உண்மை இனி உறங்காதா? சமுதாயம் இனி சிறை படாதா?


உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை போட்டு உடையுங்கள் என்று எம்மீது நம்பிக்கை வைத்துள்ள பலர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இப்பொழுது சமுதாய அமைப்பில் பிரச்சனை போல் காட்டப்படுவது பற்றி எழுதுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஆட்சியாளர்கள் என்ற முறையில் பகிரங்மாக பீ.ஜே.பி.க்காரர்களை சந்திப்பவர்களை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்கிறார்கள். அதே ஆட்கள் ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பி. தலைவர்களை  கள்ளத்தனமாக  சந்திக்கிறார்கள்.  முஸ்லிம்களுக்கு விரோதமாகவும்  சதி செய்கிறார்கள். வெளியில் சமுதாய போராளிகள் வேஷம் போடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் அடையாளம் காட்டுங்கள் என்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் எல்லா அமைப்புகளிலும் ஊடுறுவி உள்ளது என்று எல்லாரும் தேர்தல் நேரத்தில் எழுதினார்கள். அது போல் மவுலவி பீ.ஜே.யின் ஆதிக்கம் ஊடுறுவி உள்ளது  இந்த வார்த்தை கடுமையாக இருந்தால் பீ.ஜே.யின் தாக்கம் என்று ஆக்கிக் கொள்ளுங்கள். 

பீ.ஜே. விலகிப் போன எல்லா அமைப்புகளிலும் பீ.ஜே.யின் ஆதிக்கம் இன்றும் இருக்கிறது. இதை பல முறை எழுதி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட  தலைவரிடமே சொல்லி இருக்கிறேன்.

உண்மை இனி உறங்காது, சமுதாயம் இனி சிறை படாது, உணர்வு வார இதழ் என்ற விளம்பரத்தை கேட்டவுடன். முஸ்லிம் சமுதாயம் இனி சிறை படாது என்றுதான் அந்த விளம்பரம் சொல்கிறது என்று எண்ணினார்கள். 

உடனே அந்த விளம்பரக் காட்சிகளை நிமிர்ந்து பார்த்தார்கள். நகர் சுத்தி தொழிலாளர்களான அருந்ததியர்கள். தெருவில் குப்பைகளை அள்ளிக் கொண்டே உணர்வு வார இதழ் படிப்பது போன்ற காட்சிகளைக் கண்டார்கள். த.மு.மு.க.வின் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பில்  வந்த. உணர்வு வார இதழ் விளம்பரத்துக்காக வெளியான முதல் வீடியோ தான் அது.

முஸ்லிம் சமுதாயம் படிப்பது போன்ற காட்சிகளை வீடியோ பண்ணக் கூடாதா? என்று கேட்டவர்களுக்கு 1977லேயே பதில் சொல்லி விட்டோம். த.மு.மு.க.வின் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பில் உணர்வு வார இதழ் வெளியிடப்பட்டாலும் அது டாக்டர் சேப்பன் உடையது. அவரிடமிருந்து வாங்கித்தான் த.மு.மு.க. வெளியிடுகிறது. அந்த வீடியோ உணர்வு அவரிடம் இருந்தபொழுது தயாரிக்கப்பட்டது என்றோம்.

1984ல் குணங்குடி ஹனீபா அவர்களால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கோரிக்கையுடன் துவங்கபட்டதுதான் த.மு.மு.க. 1995ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. முஸ்லிம் சமுதாயத்துக்கு ஆபத்து முஸ்லிம்களுக்கு ஆபத்து என்பதற்காக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டது.

உண்மையில் நடந்தது என்ன? பீ.ஜே. போன்ற தவ்ஹீது மவுலவிகள் காரைக்காலில் வைத்து இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுத்தார்கள். அதனால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. பீ.ஜே. போன்ற தவ்ஹீது மவுலவிகளுக்கு ஏற்பட்ட ஆபத்தைத்தான் முஸ்லிம்களுக்கு ஆபத்து முஸ்லிம் சமுதாயத்துக்கு ஆபத்து என்று கூவி கூட்டம் சேர்த்தார்கள்.

