2 : 8 (அன்)னாஸி - மனிதர்கள், மன் - சிலர், யகூலு - கூறுவான் ,ஆமன்னா - நம்பினோம்

இதில் 2 : 8  வது வசனத்திற்குரிய சொல்லுக்கு சொல்லையும் இறுதியில் 9 மொழி பெயர்ப்புகளிலிருந்து   மொழி பெயர்ப்புகளை காண உள்ளீர்கள். அவற்றில் பில்லாஹி என்ற அரபி வார்த்தைக்கு   அல்லாஹ்வைக்  கொண்டும் என்றும் அல்லாஹ்வின்  மீதும்  என்றும் அல்லாஹ்வையும் என்றும் 


வ பில் யவ்மில்  ஆஃகிரி என்ற அரபி வார்த்தைக்கு  இறுதி நாளைக்  கொண்டும்  இறுதி  நாள்  மீதும், இறுதி நாளையும் என்றும்


வ மா ஹும் பி முஃமினீ(ன)ன் என்ற அரபி வார்த்தைக்கு மு.மின்கள் அல்லர் (பஷாரத்) விசுவாசங்கொண்டவர்களல்லர். நம்பிக்கை கொண்டோர் அல்லர்.  நம்புவோர் அல்லர் என்றும் மொழி பெயர்த்துள்ளதை அறியலாம். 
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/2-8_16.html


இவற்றை சிந்தித்து படிக்கும் போது பழைய தமிழ் எது? எளிய தமிழ் எது? நடைமுறைத் தமிழுக்கு பொருத்தமானது எது என்பதை புரிவீர்கள் இன்ஷாஅல்லாஹ். இனி வார்த்தைக்கு வார்த்தை




مِنَ - மின - இருந்து From –லிருந்து


النَّاسِ - (அன்)னாஸி -  மனிதர்கள்


مَنْ -   மன் -  சிலர்


يَقُولُ -யகூலு - கூறுவான் 



آمَنَّا - ஆமன்னா -    நாங்கள்  ஈமான்  கொண்டோம் - நம்பினோம்


بِ -   பி - கொண்டு  மீது - மீதும் -யும்  


اللَّـهِ -  (அ)ல்லாஹி-   அல்லாஹ்


بِاللّٰهِ -  பில்லாஹி - "அல்லாஹ்வையும்அல்லாஹ்வின் மீதும் - அல்லாஹ்வைக் கொண்டும், 


وَ -   இன்னும் 

بِ -  கொண்டு

الْيَوْمِ - ( அல் ) யவ்மி  - நாள்

الْآخِرِ - (அ)ல்  ஆஃகிரி  -  இறுதி -கடைசி 


وَ - இன்னும்


مَا -  மா- இல்லை


هُم - ஹும் -அவர்கள்


بِمُؤْمِنِينَ  -பி முஃமினீ(ன)ன்.- நம்பிக்கை கொண்டோர்- நம்புவோர்-விசுவாசங்கொண்டவர்

இப்பொழுது இணைத்து படிப்போம்

وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّـهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ 

வ  மினன் னாஸி மன் யகூலு ஆமன்னா  பில்லாஹி வ பில் யவ்மில்  ஆஃகிரி வ மா ஹும் பி முஃமினீ(ன)ன்.


2:8. "அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். ( பீ.ஜே.)

 2 : 8. இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும்இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (அன்வாறுல் குர்ஆன்)


2 : 8 இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வைக் கொண்டும்இறுதி நாளைக் கொண்டும் ஈமான் கொண்டோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்  (இம்தாதி).


2:8இன்னும் மனிதர்களில் நாங்கள் அல்லாஹ்வின் மீதும்இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். ( டாக்டர். முஹம்மது ஜான் )


2:8. (நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர். ( அப்துல் ஹமீது பாகவி)


2:8. இன்னும் அல்லாஹ்வையும் இறுதி(த் தீர்ப்பு) நாளையும் நம்பியிருக்கிறோம் எனக் கூறுவோர் சிலரும் மனிதர்களில் உளர். ஆயினும்அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.(IFT)


2:8. இன்னும், “அல்லாஹ்வையும்இறுதி நாளையும் விசுவாசங்கொண்டிருக்கிறோம் எனக் கூறுவோர் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்அவர்களோ விசுவாசங்கொண்டவர்களல்லர். ( மன்னர் ஃபஹத் வளாகம் )





2;8. மனிதர்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும்  நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோம். என்று (நாவளவில் மட்டும்) கூறுவோறும் உண்டு. அவர்கள் (உண்மையில்) மு.மின்கள் அல்லர் (பஷாரத்)

2:8 இன்னும் மனிதர்களில் சிலர் நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த்தீர்ப்பு)  நாள்  மீதும், நம்பிக்கை கொண்டுள்ளளோம் என்று (நாவினால்) கூறுகின்றனர்;  ஆனால் (உண்மையில் இதயத்தால்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்  (இஸ்லாமிய மலிவு பதிப்பு).

.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.