ஜிஹாத், கிலாபத் என்று மூளைச்சலவை செய்பவர்களே காட்டிக் கொடுத்து காசு வாங்குகிறார்கள்..

தலைப்பில் உள்ள குற்றச்சாட்டை நான் நீண்ட காலமாக கூறி வருகிறேன். இந்த மாதிரி ஆட்களை 1981ல் இருந்து பார்த்து வருகிறேன். இன்றைக்கும் இந்த மாதிரி செயல்பட்டு வரும் பல இரட்டை வேட தாஇகளை பல ஜமாஅத்தாருக்கு அடையாளம் காட்டி உள்ளேன். அதில் ஒருவன் 4 இளைஞர்களை சிரியாவில் ஜிஹாது செய்ய என்று அழைத்து போய் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்த்து விட்டவன்.
அவன் குறிப்பிட்ட ஒரு அரபு நாட்டுக்கு போக முடியாமல் இந்தியாவில் இருக்கிறான்.  இது போன்றவற்றை உண்மைப்படுத்தும் சமீபத்திய சம்பவங்களை  கடந்த  இரண்டு நாட்களாக பல சகோதரர்கள் பதிவாக போட்டு வருகிறார்கள்.

ஐ.எஸ். ஐ.எஸ். என்பது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுச் சதி என்பதும். பிறகு பக்தாதி விஷயத்தில் அமெரிக்க நாடகத்தை புரியாமல் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதும் தான் நமது இளைஞர்கள் நிலையாக உள்ளது. இதற்கு உணர்ச்சிவசப்படாவிட்டால் வேறு எதற்குத்தான் உணர்ச்சிவசப்படுவது என்று செயல்பட்டவர்கள் வாழ்க்கை பாதி அநியாயமாக சிறையில் கழிந்ததுதான் மிச்சம்.

நண்பர்கள் எல்லோரும் இதை ஒருமுறை படியுங்கள் அன்பு வேண்டுகோள் என்ற தலைப்பில் முஹம்மது ஜிஃப்ரி எழுதி உள்ளதில் முக்கிய செய்தியை மட்டும் தருகிறேன்.


உளவுத்துறையின் திட்டமிடுதலின் அடிப்படையில் சிலர் அற்ப ஆதாயத்திற்காக உளவுத்துறை யோடு சேர்ந்துகொண்டு முகநூலில் இளைஞர்களை வசியப்படுத்தி

 கிலாபத் செய்ய வேண்டும் ஜிஹாத் செய்ய வேண்டும் என்று மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் 

யாரிடம் அவர்கள் தொடர்புகொண்டு மூளைச்சலவை செய்கிறார்களோ அவர்களே உளவுத்துறை அதிகாரிகளிடம்  இவர்களை பற்றியும் இவர்களின் சிந்தனை பற்றியும் அவர்களை காட்டியும் கொடுத்துவிடுகிறார்கள் 

இந்தப் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் உளவுத் துறைகளால் திட்டமிடப்பட்டு கால சூழல்களுக்கு ஏற்ப பரபரப்பை ஏற்படுத்துவதற்காக சில நாடகங்கள் உளவுத்துறைகளால் அரங்கேற்றப்படுகிறது

நரித்தனமாக திட்டமிடுதலின் அடிப்படையில் ஒரு சமூகம் வேட்டையாடப் படுகிறது

 அதற்கு இந்த சமுதாயத்தைச் சேர்ந் சிலர் அவர்களுக்கு துணையாக நிற்கிறார்களே என்பது ஒருபக்கம் நமக்கு வேதனையும் அளிக்கிறது

 உலக நாடுகளிலும் ஆயுதக்குழுக்கள் என்ற பெயரால் இப்படி ஒரு குழுக்கள் உளவு நிறுவனங்களால் இயக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்

இது போன்று இனிவரும் காலங்களில் யாரும் உங்களிடத்தில் தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக அவர்களுடைய தொடர்பை துண்டித்து விடுங்கள்

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் உளவுத்துறையின் கைக்கூலிகள் ஏராளம் ஏராளம் என்பதை தெரிந்துகொண்டு விழிப்புணர்வோடு பணியாற்றுவோம்

ஆக்கபூர்வமான அறிவார்ந்த சிந்தனைகளோடு  தாங்கள் சமூகப் பணிகளை மேற் கொள்ளுங்கள் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்

நன்றி 

Umali Isk
முஹம்மது ஜிஃப்ரி







Mohamed Shafi நீங்கள்( உங்கள் கூட்டம்) ஒற்றுமை யாக உள்ளீர்களோ????
பிரிவினையை ஏற்படுத்தியதற்கும்,ஒற்றுமை யை
குழைத்தற்கும்