எந்த மாதிரி எல்லாம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தால் மக்கள் தங்கள் பின்னால் திரண்டு வருவார்கள் என்று நம்பினார்களோ அது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கை விலங்கு கண்ணில் ஆடிய தவ்ஹீது மவுலவிகள் அள்ளிப் போட்டார்கள்.

யாருக்கும் ஓட்டு பிச்சை கேட்டு வர மாட்டோம். அரசியலில் ஈடுபட மாட்டோம். நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் உறுப்பினராக இருந்து கொள்ளுங்கள்.  சமுதாய அமைப்பான த.மு.மு.க. அழைக்கும் போராட்டங்களுக்கு வாருங்கள். சமுதாய அமைப்பாக மட்டுமே த.மு.மு.க. இருக்கும் என்பன போன்ற பெய்யான கோஷங்களை போலீஸ் வட்டம் சுருங்கி கழுத்துக்கிட்ட வந்துவிட்ட தவ்ஹீது மவுலவிகள் முழங்கினார்கள்.

நாங்கள்தான் கிராமம் கிராமமாக சென்று த.மு.மு.க.வை வளர்த்தோம். ஜவாஹிருல்லாஹ்வின் செசன்யாவைப் பார் என்பது போன்ற கீச்சுக் குரல் பேச்சுக்கு எவன் வருவான் என்று ஜம்ப் பண்ணி எவ்வி குதித்தார்களே! அந்த தவ்ஹீது மவுலவிகளை காத்துக் கொள்வதற்காக த.மு.மு.க.வை வளர்த்தார்கள். அதுதான் உண்மை.

அவர்கள் நோக்கப்படி அவர்கள் த.மு.மு.க.வால் காக்கப்பட்டதும் த.மு.மு.க.வை விட்டுப் போனார்கள். போனவன் எவனுக்குமே சமுதாய நலன் என்ற நோக்கம் இருந்தது கிடையாது.

2001 ஜனவரி பத்து முதல் த.மு.மு.க.வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பீ.ஜே. விலகுவதாக மனம் திறந்த மடல் வெளியிட்டார். உடனே யு... அளவிலான கூட்டம் துபையில் கூடியது. பெரும்பாலானவர்கள் கண்ணீர் வடித்து அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி தீர்மானம் போடச் சொன்னார்கள்.  

நான் அவரது விலகலை ஏற்போம் என்ற நிலையில் இருந்தேன். எனக்கு மிக நெருக்கமானவர்கள் என்னய்யா நீர் இந்த மாதிரி சொல்கிறீர் என்று கேட்டார்கள்எனக்கு மிக நெருக்கமான மேலப்பாளையவாசிகளுக்கு கோபம் வந்தால் என்னய்யா என்றுதான் பேசுவார்கள். பீ.ஜே. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக த.மு.மு.க.வுக்கு வந்தார். காப்பற்றப்பட்டு விட்டார். வந்த நோக்கம் நிறைவேறி விட்டது. போகிறார் என்று சொன்னேன்.

2000த்தில் தாயகத்தில் இருந்தபொழுது மவுலவி J.S. ரிபாஈ பற்றி லுஹா திரும்பத் திரும்ப குறைகள் சொன்னபொழுதெல்லாம் J.S. ரிபாஈ மீது உள்ள (நாகூர் நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு) வழக்கு உள்ளவரை அவர் த.மு.மு.க.வில் இருப்பார். வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டால் த.மு.மு.க.வை விட்டு போய் விடுவார் என்றேன்.

