பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளின் பேராதரவு பெற்ற இயக்கம் த.த.ஜ.

இதனை படித்து விட்டு வரம்பு மீறியவர்களுக்கு எதிராக கண்டிப்பாக துஆச் செய்யுங்கள். அபாயகரமான கூட்டதின் பிடியிலிருந்து உங்கள் பிள்ளைகளை காத்துக் கொள்ளுங்கள்

மூஸா நபி வரலாற்றில் மவுலவி ரிபாஈ ஆலீமும் இடம் பெற்றுள்ளாரா என ஒருவர் கேள்வி கேட்க தலை சுற்றி நின்றோம். மூஸா நபி வரலாற்றை பேசிய லுஹா த.மு.மு..தலைவர் மவுலவி ரிபாஈ ஆலீமை கடுமையாக விமர்சித்துப் பேசினார் என்றார். அவர் பேசாவிட்டால்தான் ஆச்சரியப்படணும் என்றோம்.

பெரிய  பெரிய  போலீஸ்  அதிகாரிகளின்  பேராதரவு  பெற்ற இயக்கம்  ...  அதனால் எந்த கொம்பனாலும் த.த.ஜ.வை அசைக்க முடியாது.  நாம்  சொல்லவில்லை  ... நிர்வாகிகள்தான்  சொல்லி  உள்ளார்கள். 

1.6.15  அன்று  ஆட்டோ  டிரைவரை அடித்த த...நிர்வாகிகளை போலீஸார் தடுத்தார்கள். தடுத்த  போலீஸாரையும் த...  நிர்வாகிகள் தாக்கினார்கள்.  எனவே அடித்த த...வினரை  பிடித்து போலீஸார் வைத்திருந்தார்கள்.  குற்றவாளிகளான அந்த ...வினரை  விடுவிக்க  பெரிய பெரிய  போலீஸ்  அதிகாரிகள்  பலர்  உதவியாக  இருந்தார்கள். இப்படி  கூறி  போலீஸ்  அதிகாரிகள் பெயரைப் பட்டியலிட்டு பெருமைப்படுகிறார்கள்  த...வினர். அந்தப் பட்டியலை பார்க்கும் முன்.

...வுக்காக  போலீஸ்  அதிகாரிகள்  மட்டும்  பேசவில்லை நாமும்தான்  பரிந்து பேசினோம்.  சம்பவம்  நடந்ததும் நாகர்கோயிலில்  இருந்த  நமக்கு  போன்  வந்தது.  ஊரிலிருந்த எனக்கு  தெரிந்த  4 பேருக்கு  போன்  போட்டேன்  அப்படியா தெரியாதே  என்றவர்கள்  விசாரித்து  விட்டு  ஒவ்வொரு விதமான  தகவல்  தந்தார்கள். 

பூட்ஸ்  காலுடன்  பள்ளிவாசலுக்குள்  நுழைந்து  விட்டார்கள் என்ற  பொய் செய்தியே  காட்டுத்  தீயாக  பரவியது.

அந்த  தீய  செய்தீயே  நமக்கும்  கிடைத்தது.  உடனே  மனித இயல்புப்படி  என்ன  இருந்தாலும்  நம்ப  பள்ளி,  பூட்ஸ் காலுடன்  பள்ளிவாசலுக்குள்  நுழைந்ததை  சும்மா  விடக்கூடாது  என்றேன்.  சென்னையிலிருந்த  .மு.மு..  தலைவர் மவுலவி  ஜே.எஸ். ரிபாஈ   ஆலீம்  அவர்களுக்கு  போன் செய்தேன். 

மஸ்ஜிதுர்றஹ்மானுக்கு  தேவையான  ஒத்துழைப்பை கொடுக்கும்படி  மாவட்ட  நிர்வாகிகளிடம்  சொல்லி  விட்டேன் என்றார். அதனால்தான்  .மு.மு..  தலைவர்  மவுலவி  ஜே.எஸ். ரிபாஈ  ஆலீம் லுஹாவின்  மூஸா  நபி  வரலாற்றில்  இடம் பெற்றுள்ளார்.

பள்ளி மைக்கில் போலீஸை நாய்கள் என்று திட்டி பேசிக் கொண்டே ஆண்களும்  பெண்களும்  பள்ளிக்கு  வாருங்கள்  என  லுஹா அறிவித்துக்  கொண்டே  இருந்தார்.  இதை  செல்  மூலம் லைவில் நாகர்கோயிலிலிருந்து  கேட்டுக்  கொண்டே இருந்தேன். 

