ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதிகாரனின் சதி.

கருணாநிதி, வை.கோ. சங்கராச்சாரியார் போன்றவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிப் படைத்த  ஜெயலலிதா அவர்களின் போலீஸ். ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் மட்டும் பி.ஜே.யிடம்  ஆதாரம் கொடுத்ததாம் நம்புங்கள்.

கம்பம் ஜபருல்லாஹ் அவர்களே தங்களைப் போன்ற உள்ளூர் முஸ்லிம்களை கொலை செய்ய கூலிப்படையை ஏவி விட்டவர். வட நாட்டில் உள்ளவர்  கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டி நீலிக் கண்ணீர் வடிப்பது பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். பக்ரி பற்றி பாக்கியுள்ளதை படியுங்கள் புரிவீர்கள்.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களில் யாராவது போலீஸாரால் கைது செய்யப்பட்டால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் உடனேயே, அவன் தீவிரவாதி அவனுக்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு இருக்கிறது. அந்த முஸ்லிம் அமைப்பை தடை செய்ய வேண்டும்  என்று ராமகோபாலன், ஸ்ரீதரன், இல.கணேசன் போன்றவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். இப்படி அடிக்கடி அறிக்கை வெளியிடக் கூடிய அவர்கள் ஹாமித் பக்ரி கைது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. 


அது போல்  தொலைக் காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் போன்ற மீடியாக்களும்  அரசும் மற்றும் அரசு அதிகாரிகளும் முஸ்லிம்களில் யார்  கைது செய்யப் பட்டாலும். அவர் எந்த முஸ்லிம் அமைப்புக்கும் சம்பந்தமில்லாதவராக இருந்தாலும்  இவர் தீவிரவாத முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர் என்று முஸ்லிம் அமைப்புகளில் ஏதாவது ஒரு அமைப்பை சம்பந்தப்படுத்தி குறிப்பிடத் தவற மாட்டார்கள். 

குற்றாலத்தில் கூடியதாக கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள். மவுலவி அப்துர் றஹ்மான் ஷிப்லி தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். ஹாமித் பக்ரி தவ்ஹீது ஜமாஅத் தலைவராக இருந்து மேலாண்மைக்குழு உறுப்பினராக ஆகி இருந்தார். அப்படி இருந்தும் தவ்ஹீது ஜமாஅத் என்ற வார்த்தை தப்பித் தவறிக் கூட எங்கிருந்தும் வராமல் பில்டர் பண்ணப் பட்டிருந்தது.  செக்ஸ் ஆடியோ பற்றிய செய்தியை வெளியிடாமல் இருக்கச் செய்த மாதிரி. 

முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட  செய்திகளை  பரபரப்பான தலைப்பாக ஆக்குவது. கூடுதல் பக்கங்களுடன் கூடுதல் பிரதிகளை அச்சிட்டு சிறப்பிதழாக வெளியிட்டு விற்பது. பி.ஜே. ஆசிரியராக வேலை செய்யும்  ”உணர்வு” வார இதழின் தொழில். அது பக்ரி கைது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. பத்திரிக்கை தர்மத்தின் அடிப்படையில், ஹாமித் பக்ரி கைது செய்யப் பட்டார் என்பதை பெட்டி செய்தியாகக் கூட வெளியிடவில்லை.

இதுவும் 08.12.2002 அன்று காயல் ஐக்கிய ஜமாஅத்தாரிடம் பி.ஜே. சொன்னவைகளும். பக்ரியின் கைதுக்குப் பின்னால் இந்த சதிகாரனின் சதிச் செயல் உள்ளது என்பதற்கு ஆதாரம் என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்தார்கள். 

08.12.2002 அன்று காயல் ஐக்கிய ஜமாஅத்தாரிடம் பி.ஜே. மேலும் சொன்னதைப் பாருங்கள். ”இந்த நாட்டுச் சட்டத்திற்கு எதிர்ப்பாக பக்ரி செயல் பட்டு வந்தார். இப்படி செயல் படக் கூடியவர்களை போலீஸ் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தது. பக்ரியின் அனைத்து செயல்களுக்கும் போலீஸ் எங்களிடம் ஆதாரம் தந்து விட்டது. எங்களிடம் தந்து உள்ள ஆதாரப்படி 17 பேர்களை போலீஸ் கைது செய்யும் என்று பி.ஜே. கூறி உள்ளார். ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதிகாரனின் சதிச் செயல் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

1996-2001 தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவை கைது செய்தபொழுது அதற்குரிய ஆதாரத்தை போலீஸ் கொடுக்கவில்லை. 2001 அ.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியை, வை.கோ.வைக் கைது செய்த போலீஸ் அதற்கு உரிய ஆதாரத்தை  கொடுக்கவில்லை.   

