சுனாமி நிவாரணப் பணியாளர்களர்கள் என்ற போர்வையில் கொள்ளையடித்த சுனாமி கொள்ளையர்கள் யார்?

சுனாமி கணக்குகளை காட்டத் தயாரா? என்று தமுமுகவுக்கு சவால் விட்டார் பீ. ஜெய்னுலாப்தீன் என்பவர். அந்த சவாலை ஏற்று பீ.ஜெய்னுலாப்தீன் என்பவர்  சொன்ன தேதியில் கணக்கை சமர்ப்பித்தது த.மு.மு.க.

பி.ஜே. விடுத்த சவால்படி சபைக்கு வரத் தெம்பு இல்லாத, திராணி இல்லாத பி.ஜே. செய்த ஹீலாக்களை 20.12.05ல்    டிரஸ்டு திருடர்களை திடுக்கிட வைத்த டிசம்பர் 10  என்ற தலைப்பில்  வெளியிட்டுள்ளோம்.

அதில் டிசம்பர் 10 அன்று ஏர்வாடி சிராஜ் அவர்களுடன் பிறை சம்பந்தமான விவாதம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம் எனவே டிசம்பர் 10 அன்று த.மு.மு.க. அறிவித்துள்ள இடத்திற்கு பி.ஜே. வர முடியாது  என்பது போன்று ததஜவினர் செய்த தில்லுகளைக் காணலாம்.

வரவு, செலவு  என அனைத்து கணக்குகளையும் பத்திரிகையாளர் சோலை, ஐஏஎஸ் அதிகாரி கருப்பன், உயர்நீதிமன்ற வக்கீல் சிராஜுதீன், காயிதே மில்லத் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான் ஆகியோரின் முன்னிலையில் 10-12-2005 அன்று பொது மக்களிடத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். 

ஆனால், சவால் விட்ட பீ. ஜெய்னுலாபிதீனோ நாட்களை மட்டுமல்ல பல மாதங்களையும் கடத்தினார். பிறகு முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்கள் உள்ளடங்கிய கூட்டத்தில் சமர்ப்பித்ததாகக் கூறினார்.

அதன் பிறகு 2006 மார்ச் 17-23  உணர்வில் அதனை வெளியிட்டார். அதிலும் பிழை 1, 2, 3 என்று போய்க் கொண்டே இருக்கிறது. அதேபோல் தவறு 1, தவறு 2, தவறு 3, தவறு 4 என தொடர்................ந்து தவறு 12ல் முடிகிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மக்கள் உரிமையில் தெரிவித்தபடி 68 லட்சம் ரூபாய்க்கு வரவு, செலவு விபரங்களை தெளிவாகப் பட்டியலிட்டது. 

ஆனால் பீ. ஜெய்னுலாபிதீனோ பொதுக்கூட்ட மேடைகளில் சுமார் 1 கோடி ரூபாயை சுனாமி நிதி வசூலித்ததாக பீற்றிக் கொண்டார். ஆயினும் உணர்வில் 83 லட்ச ரூபாய்க்கு வரவு காட்டினார். கடைசியில் 8 லட்சத்துக்கு கள்ளக் கணக்கு காட்டி, 75 லட்ச ரூபாய் மட்டும் வரவு என்று கூறினார். இது ஒரு புறமிருக்க, செலவு விபரங்களைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.    

இப்படியாக கள்ளக் கணக்கு நீண்டுக் கொண்டே போகிறது . இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா? இனியும் இவர்களை நம்பி ஏமாறப் போகிறீர்களா?  சிந்திப்பீர்! செயல்படுவீர்! என்று எழுதி இருந்தோம்.

குறிப்பிட்ட பத்திரிக்கையில் வந்தது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அதன் பெயரை வெட்டி ஒட்டுவது நடைமுறையில் உள்ளதுதான். எனவே அது பொய்யாக ஆகாது. 

அன்றைய  ததஜவினரோ மக்களை ஏமாற்ற உணர்வில் வந்ததாக உள்ளது அல்லாஹ்வின் மீது ஆணையாக  கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றார்கள். இந்த மாதிரி ஏமாற்று வார்த்தைகளால் தான் ததஜவினரே நீங்கள் சத்தியம் செய்வீர்கள்.  இது கட்டிங் வெட்டிங் ஒட்டிங் என்பது அல்ல பிரச்சனை. இது உணர்வில் வந்ததா? இல்லையா? இது ததஜவின் கணக்கா இல்லையா, என்பதுதான்.

ஆகவே அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உணர்வில் வந்த கணக்கு அல்ல. ததஜ வெளியிட்ட கணக்கு அல்ல என்று சத்தியம் செய்யுங்கள் என்றோம். சத்தியவான்கள்(?) சத்தியம் செய்யவில்லை.

