எஸ்டி.பி. போன்ற அமைப்புகளை நான் விமர்சிக்க மாட்டேன்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
Sdpi ஷாகுல் ஹமீது உஸ்மானி அவர்களுக்கு அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்..
தாங்கள் என்னை விமர்சித்ததாக அறிந்தேன். அது உண்மையோ பொய்யோ தங்களிடம் நேரில் பேசி விடுவோம் என போன் செய்தேன் நீங்கள் போனை எடுக்கவில்லை கைர்

...வினர் எந்த அதிகாரிகளை எதிர்த்தார்களோ அவர்கள் மீது எனக்கு முன்பே அதிருப்தி உண்டு. எப்படி என்பதை இறுதியில் தருகிறேன். 

1997 செப்டம்பர் 12-18 உணர்வு இதழில் எஸ்.. காசிப்பாண்டியன் பத்தாயிரம் லஞ்சம் கேட்டார் என்று லுஹா பேட்டி அளித்ததாக பி.ஜே. செய்தி வெளியிட்டார். அதை உண்மை என்று நம்பிய லட்சக் கணக்கானவர்களில் நானும் ஒருவன்.

2002இல் லுஹாவை பி.ஜே. ஆள் வைத்து இழிவுபடுத்தினார். எப்படி இழிவுபடுத்தினார் என்பது 2002 எனது பிளாக்கரில் பார்த்துக் கொள்ளவும்.

அப்பொழுது  பி.ஜே. மீது கோபம் அடைந்த லுஹா என்னிடம் எஸ்.. காசிப்பாண்டியன் பத்தாயிரம் லஞ்சம் கேட்டார் என்பது பி.ஜே. இட்டுக் கட்டிப் போட்ட பொய் செய்தி என்றார்.

எஸ்.. காசிப்பாண்டியன் தவ்ஹீது இயக்த்துக்கு துறை ரீதியாக செய்த உதவிகள் ஏராளம். அதனால்தான் எஸ்.. காசிப்பாண்டியன் மகள் சடங்குக்கு பூப்புனித நீராட்டுக்கு லுஹா சேலை வாங்கி கொடுத்து விட்டார். கொண்டு போனவர்களில் ஒருவர் மூத்த தவ்ஹீதுவாதி இன்னொருவர் தவ்ஹீது பள்ளி தலைவர் என்பது தனி விஷயம்.

உணர்வில் வந்த பொய்ச் செய்தியை பார்த்ததும் எஸ்.. காசிப்பாண்டியன் அவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் நிலை என்ன?

பழனிபாபா கொலை செய்யப்பட்டதும் பி.ஜே. கண்ணீர் விட்டு விம்மி விஸ்கி அழுதார். அந்த காட்சிகளை இப்பொழுதும் யுடியூப்பில் காணலாம்

பழனிபாபாவை கொலை செய்து விடும்படி பி.ஜே. பத்வா கொடுத்தார் என லுஹா எனக்கு தகவல் தந்தார். இதற்கு காரணம் பாபாவின் இந்த பேச்சுதான் என அறிந்தேன்https://www.youtube.com/watch?v=jYUL06jYUUU

பி,ஜெ. அழுதது பொய்யான வேஷமா? பழனிபாபாவை கொலை செய்து விடும்படி பி.ஜே. பத்வா கொடுத்தார் என லுஹா சொன்னது பிராடுத்தனமா?

இந்த மாதிரி லுஹா பி,ஜெ. மீது கூறிய குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டு  உண்மைப்படுத்தி எழுதி இருக்கிறேன். மேடையில் பேசியும் இருக்கிறேன். http://mdfazlulilahi.blogspot.in/2015/04/blog-post_27.html பார்த்துக் கொள்ளவும்

எனது பேச்சுக்கு அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு லுஹா இன்று வரை, இந்த நிமிடம் வரை மறுக்கவில்லை.

பி,ஜெ, லுஹா போன்றவர்களுடன் எனக்கு இருந்த நெருக்கம் உங்களுக்குத் தெரியும். லுஹாவும் பி,ஜெ.யும் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என அனுபவ ரீதியாகவும் ஆதாரத்துடனும் நம்பி இருக்கும் நான். எப்படி பூட்ஸ்கால் நாடகத்தை நம்புவேன். http://mdfazlulilahi.blogspot.in/2015/06/blog-post_10.html இதில் நாடகக் காட்சியின் விளக்க போட்டோ உள்ளது.