காட்டிகொடுத்தற்கும் உங்களுக்கு
சம்பந்தம் இல்லையா


Mohamed Fazlu Elahee சகோதரர் Mohamed Shafi அவர்களே
ஜமல் யுத்தம் (ஒட்டகப் போர்) துவங்கி கர்பலா என ஆயிரக்கணக்கான சண்டைகளையும் ஆயிரத்தெட்டு பிரிவுகளையும் கண்டுள்ள வரலாற்றுக்குரியவர்கள். 1400 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தோம் என்று சொல்லி வருவது பொய் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

நாங்
கள் பிரிவினை இன்றி இருக்கிறோம் என்று சொல்லவில்லை. குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்று சொல்வதில் ஒற்றுமையாக இருக்கிறோம். 

எருமை மாட்டு குர்பானிக்கு மஷுரா செய்து முடிவு சொல்வோம் என்று சொல்லக் கூடிய மாட்டு மூளையையும் களி மண்ணையும் மண்டையில் உடையவர்ளால் தான் பிரிவுகள் ஏற்பட்டுள்ளது. அதை மறுக்க மாட்டோம்.


காட்டி கொடுத்தற்கும் உங்களுக்கு சம்பந்தம்  இல்லையா என்று கேட்டுள்ளீர்கள்  

காசுக்காக காட்டிக் கொடுப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காசு பார்ப்பதற்காக தாங்களே சம்பவங்கள் செய்யச் சொல்லி விட்டும் சம்பவங்கள் செய்து விட்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்

தலைமறைவாக இருப்பவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களை தங்கள் பொறுப்பில் தங்க வைத்து நல்ல வசூலித்து விட்டு. போலீஸ் மற்றும் உளவுத் துறையிடம் நல்ல பேரம் முடிந்ததும் காட்டிக் கொடுத்து காசு பார்த்தார்களே அந்த நம்பிக்கை துரோகிகள் மீதும் 

யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன் என்று நான் பல முறை எழுதி விட்டேன். இது போல் துஆச் செய்ய   கூட்டுத் துஆ கூட்டம் தனித் தனி துஆ தம்பிகள் யாருமே முன் வரவில்லையே ஏன்? யாருமே முன் வரவில்லையே ஏன்? 

-----------------------------------------------------------------------------
இனி ஜிப்ரி எழுதில் முன் பகுதி பாருங்கள்.
நண்பர்கள் எல்லோரும் இதை ஒருமுறை படியுங்கள் அன்பு வேண்டுகோள்

 NiA என்று சொல்லக்கூடிய தேசிய புலனாய்வு முகமை நேற்று தமிழகத்தில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தினார்கள் 

அதில் குறிப்பாக திருச்சியில் இனாம் குளத்தூரில் சோதனை நடந்தது 

உடனடியாக நாங்கள் NiA அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஒரு அப்பாவியின் வீட்டில் எப்படி நீங்கள் சோதனை இடலாம் என்று நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் 

அவர்கள் சோதனை செய்யும் போது அவர்கள் தேடி வந்த சகோதரர் அவர் நேற்று வீட்டில் இல்லை 

நீங்கள் தேடி வந்தவரை நாங்கள் அழைத்து வருகிறோம் அவரை நீங்கள் சோதனை செய்வதற்கான காரணம் என்ன என்று அந்த NiA  அதிகாரியிடம் கேட்டோம் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சிலர் இவரிடம் செல்போனில் உரையாடுடினார்கள் ஆகையால் இவரை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று எங்களிடம் கூறினார்கள் 

உடனடியாக நாங்கள் அந்த சகோதரனை அந்த அதிகாரிகளிடம் அழைத்து சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று அவர்களிடம் கூறினோம் 

இவரை விசாரிக்கும் வரை நாங்கள் காத்திருந்தோம் பிறகு அந்த அதிகாரிகள் இவரை விசாரித்த பிறகு எங்களை அழைத்தார்கள் 

அந்த அதிகாரிகளிடம் நாங்கள் சென்று என்ன பிரச்சனை என்பதை 
 முழுமையாக நாங்கள் தெரிந்து கொண்டோம்

 பிறகு அந்த சகோதரனை நாங்கள் அழைத்து வந்து விட்டோம்

 அவர் மீது எந்த தவறும் இல்லை எந்த குற்றங்களும் இல்லை என்று எங்களிடம் உளவுத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தார்கள் இருந்தபோதும்

நான் தெரிந்து கொண்ட விஷயத்தை இந்த முக நூலின் வாயிலாக எச்சரிக்கையோடு பதிவு செய்கிறேன் 


அன்பு தம்பி மார்களுக்கும் சகோதரர்களுக்கும்







Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.