CMN சலீம், பூவை அன்சாரியை காட்டிக் கொடுத்தவர்கள் யார்?


CMN சலீம் சம்பந்தமாக ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்  தக்கலையைச் சார்ந்த யாஸிர் பிர்தவ்ஸி என்பவர் இவருக்கு எதிராக கம்ளைண்ட் செய்து இருக்கிறார். அதாவது போட்டுக் கொடுத்து விட்டார். காட்டிக் கொடுத்து விட்டார்.
இவர் சவூதி அரசுக்கு எதிராக மன்னர் குடும்பங்களுக்கு எதிராக ராஜ துரோக பேச்சு பேசக் கூடியவர். இவர் சவூதி மலிக் (ராஜ - மன்னர்) குடும்பங்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார். இப்படியாக போட்டுக் கொடுத்து விட்டார்.

அதற்குரிய ஆதாரமாக, முஹம்மது பின் அப்துல் வஹாப் பற்றி CMN சலீம் ஆற்றிய உரையிலிருந்து மிகச்சிறிய பகுதியை மட்டும் கட் பண்ணி வீடியோவாக கொடுத்துள்ளார். அது சவூதி மன்னர் குடும்பங்கள் பற்றி பேசிய பகுதி. அதை முறையாக அரபியில் மொழி பெயர்த்தும் கொடுத்துள்ளார்.



அப்பொழுதே பூவை அன்சாரி சிறை பிடிக்கப்பட்டார். அப்பொழுது சவூதியில் இருந்த முஜாஹித் மவுலவி கடும் முயற்சி எடுத்து பேசி பூவை அன்சாரிக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு கஷ்டப்பட்டுத்தான் வெளியே வந்துள்ளார் பூவை அன்சாரி. அப்படி இருக்க ஏன் மீண்டும் CMN சலீமை வைத்து கூட்டம் போட்டார்? என்று தெரியவில்லை.

தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி யார்? ஜாக் (JAQH) காரர் ஜாக்  செய்யது அலி பைஜிக்கு மிக நெருக்கமானவர். எனவே தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி ஜாக் (JAQH) தவிர மற்ற எல்லா அமைப்பில் உள்ளவர்கள் பற்றியும் போட்டுக் பொடுப்பதையே சவூதியில் தொழிலாக –வேலையாக கொண்டுள்ளார்.

இதைப் படித்ததும் ஜாக் சகோதரர்கள் மற்ற இயக்க வெறியர்கள் போல் என் மீது பாயக் கூடாது. சமுதாய இளைஞைர்கள் விழிப்புணர்வுக்காக நான் எனது குடும்பத்துக்காரரையே முன்னுதாரமாக்கி பதிவு போட்டேன். 

1990களில் தங்களைக் காத்துக் கொள்ள காட்டிக் கொடுத்தார்கள். பயந்து காட்டிக் கொடுத்து விட்டார்கள். ஆகவே 1990களில் இன்னவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை என்று அல்லாஹ்வின் சாபம் கேட்க தயாரா என்றார் ஒரு இயக்கத்துக்காரர். இன்னொரு இயக்கத்துக்காரர் அதெப்படி கேட்பார் என்றார்.

ஆகவே, நாம் என்ன சொன்னோம் காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காசுக்காக முஸ்லிம் இளைஞர்களை துாண்டி விட்டு மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  முஸ்லிம் சிறைவாசிகளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் மீதும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையாகி விட்டால் தங்கள் பிழைப்பு நடக்காது. வசூலித்து திண்ண முடியாது. ஆகவே முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையாகி விடக் கூடாது என்று செயல்படக் கூடியவர்கள் மீதும் யா  அல்லாஹ் உன்  சாபத்தை இறக்குவாயாக என்று துஆ கேட்கச் சொன்னோம். சவால் விட்ட  ஒருத்தரும் வாய் திறக்கவில்லை.

