கொடி தூக்கும் கழகமல்ல என்றவர்களே உங்களுக்கு மூவர்ணக் கொடி எதற்க்கு மூக்கு துடைக்கவா…?

கொள்கைக்கு கொடி எதற்கு கோவணம் கட்டவா…?

ஒவ்வொரு ஊரிலும் கொடிகள் பறக்கின்றன. அந்தக் கொடிகள் இந்த ஊரில் இன்ன இன்னவர்கள் இருக்கிறார்கள் என்று  பறைசாற்றி அவரவர்கள்  கொடிகள்    பறக்கின்றன.  பொய்யர்கள் இருக்கிறார்கள் என்று பறை சாற்றி பறக்கும்  கொடி எது? என்றால்  ஒரே பதில் அது ததஜ கொடிஎன்பதுதான். 




பி.ஜே.யும் அவரது அணியினரும் பொய்யர்கள் என்பதை உணர்வு, ஏகத்துவம் மற்றும் அவர்களது உரைகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை அவற்றின் ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகின்றோம். அது போல் அவர்களது  கொடியும்  ததஜவினர்  பொய்யர்கள் பொய்யர்கள் பொய்யர்கள் என்று பறை சாற்றி பறந்து கொண்டிருக்கிறது. அதற்குரிய ஆதாரம் இதோ. 

TNTJ கொடி முடிவு செய்யப்பட்டது என்ற தலைப்பில் 2005 மார்ச் 4-10, உணர்வு 3 ஆம் பக்கம் கட்டம் கட்டி போட்டிருந்த செய்தியை முதலில் படியுங்கள். அது அவர்களை பொய்யர்கள் என்று சான்று அளிக்கும்



நுாற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களின் எண்ணங்களை வண்ணங்களாக்கியும் அவற்றுக்கு வடிவம்  தந்தும் தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு சில அளவுகோல் வைக்கப்பட்டது.  இந்த (4)அளவுகோலை வைத்து உறுப்பினர்கள் தயாரித்து அனுப்பிய மாதிரிகளில் கீழ் கண்டவாறு கொடி முடிவெடுக்கப்பட்டது. இப்படி பல பில்டப்களுடன் பொய்களை வஞ்சகமில்லாமல் எழுதி உள்ளார்கள்.


இது முடிவெடுக்கப்பட்ட கொடி அல்ல. உணர்வு, முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட்கள் எப்படி த.மு.மு.க.விலிருந்து களவாடப்பட்டதோ, அதுபோல் இந்தக் கொடியும் களவாடப்பட்ட கொடியாகும். இதற்கும் ஆதாரம் இதோ.


இது IJP - இஸ்லாமிய ஜனநாயக பேரவை என்ற அமைப்பின் கொடியாகும். அதற்கு ஆதாரமாக 2000ல் போடப்பட்ட ஐ.ஜே.பி. நோட்டீஸ், மற்றும் பில் புக் ஆதாரங்களைத் தந்துள்ளோம். இதைப் பார்க்கும் நீங்கள் சொல்லுங்கள். இது ஆய்வு செய்து தயாரித்த கொடியா? அபகரித்த கொடியா?

இவர்கள் பொய்யர்களா? இல்லையா? நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.   IJP- இஸ்லாமிய ஜனநாயக பேரவை என்ற அமைப்பின் கொடியை களவாடி போட்டு விட்டு. உறுப்பினர்கள் தயாரித்து அனுப்பிய மாதிரிகளில் கீழ் கண்டவாறு கொடி முடிவெடுக்கப்பட்டது என்பவர்களின் கொடி எதைப் பறைசாற்றி பறக்கும். பொய்யர்கள் என்று பறைசாற்றித்தானே பறக்கும்  பொய்யர்களின் மானம் கொடி கட்டிப் பறக்கிறது. 

சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது 2005 மார்ச்சில் என்று முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். அதில் கொடி பற்றி நாம் எழுதியுள்ளது பொய் என்று சொன்னவர்களுக்காக இந்தப் பதிவு.



இந்தக் கொடி அறிவிக்கப்பட்ட பிறகு 25.3.05 அன்று டி.என்.டி.ஜே. மாநில கூட்டம் கூடுவதாக இருந்தது. கொடி காக்க இருந்த குமரர்களுக்கும் கொடி வேண்டாம் என்றிருந்த கிழவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கூட்டம் நடத்த வேண்டாம் என ஒத்தி வைத்து விட்டார் ராஜ தந்திரி பி.ஜே. 

