பு.கோ.து.த.அவர்களே! பொய்கள் பஸ்லு பிளாக்கரில் உள்ளதா? ஆன் லைன் பி.ஜேயில் உள்ளதா?

புதுக்கோட்டை மாவட்ட ததஜ முன்னாள் செயலாளரும், தற்போதைய துணைத் தலைவருமான குலாம் முஹம்மது பாதுஷா அவர்களே!  பஸ்லுல் இலாஹி வாந்தி எடுத்ததை என்று பேசி உள்ள உங்கள் ஆடியோ கேட்டேன்.


பஸ்லு பிளாக்கரில் உள்ளதைத்தான் எடுத்து போட்டு உள்ளீர்கள் என்று பேசி உள்ளீர்கள். எனது பிளாக்கரில் உள்ளதெல்லாம் பொய் என்பது போல் உங்கள் பேச்சு உள்ளது. எனது பிளாக்கரை நீங்கள் பொய்ப்படுத்தினால் பொய்யர்களாக ஆவது ததஜவினரும் பி.ஜே.யும்தான். http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_29.html


காரணம், தங்களைப் போன்ற ததஜவினர் பெருமையாகவும் தங்களின் சாதனையாகவும் அனுப்பியவைகளைத்தான் பதிலாக ஆக்கி. இது ததஜவை பெருமைபடுத்தவில்லை சிறுமைப்படுத்துகிறது. இது சாதனை அல்ல  வேதனை.  ததஜவினருக்கு ஏற்பட்டுள்ள சோதனை என நிரூபித்து வருகிறோம்.

1980களிலிருந்து நான் சம்பளமே வாங்கவில்லை என்று பி.ஜே. பேசிய வீடியோ எனது பிளாக்கரில் உள்ளது. அந்த வீடியோவை ததஜவினர்தான் எல்லாருக்கும் பெருமையாக அனுப்பி இருந்தார்கள். அது ஆன் லைன் பி.ஜே.யிலிருந்தான் எடுத்து அனுப்பி உள்ளார்கள்.


1986லேயே பி.ஜே.யின் 20 நாள் வேலைக்கு  1000 ரூபாய் சம்பளம் என்ற ஆதாரம் வெெளியிட்டோம எந்த லுஹா பி.ஜே. மேடைகளில் பேசி விட்டு பணம் வாங்கினார். ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கினார் என்று கணக்கு எழுதினாரோ. http://mdfazlulilahi.blogspot.ae/2017/11/blog-post_24.html  அதே லுஹாவின் கைப்பட எழுதப்பட்ட பி.ஜே.யின் ஒப்புதல் கையெழுத்துடன் கூடிய எழுத்து ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/1980.html

ததஜ வைத்திருக்கும் கொடி IJP யினர் வைத்திருந்த கொடிதான் என்பதற்கு  IJPயின் நோட்டீஸ், பில்புக், லட்டர் பேடு ஆதாரங்கள் வெளியிட்டிருந்தேன். இந்த உண்மைகளுக்கு நேர் மாற்றமான ததஜ தலைமையின்  பொய்யான செய்தியையும் போட்டிருந்தேன். அந்த பொய்யான செய்தி வந்த பத்திரிக்கையின் பெயர் உணர்வு. 2005 மார்ச் 4-10 இதழில் வந்தது என்பதையும் போட்டோ ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தேன்

ஆடியோ கேஸட்டை ஆய்வுக்கு அனுப்ப தயாரா? என்று பி.ஜே. சவால் விட்ட வீடியோ வெளியிட்டிருந்தேன். https://www.youtube.com/watch?v=mssRqpqlsCw அதுவும் ஆன் லைன் பி.ஜே.ல்தான் உள்ளது. அந்த வீடியோவை ஸைபுத்தீன் ரஷாதி அவர்களுக்கு எதிராக அனுப்பி பெருமைபட்டவர்கள் யார்? அதே வீடியோ மூலம் சிறுமைபட்டு நிற்பவர்கள் யார்?  

ஜனாஸா சம்பந்தமான கேள்விக்கு பி.ஜே. த.மு,மு.க.வின் அமைப்பாளராக இருந்தபொழுது சொன்ன விளக்கத்தை பதிலாக அனுப்பி இருந்தேன். https://www.youtube.com/watch?v=WFQYCyThIdg  தவ்ஹீது அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கிறது?  அதுவும் ஆன் லைன் பி.ஜே.யிலிருந்தான் எடுத்து போட்டு உள்ளேன்.

பணம் வாங்கவில்லை என்று பி.ஜே. சொல்வது பொய்யா? பி.ஜே. பணம் வாங்கினார் என்றுள்ள லுஹா கணக்கு பொய்யா? என்பதற்கு லுஹா எழுதியுள்ள கணக்கு ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன்.


பி.ஜே. ஆதரவாளர்கள் செய்த சத்தியங்கள், பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று சொன்னது யார்? நாம் சொல்லவில்லை. இந்த மாதிரி நிறைய வீடியோக்கள் என் பிளாக்கரில்  வெளியிட்டுள்ளேன்.  அத்தனையும் ஆன் லைன் பி.ஜே.யிலிருந்தான் எடுத்து போட்டுள்ளவைதான். 

