TNTJ மாநில செயலாளர் வேண்டுகோளை ஏற்று துஆச் செய்ய நீங்கள் என்ன? TNTJ வா?

சாபம் பலிக்குமா என்றால் சாபம் பலிக்கத்தான் செய்யும். சாபம் இடலாமா? என்றால் சாபம் இடக் கூடாது என்பதுதான் நமது நிலை. அப்படியானால்,

நீங்கள் TNTJ இல்லை உங்களுக்கு சம்பந்தம் இல்லாமல் ஏன் அல்லாஹ்வின் சாபத்தை கேட்கிறீங்க? அதன் விளைவு தெரியாமல் இருக்கிறீங்க. TNTJ ஜாமத்தில் உள்ளவர்கள் மேலு‌ம் பிரச்சனையின் அடிப்படையில் சம்மந்தபட்டவர்கள் வெளியில் போனவர்கள் கேட்டால் காரண‌ம் உண்டு என்று  KS KSS என்பவர் யூடியூப்பில் நமக்கு பதில் பதில் போட்டு உள்ளார்.
யா அல்லாஹ் என் மீது புகார் செய்துள்ள உன்னுடைய இந்த அடியார் அவரின் புகாரில் பொய்யராகவும் புகழ் விரும்பிப் பொய்ப் புகார் கூறி பொய் சாட்சி கூறுபவராகவும் இருந்தால் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் மூன்று துஆ செய்யப் போகிறேன்.

1. யா அல்லாஹ் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக!

2. அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக!

3.அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!'

ந்த துஆவை அல்லாஹ் ஏற்ற பிறகு பாதிக்கப்பட்ட அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்கு உள்ளான முதுபெரும் வயோதிகனாக ஆகி விட்டேன். ... (இன்னவரின்) பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' என்று அடிக்கடி கூறக் கூடியவராகவும் ஆகி விட்டார்.

முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொண்டார்.

இது கற்பனை கதையல்ல இது ஒரு வரலாற்று சம்பவம். இன்னொரு வரலாற்று சம்பவம்.

யா அல்லாஹ் இவள் பொய் சொன்னவளாக இருந்தால் இவளது கண்களை குருடாக ஆக்கி குருடியாக ஆக்கி விடு. இவளுக்கு இவளது வீட்டையே கபுராக - சமாதியாக ஆக்கி விடு என்று பாதிக்கப்பட்டவர் துஆச் செய்தார். பாதிக்கப்பட்டவரின் இந்த துஆவை ஏற்ற அல்லாஹ் அந்தப் பெண்ணை குருடியாக ஆக்கி விட்டான். அதனால் அவள் சுவர்களை தொட்டு தடவியே நடக்கக் கூடியவளாக ஆகி விட்டால்.  

. ... (இன்னவரின்) பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது'. எனக்கு எதிராக செய்த துஆவினால் நான் குருடியாக இருக்கிறேன்  எனக் கூறக் கூடியவராகவும் ஆகி விட்டாள். கடைசியாக அவள் வீட்டில் இருந்த கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள். 

இந்த வரலாறுகள் எல்லாம் தெரிந்துதான் நம்பிக்கையுடன் துஆச் செய்கிறேன். இந்த வரலாறுகள் பொய்யா உண்மையா என  KS KSS என்பவர் அவரது அறிஞர் குழுவினரிடம் கேட்டுக் கொள்ளட்டும். 

நீங்கள் நாசமாகப் போவீர்கள், வாந்தியிலே போவீர்கள், பேதியிலே போவீர்கள் என்று சொன்னால் அவற்றுக்குப் பெயர்தான் சாபம் இடுதல் சபித்தல் என்பதாகும். இந்த மாதிரி சாபம் இடுதல் தான் கண்டிக்கப்பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் வல்லமையில் தலையிடுவதாகும்

நான் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தவ்ஹீது பெயர் தாங்கி மவுலவிகளால் பாதிக்கப்பட்டவன். ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன். தவ்ஹீது மவுலவியால் என ஒருமையில் எழுதவில்லை மவுலவிகளால் என பன்மையில் எழுதி உள்ளேன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

TNTJக்கு எதிராக பிரார்த்தனை செய்ய நீங்கள் யார்? என்று கேட்டுள்ளீர்கள். 1994ல் ஜிஹாது செய்யப் போவதாகக் கூறி ஜாக்கிலிருந்து விலகி தவ்ஹீது மவுலவிகள் இளைஞர்களின் உணர்வுகளை துாண்டி விட்டு பல கொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் செய்தார்கள். கை விலங்கு கண்ணில் ஆடியதும் குணங்குடி ஹனீபாவின் தமுமுகவில் தஞ்சம் அடைந்தார்கள். பிறகு தவ்ஹீது பிரச்சாரத்தை இரண்டாவது விஷயமாக ஆக்கி விட்டு அரசியலில் குதித்து விட்டார்கள்.