லுஹா மேற்கே போவதாக இருந்தால் உங்கள் வீட்டை தாண்டித்தான் போக வேண்டும். நீங்கள் கிழக்கே போவதாக இருந்தால் லுஹா வீட்டை தாண்டித்தான் போக வேண்டும்.

1.பழனிபாபாவை கொலை செய்து விடும்படி பி.ஜே. பத்வா கொடுக்கவில்லை. பழனிபாபாவை கொலை செய்து விடும்படி பி.ஜே. பத்வா கொடுத்தார் என இலாஹிக்கு தகவல் கொடுக்கவில்லை.

2.மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னதே கிடையாது. இதில் ஷம்சுல்லுஹாவாகிய நான் பொய்யர் என்றால் அல்லாஹ்வின் சாபம் என்மீது இறங்கட்டும். உண்மையாளன் என்றால் பழுலுல் இலாஹி மீது இறங்கட்டும் என சொல்லச் செய்யுங்கள்.

சப்- இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் லஞ்சம் கேட்டதாக உணர்வில் வெளியான செய்தி உட்பட பி.ஜே, லுஹாவின் பாரதுாரமான  பொய்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றைில் இந்த இரண்டுக்கு மட்டும் மேலே உள்ளபடி உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் சத்தியம் செய்யச் செய்து வீடியோ வெளியிடுங்கள்.

அல்லது நான் கூறியுள்ளவற்றை பட்டிலிட்டு இதில் யார் பொய்யரோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என அனைவரும் துஆச் செய்யுங்கள் என அவர்களது மீடியாக்களில் வெளியிடச் சொல்லுங்கள்.  

மஸ்ஜிதுர் றஹ்மான் விஷயத்தில் த...வினர் கூறிய தகவலை ஒட்டியே உங்கள் அமைப்பின் போலீஸ் எதிர்ப்பு செயல்பாடுகளும் இருந்தது. எஸ்டி.பி. போன்ற அமைப்புகளை நான் விமர்சிக்க மாட்டேன். ஏனெனில் தாங்கள் மட்டுமே அக் மார்க் முஸ்லிம்கள் என அவர்கள் சொல்வதில்லை. 

சிறுமி ஸமீரா பிரச்சனையில் த.மு.மு.க. அதிகமாக காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்தது. அதனால் த.மு.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட A.C. மாதவன் நாயர் வெளிநாட்டிலிருந்த என் வீட்டுக்கும் திரும்ப திரும்ப போலீஸ்களை அனுப்பினார். மனித இயல்புபடி அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

2.4.15 அன்று பீர் பானை நிகழ்ச்சியில் போலீஸ் மீது கல் விட்டு எறிந்த பின் தடியடி நடந்தது. பின் அங்கு போனேன். கல் விட்டு எறிந்தவர்கள் த.த.ஜ.வினர் என அறிந்தேன். போலீஸ் அடித்த அடியில் … .. என வாட்ஸப்பில் பொய்யான செய்தி பரவியது. த.த.ஜ. தவிர எல்லா கட்சியினரும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை இட்டார்கள்.

அவ்வப்போதைய தகவல் அறிந்த நான் அப்போதைக்கு யாரிடமும் எதையும் சொல்லவில்லை. ஜட்ஜுக்கு முன்னால் போகும்போது ரொம்ப பாதிக்கபட்டவன் போல் போ. மூச்சு விட முடியவில்லைன்னு சொல் என த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் வக்கீல் அலிப் மீரான் அவர்களும் மேலும் 2 வக்கீல்களும் கூறி உள்ளனர். ஆனால் பாதிப்பு இல்லாதவன் போல் நிமிர்ந்தவனாக போய் நின்றுள்ளான்.

மறு நாள் காலையில் த.மு.மு.க. செயலாளர் காஜாவிடம் கேட்டேன். அந்த பையன் சுன்னத் ஜமாஅத்தா என. ஆம் என்றார். நான் இல்லை த.த.ஜ. குடும்ப பையன் என்றேன். எப்படி சொல்கிறீர்கள் என்றார். பொறுத்து இருங்கள் உண்மை வெளி வரும் என்றேன்.

ஏ.ஸி. மாதவன் நாயர் உட்பட அங்கு இருந்த அதிகாரிகளிடம் பீர் பானையில் கல் விடுவது இஸ்லாமிய மதச் சடங்கு என கூறியதை கேட்டு உறுதிபடுத்தினேன்.  பையனை காப்பாற்ற இப்படி இஸ்லாத்தை களங்கப்படுத்தியதை கண்டித்தேன்.