Nilalkal Nijangal நிழல்கள் நிஜங்கள்  இதிலும் உள்ள வீடியோ ஆடியோக்களுக்கு ஆதாரம் ஆன் லைன் பி.ஜே.தான். புதுக்கோட்டை ததஜ துணைத் தலைவர் அவர்களே! இப்பொழுது சொல்லுங்கள் பொய்கள் பஸ்லு பிளாக்கரில் உள்ளதா? ஆன் லைன் பி.ஜேயில் உள்ளதா? இவையெல்லாம் பொய் என்று நீங்கள் சொன்னால்பொய்யராக ஆவது உங்கள் தலைவர் பி.ஜே.யும் ததஜவினரும் தான்.    

மேலும்  சுனாமி திருடர்கள் யார்? என்று கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விக்கு உணர்வு பத்திரிக்கை ஆதாரத்துடன் பதில் அனுப்பி இருந்தேன்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர்வழி பெற்றோரையும்அறிந்தவன். 16:125.  என்று  அல்லாஹ் சொல்லி உள்ளான் ஆகவே விவாதத்திற்கு வாருங்கள் என்றார்கள் தங்களைப் போன்ற சகோதரர்கள்.


அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்லி உள்ள  விவாதம் எதற்கு?  விபச்சாரம், கள்ளக் கணக்கு, கொடுக்கல் வாங்கள் போன்ற  குற்றச்சாட்டுகளுக்கா?



மஸாயில் (கொள்கைப்)பிரச்சனைகளில்கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதற்கு காரணம் அது அறிவு, ஆய்வு சார்ந்த விஷயம். புரிந்து கொள்வதில், விளங்குவதில், விளக்குவதில் உள்ள பிரச்சனை. இதைத்தான் விவாதிக்க 16:125.   வசனம் விவாதிக்கச் சொல்கிறது.


பி.ஜே. முன் தேதியிட்டு கள்ளக் கடிதம் கொடுத்தார் என்று நான் குற்றச்சாட்டுக் கூறினால் அது புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சனை அல்ல. ஆதாரம் சம்பந்தமான பிரச்சனை. ஆகவே   குற்றச்சாட்டுக் கூறுபவர் ஆதாரத்தை தர வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர் அதை மறுக்க வேண்டும். இதுதான் மார்க்கம். 

இதைவிட்டு விட்டு, ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்றால் அது மார்க்கமா?  தனது வாதத் திறமையையும் மற்றவர்களின் மறதியையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ள திமிர்தான்.

ததஜவினர் விவாதத்தில் மன்னர்கள் வார்த்தை விளையாட்டை பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. நாம் அவர்களை விவாதத்திற்கு அழைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கமும் இல்லை .குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தான் வேண்டும். என்பதை மிகத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.

  
தனது சுய நலத்திற்காக ஒருவர் மீதோ ஒரு ஜமாஅத்தினர் - அமைப்பினர் மீதோ அநியாயமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும். அது சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவடால் விட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதும் பி.ஜே.யின் வாடிக்கை. 
  

நாம் உணர்வில் வந்ததையே ஆதாரமாக வெளியிட்டிருந்தோம். அன்றைய ததஜவினரோ மக்களை ஏமாற்ற உணர்வில் வந்ததாக உள்ளது அல்லாஹ்வின் மீது ஆணையாக  கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றார்கள். இந்த மாதிரி ஏமாற்று வார்த்தைகளால் தான் ததஜவினரே நீங்கள் பொய் சத்தியம் செய்வீர்கள்.  இது கட்டிங் வெட்டிங் ஒட்டிங் என்பது அல்ல பிரச்சனை. இது உணர்வில் வந்ததா? இல்லையா? இது ததஜவின் கணக்கா இல்லையா, என்பதுதான்.



ஆகவே அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உணர்வில் வந்த கணக்கு அல்ல. ததஜ வெளியிட்ட கணக்கு அல்ல என்று சத்தியம் செய்யுங்கள் என்றோம். சத்தியவான்கள்(?) சத்தியம் செய்யவில்லை. அல்லது 2006 மார்ச் 17-23  உணர்வு இதழை ததஜவினரே ஸ்கேன் பண்ணி வெளியிடுங்கள் என்றோம். இதுவரை எந்த ததஜவும் வெளியிடவில்லை. 


பஸ்லுல் இலாஹி வாந்தி எடுத்ததை என்றுபேசி உள்ள சகோதரரே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உணர்வில் வந்த கணக்கு அல்ல. ததஜ வெளியிட்ட கணக்கு அல்ல. நான் சொல்வது பொய்யாக இருக்குமானால் அல்லாஹ்வின் சாபம் குலாம் முஹம்மது பாதுஷா  ஆகிய என் மீது இறங்கட்டும் என்று சத்தியம் செய்து மறுங்கள்.. அல்லது 2006 மார்ச் 17-23  உணர்வு இதழை ஸ்கேன் பண்ணி வெளியிட்டு என்னை பொய்யராக ஆக்குங்கள். அடுத்த சப்ஜக்ட்டுக்கு போவோம். நீங்கள் சொல்லி உள்ள மாதிரி என் மீதான விஷயத்திற்கு வருவோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.