இப்படி மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பீடத்தில் இருந்தவர்களிடம்  உரிய ஆதாரத்தை கொடுக்காத போலீஸ், கருணாநிதி, வை.கோ. சங்கராச்சாரியார் போன்றவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிப் படைத்த  ஜெயலலிதாவின் போலீஸ். ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் மட்டும் பி.ஜே.யிடம்  ஆதாரம் கொடுத்ததாம். ஆதாரம் கொடுத்து  விட்டுத்தான் கைது செய்ததாம். இதை யார் நம்புவார்கள்? எந்த மடையனாவது நம்புவானா? இந்த கூற்றில் இருந்து என்ன நடந்துள்ளது? இவர் யார்? என்பதை புரிய இது போதாதா? 


பி.ஜே, அலாவுதீன், ஷம்சுல் லுஹா, அவர் தம்பி காஜா பிர்தவ்ஸி, சுலைமான்கள் போன்ற அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்களும் யு.ஏ.இ.ல் மண்டலத்தின் பெயரால் பதவி பெற்ற பதவி வெறியர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஹாமித் பக்ரி தீவிரவாதிதான் என்று பிரச்சாரம் செய்தார்கள். 

அதனால்தான்  இந்து முன்னணி, பி.ஜே.பி. ஆர். எஸ்.எஸ். காரர்களெல்லாம் தங்கள் பணி எளிதாகி விட்டது என்பதால் பக்ரி இருந்த பி.ஜே. கட்சியை தடை செய்ய வேண்டும் என்று  சொல்லாமல் இருந்தார்கள்.. 

ஸைபுல்லாஹ் ஹாஜாவுடன் இஸ்லாமிய கல்விச் சங்க வசூல் வகைக்காக பக்ரி துபைக்குச் சென்றார்.  ஸைபுல்லாஹ் இல்லாமல் நிறைய பேர்களை அவர் தனிமையில் சந்தித்துள்ளார். இப்படி சந்தித்தவர்கள் எங்களிடம் சொல்லி உள்ளார்கள். என்று பி.ஜே. கூறி உள்ளார்.  தனிமையில் சந்திக்கப் பட்டவர்கள் ரகசிய ஆட்கள் என்றால், அவர்கள் பி.ஜே. அணியிடம் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கும் ரகசிய ஆட்களுக்கும் என்ன தொடர்பு? அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள்.

3 மாதத்திற்கு முன்பே அனைத்து இயக்கங்களில் இருந்தும் அவரை நாங்கள் நீக்கி விட்டோம் என்று பி.ஜே. கூறி உள்ளார். அவராகத்தானே ராஜினாமா செய்தார் அது எப்படி நீக்கியதாக ஆகும் என்று மதுரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தவ்ஹீது ஜமாஅத் பிரமுகர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பி.ஜே, ”நாங்கள் சொல்லித்தான் அவர் ராஜினாமா செய்தார். எங்களுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள்தான் ராஜினாமா செய்ய வைத்தோம்” என்று பி.ஜே. கூறி உள்ளார். இதுவும் உண்மையாக இருக்கும் என்றால், தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கூடுதல் அதிகாரம் உடைய மேலாண்மைக் குழு எனும் உயர் பதவிக்கு ஹாமித் பக்ரியை தேர்ந்து எடுத்தது எப்படி?
.
எந்தப் பைத்தியக் காரணாவது தேடப்படக் கூடிய தீவிரவாதியின் சகோதரியை திருமணம் செய்வானா? இவர் செய்துள்ளார். அப்பவே இவரை போலீஸ் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டது என்று பி.ஜே. சொல்லி உள்ளார். 

நீங்கள்தான் திருமணம் செய்து வைத்துள்ளதாக சொல்கிறார்களே என்று சபையில் உள்ளவர்; கேட்டுள்ளனர். அதற்கு, அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க ஆனால் எனக்கு அவர் திருமணம் செய்ததது தெரியாது. மவுலவி ஜே.எஸ். ரிபாஈ சொல்லித்தான் எனக்குத் தெரியும் என்று பி.ஜே.கூறி உள்ளார்.


”இருக்கிற நிறுவனங்களுக்கே உஸ்தாதாக்கள் பற்றாக் குறையாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் பிரச்சனை ஏற்பட்டு விட்டதால் மேடத்திற்காக (அதாவது இமாம் அலியின் சகோதரிக்காக) மதுரையில் பெண்கள் கல்லூரி துவங்கச் செய்து நான் என்ற அகம்பாவத்தைக் காட்டினார் பி.ஜே”  இப்படி ஷம்சுல் லுஹா துபை வந்தபோது என்னிடம் கூறியது குறிப்பிடத் தக்கது.


08.12.2002 அன்று காயல் ஐக்கிய ஜமாஅத்தாரிடம் பி.ஜே. சொன்னது, 2002 ஜனவரியில் இமாம் அலி சகோதரி பற்றி லுஹா சொன்னது உட்பட எதையும்
அவதூறு என்று மறுப்பவர்கள் வெறுமனே சத்தியம் செய்து மறுக்கக் கூடாது. அவர்கள் மறுப்பது பொய்யாக இருந்தால் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று கூறி மறுக்க வேண்டும். வெறுமனே மறுத்தார்கள் என்றால் அவர்கள் பொய்யர்கள் என்று விளங்கிக் கொள்ளுங்கள். 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.