.மு.முக  மாவட்ட  செயலாளர்  அப்பாஸ்  ஹில்மி  மண்டல பொருளாளர்  நாமியா ஹஸன்  ஆகியோர்  .ஸி.  மாதவன்  நாயர்  அவர்களை  கண்டு பேசினார்கள்.  கூடி  நிற்பவர்கள்  அப்பாவிகள்  கூட்டத்தை கலைக்க  நீங்கள்  எடுக்கும்  தடியடி  நடவடிக்கையால் அப்பாவிகள்  பாதிக்கப்படுவார்கள்.   எனவே  போலீஸ்  போர்ஸை திரும்ப  பெறுங்கள்.  என்று  .மு.முக வினர் வேண்டுகோள்  வைத்தனர்.

.ஸி.  மாதவன்  நாயர்  அவர்கள்  கூட்டத்தை  கலைந்து  போகச் சொல்லுங்கள்.  நான்  போலீஸை  திரும்ப  பெறுகிறேன்  என்று கூறி  இருக்கிறார். 

.மு.முக  மாவட்ட  செயலாளர்  அப்பாஸ்  ஹில்மி  மண்டல பொருளாளர் நாமியா ஹஸன்  ஆகியோர்  ...வைச்  சார்ந்த  யூசுப்  அலி கல்பட்டான்   செய்யது  அலி  ஆகியவர்களிடம்  பள்ளிக்கு வெளியில்  நிற்பவர்களை  பள்ளியினுள்  போகச்  சொல்லுங்கள் என்று  கூறி  இருக்கின்றார்கள். 

பள்ளிக்கு  வெளியில்  கூடி  நின்றவர்கள்.  பள்ளியினுள் போனதும்.  .ஸி.  மாதவன்  நாயர்  அவர்கள் த.மு.மு..வினரிடம்   கூறியபடி போலீஸ் போர்ஸை திரும்ப பெற்றார். மற்றவர்களோ  ...  தலைமை  பேசி  போலீஸ் போர்ஸை திரும்ப பெற்ற  மாதிரி  பரப்பிக்  கொண்டார்கள்.

வரம்பு மீறி போலீஸாரை அசிங்க அசிங்கமாக நாயர் நாயே திரும்பிப் போ போன்ற வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் கற்களை வீசிக் கொண்டும் நின்ற த...வினர் மீது நடத்தப்பட இருந்த தடியடி த..மு..வினர் முயற்சியால்தான் தடுத்து நிறுத்தப்பட்டது.

போலீஸ் நாய்களுக்கு பயப்படாதீர்கள். ஆண்களும்  பெண்களும்  பள்ளிக்கு  வாருங்கள்  என்று சொல்லிக்  கொண்டே  இருந்த  லுஹா  கூட்டம்  கூடியதும். கொள்கைவாதிகள் தவிர  மற்றவர்கள்  வெளியேறுங்கள்  என்று  அவரது பாஷையில்  மீண்டும்  மீண்டும் சொன்னார். (அதாவது கொள்கை வியாபாரிகளான TNTJயினர் தவிர மற்றவர்கள் வெளியேறுங்கள் என்று அர்த்தம்)

போலீஸுடன்   பேச்சு   வார்த்தை  நடத்த   ...வைச்  சார்ந்த யூசுப்  அலி  கல்பட்டான்  செய்யது  அலி  ஆகியோர் .மு.மு..வினரும்  எங்களுடன்  வாருங்கள்  என அழைத்தார்கள்.  (கொள்கை வியாபாரிகளான) ...வினர்  தவிர  மற்றவர்கள் வெளியேறுங்கள்  என்று  லுஹா  மீண்டும்  மீண்டும் சொன்னதால்  .மு.மு.. வினர்  லைந்து  போய்  விட்டார்கள்.

...வினர்  விடுவிக்கப்பட்டதற்கு  பாராட்டியும்  நன்றி தெரிவித்தும்  ஆணையாளருக்கும் துணை  ஆணையாளருக்கும் இரவு  1.29க்கு  ...  மாவட்ட  செயலாளர்  மில்லத் இஸ்மாயில்  வாட்ஸப்பில்  செய்தி  அனுப்பி  இருந்தார். 

நன்றிக்குரியவர்களின்  நன்றிக்குரிய  நற்செயலை   வெளியிட்டு நன்றி  தெரிவிக்க  கடமைப்பட்டவர்கள்.  நல்லவர்களாக இருந்தால்  நன்றி  கூறி  இருப்பார்கள் . நன்றி  சொல்லாதது மட்டுமன்றி  குற்றம்  சாட்டி   நன்றி  கெட்டவர்கள்  என்று  தங்களை அடையாளம்  காட்டிக்  கொண்டார்கள்.