த.மு.மு.க. தலைவர் ரிபாஇ ஆலிமிடமும் கூறி வருந்தினேன். அவரும் பீர் பானையில் கல் விடுவது இஸ்லாமிய மதச் சடங்கு என்றதை ஜும்ஆவில் கண்டித்துப் பேசினார். ஏ.ஸி. மாதவன் நாயரையும் கண்டித்து பேசினார். காட்டுப் பன்றி என்றோ சங்கை அறுப்பேன் என்றோ பேசவில்லை.

எதுக்கெடுத்தாலும் போலீஸ் ஸ்டேசன் முன்பு குவியும் வீனாப்போன இயக்கங்கள் மற்றும் பொதுமக்களே உங்களாலதானப்பா பீர்பானை கேஸ் தேவையில்லாம விவகாரமாகிப்போச்சு என த.த.ஜ. 13.4.15இல் நோட்டீஸ் போட்டது.

3.4.15அன்று நான் கூறியதை  10 நாள் கழித்து உண்மைப்படுத்தியது. இதன் பின்னணியில் உள்ள சவூதி போன் என எழுதப் போனால் இன்னும் நீளும். 
அவர்கள் நோட்டீஸ்படி  வீனாப்போன இயக்கங்களில் எஸ்.டி.பி.யும் நீங்களும்தானே உங்களாலதான் பீர்பானை கேஸ் தேவையில்லாம விவகாரமாகிப்போச்சு என்பதை உண்மை என நீங்கள் ஒப்புக் கொண்டால் பூட்ஸ் காலையும்  ஒப்புக் கொள்ளுங்கள். 
எஸ்.ஐ. ஷேக் அப்துல் காதரை லுஹா அசிங்கமாக பேசுவதற்கு 15 நாளுக்கு முன்பாக. 5 சத வீதம் இட ஒதுக்கீடு கேட்கிறோமே நம்மவர்களுக்கு, அவர்கள் வந்தால் இப்படித்தான் இருப்பார்கள். என எஸ்.ஐ. ஷேக் அப்துல் காதரை காட்டி நான் பேசினேன்.
15.5.15  அன்று  இரவு   10.30  மணி  அளவில்  என்  வீட்டு   கதவை தெருவிலுள்ளவர்கள்  தட்டி  அழுதுள்ளனர்.  போலீஸ்  வந்து  சின்ன  பையன்களை  கண்டபடி அடிக்கிறார்கள்  என  கூறியுள்ளனர்.  உறங்கிய  என்னிடம்  தகவல்  சொல்லவே தெருவுக்கு  போனேன்.  கூடி  நின்றவர்களிடம்  என்ன  என்று  விபரம் கேட்டுக்  கொண்டிருந்தேன்.

அப்பொழுது   தெருவுக்குள்   வேகமாக   2   பைக்கிள்   2  போலீஸ்  அதிகாரிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக   வந்தார்கள்.   அதில்  ஷேக்  அப்துல்காதர்  என்ற அதிகாரி பிள்ளையா வளக்கிறியோ புள்ள. தொலைத்து விடுவேன்  என கோபமாக பேசி  விர் என போய் விட்டார். அதற்கு முந்தின நாள் மய்யித்தை அடக்கும் பிரச்னையில் நான் சப்தம் போட்டு பேசினேன். எனவே என்னைப் பார்த்ததும் கோபம் என எண்ணினேன்.

எனது வீட்டு கல்யாணத்திற்கு .மு.மு.. தலைவர்கள் வருகையை ஒட்டி  வாய்க்கால் பாலம் அருகில் .மு.மு.. கொடி கட்டிக் கொண்டிருந்த  செயலாளர் காஜா மற்றும் அங்கு நின்றவர்களிடம் போலீஸைஇந்த தெரு பையன்   அடித்து   விட்டான் என்று  கூறி விட்டு போய் இருக்கிறார்.

நாம் ஸ்டேஷனுக்கு வரக் கூடாது என்பதற்காக இந்த மாதிரி சொல்லி விட்டு போகிறார் என சிலர் சொன்னார்கள். அப்பொழுது ஏ.ஸி. நாயர் வந்து என்ன கூட்டம் என கேட்டார். கல்யாணத்திற்கு .மு.மு.. தலைவர்கள் வருகையை ஒட்டி கொடி கட்டிக் கொண்டிருக்கிறோம் என்றார் செயலாளர் காஜா.