தவ்ஹீதை சொல்ல கொடி எதற்கு? அந்நஜாத் ஆரம்பித்த போது கொடியுடன்தான் ஆரம்பித்தோமா? தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா என போட்டி அமைப்பு ஆரம்பித்தோமே அதற்கு கொடி இருந்ததா? ஆக் (A.Q.H.) என ஆரம்பித்து அதை ஜாக் (J.A.Q.H.) என மாற்றப்பட்ட போதும் கொடி அறிவிக்கப்பட்டதா? தவ்ஹீது பிரச்சாரக் குழு, இஸ்லாமிய கல்விச் சங்கம், அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு என்றெல்லாம் ஆரம்பித்து செயல்பட்டோமே அப்பொழுதெல்லாம் அறிவிக்கப்படாத கொடி இப்பொழுது எதற்கு



இப்படி கொள்கை(?)ச் சிங்கங்கள் ஜும்ஆக்களில் கர்ஜித்தார்கள். பொங்கி எழுந்து  ஜும்ஆக்களில் கர்ஜித்தவர்களுக்கும் சும்மா நின்று கர்ஜித்தவர்களுக்கும் தனித் தனியாக அழைப்பு வந்தது. ஒவ்வொருவரையாக கூப்பிட்டு தனித்தனியாக மிரட்டினார். அவ்வளவு பேரும் ஆடிப் போய் விட்டார்கள்

பிழைப்பு போய் விடும் பேரம் பேசி வேண்டியதைக் கேள் கொடுக்கப்படும். அல்லது ஜும்ஆக்களில் பேசிய மவுலவி கமருஸ்ஸமான், பழனி பாபா போன்றோருக்கு பத்வா கொடுத்த மாதிரி பத்வா கொடுக்கப்படும். 

பிறகு என்ன சரண் அடைவதுதான் கதி என சரண் அடைந்து விட்டார்கள். அண்ணன் கொடுத்த விளக்கத்தில் தெளிவு(?) அடைந்து கொடி தேவை என புரிந்து விட்டோம் என்று கூறி விட்டார்கள். பொங்கி எழுந்த மாவீரர்களில் ஒருவர் கூட மிஞ்சவில்லை அத்தனை வீரர்களும் மண்டியிட்டு பி.ஜே.யிடம் தாழ் பணிந்தார்கள். புரிந்து கொள்ளுங்கள் செக்ஸ் ஆடியோவுக்கு எதிராக ஜும்ஆவில் கர்ஜித்தவர்கள் நாடி அடங்கி  ஒடுங்கிப் போனதற்கு காரணம் இதே வழி முறைதான்.

கொடி தூக்கும் கழகமல்ல, மாறாக கொள்கை காக்கும் கூடாரம் என எழுதி மை காய்வதற்குள் வேறு ஒரு அமைப்பின் கொடியை காப்பியடித்து தன்னுடையதாக அறிவித்த பின் கொடி தூக்கி காவடி எடுத்து அலைய வைத்தது அண்ணன் காட்டிய வழி. 

26.02.2005 அன்று தலைமை நிர்வாகக் குழுவில் வைத்து பரிசீலனை செய்து முடிவு செய்தவர்கள் முடிவு. இவர்களை  எங்கே போய் உட்கார வைத்தது? அருந்ததியர்கள் கூட்டங்களில் போய் உட்கார வைத்தது.


கூர்ந்து பார்க்காத பல கொள்கை குன்றுகள். அரைக் கால் டவுசருடன் நின்றவர்களிடமெல்லாம் போய் ஸலாம் சொன்னது. ததஜ கொடி தலை கீழாகப் பறந்தால். அது அருந்ததியர் கொடி.

பிற கட்சி அல்லது அமைப்புகளின் கொடியிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்று பில்டப் செய்தவர்கள் லட்சணம் இதுதான். முத்துப்பேட்டை அலீம் அவர்களின் கீழ் காணும் கவிதையும் ததஜ கொடி பற்றிய புகழ்ந்துள்ளது.



கொடி தூக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் கூடாரம்…
மூவர்ணக் கொடி எதற்க்கு மூக்கு துடைக்கவா…?
கொள்கைக்கு கொடி எதற்கு கோவணம் கட்டவா…?
மூன்று நாள் கெடு எதர்க்கு முகம் மறந்து போகவா…?
ஆதாரத்தால் அடைந்துவிட்ட சேதாரத்தை பாருங்கள்
ஆட்டு மந்தை போல நீயும் அறிவிழந்து போனதேன்…?
ஆட்டிவைக்கு அண்ணனுக்கு அடிமையாய் வாழ்வதேன்…?
சத்தியத்தை கண்டபின்னும் புத்திமாறி அழைவதேன்…?
சதிகளையே விதிகளாக ஏற்று நீயும் அழிவதேன்…?
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_19.html 

Comments

டேய் நாய்களா வெட்டிடுவேன் நாய்களா
என்ன கலர் ஏழு வண்ணமா 20,000 வண்ணமா
கருப்பு உழைப்பின் வண்ணம் டா
வெள்ளைக் கலர் சமூகத்திற்கு வெளிச்சம் கொண்டு வருவதற்காக குறிக்கும் டா
பச்சை கலர் நாங்கள் செய்யும் விவசாயம் தோல் தொழிலை குறிக்கும் டா

பள்ளர் கவுண்டர் கொடி பாத்திருக்கியா தலைகீழாக தான் இருக்கும்

அசிங்கமா பேசுற வெச்சுகாதே

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.