ஆனால், அவர்களெல்லாம் தங்கள் அமைப்பின் தலைவர்களையும் நிர்வாகிகளையும் நல்லவர்கள் உளவுத்துறை இன்பாமர்கள் இல்லை என்று மறுத்து அவ்வப்போது பதிவு போட்டு புகழ்ந்து வருகிறார்கள்.

1990களில் இவர்கள் செய்யும் செயலால் சமுதாயத்துக்கு தீங்கு என  உணர்ந்து காட்டிக் கொடுத்ததாக கூறியவர்களுக்கு எதிராக சாபம் கேட்கச் சொன்னவர்கள் 2000லிருந்து 2019வரை காசுக்காக காட்டிக்  கொடுப்பதையே தொழிலாகக்  கொண்டுள்ளவர்களுக்கு  எதிராக  சாபம் கேட்க தயாராக இல்லை.

ஆகவே ஜாக் (JAQH) சகோதரர்களே மற்ற இயக்க வெறியர் போல் நடந்து விடாதீர்கள். தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி யார் என்றே எனக்கு தெரியாது. முன் பின் பகை கிடையாது. என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். CMN சலீம், பூவை அன்சாரி விடுதலை விஷயமாக தொடர்பு கொண்டதில் கிடைத்த தகவல். இதை இன்னொரு ஜாக் (JAQH) சகோதரரிடம் உறுதி செய்து விட்டுத்தான் எழுதி உள்ளேன்.

இவர்கள் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களின் வாரிசுகள். இதோ இவர்களது தந்தை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானதற்கான ஆதாரம். இப்படி போட்டு விட்டாலே அவர்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்க முடியாத அளவுக்கு ஆக்கி விடும். அவர்கள் தந்தை வழக்கிலிருந்து விடுதலையாகி இருந்தாலும் சரியே. இப்படித்தான் இன்றைய உலக நாடுகள் இருக்கிறது. 

தன் பிள்ளைகளே இப்படி அல்லாஹ் அல்லாஹ் என்று இருக்கும் போது இவன் அவனது சொந்த குடும்பத்தினர் பிள்ளையை அரபு நாட்டு  உளவுத்துறையிடம் பிடித்து கொடுக்க சொல்கிறான்

வெளிநாடு வந்து போய் இருப்பவர்களில் பல மைக் மாவீரர்கள் சம்பந்தமில்லாமல், தேவை இல்லாமல் இந்த மாதிரி ஆட்சித் தலைவர்களை விமர்சித்துப் பேசியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு பாடம். 

இன்று சொல்லவில்லை அன்றே சொன்னோம் காக்கி சட்டையை பிடித்து கேட்க சொன்னது மாவீரன் யார்? என்ற https://www.youtube.com/watch?v=sJcYXsBjW-4&t=224s இணைப்பில் உள்ள வீடியோவையும் பார்த்துக் கொள்ளுங்கள். 



Comments

அன்னை கதீஜா கல்லூரி கட்டுவதற்காக முதலீடு செய்தவர்கள், இத்தனை ஆண்டுகளாகியும் ஷேர் ஹோல்டர்களை அழைத்து ஒரு கூட்டம்கூட நடத்தவில்லையே, எட்டு ஆண்டுகளாகியும் கணக்குகாட்டவில்லையே, 160 ஷேர் ஹோல்டர்களிடமிருந்து வாங்கிய காசு கொண்டு கட்டிய கல்லூரியை உங்கள் சொந்த ட்ரஸ்டில் பதிவு செய்து, குடும்ப வாரிசுகளுக்குச் சொந்தமென பைலா எழுதி வைத்திருப்பது மோசடியில்லையா? முதலான கேள்விகள் கேட்ட ஷேர் ஹோல்டர்கள்மீதே வழக்கு தொடருவேன், சைபர் க்ரைமில் பிடித்துக் கொடுப்பேன், எம்பசி வழியாக வேலை செய்யும் கம்பெனிக்குப் புகார் அனுப்பியுள்ளேன் என்றெல்லாம் அல்லாஹ்வை மறந்து மிரட்டியவருக்கு அல்லாஹ் பாடம் புகட்டிவிட்டான் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சி எம் என் சலீம் செய்த நம்பிக்கை மோசடி குறித்த முழு விவரம் அறிய..