தெருவில் போய் போலீஸை அடித்தார்களா என கேட்டதற்கு ஆம் இன்ன பையன் கன்னத்தில் அடித்தான் என பல பெண்கள் சாட்சி சொன்னார்கள். சம்பந்தப்பட்ட பையனின் தாயும் சின்னம்மாக்களும் என் பையன் போலீஸை 2 அடிதான் அடித்தான். போலீஸ் எம்மாத்திர அடி அடித்து விட்டான் என்றார்கள்.
போலீஸை அடித்து விட்டதால் அதை பேச முடியாது. ஷேக்  அப்துல்காதர்  உங்கள் முன் சப்தம் போட்டதை  பிரச்சனையாக ஆக்குவோம் என்றனர். நான் வேண்டாம் என சொல்லி விட்டேன். 
14.5.15  அன்று  இரவு  8  மணி  அளவில்  படையாச்சி  சமுதாய  பையன்கள்  முஸ்லிம் பையன்கள்  அடித்துக் கொண்டார்கள். த.மு,மு.க. செயலாளர் காஜா வேண்டுகோளை ஏற்று வழக்கு போடாமல்   போலீஸ்   ஸ்டேஷனில்  சமாதானம்  செய்து அனுப்பிவிட்டனர். 
மறு நாள்   15.5.15  அதே  நேரத்தில்  முஸ்லிம்  பையன்கள்   படையாச்சி  பையன்கள்  வீட்டுக்கு போய்  மாப்ளே   வா   என  பிரண்ட்லியா கூட்டி போய் அடி கொடுத்து உள்ளனர். எனவே படையாச்சி பையன்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். 

இதையொட்டி முஸ்லிம் பையன்களை பிடிக்க  வந்த போலீஸின் கன்னத்தில் அடித்ததால்  ஷேக் அப்துல்காதர் அந்த பையனை அடித்து   இழுத்து  கொண்டு போய் உள்ளார். மேலும் 2 சமுதாய பிரச்சனையாக ஆகி விடாமல் தடுத்துள்ளார். போலீஸை அடித்தவன் த.த.ஜ. என்றனர் ஒரு சிலர். த.த.ஜ.வினருக்கு நெருக்கம் என்றனர்.

.ஸி உடனே  நகர்  வலம்  வந்தார்.  .மு.மு..  உட்பட  பல அமைப்பினர் ஸ்டேஷன்  முன் கூடினர்.  படையாச்சி  சமுதாய  பெண்கள்  என்னிடம்  14.5.15  அன்று  இரவு  சம்பவம்  நடந்த உடன் இஸ்மாயில் தங்கள் தைக்கா தெரு முகைதீன் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்தவர்களிடம் சொன்னோம். 

அவர்கள் எங்கள் பகுதி பையன்கள் இல்லை. அவர்கள் ஹாமீம்புரத்து பையன்கள் என கூறி விட்டனர். நம்ம பகுதி என்றால் தாயா பிள்ளையா பழகுகிற நாமே பேசி முடித்து இருக்கலாம் என்றார். 

நானும் அந்த பள்ளியில்தான் தொழுவேன் அன்று போகவில்லை. எனவே மற்ற தொழுகையாளிகளிடம் கேட்டேன் கூட்டமாக அங்கும் இங்குமாக ஓடினார்கள். .. என்பவன் கையில் சட்டையுடன் ஓடினான். இரவு12 மணிக்குத்தான் வீடு திரும்பினான் என்றார்கள்.

இந்த  பகுதி  எப்பொழுதுமே  பிரச்சனையான  பகுதிதான்.  இஸ்மாயில் தங்கள் தைக்கா தெரு முகைதீன் பள்ளிவாசல் வரை போலீஸ் ரோந்து முன்பு இருந்தது. இப்பொழுது இல்லை.

நான் விசாரித்த அளவில் 2 தரப்புமே இன வெறியுடன் நடந்துள்ளதை அறிய முடிந்தது. 2 தரப்பும் கம்பு கத்திகளை தெரு வழியாக பகிரங்கமாக எடுத்துச் செல்லக் கூடியவர்களாக இருந்துள்ளனர். பல சிறு சிறு மோதல்கள் அடிக்கடி நடந்துள்ளது. இப்பொழுதுதான் எஸ்ஐ. ஷேக் அப்துல் காதரால் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

நேரடியாக எனக்கு தெரிந்த இந்த விஷயங்களில் உங்கள் கட்சி சார்பில் போலீஸை குற்றப்படுத்தி போஸ்ட்டர் ஒட்டினீர்கள். நான் கண்டு கொள்ளவில்லை.  கண்டு கொள்ளவும் மாட்டேன் வஸ்ஸலாம் 
http://mdfazlulilahi.blogspot.in/2002/12/blog-post_115571117747994287.html 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.