தவ்ஹீது மவுலவிகளை மட்டுமே கொண்ட அமைப்புகளை துவக்கி தவ்ஹீது மவுலவிகள்  காசடிக்க பல மோசடி திட்டங்கள் தீட்டி செயல்பட்டார்கள். தவ்ஹீது பிரச்சனையால் பாதிக்கப்படும் அப்பாவி தொண்டர்களை கேட்க நாதி இல்லை. 

இந்த நிலையில்தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் இஸ்லாமிய மாநாடு பெயரால் மக்களைக் கூட்டினோம். அதில் கூடிய பல ஊர் தவ்ஹீது அமைப்பு நிர்வாகிகளை ஒருங்கிணைத்து 2.9.2000 அன்று அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜமாஅத்தை உருவாக்கினோம். 2003ல் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்டது. அதுதான் 2004ல் TNTJ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

17.09.2000ல் என் வீட்டிற்கு பல தவ்ஹீது மவுலவிகள் வந்தார்கள். தவ்ஹீது இரண்டாம் பட்சம் ஆகி விட்டது தமு.மு.க.வுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பீ.ஜே, பாக்கர் உட்பட பலர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வைத்தார்கள். அப்பொழுது இவர்களை நல்லவர்கள் என்று நம்பிய நான் அமைப்பு உருவாக்கிய நோக்கத்தையும் திட்டங்களையும் சொன்னேன். அவர்கள் சொன்ன மாதிரி தமு.மு.க. தவ்ஹீதுக்கு விரோதமாகப் போனால் அதை அழித்து விடுவோம் என்று சொன்னேன்.

சபையில் இருந்த அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தவ்ஹீது வேஷதாரியும் விஷமியுமான ஒரு மவுலவி தமு.மு.க.வை அழித்து விடுவோம் என்று இலாஹி சொன்னார் என வத்தி வைத்து விட்டான். 

களஞ்சியம் பெண்கள் மதரஸாவில் தப்பாக நடந்தான் என்பதால் ஒதுக்கி வைக்கப்பட்ட தவ்ஹீது வேஷதாரி மவுலவி   வத்தி வைத்தவுடன் அவனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. களஞ்சியம் பெண்கள் மதரஸாவில் தப்பாக நடந்தான் என்பதால் ஒதுக்கி வைக்கப்பட்டவன் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. 2002ல் தான் லுஹா சொல்லி அழுதபொழுதுதான் எனக்குத் தெரியும்.

அந்தப் பொய்யன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆச் செய்தேன். மலை உச்சி வரை ஏறி கீழே விழுந்தான். இது நேற்றைய செய்தி இன்றைய வரலாறு. இருந்தாலும் இன்னும் அவன் திருந்தவில்லை. அவனிடமுள்ள பழைய விஷமத்தனம் இன்னும் போகவில்லை.

என்னிடம் பொய் சொல்லி என்னை ஏமாற்றிய ஒவ்வொருவன் மீதும் என்னிடம் பொய் சொல்லி என்னை ஏமாற்றி பள்ளித் தலைவர்களாக ஆனவர்கள் மீதும் பள்ளிகளை அபரித்து பள்ளித் தலைவர்களாகவும் நிர்வாகிகளாகவும் ஆன ஒவ்வொரு பதவி பித்தர்கள். மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு, உன் பிடியை இறுக்கு. வணக்கத்தலத்தை பதவிக்கான தலமாகவும் பிழைப்புத்தலமாகவும் ஆக்கிக் கொண்ட ஒவ்வொருவனையும் விட்டு விடாதே யா அல்லாஹ் என்று வேண்டுவது என் உரிமை. இதற்குப் பெயர் துஆ. சாபம் இடுதல் அல்ல.

அல்லாஹ்வே தீர்வு என நம்பி அல்லாஹ்விடமே  கையேந்தினால் அவன் தவ்ஹீதுவாதி. அடிதடியே தீர்வு என ஆயுதம் ஏந்தினால் அவன் தீவிரவாதி. எங்களுக்கு எதிராக  ஆயுதத்தை  ஏந்திய  ஆயுதத்தை ஏந்த திட்டமிட்டுள்ள ஒவ்வொரு தீவிரவாதிகள் கை, கால்களை யா அல்லாஹ் நீயே நாசமாக்கி முடக்குவாயாக ஆமீன்.






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.