2:11. ல் வ இதா(ரா) என்று ஆரம்பமாவதால் இதா(ரா) போன்ற துணை வார்த்தைகள் பற்றி தெரிந்து கொள்வோம்


إِذَا – இதா(ரா)
لَوْலவ்
   اِنْ-இன்
ஆகிய  இந்த துணை  வார்த்தைகளை  மற்ற வார்த்தைகளுடன்  சேர்க்கும்போது  அவற்றை  நிபந்தனை  வார்த்தைகளாக  ஆக்கிவிடும், 

உதாரணம்
جَاءَ -  ஜாஃஅ 
வந்தான், வந்தது என்ற பொருள் கொண்ட இந்த வார்த்தையுடன்
 اِذاَ -இதா(ரா
வைச் சேர்த்து 

 اِذَا جَآءَ -இதா(ரா) ஜாஃஅ 

என்று  கூறினால்  வந்தால், வரும்போது  என்ற  நிபந்தனை  வார்த்தைகளாக ஆகிவிடும்,  இதுபோன்றே

 شَاءَ - ஷாஃஅ
நாடினான் என்ற பொருள் கொண்ட வார்த்தையுடன் 

إِذَا – இதா(ரா)
لَوْலவ்
   اِنْ-இன்

வைச் சேர்த்து

اِذاَ شَاءَ  
 اِنْ شَاءَ   
 لَوْ شَاءَ
என்று கூறினால் நாடினான் என்பது  நாடினால் என்று ஆகிவிடும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இனி 2:11 க்குரிய சொல்லுக்கு சொல் பார்ப்போம். மேலும் இதில் திருச்சி சமஸ்பிரான் பள்ளி இமாம் ஷபி தாவூதி அவர்களின் ஆக்கத்தையும் இணைத்துள்ளோம் கேட்டு பயன் பெறுங்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/211.html




وَ -   



اِذَا - தா(ரா - 

ல் -ட்டால்- போது - என்றால் (இது துணைச் சொல் - இடைச் சொல் என்பார்களே  அது போல் உள்ளது. தனித்து பொருள் தாராது) 


قِيْلَ -  ஃகீல

சொல்லப்பட்டது - கூறப்பட்டது 


إِذَا قِيلَ - இதா(ரா) ஃகீல

கூறப்படும்போது –கூறினால் – கூறப்பட்டால்- சொல்லப்பட்டால் - சொன்னால்


لَهُمْ-லஹும் 

அவர்களிடம்அவர்களுக்குஅவர்களை நோக்கி

لَا- லா

வேண்டாம் -

تُفْسِدُوا -துFப்ஸிதுா - 

குழப்பம் - விஷமம்

لَا تُفْسِدُوا லா துFப்ஸிதுா 

குழப்பம் செய்யாதீர்கள் - குழப்பம் விளைவிக்காதீர்!-  குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" - விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள்



 فِىْ الْ -Feபில் 
 ல் -அதில்


اَرْضِۙ- அர்ழி 

பூமி


قَالُوا- ஃகாலுா 


கூறுகின்றனர்கூறினார்கள்- சொல்கிறார்கள்.- கூறுகிறார்கள்.



إِنَّمَا- இன்னமா 

நிச்சயமாக - திண்ணமாக- உறுதியாக  (என்று உறுதி சொல்லும் இந்த வார்த்தைகளுக்கு இணையாக உறுதிபடுத்தும் இடைச் சொல் தாம், தான் என்ற பொருளும் உண்டு)


نَحْنُநஃஹ்னு

நாங்கள் 

مُصْلِحُونَ- முஸ்லிஹு(ன)ன்

சமாதான வாதிகள் -   சீர்திருத்தம் செய்வோரே சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் -

தனித்தனி வார்த்தைகாள பார்த்ததை வசனமாக படிப்போம்.

وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏ 

வஇதா(ரா) ஃகீல லஹும் லா துFப்ஸிதுா Feபில் அர்ழி ஃகாலுா இன்னமா நஹ்னு முஸ்லிஹு(ன)ன்.  


تُفْسِدُوا -துFப்ஸிதுா - 

(பஸாது) என்பதற்கு எத்தனை பேர் குழப்பம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். எத்தனை பேர் விஷமம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். 

مُصْلِحُونَ- முஸ்லிஹு(ன)ன்
என்பதற்கு எத்தனை பேர் சமாதானம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். எத்தனை பேர்  சீர்திருத்தம்  என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்று சிந்தித்து படியுங்கள். 


2:11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர். (பீ.ஜே.)

2:11. பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். (டாக்டர். முஹம்மது ஜான்)

2:11. பூமியில் நீங்கள் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகளே என்று அவர்கள் (பதில்) சொல்கிறார்கள். (மலிவு பதிப்பு)

2:11. அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால்அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள். (அப்துல் ஹமீது பாகவி )

"பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள். (அன்வாருல் குர்ஆன் & இம்தாதி)

2:11. மேலும்பூமியில் நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால்  அவர்கள் நாங்கள் தான் சீர்திருத்தவாதிகள் என்று கூறுகின்றனர். (பஷாரத்)

2:11. மேலும்அவர்களிடம், “நீங்கள் பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று கூறப்பட்டால் அ(தற்க)வர்கள் நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோர் தாம் (குழப்பவாதிகளல்ல,)” எனக்கூறுகிறார்கள். (மன்னர் ஃபஹத் வளாகம்)

2:11. இன்னும் பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே! என அவர்கள் கூறுகிறார்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்)


2:11 துFப்ஸிதுா என்பதற்கு விஷமம்  என்று  (அப்துல் ஹமீது பாகவி ) உமர் ஷரீப் ஆகியவர்கள் மொழி பெயர்ப்பு உள்ளது குழப்பம் என்பது  PJ மொழி பெயர்ப்பு

 

2:11  முஸ்லிஹு()ன் என்பதற்கு சமாதானம் (செய்வோரே) என்று அப்துல் ஹமீது பாகவி,  ஜான், மலிவு பதிப்பு,  திரீயெம், அன்வாருல் குர்ஆன் , இம்தாதி  ஆகியவர்கள் மொழி பெயர்ப்பு உள்ளது

 சீர்திருத்தம் செய்வோரே''  இது PJ மொழி பெயர்ப்பு



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.