முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் கஅஃபாவையும் விட உங்கள் தலைமை புனிதமானதா?



கைத் துப்பாக்கி போலீஸ் பந்தாவாக இல்லை. ஆகவே மிஷின் கன் ஏ.கே.47  ஏந்திய PSO பாதுகாப்பு வேண்டும் என தலைகைீழாக நிற்கிறது விளம்பர பைத்தியம்.

வேலுார் இப்றாஹீமை மேலப்பாளையத்தில் அன்று அடித்தவர்கள் கொள்கைவாதிகள் என்றால்? அவர்கள் இன்று எங்கே போனார்கள்? வேலுார் இப்றாஹீம் இன்றுதான் சரியான கொள்கையில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் நிலைபாடா?
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_6.html


நன்றி கெட்டவரும் விளம்பர பிரியருமான வேலுார் இப்றாஹீம், தான் பந்தாவாக பவனி வர தனக்கு அரசு செலவில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்துள்ளார். அதற்கு ஏற்றால் போல் வேலுாரில் உள்ள ரவுடிகள் 2018 ஏப்ரல் முதல் வாரத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு தாக்கினார்கள்.

உள்ளத்தில் உள்ளதை உணராத நாம் உடனே அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற முயற்சிகளை ராமநாதபுரம் ரைசுத்தீன் மூலம் செய்தோம். அதே மாதம் இறுதியில் மேலப்பாளையம் கூலிப்படையினரும் தாக்கியதால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அவசியம் என்று வலியுறுத்தினோம்.

சமீபத்திய அவரது மூளை குழம்பிய பேச்சுகளுக்குப்  பிறகு அந்த முயற்சியை விட்டு விட்டோம். பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என்றும் அவருக்கு பாதுகாப்பு வாங்கி கொடுப்பதில் உடன்பாடு இல்லை என்றும் கூறி விட்டோம்.

அவருக்கு வலை தளங்களில் எதிர்ப்பை காட்டுவதன் மூலம் அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்காதீர்கள் என்று பதிவும் போட வைத்தோம்.

இதற்கு உணர்ச்சிவசப்படாமல் வேறு எதற்கு உணர்ச்சிவசப்பட என்ற கொள்கை உடைய அறிவாளிகள்? உணர்ச்சிவசப்பட்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். அந்த எதிர்ப்புகளை எல்லாம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பழைய போட்டோக்களையும் முயற்சிகளையும் காட்டி அவருக்கு கைத் துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு பெற்று விட்டார். 

கைத் துப்பாக்கி போலீஸ் அவர் எதிர் பார்த்த மாதிரி பந்தாவாக இல்லை. ஆகவே மிஷின் கன் ஏந்திய PSO பாதுகாப்பு வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளார். இந்த நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் வண்ணம் முக நுாலில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். எம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எம்மை விமர்சிக்கும் குட்டி அமைப்புகளைச் சார்ந்த பலரின் தலைவர்கள் கள்ளத்தனமாக பீ.ஜே.பி. தலைவர்களுடன் உறவாக உள்ளார்கள். காசுக்காக சமுதாயத்தையும் சமுதாய அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் உளவுத்துறையிடம் போட்டுக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். இதை பல முறை எழுதி விட்டேன்.

எதிரிகளுக்கும் நீதி செலுத்த வேண்டும். நீதி நியாயம் பேசும் போது பழைய பகைமை, துவேஷம், வெறுப்பு காட்டக் கூடாது. இன்று நடந்ததற்கு அன்று அடித்தது சரி. அன்று நடந்ததற்கு இன்று அடித்தது சரி என்பது ஜாஹிலிய்யா காலத்து கொள்கை.

நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.  5:2, 5:8, 5:42,   இப்படி குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் புத்தகம் போட்டு இயக்கம் சார்பில் விற்பனை செய்கிறார்கள். ஆய்வு அறிவு இல்லாத காப்பி பேஸ்ட் கம்பெனியினரான புத்தக வியாபார இயக்கத்தவர்கள். ஆக அபுஜஹ்ல் வாரிசுகளாகவே ஆகி விட்டார்கள்.

புனித கஅஃபாவை உள்ளடக்கிய மக்கா மாநகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமை விட்டு முஹம்மது நபி(ஸல்) அவர்களையே தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை கூட உங்களை வரம்பு மீறுவதற்கு தூண்ட வேண்டாம் என்பது அல்லாஹ்வின் அறிவுரை.

முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் கஅஃபாவையும் விட உங்கள் தலைமை புனிதமானதா?

அப்படி இருக்க நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீமை அன்று அடித்தது சரி என்பவர்கள் அல்லாஹ்வுக்கும் துாதருக்கும் எதிராகவே பேசி ஜாஹிலிய்யா காலத்து கொள்கை நோக்கி போய் கொண்டிருக்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

அன்று நன்றி கெட்ட வேலுார் இப்றாஹீமை அடித்த அடியாட்கள் கொள்கைவாதிகள் என்றால்? அவர்கள் கை கால்களில் இன்று குஷ்டமா பிடித்து விட்டது. அல்லது வேலுார் இப்றாஹீம் இன்றைய கொள்கையில் ஒன்றி விட்டார்களா?

வேலுார் இப்றாஹீமின் AK 47 நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வண்ணம் முக நுாலில் பாடுபடுவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.