நமது கேள்விக்கு பதில் தராத கூத்தாநல்லுாராரின் வேலுார் இப்ராஹீம் சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமா?



கட்டப்பஞ்சாயத்து செய்து காசடித்தவர்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பேட்டி கண்டு வீடியோவாக பரப்பினார்கள். அவர்களை விட மோசமானவரா இவர்கள் தலைவராக ஏற்று இருக்கும் உத்தம(?) தலைவர் லுஹா? அவரை பேட்டி கண்டு வீடியோ பண்ணி ஒளி பரப்ப என்ன தயக்கம்?

2017ல் வாட்ஸப் மூலம் நம்மிடம் வாதம் செய்தார் கூத்தாநல்லுார் ஜின்னா காகா. அவர்களிடம் அவர் தலைவராக ஏற்று இருக்கும் உத்தம புத்திரர்(?) லுஹாவிடம் கேட்டு பதில் தாருங்கள் என்றேன். 

M.I. சுலைமான், ஸனது வாங்காமலே பிர்தவ்ஸி என்று போட்டுத் திரியும் போலிகளான  M.S. சுலைமான், கடையநல்லுார் அப்துர்றஹ்மான், J.S. ரிபாஈ போன்ற தவ்ஹீது மவுலவிகளை தவ்ஹீது பெண்களுடன் சம்பந்தப்படுத்தி செக்ஸ் குற்றச்சாட்டுகளை கூறி லுஹா என்னிடம் அழுதாரா இல்லையா?

அந்நியவனின் மனைவியிடம் பொம்பளையைப் போன்று புர்கா போட்டுக் கொண்டு தவ்ஹீது மவுலவி இரவில் போய் சல்லாபியானான் என்று லுஹா சொன்னாரா இல்லையா

அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி மதுரை பெண்கள் மதரஸாவில் தப்பாக நடந்தாரா இல்லையா? இது போன்றும் இன்னும் லுஹாவின் பண மோசடி சம்பந்தமான  ஏராளமான கேள்விகளுக்கும் லுஹாவிடம் கேள்வி கேட்டு பதில் தாருங்கள் என்று பலரிடமும் கோரிக்கை வைத்தேன். ஜின்னா காகாவிடமும் சவாலாகச் சொன்னேன்.

கண்ட கண்ட கழிசடைகளிடமெல்லாம் பேட்டி கண்டு வெளியிடுவதைவிட உத்தம(?)  தலைவரை பேட்டி காண்பது  கஷ்டமான வேலையா?  ஜின்னா காகா போனில் கேட்டு பதிந்து அதை அப்படியே வெளியிட்டு. பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆ கேளுங்கள் என்று அறிக்கை விட்டால் போதும்.  

அதை அவர் செய்யவில்லை. ஆகவே நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாத சவாலை சந்திக்காத அவர்களின் கேள்விக்கு நாம்  பதில் சொல்ல வேண்டுமா? என்று கேட்டு டிரைனேஜ் லுஹா கூடாரத்தில் உள்ளவர்கள் மாதிரி நழுவ மாட்டேன்.


லுஹா மறுக்காதது, லுஹாவிடம் மறுப்பு கேட்டு வெளியிடாததன் மூலம் விபச்சார மவுலவிகளின் கூடாரத்துக்கும் பண மோசடி கூட்டத்துக்கும் தான் டிரைனேஜ் லுஹா தலைவராக உள்ளார் என்பது உறுதி ஆகி விட்டது. இவர்கள் விபச்சார எதிர்ப்பாளர்கள் அல்ல. பல கோடி சுருட்டல் மன்னர்கள் என்பது தெளிவாகி விட்டது.


வேலுார் இப்றாஹீம் நிலைபாடு சம்பந்தமாக நிறைய பேர் என்னிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒன்றும் கண்டு கொள்ளாதீர்கள் பதில் சொல்லாதீர்கள் என்பதும் பதில் சொல்லுங்கள் என்பதும்  நண்பர்கள் கருத்தாக உள்ளது. ஆகவே அமைதியாக இருந்தேன். ஜின்னா காகா கேள்வி கேட்ட பிறகு பதில் சொல்லியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.


வேலுார் இப்றாஹீம் நிலைபாடு விஷயத்தில். வரம்பு மீறியது வேலுார் இப்றாஹீமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். 

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன் என்று துஆச் செய்கிறேன்.

இது மாதிரி லுஹாவும் லுஹாவை தலைவராக ஏற்றுள்ளவர்களும் வரம்பு மீறி அநீதி இழைத்து இருந்தால். கடந்த ஆண்டு பொதுக்குழுவில் கள்ளக் கணக்கு காட்டி இருந்தால் அவர்கள் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன் என்று துஆ கேளுங்கள்.  

2002ல் லுஹா, M.I.சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட பல தவ்ஹீது மவுலிகள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறியது உண்மை என்றால் யா அல்லாஹ் லுஹா மீதும் லுஹாவை தலைவராக ஏற்றுள்ளவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று துஆ கேட்கச் சொல்லி அறிக்கை விடுங்கள் பார்ப்போம்.


அநீதி இழைத்தல் சம்பந்தமாக   ழாழிமூன்  என்று வரக்கூடிய 34 ஆயத்துக்களையும்  ழாலிமீன் என்று வரக்கூடிய 89 ஆயத்துக்களையும் யழ்லிமூன, தழ்லிமூன போன்று வரக் கூடிய 67 ஆயத்துக்களையும் இண்டக்ஸாக தொகுத்து வெளியிட்டுள்ளோம். அவற்றில் உள்ளபடி அநியாக்காரர்களுக்குரிய கூலியை அல்லாஹ் கொடுப்பானாக ஆமீன்..


வேலுார் இப்றாஹீம் என்றழைக்கப்படும் திருநெல்வேலி தென்காசிப் பகுதியைச் சார்ந்த வடகரை இப்றாஹீமை நான் தான் பீ.ஜே.பி. தலைவர்களை சந்திக்கச் சொன்னதாக கூறியுள்ளவர்களுக்குரிய பதிலை நாளை தருவோம். இன்ஷாஅல்லாஹ்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.