திடல் தொழுகை என்ற பெயரால் உள்ள தெரு தொழுகையை கண்டு கொள்ளாமல் இருந்தோமா?


இலாஹி NTFக்கு ஆதரவாக ஆகி விட்டாரா? பீ.ஜே.யை நல்லவராகக் காட்டும் விதத்தில் இலாஹியின் செயல்பாடு போய்க்  கொண்டிருக்கிறதா? இஸ்லாத்தில் இல்லாதது கம்யூனிஸத்திலும் திராவிடத்திலும் சோசலிஸத்திலும் இருக்கிறது என்பவனின் ஈமானின் நிலை என்ன?
ஏழு பேருக்கு ஒரு திடல்! மூன்று குடும்பத்திற்கும் ஒரு திடல்! ஏழு குடும்பத்திற்கும் ஒரு திடல்! நூற்றுக்கணக்கான நபர்களுக்கும் ஒரு திடல்! ஆயிரக்கணக்கான மக்களுக்கும் ஒரு திடல்! திடல் தொழுகை என்ற பெயரில் தெரு தொழுகை. இப்படி எல்லாரும் விமர்சனங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இலாஹியோ அது பற்றி எழுதவில்லை. ஆகவே இலாஹி NTFக்கு ஆதரவாக ஆகி விட்டார். பீ.ஜே.யை நல்லவராகக் காட்டும் விதத்தில் இலாஹியின் செயல்பாடு போய்க்  கொண்டிருக்கிறது என்கிறார்கள்.


யார் சொல்கிறார்கள்? தவ்ஹீது தாஇகள் மீது தவ்ஹீது மவுலவிகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கண்டனக் கடிதம் எழுதிய இலாஹியை நீக்க வரிந்து கட்டிக் கொண்டு நின்றவர்கள். 03.05.2002 வெள்ளி அன்று துபை IACயில் பேயாட்டம் ஆடியவர்கள் சொல்கிறார்கள். 

பேயாட்டம் ஆடியவர் சொல்கிறார் என ஒருமையில் படித்து குறிப்பிட்ட ஒருவரை விமர்சித்துள்ளதாக எண்ணி  விடாதீர்கள். பன்மையை பன்மையாகப் படியுங்கள்.

03.05.2002 வெள்ளி அன்று இலாஹியை நீக்க தலைகீழாக நின்று பேயாட்டம் ஆடிய  தாஇகளில் பலர் இஸ்லாமிய அமைப்பே வேண்டாம் என்று போய் விட்டார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தையும் விட்டு விட்டார்கள். 

முஸ்லிம் அல்லாதவர்களை, காபிர்களை தலைவராக ஏற்பது ஹராம் என்று பொங்கியவர்கள். மாநில கட்சிகளிலும் தேசிய கட்சிகளிலும் பொங்கலாகிப் போய் விட்டார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தையும் விட்டு விட்டு காபிரான தலைவர்களுக்கு காவடி துாக்கி அலைகிறார்கள். காபிரான தலைவர்களுக்கு பெருமை சேர்ப்பதற்காக பொய்களை புகழ்ச்சியாக பரப்பி வருகிறார்கள்.

இஸ்லாத்தில் இல்லாததை கம்யூனிஸத்திலிருந்தும் திராவிடத்திலிருந்தும் சோசலிஸத்திலிருந்தும் எடுத்துக் கொள்வேன் என்ற முர்தத்தான மடையனை முன்னோடியாக ஏற்று சிலர் போய் விட்டார்கள்.

சும்மாவா போனார்கள். முர்தத்தான  மடையனை மடையன் என்று எழுத வைத்து விட்டுப் போனார்கள். இஸ்லாத்தில் இல்லாதது கம்யூனிஸத்திலும் திராவிடத்திலும் சோசலிஸத்திலும் இருக்கிறது என்பவனின் ஈமானின் நிலை என்ன? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

திடல் தொழுகை என்ற பெயரில் தெரு தொழுகை நடத்தியவர்கள் பற்றி நமது நிலை என்ன? அல்லாஹ்வுக்காக உருவாக்க வேண்டிய பள்ளியை தனக்காக உருவாக்கிக் கொண்டவன் பற்றி நமது நிலை என்ன? என்ற விஷயத்திற்கு வருவோம்.

அல்லாஹ்வுக்காக உருவாக்க வேண்டிய பள்ளியை தனக்காக ஆக்கிக் கொண்டவன்,  தான் பேச தனக்கு ஒரு பெருநாள் திடல் வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பள்ளியை எவன் பயன்படுத்தினானோ அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் திருத்துவாயாக! 

திருந்த மாட்டார்கள் என்றால் வரட்டுக் கவுரவம் பிடித்த சுயநலமியான சமுதாய துரோகி மீதும் தனி மனிதனுக்காக பெருநாள் திடல் உருவாக்க பாடுபட்டவர்களில் திருந்தியவர்கள் தவிர மற்றவர்கள் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

போதுமா? இதை இன்று எழுதவில்லை 27-12-2018லேயே எழுதியதான். அதனால்தான் மீண்டும் எழுதவில்லை. 

சமுதாக துரோகி தனது வரட்டு கவுரவத்திற்காக சமுதாய அமைப்புடன் மோத நினைத்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

https://mdfazlulilahi.blogspot.com/2018/12/blog-post_40.html
என்ற இந்த தலைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மீள் பதிவு  செய்து விட்டேன். 


03.05.2002 வெள்ளி அன்று இலாஹியை நீக்க தலைகீழாக  நின்று பேயாட்டம் ஆடிவிட்டு  இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதையும் விட்டு விட்டு ஓடியவர்கள். இன்று குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக எம்மை செயல்பட வற்புறுத்தி வருகிறார்கள். 

அவர்களுக்கு அவர்கள் கடந்த காலத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் செய்த பிரச்சாரங்களையே பதிலாகத் தொகுத்து தருவோம் இன்ஷாஅல்லாஹ்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.