அவதூறு பரப்புவது யார் ? அன்று நாகூர் மர்க்கஸ் இன்று கம்பம் மர்க்கஸ்

கம்பம் மர்க்கஸ் அடமானத்தில் உள்ளது என்பது இன்றைய குற்றச்சாட்டு. இது ததஜவுக்கு புதுசா? சகஜமான ஒன்றுதான். 

அன்று நாகூர் மாலுமியார் தெரு தவ்ஹீத் மஸ்ஜித் சம்பந்தமாக அடமானமா? வாடகையா?  என்ற தலைப்பில் முபாஹலா சவால்  வந்திருந்தது. 

இன்று கம்பம் ஜபருல்லாஹ் சவால் வந்துள்ளது. 

இதுபோக வட்டி மூலம் வரும் வருவாயைக் கொண்டு பள்ளிக்கு செலவு செய்யப்படும் என்று பை லா உடைய பள்ளியும் உண்டு. சரி இப்பொழுது  அவதூறு பரப்புவது யார் ? என்ற தலைப்பில் வந்துள்ள பதிலைப் பார்ப்போம். 


அவதூறு பரப்புவது யார் ?
""""""""""""""""""""""""""""""''""""""""""
கம்பம் ஜஃபருல்லாஹ் தனது சொந்த பெயரில், தனது புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணுடன் முகநூல் கணக்கை துவங்கி கடந்த 17 மாதங்களாக , பல செய்திகளை பதிவு செய்துவருகிறார்.

அவருடைய பதிவுகளில் , அவருடைய பெயரையும், தொலைபேசி எண்ணையும் எப்போதும் பதிவு செய்வது வழக்கம். இவ்வாறு வெளிப்படையாக செயல்படும் ஒருவரைப்பற்றி, மற்றொருவர் முகநூலிலோ, வாட்ஸ்அப்பிலோ குற்றம் சாட்டுகிறார் என்றால்,  அந்த யோக்கியர்,
ததஜ.வை சேர்ந்த அந்த யோக்கியர், தன் பெயரையும், தொலைபேசி எண்ணையும் பதிவு செய்யவேண்டும்.

ஆனால்,  ஊர், பேர் இல்லாத ஒரு டவ்கீத் மொட்டைக்கடுதாசி? ஒரு ஏஏஏகத்துவோம் மொட்டைக்கடுதாசியில் ? ஜஃபருல்லாஹ்வை பற்றி குற்றம் சாட்டுகிறார் என்றால் யார் அவதூறு செய்கிறார்கள் என  நீதியுடன் சிந்திக்கும் சாதாரண அறிவு உள்ளவர்களால் கூட புரிந்து கொள்ள முடியும். அத்தகைய ஒரு மொட்டை கடுதாசியை இங்கு பதிவு செய்கிறேன். உண்மையான இறையச்சம் உள்ள ததஜ.வினர் சற்று சிந்திப்பார்களேயானால், இத்தகைய போலியான குற்றச்சாட்டை கூறி, அவர்களை ஏமாற்ற முயற்சி செய்வது யார் என  ததஜ.தலைமையிடம் விளக்கம் கேட்கவேண்டும். அப்படி கேட்டால், இந்த டவ்கீத் மொட்டை கடுதாசிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறுவார்கள்.


ஆனால், கடந்த காலங்களில் ததஜ.வி்ல் நடந்த உள்விவகாரங்கள் இந்த மொட்டை கடுதாசியில் எப்படி வெளிவந்தது என மீண்டும் கேட்பார்களேயானால்... எச்ச ராஜா பாணியில் இயக்க விரோதி,
பெண் குற்றச்சாட்டு, பொருளாதார குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய மொட்டைகடுதாசிகள் தான் ததஜ.வின் ஏஏஏகத்துவோம் கொள்கையை , உலகெங்கும் பரப்புவதாக, நபிவழியில் நடப்பதாக மார்தட்டுபவர்களின் செயலா என உண்மையான இறையச்சமும், நபிவழி நடப்பவர்களும் இன்ஷாஅல்லாஹ் புரிந்து கொள்வார்கள்.

இந்த ஏஏஏகத்துவோம் மொட்டை கடுதாசியில் உள்ள குற்றச்சாட்டுகளை பார்ப்போம். இந்த மொட்டை கடுதாசி வாட்ஸ்அப்பில் படித்ததாக ஒரு சகோதரர் அனுப்பி விளக்கம் கேட்டார். இதில், ஜஃபருல்லாஹ் மட்டுமன்றி ஜெஹபர் சாதிக் என்பவரை பற்றியும் குற்றச்சாட்டு உள்ளது. அவரைப்பற்றி கம்பத்தில் உள்ள சகோதரர்களிடம் விசாரித்து, அவர் உத்தம்பாளையத்தை சேர்ந்தவர் என அறிந்து அவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றிய விபரம் அறிந்தேன்.