அல்லது 2006 மார்ச் 17-23  உணர்வு இதழை ததஜவினரே ஸ்கேன் பண்ணி வெளியிடுங்கள் என்றோம். இதுவரை எந்த ததஜவும் வெளியிடவில்லை. அதே மாதிரிதான் கீழே உள்ள வெளியீட்டை கண்ட பின் இன்றைய ததஜவினரும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அதே சவால்தான். 
.

அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உணர்வில் வந்த கணக்கு அல்ல. ததஜ வெளியிட்ட கணக்கு அல்ல என்று சத்தியம் செய்யுங்கள். அல்லது 2006 மார்ச் 17-23  உணர்வு இதழை ததஜவினரே நீங்களே ஸ்கேன் பண்ணி வெளியிடுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

சமீப நாட்களாக சுனாமி திருடர்கள், சுனாமி திருடர்கள் என்று ஒரு திருட்டுக் கூட்டம் பிதற்றிக் கொண்டு திரிகிறது. 

அதாவது திருவிழாவில் திருடிய திருடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருடன் திருடன் ‍என்று கத்திக் கொண்டு போவது போல் திருட்டுக் கூட்டம் அடுத்தவர்களைப் பார்த்து திருடன் என்று கூறுகிறது.

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

கடற்கரையே இல்லாதா வேலூர் மாவட்டத்திற்கு கணக்கு எழுதியவர்கள் இவர்கள் இதோ ஆதாரங்கள்.




மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகள்.

சுனாமியின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும் அதிலிருந்து எதையும் அவர்கள் தொட்டதில்லை என்றும் பீற்றிக் கொள்ளும் ததஜவினரே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இதோ உங்கள் தலைமை வெளியிட்ட கணக்குகள்.


1. சுனாமி ரசீது பிரிண்டிங் செலவு 9,000. இது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய்ச் சேர்ந்த செலவு அல்ல. இந்தச் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியான எந்த பயனும் இல்லை. 

எந்த பிரிண்டிங் வேலையாக இருந்தாலும் அது பி.ஜே. மைத்துனன் ஷம்சு மூலமோ இன்னொரு மைத்துனன் இதாயதுல்லாஹ் மூலமோதான் நடந்தாக வேண்டும். 

சிவகாசிக்கு போய் பிரிண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தாலும் சரி. இது த.த.ஜ.வில் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆக இந்த பிரிண்டிங் செலவு மூலம் இலாபமாக குறைந்தது கால் சதவீதம் பி.ஜே. குடும்பத்திற்குத்தான் சேர்ந்துள்ளது.

2. பாலிதீன் பைகள் 1,500. இந்தச் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்தது அல்ல.

3. நிவாரணப் பணியாளர்கள் பனியன் தொப்பி 20,000. திடீரென வந்ததுதான் சுனாமி. அது வந்தவுடன் காப்பாற்ற சென்றவர்களுக்குப் பெயர்தான் நிவாரணப் பணியாளர்கள். 

முதலிலேயே தங்களுக்கு பனியன் தொப்பி வாங்கச் சென்றால் அவர்கள் சுனாமி நிவாரணப் பணியாளர்களா? சுனாமி கொள்ளையர்களா? அது வரை பனியன் தொப்பிக்கு கூடவா வக்கற்று இருந்திருக்கிறார்கள்? 


அவர்கள் 20,000க்கு வாங்கியதாகக் காட்டும் பனியன் தொப்பிகளில் டி.என்.டி.ஜே. கொடியுடன் கூடிய கலரில் உள்ளது. 

சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது. 2005 மார்ச்சில். 

2005 மார்ச்சுக்குப் பிறகு வாங்கிய த.த.ஜ. பனியன் தொப்பிகளை சுனாமி கணக்கில் சேர்த்துள்ளார்கள். ஆக த.த.ஜ. பனியன் தொப்பி போட்டுத் திரிபவர்களைக் கண்டால் சுனாமி திருடர்கள் என எளிதில் அடையாளம் காணலாம். 

இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல. இந்த பனியன் தொப்பி வாங்கியதில் உள்ள லபாமும் பி.ஜே. குடும்பத்திற்கே போய் சேர்ந்துள்ளது.

4. டி.ஏ. 5,260. இந்த டி.ஏ. யாருக்கு? சுனாமி நிவாரணப் பணியாளர்கள் போர்வையில் வந்த சுனாமி கொள்ளையர்களான த.த.ஜ.வினருக்குத்தான். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல.

5. டெம்போ ஆட்டோ வகை 235.

6. டீ செலவு 30.

