உங்கள் வீட்டு ராஜா ராணி யார்? நீங்களா? உங்கள் பெற்றோரா? ஊருக்கு ஒத்தது உதுமான் லெப்பைக்கும் என்று உங்களால் இருக்க முடிகிறதா?


இதய நாட்டு இளவரசி என்று மனைவியை கணவனும் இதய நாட்டு இளவரசன் என்று கணவனை மனைவியும் புகழ்வார்கள். ராஜா ராணி என்பது இளவரசன், இளவரசி என்பதைவிட உயர்ந்த பதவி தான். இருந்தாலும் வயது மூப்பைக் காட்டும் என்பதால் இளவரசி இளவரசன் என்றே ஒருவரை ஒருவர் ஏமாற்றி காரியம் சாதித்துக் கொள்வார்கள்.

ராஜா ராணி ஆட்சி இருந்த இடத்தில் இன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வரோ பிரதமரோ வருகிறார் என்றால். இதோ வருகிறார் இன்ன இடத்தில்  வருகிறார் சாப்பிடுகிறார். துாங்குகிறார் என்று ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் மேலிடத்துக்கு லைவு பண்ணிக் கொண்டே இருப்பார்கள்.  

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டு ராஜா ராணி பற்றி லைவு செய்து கொண்டேதான் இருக்கிறீர்கள். முதல்வர் பிரதமர்களை விட அதிகமாக. லைவு செய்கிறீர்கள். அமைச்சர்கள் பாத் ரூம் போனது பற்றியெல்லாம் லைவு செய்ய மாட்டார்கள்.

உங்கள் வீட்டு ராஜா ராணி பற்றிய லைவு  எந்த அளவுக்கு இருக்கிறது?நம்ம ராஜா மோண்டு விட்டார். நம்ம   ராணி பேண்டு விட்டாள். கட்டியாகவா? தண்ணி மாதிரியா? சாம்பார் மாதிரியா? உச்சா போனார்களா? அச்சா போனார்களா? துாக்கமா? விழிப்பா? சிரிக்கிறார்களா? இப்படி அணு அணுவாக லைவு பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

மந்திரிகளுக்கு செய்யும் லைவு அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளன்போடு செய்கின்ற சேவை அல்ல. வாங்கும் சம்பளத்திற்காக செய்கின்ற வேலை.

உங்கள் வீட்டு ராஜா ராணிக்காக நீங்கள் செய்யும் லைவு உள்ளன்போடும் உளத் துாய்மையோடும் எவ்வித எதிர் பார்ப்பும் இன்றி செய்கின்ற சேவை.

நமக்கு பிள்ளை பிறக்கப் போகிறது என்றதும் மனைவியை ஏ.ஸி. ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறான். பிரதமர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மணலில் படுத்து காத்து கிடந்த அதிகாரிகள் கூட மனதால் நொந்து இருக்கலாம். 

பிறக்கப் போகிற பிள்ளையை எதிர் பார்த்து ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்து கிடந்தானே தந்தை அவன் மனம் நொந்து இருக்க மாட்டான். அதுவே அவனுக்கு சுகம்தான். நினைத்து நினைத்து பார்க்கும் வாழ்நாள் மகிழ்ச்சி தான் அது.

பிறந்த பிறகு பிள்ளை விஷயத்தில் பெற்றோர் எப்படியெல்லாம் லைவு பண்ணுவார்கள் என்பதைத்தான் முதலில் பார்த்தோம். 

வீட்டுக்கு ராஜா ராணியாக உள்ள கணவன் மனைவி ஒருவரை ஒருவர் என் செல்லம் என் கண்ணுஎன் ஈரக்குலை என்பதெல்லாம் கூட ஒரு வித எதிர்பார்ப்பு தான் என்றால் மறுப்பதற்கு இல்லை.

பிள்ளையைப் பார்த்து என் ராஜா என் செல்லம் என் கண்ணுஎன் ஈரக்குலை என்று புகழ்வது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது.

கர்ப்பம் ஆகும் முன்பு ஆயிரம் வேண்டல்கள். கர்ப்பம் ஆன  பிறகும் வளரும் வரை இன்பங்களை இழத்தல் பொருளாதாரத்தை செலவிடுதல் என்று அவர்கள் செய்யும் ஆயிரம் ஆயிரம் தியாகங்களை எழுதி முடியாது.

பிள்ளை நடக்க ஆரம்பித்து விட்டது என்றால் சிறிய குச்சி கூட பிள்ளை நடக்கும் வழியில் கிடக்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இப்படி கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் பெற்றோர்கள் எங்கே? ஆழ்துளை போர் போட்டு மூடாமல் வைத்து இருப்பவர்கள் எங்கே?

ஊருக்கு ஒத்தது உதுமான் லெப்பைக்கும் என்று உங்களால் எப்படி இருக்க முடிகிறது? அடுத்த வீட்டுக்காரனின் அல்லது அக்கம் பக்கத்து வீட்டுக்காரனின் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து இறந்து இருந்தால். என்ன நடந்து இருக்கும்.  

அந்த அடுத்த வீட்டுக்காரனை அல்லது அக்கம் பக்கத்து வீட்டுக்காரனை குழந்தையின் உறவுக்காரர்கள் கொன்று இருக்க மாட்டார்கள்? ஊரே திரண்டு உண்டு இல்லை என்று ஆக்கி இருக்க மாட்டார்கள்?

கடந்த பத்து ஆண்டுகளாக செத்த பத்து பிள்ளைகளும் பெற்றோர் தோண்டிய குழியில்தான் வீழ்ந்து இறந்துள்ளார்கள். சுர்ஜிதை மீட்டு தா யா அல்லாஹ் என்று இக்லாஸுடன் துஆச் செய்தவர்களே!

குழந்தைகள் குழிகளில் வீழ்ந்து சாகக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமா? அல்லது அடுத்தவன் குழி என்றால் அவன் தண்டிக்கப்பட வேண்டும். பெற்றோர் தோண்டிய குழி என்றால் பண முடிப்பு பரிசு கொடுத்து ஊக்குவிக்க வேண்டுமா? எது இஸ்லாம்?

இயக்கத்துக் காரர்களாக பதில் சொல்லாதீர்கள். இஸ்லாமியனாக  பதில் தாருங்கள். மறுமையில் இது பற்றியும் விசாரிக்கப்படுவோம்.


يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏
 ‏

இது போல் ஒரே விஷயத்தைக் கொண்டு  பலரை வழிகேட்டில் விட்டு  வழிகெடும்படியும் செய்து வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; இதைக் கொண்டு பலரை நல்வழிப் படுத்தி நேர்வழி பெறும்படியும் செய்து நேர்வழியும் காட்டுகின்றான். கீழ்ப்படியாத குற்றம் புரியும் தீயவர்களான பாவிகளைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.