நம்ப  பள்ளி  பூட்ஸ்  காலுடன்  பள்ளிவாசலுக்குள் நுழைந்ததை  சும்மா  விடக்  கூடாது என்று  முதலில்  கடும்  கோபத்தில்  பேசிய  நான்,  வீடியோ காட்சிகள் வந்த பின் அதை பொய் என விளங்கி விட்டேன். 

பள்ளிவாசலில் நின்று கொண்டு போலீஸ் நாயே நீ சட்டையை கழட்டி விட்டு வா. நான் என் ஆளை அனுப்புகிறேன் என லுஹா பேசியது. வருத்தத்தை அளித்தது. இப்படி துாண்டி விட்டுப் பேசித்தானே பலரை ஜெயிலுக்கு அனுப்பினான் சண்டாளன். 

நான் என் ஆளை அனுப்புகிறேன் என்கிறவனுக்கு நான் வருகிறேன் என சொல்ல  வக்கு இல்லாத மகா கோழை சமுதாயத்தை பலி இட்டான் இப்பொழுதும் அதே வேலையை செய்து உள்ளான்.

எஸ்.ஐ.ஷேக்அப்துல்காதரை காரில் அடிபட்டு சாவான் என்றும் பள்ளியில் வைத்து லுஹா சாபம் இட்டுள்ளார். எஸ்.ஐ.ஷேக்அப்துல்காதர் வரம்பு மீறாதவராக இருந்தால் சாபம் லுஹாவுக்கே திரும்பும். உஹது போரில் இறைத்துாதருக்கே இல்லாத அதிகாரம் லுஹாவுக்கு வந்து விட்டது.

போலீஸார் மேல் கை வைத்து இருந்தால் யா அல்லாஹ் எங்களை நீ நாசமாக்கு. போலீஸார் மேல் கை  வைக்காத நிலையில்  கை வைத்ததாக யார் பொய்யை சொன்னார்களோ அவர்களை நீ நாசமாக்கு என்று துஆ கேட்கவும் கேட்கச் சொல்லவும் TNTJயினர் ஏன் மறுக்கிறார்கள்.  இதிலிருந்து தெரியவில்லையா TNTJயினர் அனைவரும் பொய்யர்கள் என்று.

எஸ்.ஐ.ஷேக்அப்துல்காதர் யார் நெல்லை பேட்டையைச் சார்ந்தவர். சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இளம் வயதுக்காரர். 2008இல் சென்னையில் பணிக்கு சேர்ந்தவர். அல்லாஹ்வின் நாட்டம் முஸ்லிம்கள் நிறைந்த மேலப்பாளையத்தில் பணி செய்ய வந்துள்ளார். அவரை அரவணைத்து போக வேண்டியது சமுதாயத்தின் கடமை. சமுதாய துரோகிகளோ அவர் மீது சேற்றை வாரி வீசி உள்ளார்கள். 

14.5.15 அன்று மய்யித்தை அடக்க மறுத்த பிரச்சனையில் அஸர் ஜமாஅத் நடக்கும் நேரத்தில் நைனாம் பள்ளிக்கு வந்தார் எஸ்.ஐ.ஷேக்அப்துல்காதர். வெளி வராண்டாவில்தான் நின்றார். ஷு வை செருப்பு போடும் பகுதியில் கழட்டி வைத்து விட்டுத்தான் வந்தார். 

அது முஸ்லிம்களில் 2 கோஷ்டிகள் மோதிக் கொண்ட சம்பவம். எனது கோஷ்டிக்கு எதிராகத்தான் என்னிடம் பேசினார். அதற்காக அவருக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு கூறினால் நான் மனிதனா?

1.6.15 அன்று அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து லுஹா என்ன சவால் விட்டார். ஒரு வாரத்தில் ஏ.ஸி. மாதவன்நாயர், எஸ்.ஐ.ஷேக்அப்துல்காதர் ஆகியவர்களை பணி நீக்கம் செய்வோம் என்றார். 

ஒரு வாரம் கழித்து இட மாற்றம் என்றார்கள். இட மாற்றம் என்பது ஒவ்வொரு அதிகாரியும் பதவி ஏற்கும்போது முதல் உறுதி மொழியே அதுதானே. எங்கு டூட்டி போட்டாலும் போகணும் என்பது.

அல்லாஹு அக்பர் என்ற சத்தத்துடன் நீ சொன்னது என்ன. ஒரு வாரத்தில் ஏ.ஸி. மாதவன் நாயர்,எஸ்.ஐ.ஷேக்அப்துல்காதர் ஆகியவர்களை பணி நீக்கம் செய்வோம் என்பதுதானே. இப்பொழுது இட மாற்றம் என்ற நழுவல் ஏன்?

.ஸி.  மாதவன்  நாயர்,  எஸ்.ஐ. ஷேக்அப்துல் காதர்  விஷயத்தில் த.த.ஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் யார். 