https://m.facebook.com/story.php?story_fbid=2561122303950545&id=100001584020310
Yaser Firdousi said…
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
Yaser Firdousi said…
உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை பிதிவிட்டிருக்கிறீர்கள் என்னை குறித்து உள்ளதால் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்
சகோ. யாசிர் ஃபிர்தவ்ஸி இதனை மறுத்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதனைக் கூறியுள்ளீர்கள்?
Yaser Firdousi said…
இச்செய்தி தங்களை பூரண உடல் நலத்துடனும் மிகுந்த இஸ்லாமிய உற்சாகத்துடனும் சந்திக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். c . m . n ஸலீம் மற்றும் பூவை அன்சாரி ஆகியோர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக என்னை சம்மந்தப்படுத்தி அவதூறுகள் பரப்பப்பட்டுவருவதை சமூக வலை தளங்கள் வாயிலாகவும் , நண்பர்கள் மூலமாகவும் அறிய முடிந்தது . c . m . n ஸலீம் அவர்களால் சில வருடங்களுக்கு முன்பாக தான் இஸ்லாமிய பாடத்திதிட்டத்துடன் கூடிய கல்லூரி தொடங்குவதாகவும் இதற்காக முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சில சகோதரர்கள் முதலீடு செய்யலாமா ? இவருடைய அகீதா , மன்ஹஜ் என்ன? என்று கேட்டதற்கிணங்க ஒரு தாயி என்ற அடிப்படையில் இவருடைய கல்லூரியில் மத்ஹப் அடிப்படையிலான பாடத்திட்டங்கள் உள்ளன. இவர் கந்தூரி, மீலாது விழாக்களில் கலந்து கொள்கிறார், ஷிர்கையும் பித் அத்தையும் பிரசாரம் செய்யும் அபூதாஹீர் பாக்கவி போன்றவர்களை அழைத்து தனது கல்லூரியில் சிறப்பு வகுப்புகளை நடத்துகிறார், எனவே இவரது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க கூடாது கல்லூரியில் முதலீடு செய்வது ஷிர்க்கும் பித் அத்தும் வளர்வதற்கு நாமே துணை போனதாக அமையும் என வாராந்திர பயான் நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுறுத்தினோம். அன்று முதல் இன்று வரை நம்மீது பல் வேறு அவதூறுகளும் , குற்றச்சாட்டுகளும் பரப்பப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் ஃபழ்லுல் இலாஹி குற்றம் சாட்டப்பட்ட நம்மிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் ஒரு தரப்பினரின் பேச்சை கேட்டு அருகிலிருந்து பார்த்ததைப்போன்று அவதூறுகளை பரப்பி உள்ளார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரப்பபடும் செய்திகளுக்கும் , இவர்கள் கைது செய்யப்பட்டதிற்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையற்ற பிரச்சனைகளால் தஃவா பணிகளுக்கும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்

யாசிர் ஃபிர்தௌஸி
அல் - ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா
Yaser Firdousi said…
// அதற்குரிய ஆதாரமாக, முஹம்மது பின் அப்துல் வஹாப் பற்றி CMN சலீம் ஆற்றிய உரையிலிருந்து மிகச்சிறிய பகுதியை மட்டும் கட் பண்ணி வீடியோவாக கொடுத்துள்ளார். அது சவூதி மன்னர் குடும்பங்கள் பற்றி பேசிய பகுதி. அதை முறையாக அரபியில் மொழி பெயர்த்தும் கொடுத்துள்ளார்.// பஸ்லுல் இலாஹி யார் தங்களிடம் இந்த தகவலை கூறினாரோ அவரோ, கேட்டதை தீர விசாரிக்காமல் பரப்பிய தாங்களோ இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் . அவ்வாறு இல்லையெனில் தாங்கள் அவதூறையும் பொய்யான தகவல்களையும் பரப்புவர் என எடுத்துக் கொள்ளலாமா?
Yaser Firdousi said…
// அப்பொழுதே பூவை அன்சாரி சிறை பிடிக்கப்பட்டார். அப்பொழுது சவூதியில் இருந்த முஜாஹித் மவுலவி கடும் முயற்சி எடுத்து பேசி பூவை அன்சாரிக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்// முஜாஹித் மௌலவியை மாட்டிவிட்ட அன்சாரி

