*பாங்கு படும் பாடு**ஆலிம்களும் நிர்வாகிகளும்தான் இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்*


மாஷா அல்லாஹ்! தொழுகை நேரம் வந்து விட்டால் (மேலப்பாளையம்) நகர் முழுவதும் பாங்கு சப்தம் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது . ஆனால் அதை காது கொடுத்துதான் கேட்க முடியவில்லை காரணம் அவ்வளவு பிழைகள். அது மட்டுமல்லாது அவர்கள் போடும் ராகம் வேறு. 


அதற்காக முஅத்தின்களை குறை கூற முடியாது. காரணம் அவர்கள் அரபி பாடம் படித்து வந்தவர்களல்லர்.  ஆனால் *அவர்களுக்கு திருத்திக் கொடுக்கமாலும், கண்டு கொள்ளாமலும் இருக்கும் ஆலிம்களைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும்.*
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_30.html

 الله أكبر

*அல்லாஹு அக்பர்* என்ற அழகான வார்த்தையை சில முஅத்தின்கள்  *அல்லாஹு அக்குபர்* என்கிறார்கள். 

அல்லாஹ் என்ற வார்த்தையில் உள்ள ل மை கனமாக உச்சரிக்க வேண்டும். ஆனால் சாதாரண ل மை போல உச்சரித்து முகம் சுளிக்க வைக்கிறார்கள்.

أشهد أن لا إله إلا الله، 

*அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்.* என்பதை *அஷ்ஷது அல்லாயி(ع)லாஹா  இல்லல்லா* என்கிறார்கள் சிலர். 

أشهد أن محمدًا رسول الله، 

*அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்* என்பதை *அஷ்ஷது அன்னா முஹம்மதர்ர   சூலில்லா* என்று சொல்கிறாரகள். சில பேர் *அஷ்ஹது அன்ன முஹம்மதர்ர   ஸூலுல்லாஹ்* என்று பிரித்து சொல்கிறார்கள்.

، حي على الصلاة

*ஹய்ய அலஸ் ஸலாஹ்*  என்பதை சிலர் *அய்ய்யாலல் ஸலா* என்கிறார்கள் . சிலர் *ஹய்ய்யாலஸ் ஸலா* என்கிறார்கள்.

حي على الفلاح

*ஹய்ய அலல் ஃபலாஹ்* என்பதை *அய்ய்யாலல் ஃபலா* என்று சிலரும் *ஹய்ய்யாலல் ஃபலாத்* என்று சிலரும் கூறுகிறார்கள்.

ஆலிம்களே! நிர்வாகிகளே! மற்றும் அரபி தெரிந்த பொது மக்களே! தயவு கூர்ந்து இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டி அழகான முறையில் தொழுகைக்கு அழைக்கக்கூடிய முஅத்தின்களை உருவாக்குங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!..
நன்றி 
L.K.M.K. அபுபக்கர் சித்தீக் S/O காஜாமுஈனுத்தீன் ரியாஜி

குறிப்பு :- சமீபத்தில்தான் மேலப்பாளையம் பெரிய குத்பா (ஷாபி) பள்ளியில் நிறுத்தி நிதானமாக பாங்கு சொன்ன மோதியாரிடம் இப்படி மெதுவாக சொல்லக் கூடாது என ஒருவர் சொன்னதும் இகாமத் சொல்லாமல் வாவர் ஹனபி பள்ளியில் போய் சேர்ந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

பள்ளியை சுத்தம் செய்ய சுத்தம் செய்யும் தொழிலாளியை வைத்து விட்டு. நன்மையை நாடி பாங்கு சொல்பவர்களையும் இமாமத்து செய்பவர்களையும் தான் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது தான் வரலாறு. 

நபியை மட்டுமே பின்பற்றுவோம் அதிலும் வஹியை மட்டுமே பின் பற்றுவோம் என்று கூவித் திரிபவர்கள் கூட கூலிக்கு ஆள் பிடித்து தான் அலைகிறார்கள். இதில் வட நாட்டு இறக்குமதி வேறு.

இரண்டாம் ஜமாஅத்துக்கு காமத் சொல்பவர்களும் இமாமத் செய்பவர்களும் சம்பளம் வாங்கி விட்டா செய்கிறார்கள்? என்று சிந்தித்தால் நல் வழி பிறக்கும் 

பாங்கு சொல்லும் முஅத்தின் கழுத்து நீண்டவராக மறுமையில் நிற்பார் என்பதையும் அதில் உள்ள நன்மைகளையும் தெரிந்தால் பாங்கு சொல்ல சீட்டு குழுக்கி போட வேண்டி இருக்கும்




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.