ததஜா அந்த பெண்ணிடம் மன்றாடியது,அந்த பெண்ணிடம் மண்டியிட்டது என்றும் சொல்லலாம்

from:kadirkani misc kadirkanimisc@gmail.com
to:Adiyar Nanban
bcc:fazlulilahi@gmail.com
date:Tue, Jun 30, 2015 at 2:32 PM
subject:ததஜாவின் திகிடு தத்தம் காரைக்காலில் பதற்றம்.
mailed-by:gmail.com
signed-by:gmail.com

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
              
    அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

         அப்துநாஸிர் பாக்கவி (எ) அபூ சுஹைல் என்பவர் சிறந்த மார்க்க அறிஞராவார்.இவர் சென்னையில் பணியாற்றியபோது பல ஆண்டுகளாக ததஜாவுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் தனியார் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக ஊதியம் வாங்கிக்கொண்டு பணியாற்றிய இவர் முழுக்க முழுக்க ததஜாவுக்கே வேலை செய்தார்.இது அந்நிறுவனத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது அந்நிறுவனத்தார் அப்துன்னாஸிரிடம் ஒன்று எங்களிடம் ஒழுங்காக வேலை செய்யுங்கள் அல்லது ததஜாவிடம் வேலை செய்யுங்கள் என்றதும்,இந்த அப்பாவி மனிதர் ததஜாவையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.

       மாதாந்திர வருவாய் இல்லாமல் எத்தனை நாள்தான் ததஜாவுக்கு வேலை செய்யமுடியும்?அவரது குடும்பத்தேவையை அவரால் சமாளிக்க முடியவில்லை.ததஜா தலைமையும் அவரது பொருளாதாரத் தேவையை கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் தான்,காரைக்கால் ததஜாவுக்கு ஒரு நல்ல திறமையான மௌலவி தேவை என்ற கோரிக்கை ததஜ தலைமைக்கு வருகிறது.உடனே விட்டால் போதும் என்ற குறையாக அப்துன்நாஸிர் பாக்கவி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வாங்கிய ஊதியத்திற்குறைவான ஊதியத்திற்கு அவரை காரைக்காலுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

      சகோதரர்களே! தற்போது அவர் ததஜாவிலிருந்து நீக்கப்பட்டவர்.அவர் நீக்கப்பட்டதின் காரணம் என்ன என்பது அபூசுஹைலுக்கும்,ததஜாவுக்கும் உள்ள விவகாரம் அதைப்பற்றி விரிவாக எழுத விரும்பவில்லை.சில நாட்களுக்கு முன்னால் அவர் வேறொரு விதவைப்பெண்ணை இரண்டாவதாக முறையாக திருமணம் முடித்துள்ளார். அந்தப் பெண் ததஜாவின் பொறுப்பிலுள்ள சிறு குழந்தைகள் மதரஸாவில் பாடம் சொல்லிக் கொண்டிருந்தவர் .காரைக்கால் ததஜாவினருக்கு மிகவும் பரிட்சயமானவர், மார்க்கத்தை பேணி நடக்கும் ஒழுக்கமுள்ள பெண்,தற்போது காரைக்காலில்தான் தங்க வைத்துள்ளார்.இந்த பெண் தொழுகைக்காக ததஜா பள்ளிவாசலில் இருக்கும் போது அந்தப் பெண்ணை வாய்க்கு வந்தவாறு அசிங்க அசிங்கமாக திட்டி,வெளியில் கிடந்த செருப்புகளை எடுத்து எறிந்து கடுமையாக தாக்கியுமுள்ளார்கள் எந்த அளவுக்கு என்றால் அடிதாங்காமல் கதறும் தன்தாயின் நிலையைக் கண்ட வயதுக்குவந்த பெண் தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் வெளியே ஓடிவிட்டார்.அவர் எங்கு போனார் என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்த அந்த தாயிடம் பல மணி நேரங்களுக்குப்பின் சில நல்ல சகோதரர்கள் தேடி கண்டுபிடித்துக்கொண்டுவந்து கொடுத்தார்கள்.

       அடிபட்ட பெண் காவல்துறையில் முறையிட வந்தது ததஜவுக்கு பேரிடி. காவல்துறை அந்த பெண்ணின் முறையீட்டை பெற்றுக்கொண்டு களத்தில் இறங்கியதுதான் மிச்சம் வெலவெலத்துப்போனது மாபெரும் இயக்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். காவல்துறை துணை ஆய்வாளர் அடித்தவர்களை,அதற்குத் துணை நின்றவர்களை மொத்தம் பதினைந்து நபர்களிடம் விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டு முதல் தகவல் அறிக்கையின் பிரகாரம் கைது நடவடிக்கையில் இறங்கியது.மாபெரும் இயக்கம் என்று தன்னை பீற்றிக்கொண்ட ததஜா அந்த பெண்ணிடம் மன்றாடியது,அந்த பெண்ணிடம் மண்டியிட்டது என்றும் சொல்லலாம்.இறுதியில் இவர்களின் நிலையை அறிந்த துணை ஆய்வாளர் எஃப் ஐ ஆர் போடாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆட்டோவில் ஸ்பீக்கரைக் கட்டி இந்த பெண் தவறு செய்யவில்லை ஒழுக்கமான பெண் நாங்கள் தான்  தவறிழைத்துவிட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று தெருத் தெருவாக அறிவிப்பு செய்யவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தார்.கதிகலங்கிப்போன ததஜவினர் உதவி ஆய்வாளரிடம் ஏற்கனவே நாங்கள் கடுமையாக கேவலப்பட்டு விட்டோம் இது இன்னும் பெரிய கேவலமாகிவிடும்.நாங்கள் சமாதானமாக போய்விடுகிறோம் என்று கெஞ்சிக் கேட்க தன்னுடைய உத்தரவின் கடுமையைக் குறைத்து வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் பொதுமக்கள் மத்தியில் அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கோரவேண்டும் தவறினால் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என்று எழுதிவாங்கிக் கொண்டார். இனிமேல் வரும்  வெள்ளிக் கிழமையில் என்ன நடவடிக்கை என்றுதான் பார்க்கவேண்டும்.