கம்பத்தை அடுத்த புதுக்குடியை சேர்ந்த என துவங்குகிறது இந்த மொட்டைக்கடுதாசி  ஜஃபருல்லாஹ்வை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அலசுகிறார்களாம் ! அவர் கம்பத்தை சேர்ந்தவர் அல்ல, புதுக்குடியை சேர்ந்தவர் எனவே கம்பத்துக்காரர்களே... அவரை ஆதரிக்காதீர்கள் என ஏஏஏகத்துவோம் பாணியில் குழப்பம் செய்து ஊரை பிளவு செய்ய ஹிக்மத்தாக துவங்கப்பட்டுள்ளது ,  இந்த 'நொண்டி' மொட்டைக்கடுதாசி! இதிலும் இந்த மொட்டைகடுதாசி தவறான தகவலையே கூறுகிறது. புதுப்பட்டி என்பது தான் அவருடைய ஊர்.

ஜஃபருல்லாஹ் , கம்பம் ததஜ மர்கஸ் வங்கியில் அடகு வைக்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியது உண்மை. இது குறித்து நானும் அவரை, அப்போதே தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டேன்.

அதற்கு அவர் ஆதாரம் உள்ளது என உறுதியாக கூறினார். இது குறித்து முகநூலில் பலர் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்துள்ளார், அதை Screen Shot எடுத்து இங்கு பதிவு செய்துள்ளேன். ஜஸபருல்லாஹ் நேரடியாக, மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிரூபிப்பேன், அப்படி நிரூபிக்க இயலவில்லை என்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயார் என சவால் விட்டுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது ?

அடகுவைக்கவில்லை என்றால், அவரை ஊர் ஜமாஅத்தினர், மக்கள் முன் இஸ்லாமிய அடிப்படையில், நபிவழியில், மார்க்க அடிப்படையில்  கேள்வி கேட்கலாமே. இடத்தின் பத்திரம்,வில்லங்க சான்று ஆகியவற்றை காட்டி , அப்போதே அவரை மன்னிப்பு கேட்கவைத்திருக்கலாம். ஏஏஏகத்துவோம் அடிப்படையில் அவரை ஏன்  கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்.

மக்கள் முன் பஞ்சாயத்து பேசுவதை விட, மக்கள் முன் கொலை செய்வது தான் நபிவழியா?  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கமா ! எந்த முகத்துடன் இனி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என பிரச்சாரம் செய்வீர்கள். உண்மையான முகத்துடன் தான் டவ்கீத் கொள்கையை பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை, யோக்கியன் முகமூடியை போட்டுக்கொள்ளலாம் என்றால் அது நபிவழியா ? நாசகார வழியா ?

"இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஜஃபருல்லாஹ்வை கத்தியால் குத்திவிட்டதாக பல கள்ள ஐடிக்களும், சில அயோக்கியர்களும்  முகநூலில் பதிவு வெளியிட்டிருந்தார்கள்" என குறிப்பிட்டுள்ளனர். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ததஜவினர் கொலை செய்ய முயலவில்லயாம்...கத்தியால் தான் குத்தினார்களாம் ! ஏஏஏகத்துவோம் அகராதியில் இதுவும் ஹிக்மத் தான். ஏனென்றால், இப்போது புதிதாக... "உனக்கு வந்தால் இரத்தம், எனக்கு வந்தால் தக்காளி சட்னியா " என்ற டைலாக்கை  "எனக்கு வந்தால் இரத்தம்  உனக்கு வந்தால் சிவப்பு இங்க்" என இனிய சகோதரத்துவ தத்துவத்தை தற்போது  அறிமுகம் செய்துள்ளனர். 

அது போல ஜஃபருல்லாஹ்வை கத்தியால் குத்தியது அவருக்கு இருந்த நோயை குணப்படுத்த கொள்கை சகோதரர்கள் செய்த ஆபரேஷன் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. !

