வேதம் ஓதும் சாத்தான்கள் யார்? ஒரு தலைவர் இருக்க இன்னொருவன் தலைவனாக முயற்சி செய்தால் ஹதீஸ்படி என்ன செய்ய வேண்டும்?


TNTJ ஆதரவாளர் Syed Abuthaalibu அவர்கள் முகநுாலில் கேட்டுள்ள துஆவை முதலில் பாருங்கள். ”அந்த நாவில் நாம் எல்லாம் பார்க்கும் வரை புழு புழு வாக  அரித்து  இவனை மரணிக்க செய்  இறைவா” என்று துஆக் கேட்டு பதிவு போட்டுள்ளார். யார் துஆக் கேட்டாலும் துஆக் கேட்கா விட்டாலும் அளவுக்கு மீறி புழுகித் திரியும் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன. 

நாம் ஜிஹாதில் இருக்கிறோம். ஜிஹாதில் பொய் சொல்லலாம். இவ்வாறு மார்க்க அறிஞர்கள் என்ற பெயரால் உள்ளவர்கள். அவர்களை கண்மூடித்தனமான ஆதரித்தவர்கள். அனைவரும் அளவுக்கு அதிகமாக வரம்பு மீறி பொய்களைச் சொன்னார்கள். அதனால்தான் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பதிலடி கொடுத்தோம். இனியும் நாம் கூறும் உண்மையைப் பொய்ப்படுத்த முயலும் ஒவ்வொரு பொய்யர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! ஆமீன்.
ஒரு படைக்கு ஒரு தளபதிதான் இருக்க முடியும். ஒரு பஸ்ஸுக்கு ஒரு டிரைவர்தான் இருக்க முடியும் ஆகவே அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமையே தேவை என்று முஸ்லிம் அல்லாதவர்கள் நிறைய உள்ள அ.தி.மு.க.வுக்கு முஸ்லிம்கள் என்போர் ஆலோசனை கூறிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கட்சிக்கு இரண்டு தலைவர்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு தலைவர்கள் என்பதற்கு இஸ்லாத்திலிருந்து ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டால் எவராலும் பதில் தர முடிவதில்லை. ஆனால் நாங்கள் குர்ஆன் ஹதீஸை நிலை நாட்டுபவர்கள் என்று மட்டும் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இரு தலைவர்களையும் தனியாக இரண்டு மணி நேரம் தனி அறையில் பேச விடுங்கள் இன்ஷா அல்லாஹ்  அழகிய தீர்வு கிடைக்கும்  முயற்சிப்பது யார் என்று  ஜாக் சகோதரர் Fasuludeen Tenkasi  அவர்கள் எழுதி இருந்தார். அதற்கு நமது பதிலில்,

1995 ஜனவரி  8ஆம் தேதி செய்யது பீடி கம்பெனி (பத்ஹுர்ரப்பானி) மாப்பிள்ளை முதலாளி (மறைந்த) நூர் முஹம்மது அவர்கள் வீட்டில் பீ.ஜே, கமாலுதீன் மதனி, ரபீக் அஹமது, உஸ்மான் கான் ஆகிய ஜாக் முன்னணியினரை ஒரு ரூமில் அடைத்து வைத்து விடிய விடிய பேச வைத்தோம.

நான், ஹாமித் பக்ரி போன்றவர்கள் வெளியில் காத்து கிடந்தோம் கடைசியில் என்ன ஆனது? என்று கேட்டிருந்தோம். இந்த இரவு கூத்து Fasuludeen Tenkasi அவர்களுக்கு தெரியாததால் பதில் தரவில்லை என்று எண்ணுகிறேன்.

விடியற்காலை வெளியில் வந்தவர்கள் சமாதானம் ஆகி விட்டதாகச் காடடிக் கொண்டார்கள் நம்பினோம். இந்த இரவு கூத்து (சந்திப்பு) முடிந்து 7ஆம் நாள் 15-01-1995 அன்று திருச்சி ஸலபி நகர் பள்ளியில் நடந்த இஜ்திமாவில் கமாலுத்தீன் மதனி அமீர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

உடனே கமாலுத்தீன் மதனி கையைப் பிடித்த பீ.ஜேகண்ணீர் வடித்து அழுது சாகும் வரை நீங்கள்தான் அமீர் என்றார்.

