2:10. மரழுன்- நோய், பஸா(FAZA)த - மிகுதியாக்கி, ல - க்கு , ஃஅதா(ரா)புன் -வேதனை

பீ (Fee) -  ல்.  பீ என்றால் இருக்கிறது என்றும் மாபீ என்றால் இருக்கவில்லை - இல்லை என்ற பொருளும் உண்டு. அதுதான் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இது போன்ற எழுத்துக்களை இடைச் சொல் - இணைப்புச் சொல் என்பார்கள்.  இது போன்றவை  இடம் பெறும் இடத்திற்கு  தக்கவாறு  பொருளும்  உச்சரிப்பும்  மாறும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எதுவெல்லாம்  இடைச்  சொற்கள்? அவை எப்படியெல்லாம் பொருள் தரும் என்பதை எழுதிக் கொண்டிருந்தால் படிக்க போரடிக்கும். ஆகவே இடை இடையே பார்ப்போம்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/210-faza.html

فى فِ பீ (Fee) -  ல். 

قُلُوبِ

ஃகுலுாபி இதயங்கள் – உள்ளங்கள் - நெஞ்சங்கள்

هِمْ - 
ஹிம் - அவர்களது – அவர்களின் – அவர்களுடைய

مَّرَضٌ - 
மரழுன்- நோய்

فَزَادَ -
பஸா(FAZA)த - மிகுதியாக்கி - அதிகமாக்கி - அதிகப்படுத்தி -

هُمُ 
ஹுமு - அவர்களுக்கு

 اللّٰهُ- ல்லாஹு

 مَرَضًا - 
மரழ(ன்)ா  -நோயை

وَ -     

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  



لَல - க்கு



هُمْ -அவர்கள்


(لَهُمْ  
லஹும்- அவர்களுக்கு)

عَذَابٌ - 
ஃஅதா(ரா)புன் -வேதனை -கொடிய தண்டனை


أَلِيمٌ

அலீ(முன்)ம் - நோவினை தரக்கூடியது- துன்புறுத்தும் - துன்பந்தரும் -கடுமையான - கொடுமையான வலி தரக்கூடிய

بِمَا 
பிமா - ஏனெனில், காரணத்தினால்

كَانُوا
கானுா-  ஆகிவிட்டார்கள் -இருந்ததால்-  -

يَكْذِبُونَ -
யக்தி(ரி)பூன்(ன)- பொய்சொல்கிறார்கள்



இனி சொற்களை இணைத்து ஓதுவோம்


فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏


பீ(Fee) ஃகுலுாபிஹிம்  மரழுன்   பஸா(FAZA)த ஹுமுல்லாஹு மரழ(ன்)  வலஹும் ஃஅதா(ரா)புன் அலீ(முன்)ம் பிமா கானுா யக்தி(ரி)பூன்(ன)

 ஓதும் போது கடைசி எழுத்து மறுவும். யக்தி(ரி)பூன  என்பது யக்தி(ரி)பூன்   என முடியும். இது மாதிரி மறுவும் எழுத்துக்களை அடைப்புக் குறிகளுக்குள் இடம் பெறச் செய்துள்ளோம்

ஒரே  வார்த்தைக்கு  ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ் வார்த்தையை உபயோகித்து உள்ளார்கள்.

ஒரு நோயுள்ளது என்று அன்வாறுல் குர்ஆன், இம்தாதிஜான்மலிவு பதிப்பு ஆகிய நான்கிலும் ஒரு என்ற வார்த்தை இல்லாமல் பாகவி பீ.ஜே, IFT, சவூதி, பஷாரத் ஆகிய ஐந்திலும் உள்ளது. வித்தியாசங்களை சிந்தித்து ஆய்வுடன் படியுங்கள்


2:10. (ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. (அதன் காரணமாக) அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு. (பாகவி)



அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (அன்வாறுல் குர்ஆன்)



அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை  அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும்  காரணத்தினால் அவர்களுக்குத் நோவினை தரும் வேதனையும் உண்டு. (இம்தாதி)


2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளதுஅல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (ஜான்)


2:10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(பீ.ஜே)


2:10. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் (இந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டான். மேலும் அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்குண்டு. (IFT)



2:10. அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம்சந்தேகம் ஆகிய) நோயுள்ளது. அகவே, (அந்)நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்திவிட்டான். மேலும்அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.  (சவூதி)


  2:10. அவர்களது உள்ளங்களில் (பொறாமை என்றும்) நோய் உள்ளது ஆகவே,  அல்லாஹ் (அந்)நோயை அவர்களுக்கு மேலும் மிகுதியாக்கி விட்டான். மேலும் அவர்கள்  பொய் கூறிக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவர்களுக்குத் நோவினை தரும் வேதனையுமுண்டு.(பஷாரத்)

அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம் என்னும்) ஒரு நோயுள்ளதுஅல்லாஹ் அந்த நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்மேலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டிருப்தின் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (மலிவு பதிப்பு)





மிகுதியாக்கி - அதிகமாக்கி - அதிகப்படுத்தி 

இதயங்களில் – உள்ளங்களில் - நெஞ்சங்களில்


நோய் இருக்கிறது. -  நோயுள்ளது, (இதில் ஒரு நோயுள்ளது என்று 


பொய் சொல்வதனால்

பொய்சொல்லும் காரணத்தினால் 

பொய் சொல்வோராக இருந்ததால் 

பொய்யுரைத்துக் கொண்டிருந்த

பொய் சொல்லிக்கொண்டிருந்ததன்

பொய் சொல்லிக் கொண்டிருப்தின்

துன்பந்தரும்

துன்புறுத்தும்
நோவினை தரும்


கொடிய தண்டனையும்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.