அடுத்த அந்த ஏஏஏகத்துவ மொட்டைகடுதாசியில்,  " ரூ70 லட்சம் விற்க கூடிய சூழல் இருந்தும் 28 லட்சத்திற்கு , அதுவும் 20 லட்சத்தை எப்போது முடியுமோ அப்போது தந்தாலே போதும் " என்று பஷீர் கூறியுள்ளதால்  அவரால் பொருளாதார ஆதாயம் இருப்பதால்,  அவர் வங்கியில் அடகு வைத்ததை மறைத்து , ததஜ. தலைமை அவரை காப்பாற்றுவதாக ஜெஹபர் சாதிக் கூறுகிறார்.

"ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றை கட்டி  இறைப்பானா " என ஓர் பழமொழி உண்டு. பொருளாதார உதவி வழங்கும் பஷீர் மர்கஸை வட்டிக்கு அடகுவைத்தால் என்ன, வட்டியே வாங்கினால் என்ன என்ற  'நவீன  டவ்கீத்' கொள்கையை அறிவிக்கப்படலாம்!

அடுத்து, ஜெஹபர் சாதிக்கும் மற்றும் 7 கொள்கை சகோதரர்களும் இணைந்து  வேறு பல மிக மோசமான குற்றச்சாட்டுகளையும் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். ( இவர்களில் ஒருவர் மீண்டும் ததஜ.வில் இணைந்துள்ளார்) கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை போல... சில சகோதரர்கள் ( ததஜ.வினர் உட்பட) இந்த மொட்டை கடுதாசிக்கு என்னிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்க, நான் கம்பத்தை தொடர்பு கொள்ள,  மேலும் பல குற்றச்சாட்டுகள் வெளிவருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் ததஜ.விலிருந்து இவர்கள் வெளிவதந்த பின் கூறிய குற்றச்சாட்டுகள் அல்ல,

நபிவழி நடக்கும் தலைமை நீதி வழங்கும் என்ற ஏக்கத்தில் எழுதியவை. ஆனால், நிதி இருந்தால் தான் நீதி என்பதை அறிந்து ஏமாற்றம் கொண்டதால் அவர்கள் ததஜ.விலிருந்து வெளியேறியதாக கூறினார். அது பற்றிய விபரம் அறிய விரும்புபவர்கள் உத்தம பாளையம் ஜெஹபர் சாதிக்கை தொடர்பு கொண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.

ஜெஹபர் சாதிக் பற்றி , மொட்டைக்கடுதாசி கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், சத்தியம் செய்யத்தயார் என்றும், இதை கூறியவர்,  பரப்பியவர், அல்லது ததஜ. நிர்வாகிகள் சத்தியம் செய்யத்தயாரா என சவால் விடுகிறார். இவற்றை தவிர , இந்த மொட்டைகடுதாசியில்  ஜஃபருல்லாஹ் பற்றி சில அவதூறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவை பல ஆண்டுகளாக முகநூலில் சுற்றும் விஷயங்கள், அத்தகைய குற்றச்சாட்டுகளை முகநூலுக்கு வந்து 17 மாதங்களே ஆன 'குழந்தையின்' மீது பலி சுமத்துவது அபாண்டமானது.  இது குறித்து மருத்துவமனையில் உள்ள ஜஃபருல்லாஹ்வை தொடர்பு கொண்டு பேசிய போது , அவர் மீது கூறும் எந்த குற்றச்சாட்டு கூறினாலும், குற்றம் சாட்டுபவர்கள், சொந்த பெயரில் ,  தொலைபேசி எண், முகவரி குறிப்பிட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறத்தயாரா என பகிரங்க சவால் விட்டுள்ளார்.

டவ்கீத் சமாத்தில்  உள்ள சத்தியவான்கள் கம்பம் சென்று ததஜ. மர்கஸ் பற்றிய உண்மைகளை இன்ஷாஅல்லாஹ் வெளிப்படுத்தலாம். அதை விட்டு கள்ளக்கடிதம் , மொட்டைக்கடுதாசி எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளது. ஏனெனில், இந்த பிரச்சினை பூதாகரமாகி இத்தனை நாட்கள் ஆன பிறகும் ததஜ. தலைமை இது பற்றி ஏன் மவுன விரதத்தில் உள்ளது. 

ஒரு கொலை விழும் நிலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன? உண்மையான தவ்ஹீத் சகோதரர்கள் ஏன் அமைதிகாக்க வேண்டும். ஜஃபருல்லாஹ் தவறு செய்திருந்தாலும் அவர் மன்னிப்பு கேட்க தயார் என கூறிய பின்பு எந்த மாநில நிர்வாகியும் வாய் திறக்காததன் மர்மம் என்ன ?

அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது கூட மொட்டைகடுதாசியில் துஆ செய்வது தான் நவீன நபிவழியா !

ஒரு சொல்
""""""'''''''''''''''''''''''''''
நான் பிஜெ மீது பல குற்றச்சாட்டுகளை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியுள்ளேன். ஆனால்,  கம்பம் மர்கஸ் விஷயத்தில் எனக்கு நேரடி தொடர்பு ஏதும் இல்லாததால்  உண்மையை அறியும் நோக்குடன், சில ததஜ. சகோதரர்கள் உட்பட பல வெளிநாடு வாழ் சகோதரர்களும் என்னிடம் விளக்கம் கேட்டதன் அடிப்படையிலும், அநீதி இழைக்கப்பட்ட சகோதரர். ஜஃபருல்லாஹ்வால் தற்போது விளக்கம் கூற இயலாத நிலையில், அவரை பற்றி அவதூறு செய்வதை மறுக்கும் நோக்கிலும் இப்பதிவு செய்துள்ளேன்.

பெயர் தொலைபேசி எண்ணுடன் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தால் விளக்கம் கேட்க வாய்ப்பும்,  இதில் உள்ள செய்திகளின் நம்பகத்தன்மையும் வெளிப்பட்டிருக்கும். ஆதாரத்திற்கே... ஆஆஆதாரம் ! கேட்கும் தவ்ஹீத் தங்கங்கள் இந்த மொட்டை கடுதாசிக்கெல்லாம் ஆதாரம் கேட்கமாட்டார்களா ! நாமும் கூறுவோம்... அல்லாஹூ அக்பர் !
""""""""""""""""""""""""""""""""""--------------------------------------------------------------------------------------------------------------------
அஹ்மது கபீரின் 
டவ்கீத் மொட்டைக்கடுதாசி !
""""""""""""''''"""""""""""""""""""""""""""""""

*✍கம்பத்தை அடுத்த புதுக்குடியை சேர்ந்த ஜபருல்லாஹ் என்பவரை தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கத்தியால் குத்தி விட்டார்கள் என்று முகநூலில் செய்திகளை காண முடிந்தது.*

கம்பத்திலுள்ள தவ்ஹீத் பள்ளிவாசலின் பத்திரம் பஷீர் என்பவரிடம் இருப்பதாகவும் பஷீர் அந்த பத்திரத்தை வங்கியில் வட்டிக்கு அடைமானம் வைத்துள்ளதாகவும், இதனை ஜபருல்லாஹ் அம்பலப்படுத்தியதாகவும், இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஜபருல்லாஹ்வை கத்தியால் குத்திவிட்டதாக பல கள்ள ஐடிக்களும், சில அயோக்கியர்களும் முகநூலில் பதிவு வெளியிட்டிருந்தனர்.

யார் அந்த பஷீர் ? அதன் உண்மைநிலை என்ன ?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேனி மாவட்ட செயலாளரான பஷீர் தம்முடைய தோட்டத்தை விற்று அந்த பணத்தில் ரூ 28 லட்சத்துக்கு ஒரு வீட்டை விலை கொடுத்து வாங்குகிறார். 

அந்த வீடு அவருடைய பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்படுகிறது.

கம்பத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல் அமைக்க இடம் தேவைப்பட்டதால் பஷீர் அந்த வீட்டை தவ்ஹீத் பள்ளிவாசலாக பயன்டுத்திக்கொள்ளுமாறும், தவ்ஹீத் ஜமாஅத் அவரிடம் ரூ 28 லட்சத்தை கொடுக்கும்பட்சத்தில் அந்த வீட்டை அவர் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ரிஜிஸ்டர் செய்து தருவதாக ஒப்பந்தம் போடப்படுகிறது.

இதுவரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ 8 லட்சம் வசூலித்து கொடுக்கப்பட்டுள்ளது. ரூ 20 லட்சம் கொடுக்க வேண்டியது உள்ளது.

அப்படியிருந்தும் அந்த வீடு இன்றும் தவ்ஹீத் பள்ளிவாசலாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது . 

அந்த வீட்டை இப்போது வெளியில் விற்பதாக  இருந்தால் ரூ 70 லட்சத்துக்கு விற்க கூடிய சூழல் இருந்தும், இரட்டிப்பு மடங்கு லாபம் பெரும் சூழல் இருந்தும் அவ்வாறு வெளியில் விற்காமல் தவ்ஹீத் ஜமாஅத்தால் எப்போது மீதமுள்ள ரூ 20 லட்சத்தை வசூலித்து தர முடியுமோ அப்போது தந்தாலே போதும் என்று பஷீர் கூறியுள்ளார்.