            ததஜாவின் மீது சில சந்தேகங்கள்.

     சென்னை மக்காபள்ளி இமாம் ஷம்சுத்தீன் காஸிமி அவர்கள் ததஜாவுக்கு எதிராக பேசியதினால் ததஜவினர் அவர் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியையும்,குழந்தையையும் சாணி,விளக்குமாற்றால் அடித்தார்கள்.ததஜாவின் மாநில பொறுப்பிலுள்ள செய்யத் இப்ராஹீம் என்பவர் ஷம்சுத்தீன் காசிமியின் மனைவியை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். 

     காரைக்கால் அப்துல்மஜீத் என்பவர் ததஜாவுக்கு எதிராக எழுதியதால் அவரின் மனைவியை தரக்குறைவான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தினார்கள்.இறுதியில் மாநிலத்திலிருந்து இரண்டு பேர் அப்துல் மஜீத்தின் சகோதரரிடம் சென்று மன்னிப்புக்கேட்டுள்ளார்கள்.

     தற்போது ததஜாவை விட்டு வெளியேறிய அபூசுஹைலின் மனைவியை தங்களின் பள்ளிவாசலுக்குள் தாக்கி அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.

     இவைகளை வைத்துப்பார்க்கும்போது இவர்கள் அதிகமாக மோதுவது பெண்களிடம்தான்.யாராவது இவர்களுக்கு எதிராக பேசிவிட்டாலோ,எழுதிவிட்டாலோ உடனே அவரின் வீட்டுப்  பெண்களைப்பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்கள்.இதுதான் வரம்பு மீறலுக்கு அதே அளவு வரம்பு மீறுவது என்ற ஆயத்திற்கு இவர்கள் தந்த விளக்கமோ? இது என்ன குர்ஆன் ஹதீஸோ தெரியவில்லை.எ(அ)வன் கற்றுக்கொடுத்த பாடமோ தெரியவில்லை. இவர்களின் லட்சணத்தைப் பற்றி காரைக்காலில் பொம்பளைப் பொறுக்கிகள் பொம்புளைகளிடம்தான் மோதுவார்கள் என்று பேசக் கேட்டேன்.

      இரண்டாவது திருமணம் மார்க்கத்திற்கு உடன்பாடில்லையா? எந்த அடிப்படையில் அந்தப் பெண்ணை தாக்கினீர்கள் தவறான முறையில் இழுத்துக்கொண்டு ஓடினார்களா?திருமணம் முடித்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் இழுத்துக்கொண்டு ஓடிப்போன கடையநல்லூரைச் சார்ந்தவருக்கு திருமணம் நடத்திவைத்தீர்களே அவரும் உங்களுடன்தான் இவ்வளவு காலமாக ததஜாவின் மாநில பொறுப்பில் உள்ளார்.அடுத்தவர் மனைவியை அபகரிப்பது குற்றமில்லை என்று எவனோ சொன்ன அடிப்படையிலையா  மௌனம் சாதிக்கிறீர்கள்.  நீங்கள் தாக்க வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமானவர் கடையநல்லூர்காரரும்  அவரின் இரண்டாவது மனைவியுமாகத்தான் இருக்க வேண்டும்.

   மேலப்பாளையத்தில் காவல்துறை பூட்ஸ் கால்களோடு பள்ளிக்குள் நுழைந்தார்கள் என்று பல போராட்டங்களுக்குப் பிறகு தோற்றுப்போய் இப்போது ததஜாவாகிய நீங்கள் நபி (ஸல்)அவர்கள் காலத்தில் நடந்த பத்ரு யுத்தத்தை கொச்சைபடுத்தும் விதமாக நீங்களாகவே பத்ரு யுத்தம் என்று பெயர்வைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறீர்களே? காரைக்காலில் அபுசுஹைல் மனைவிமீது பள்ளிக்குள் செருப்புகளை வீசி தாக்கினீர்களே இதற்கு யார் போராட்டம் நடத்துவது?இதற்கு உஹது போர் என்று பெயர் வைக்கலாமா? நேர்வழி காட்ட அல்லாஹ்வே போதுமானவன்.

                    இப்படிக்கு
            காதிர் கனி எம் ஐ எஸ் சி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.