7. நிவாரணப் பொருட்கள் பாதுகாக்க இரவு வாட்சுமேன் 30. த.த.ஜ.வின் சுனாமி நிவாரணப் பொருட்களை பாதுகாக்க இரவு வாட்சுமேனாக யார் இருந்திருப்பார்கள். த.த.ஜ.காரன்தான் இருந்திருப்பான். கூலி வாங்கும் இவனுக்குப் பெயர் நிவாரணப் பணியாளனா? த.த.ஜ. காரன் இல்லை என்ற வாதம் வைப்பார்கள். ஒரு இரவு கூட வாட்சுமேனாக இருக்க த.த.ஜ.வில் ஆள் இல்லையா?

8. ஆட்டோ கூலி 50.

9. நபர் கூலி 50. நபர் கூலி எதற்கு என்ற விபரம் இல்லை. இந்த வேலையை கூட கூலி கொடுக்காமல் செய்ய த.த.ஜ.வில் ஆள் இல்லை. ஒரு நபர் கூட இல்லை.

10. ஈரோடு அரிசி இறக்க 80. அரிசியை கூட கூலி இன்றி இறக்க த.த.ஜ.வில் ஆள் இல்லை. அதுவும் மாநில தலைமையின் லட்சணம் இது. ஆக த.த.ஜ.வே கூலிப்படைதான் என்பதற்கு இது ஆதாரம்.

11. கூரியர் 309.

12. போட்டோ 250. த.த.ஜ.வினர் கூலி வாங்கி விட்டு செய்த வேலையை சேவையாகக் காட்ட எடுக்கப்பட்ட போட்டோக்கள் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தலையில். பத்திரிக்கை என்ற முறையில் உணர்வில் கேமரா இருந்துமா இந்த உணர்வற்ற இரக்கமற்ற ஈனச் செயல். உணர்வு கேமராவில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான் இது. பள்ளிக் கணக்கிலேயே கள்ளக் கணக்கு எழுத ஆலோசனை கூறிய மகான் ஆயிற்றே அண்ணன் பி.ஜே.


13. ஆட்டோ 97.

14. கடிதம் தபால் தலை 474.

15. ஜெராக்ஸ் 100. த.த.ஜ. தலைமையில், உணர்வில் ஜெராக்ஸ் மிஷின் இல்லையா? இதுவும் உணர்வில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான்.

16. போக்கு வரத்து 7725.

17. உணர்வு 2,00,000.

18. இரண்டு மாத தல ஒளிப்பதிவு கேமரா வாடகை 60,000.

19. ஒளிப்பதிவுக் குழு உணவு மற்றும் பிரயாணம் 60 நாள் 12,000. சுனாமி பெயரால் ஒளிப்பதிவுக் குழு மட்டும் இரண்டு மாதம் தின்று உள்ள தொகை மட்டும் 12,000. த.த.ஜ.வின் விளம்பரத்துக்கு எடுக்கப்பட்ட எல்லா வீடியோ செலவையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்திலிருந்து எடுத்து விட்டார்கள்.

20. நிதி உதவி கோரி விளம்பரம் 180 நாள். 50,000. த.மு.மு.க.வின் தஞ்சைப் பேரணிக்கு பாக்கர் அல்லாஹ்வுக்காக இலவசமாக விளம்பரம் செய்தார் என்று கூறி பி.ஜே. நீலிக் கண்ணீர் வடித்தார். அது பொய் என சான்று பகிர்கின்றது இந்த சுனாமி கொள்ளை. இதில் விளம்பர கமிஷனில் பி.ஜே.க்கு போனது எவ்வளவு என்பது பாக்கருக்கு மட்டுமே தெரியும்.

21. எடிட்டிங் கன்வேஷன் மற்றும் ஒளிபரப்புச் செலவு 78,000. அந்த நேரத்தில் டாண் டி.வி. எடிட்டிங் வகைக்கு என பிஜே மகன் முஹம்மதுக்கு மாதம் 75 வரை சவூதியிருந்து வர வகை செய்தவர் பி.ஜே. சுனாமி எடிட்டிங்கிலாவது விட்டுக் கொடுத்து இருக்கலாம்.

22. தலைமை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவிக்காக நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200.

தலைமை மூலம் நேரடியாக செலவு செய்யப்பட்ட சுனாமி செலவு வகை விபரங்கள் என்று தலைப்பிட்டு அவர்கள் 22 வகையான செலவுகளை எழுதியுள்ளனர். இதில் 21 வகையான செலவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவுகள் அல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. இதை அவர்களே 22வது செலவில் குறிப்பிட்டும் காட்டி உள்ளார்கள்.
சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.

அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.

விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.

அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.

கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.

பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம்

சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா?

இதற்கிடையில் தமுமுகவின் உணர்வு பத்திரிக்கையையும் அதன் உடமையையும் திருடியவர்கள் இப்போது அதை அவர்கள் திருடிவிட்டார்களாம்!?

மக்களே யார் திருடர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_18.html 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.