J.S. ரிபாஈ ரய்யான் பள்ளிவாசலில் வைத்து த.மு.மு.க. சமுதாயத்திற்காக உருவானது என்ற பொய்யை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது குறுக்கிட்ட நான் இந்த மாதிரி த.மு.மு.க.வில் உள்ள அப்பாவிகள் யாரும் சொல்லட்டும். (பீ.ஜே.யின் ஜிஹாது படை சிப்பாயியான) நீங்கள் சொல்லாதீர்கள் என்றேன்.

த.மு.மு.க. என்பது ஒரு டிராமாதான். பீ.ஜே. போன்ற தவ்ஹீது மவுலவிகளை காப்பதற்காக போடப்பட்ட நாடகம்தான் த.மு.மு.க. என்ற உண்மையை 27-08-1996 அன்று ஜான்டிரஸ்ட்டில் நடந்த கூட்டத்தில் பீ.ஜே. போட்டு உடைத்தார். சமுதாயத்திற்கு தெரிய வேண்டிய உண்மைகள் அடங்கிய இந்த ஆடியோ கமாலுத்தீன் மதனி இடம்தான் உள்ளது.

ஜாக்கையும் அதைவிடக் கேவலமாக கமாலுத்தீன் மதனியையும் பீ.ஜே.யும் அவருடன் இருந்தவர்களும் மகாக் கேவலமாகப் பேசிய பிறகும். அவர்கள் சமுதாயத்தை ஏமாற்றியவர்கள் என்பதற்கு ஆதாரமான இந்த ஆடியோவை கமாலுத்தீன் மதனி சமுதாயத்திடம் சமர்ப்பிக்காதது ஏனோ? தெரியவில்லை.

அந்தரங்கத்தில் டிராமாதான் என்று கூறி விட்டு அரங்கத்தில் நடித்த  ஜாக் மற்றும் முஸ்லிம் சமுதாய துரோகிகள் பற்றிய அந்த ஆதார ஆடியோவை இனியாவது கமாலுத்தீன் மதனி வெளியிடுவாரா? ஜாக் சகோதரர்கள்தான் வற்புறுத்தி வெளியிட வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

01-05-1997 அன்று மவுலவி ஹாமித் பக்ரி தலைமையில் திருச்சி அரிஸ்ட்டோ ஹோட்டலில் ஜாக் தாஇகள் கூட்டம் நடந்தது. 38 ஜாக் தாஇகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பீ.ஜே. சொன்னார்.

தானும் தன்னுடனுள்ள தவ்ஹீது மவுலவிகளும் குண்டு வெடிப்பு, கொலைகள் போன்ற செயல்கள் செய்து ஜிஹாது செய்யப் போவதாகக் கூறியதாகவும். அதற்கு நல்ல செய்யுங்கள் நம்ம லேபில் தெரியாமல் செய்யுங்கள் என்று இன்னவர் கூறினார் என்று பீ.ஜே. வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதில் கலந்து கொண்ட மவுலவிகள் விரும்பினால் நம்ம லேபில் தெரியாமல் குண்டு வெடிப்பு, கொலைகள் செய்யுங்கள் என்று சொன்னவர் யார்? என்ற உண்மையை போட்டு உடைக்கட்டும். அல்லது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜாக் மவுலவிகளிடம் மற்றவர்கள் கேட்டு வெளியிடட்டும்.

இன்றைய த.மு.மு.க, ம.ம.க. சமுதாய நலனில் அக்கரை உள்ள அமைப்பு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. இந்த அமைப்பை சீர் குலைக்க வேண்டும். அல்லது ஜவாஹிருல்லாஹ்வை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு கோடிக்கணக்கில் பணங்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளன என்று 2017 முதல் சொல்லியும் எழுதியும் வந்துள்ளேன். இதை மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறேன்.


உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ள அறிவை பயன்படுத்துங்கள். ஆத்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள். எது எதுவாக உள்ளதோ அதை அதுவாகவே அடையாளம் காண வேண்டும். 


உள்ளதை உள்ளபடி அறிந்துள்ளோமா? என்ற தலைப்பையும் முடிந்தால் படித்துக் கொள்ளுங்கள்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.