அந்த அளவுக்கு சிறப்பான மனிதரான பஷீரை கேவலப்படுத்தும் விதமாக பஷீர் பத்திரத்தை வட்டிக்கு அடைமானம் வைத்துள்ளதாக அவதூறு பரப்பியுள்ளார்கள். 

முன்னதாக TNTJ விலிருந்து வெளியேறிய ஜகுபர் சாதிக் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு ஒரு புகார் கடிதம் எழுதி அந்த கடிதத்தில்... பத்திரத்தை பஷீர் அடைமானம் வைத்துள்ளதாக புகார் கூறியுள்ளார். அதற்கான ஆதாரம் அவரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புகாரின்பேரில் நேரடியாக வருகை தந்த மாநில நிர்வாகிகள் இருவரையும் அழைத்துள்ளனர். ஜகுபர் சாதிக்கால் அதற்கான ஆதாரத்தை கொடுக்க முடியாததால் பஞ்சாயத்திற்கு வராமல் ஒளிந்துள்ளார். பஷீரிடம் பத்திரத்தை கொண்டு வாருங்கள் என்றவுடன் பஷீர் பத்திரத்தையும், அதற்கான டாக்குமெண்டையும் மாநில நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார்.

இதன்மூலம் ஜகுபர் சாதிக் சொன்னது பொய் என்பது அப்போதே நிரூபணம் ஆகியுள்ளது. 

அந்த பொய்யையே கம்பம் ஜபருல்லாஹ்வும் வாந்தி எடுத்து அல்லாஹ்வுடைய பள்ளிவாசலின் புனிதம் கெட்டாலும் பரவாயில்லை என்று வட்டிக்கு அடைமானம் வைத்துள்ளதாக அவதூறு பரப்பியுள்ளார்.

அதுமட்டுமல்ல...   

ஜபருல்லாஹ்வும் சில அயோக்கியர்களும் இணைந்து 100 க்கும் மேற்பட்ட கள்ள ஐடிக்களில் பீஜேவுடைய மனைவியின் போட்டோவை இழிவாக எழுதி மூன்று ஆண்டுகளாக பரப்பியுள்ளனர்.

முத்துப்பேட்டை தவ்ஹீத்  ஜமாஅத்தை சேர்ந்த ஒருவரின் தாயாரை போட்டோ எடுத்து இழிவாக எழுதி பரப்பியுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்ட போட்டோக்களை வெளியிட்டு போராட்டத்தில் பங்கேற்கும் பெண்களை இழிவாக எழுதி பரப்பியுள்ளனர்.

அஹமது கபீர் ஐடியை தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் பயன்டுத்துவதாக அவரையும், அவரது குடும்பத்தாரையும் இழிவாக எழுதி பரப்பியுள்ளனர்.

பீஜே ஒரு பெண்ணுடன் போனில் ஆபாசமாக பேசுவதாக போலி ஆடியோ தயாரித்து பரப்பியுள்ளனர்.

இந்த கள்ளக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்திருக்கிறார் ஜபருல்லாஹ். 

மேலும் ஜபருல்லாஹ் எழுதும்போது தவ்ஹீத் ஜமாஅத்தினரை பார்த்து நீ உன் அப்பனுக்குத்தான் பிறந்தாயா ?
உன் அம்மாவுக்கு எத்தனை புருஷன் ? என்று மிக கேவலமாக எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட கேவலமான மனிதரான ஜபருல்லாஹ் முஸ்லிம் சமுதாயத்தின் சாபக்கேடாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைச்சேரியில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்தவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார் என்று அவதூறு பரப்பி தவ்ஹீத் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் ஒன்றிணைந்து அரசுக்கு மனு கொடுத்தனர்.

மனுவை குப்பையில் வீசிய அதிகாரிகள் சுட்டு கொன்றவர் தவ்ஹீத் ஜமாஅத் இல்லை, சுட்டவரும் சுன்னத் ஜமாஅத், சுடப்பட்டவர்களும் சுன்னத் ஜமாஅத் என்று கூறினர்.

தவ்ஹீத் ஜமாஅத் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் அவசரப்பட்டு பரப்பாமல் உண்மையை ஆய்வு செய்து பின்னர் பரப்புங்கள்.

*அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் மீது அவதூறு பரப்பிய ஜபருல்லாஹ் மீது அல்லாஹ் சாபத்தை இறக்குவானாக.*

http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_5.html 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.