உங்களுக்கு தெரியாத இன்னொரு கதை உள்ளது சொல்கிறேன்
அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியதற்காக அன்சாரி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . தனக்கு ஒன்றும் தெரியாது. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு வழி காட்டவே எனது போன் நம்பர் போடப்பட்டுள்ளது . மௌலவி முஜாஹித் தலைமையில்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று அவரை மாட்டி விட்டார். அப்போதும் இது போலவே மௌலவி முஜாஹிதுக்கு எதிராக நான் புகார் அளித்ததாக அவதூறுகள் பரப்பப்பட்து
Yaser Firdousi said…
/ தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி யார்? ஜாக் (JAQH) காரர் ஜாக் செய்யது அலி பைஜிக்கு மிக நெருக்கமானவர். எனவே தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி ஜாக் (JAQH) தவிர மற்ற எல்லா அமைப்பில் உள்ளவர்கள் பற்றியும் போட்டுக் பொடுப்பதையே சவூதியில் தொழிலாக –வேலையாக கொண்டுள்ளார்//

குர் ஆன் சுன்னாவை ஸலஃபுகள் புரிந்த அடிப்படையில் புரிந்து செயல்பட வேண்டும் இதில்தான் இம்மை மறுமையில் வெற்றி அடைய முடியும் என்ற கொளகையில் பயணித்து வருகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாள் முதல் இது வரை தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதையே முக்கிய பணியாக மேற்கொண்டு வருகிறது. எனக்கு மார்க்கத்தை போதித்து என்னை உருவாக்கியது இந்த அமைப்பு நான் ஜாக் (JAQH) அமைப்பின் கடைநிலை ஊழியனாக இருப்பதில் கூட மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் .

// எல்லா அமைப்பில் உள்ளவர்கள் பற்றியும் போட்டுக் பொடுப்பதையே// தாங்கள் உண்மையாளராக இருந்தால் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் .
Yaser Firdousi said…
// CMN சலீம், பூவை அன்சாரி விடுதலை விஷயமாக தொடர்பு கொண்டதில் கிடைத்த தகவல்.// தான் கேள்விப்பட்டதைஎல்லாம் பரப்புபவன் பொய்யன் பொய்யன் என்று எடுத்துக் கொள்ளலாமா?
Yaser Firdousi said…
எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக்க கேட்கும் துணிச்சல் மிக்க மாவீரனாகிய தாங்கள் சகோதரர் அப்துல் ரஹ்மான்.ஜ // c .m .n சலீம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் அது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்து எழுத்து திராணியும் , தெம்பும். தைரியமும் உள்ளதா?
Yaser Firdousi said…
இறுதியாக ...

ஜாக்கிலிருந்து விலகி அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட போது அதிலே தாவி ஜாக்கை அழிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் பி.ஜே மற்றும் அவரது ஆதரவாளர்களோடு கூட்டம் நடத்தி ஜாக்கின் பள்ளிவாசல்களை கைப்பற்ற வேண்டும் , ஜாக்கை அழிக்க வேண்டும் என்று திட்டம்தீட்டயவர்தான் தாங்கள் . மேலப்பாளையம் பள்ளிவாசலில் ஷம்சுல் லுஹா ஊழல் செய்ததை தாங்கள் நன்றாக அறிந்த பின்பும் ஜாக்கை அழிக்க வேண்டும் என்று சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்துக் கொண்டீர்கள். மேலப்பாளையம் ஜாக் நிர்வாகத்தின் பள்ளிவாசலை த. த . ஜவும் , ஷம்சுல் லுஹா ரஹ்மானியும் களவாடி வைத்திருப்பதற்கு தாங்களும் ஒரு காரணம் .

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.