அடுத்து எழுந்த அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒரு தலைவர் இருக்க இன்னொருவன் தலைவன் என்று சொன்னால் அவன் தலையை வெட்ட வேண்டும் என்ற ஹதீஸ் அடிப்படையில், அமீர் கமாலுத்தீன் மதனியை எதிர்ப்பவர்கள் தலையை வெட்டுவேன்' என்று  சிங்கமாக கர்ஜித்தார்.

அதிலிருந்து ஏழாம் நாள் 22-01-1955 அன்று மேலப்பாளையத்தில் ஜாக் அமீர் கமாலுத்தீன் மதனி தலைமையில் தடா எதிர்ப்பு பேரணி நடந்தது. 

ஜாக் துவங்கியது முதல் அதன் மூலம் ஏராளமான சமுதாய நலப் பணிகள் செய்து வந்தோம். அரசியல் விழிப்புணர்வு, கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. 

அல் ஜன்னத்தில் எழுதப்பட்ட சமுதாய எழுச்சி கட்டுரைகள் தான் இன்னுமா உறக்கம் என்ற தலைப்பில் தனி நுாலாக வெளியிடப்பட்டது. 

இன்னுமா உறக்கம் என்ற நுாலை கொடுத்துதான் பழனி பாபாவின் ஜிஹாத் கமிட்டி தொண்டர்களை ஈா்த்தோம் இழுத்தோம்.

சிறைவாசிகளுக்கு உதவிகள்
தலைமறைவாக இருந்தவர்களுக்கு தங்க உதவி
கண்டிஷன் பெயிலில் இருந்தவர்களுக்கு தங்க உதவி
போன்ற ஏராளமான சமுதாயப் பணிகள் ஜாக் செய்தது. கலாச்சாரப் பள்ளி பகுதியில் கண்டிஷன் பெயிலில் இருந்தவர்களில் பிலால் ஹாஜியாரும் ஒருவர்.

உண்மை இவ்வாறிருக்கவே. பொய் சொல்லி புழுகித் திரிவதையே பிழைப்பாகக் கொண்ட தவ்ஹீது மவுலவி என்பவன். ஜாக் என்ற காரில் போனோம். அது சமுதாய நலப் பணிகள் செய்ய மறுத்தது. அதனால் அதில் இருந்து இறங்கினோம் என்று பல வருஷங்களாக புழுகி வருகிறான்Syed Abuthaalibu  அவர்கள் கேட்டுள்ள துஆவை இவனுக்கு எதிராகவும் கேட்பார் என்று நம்புகிறேன்.

08-01-1995 அன்று இத்தா இருந்தவர்கள். இத்தா என்றால் கணக்கு என்று அர்த்தம். பஸுலுத்தீன் அவர்கள் சொன்ன மாதிரி இரண்டு மணி நேரம் அல்ல மணிக்கணக்கில் விடிய விடிய 08-01-1995 அன்று இருந்து தீர்த்தவர்கள். 

27-08-1996,  26-03-1997, 01-05-1997 ஆகிய தேதிகளிலும் கூடி கூடி கும்மியடித்தவர்கள் கடைசியில் பிரிதல் என்ற நாடகத்தை நடத்திதானே சமுதாயத்தை ஏமாற்றினார்கள். இன்றும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆகவே எதை வேண்டுமானாலும் பொதுவில் அல்லது பொதுக் குழுவில் பகிரங்கமாக பேச வேண்டும். நியாயம் யார் பக்கம் அதிகம் உள்ளது. ஏர்வாடி காசிம் போன்றவர்களை காட்டிக் கொடுத்தது யார்? வேதம் ஓதும் சாத்தான்கள் யார்?  என்பது தெரிய வரும். 





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.