்று ஏற்று பரப்பினார்களோ அவர்களுக்கெல்லாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த ஆதாரத்தை அனுப்பி விட்டேன்.

ஆடியோ ஆடியோ என்று உங்கள் தலைமையில் உள்ள TNTJயினர் ஆட்டித்திரிகிறார்கள். ஆகவே TNTJயினர் ஆட்டித்திரியும் ஆடியோவுக்கு நீங்கள் மற்றும் TNTJ தலைமையில் உள்ளவர்கள் அனைவரும் பொறுப்பு என்று பகிரங்க  அறிக்கை  வெளியிட வேண்டுகிறேன்.

அதன் பிறகு அந்த ஆடியோக்கள் தராதரம் பற்றிய உண்மைகளை வெளியிடுவேன். இது சவால் அல்ல சத்தியத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே
 இப்படிக்கு
கா.அ..முஹம்மது பஸ்லுல் இலாஹி

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.