கடந்த  தேர்தலில்  .தி.மு..வுக்கு  ஆதரவு  அளிக்க  ஏற்பாடு செய்த ---- டி..ஜி.  கடும்  முயற்சி  செய்தார்.


இலஞ்சி  தேர்  எரிப்பில்  உண்மையான  குற்றவாளியை கண்டு பிடித்து  ஜாக்கின்  பாராட்டைப்  பெற்ற  அதிகாரி.

மாதவன்  நாயர்  செயலை  கண்டித்துள்ளார்.  கவட்டையில் பொடி  கல்  வைத்து  அடிக்க   வேண்டிய  குருவியை  அடிக்க பெரிய  ஆயுதத்தை  பயன்படுத்தலாமா  என்று.

ஓய்வு  பெற்ற   போலீஸ்  அதிகாரிகளும்  ...வுக்காக பேசினார்கள்.  ஊர்  பெயரோடு  அதிகாரிகள்   பெயரை ராமநாதபுரம்   வரை  ...  நிர்வாகிகள்  சொல்லி  இருந்தாலும் நாம் தான்  பெயரை  தவிர்த்து  எழுதியுள்ளோம்.

2.8.1992  அன்று  நான்கு  மத்ஹபுகளும்  நவீன  பிரச்சனைகளும் தலைப்பு. அதில்  லுஹா எஸ்.பி. சி..டி.  முத்துக்கிருஷ்ணன் (இறந்து விட்டார்)  என்பவரை  பேசுகிறேன்  என்ற  பெயரில்  காக்கிச் சட்டையே உன்   காக்கிச்  சட்டையை கழட்டுவோம்  என போலீஸை  கடுமையாகப்  பேசினார். 

காக்கிச்  சட்டையை  பிடித்து  கேட்கும்  அதிகாரம்  இருக்கு என்று  காஜித்தார்.  அல்லாஹு  அக்பர்  கோஷம்  பெற்றார்.  ஏன் இப்படி  பேசினீர்கள்  என்று  கேட்டேன்.  ஊரில் நடப்பதையெல்லாம்  போட்டுக்  கொடுக்கிறான்  என்றார்.  சி..டி என்றாலே  அவருக்கு  அதுதானே   வேலை.  அவர்  வேலையை அவர்  செய்கிறார்.  என்றேன்.  எல்லா  போலீஸும் உங்கள் மேல்  கோபமாக  ஆகி  இருப்பார்கள்  என்றேன்.

நான்  நல்ல  போலீஸும்  இருக்கிறார்கள்  என்றும்  சொன்னேன் என்றார்.  துலுக்கன்  அப்படி  இப்படி  என  பேசி  விட்டு  நல்ல துலுக்கணும்  உள்ளான்  என்றால்  என்  மனது சந்தோப்படுமா?  நீங்கள்தான்  சந்தோஷப்படுவீாகளா? யானை  அலவில்  ஒதுக்கி  வைத்த  மாதிரி  எல்லா போலீஸும்  சந்தர்ப்பத்திற்காக  காத்து  இருப்பார்கள் என்றேன்.


அந்த  வீடியோவில்  உள்ள  லுஹாவின்   உரையை அழித்தேன்.  மத்ஹபு  பற்றி  லுஹா  வேறு  ஒரு  சமயத்தில் பேசிய  பேச்சை  போட்டேன்.  நான்கு  மத்ஹபுகளும்  நவீன பிரச்சனைகளும்  வீடியோ  கேட்  சி.டி.யை  கூர்ந்து  பார்த்தால்  தெரியும். 

அதே  ஆகஸ்டு  கடைசி  இரவில்  போலீஸ்  லுஹா   வீட்டுக் கதவை  தட்டியது.  உள்ளூர்  எஸ்..  வந்தாரா   வரவில்லை. ஏனெனில்  அவருக்கு  அப்பொழுதுதான்  நான்  அனுப்பி கொடுத்த  கார்டு லெஸ்  போன்  லுஹா  மூலம் கொடுக்கப்பட்டிருந்தது.

எனவே  கருங்குளம்  ஸ்டேஷனிலிருந்த  எஸ். காசிப்பாண்டியன்  வந்தார்.  லுஹா  வீட்டு  கதவை  தட்டினார். உடனே  லுஹா  காக்கிச்  சட்டையை  பிடித்து  கேட்கும் அதிகாரம்  இருக்கிறது  என்று  கேள்வி  கேட்டார்  என்று எண்ணுகிறீர்களா? 

அதுதான் இல்லை.  மனைவி  பிள்ளைகளை  அம்போ என விட்டு  விட்டு பின் பக்க கக்கூஸ் வழியாக  லுஹா  ஓடினார்.  பிறகு  .மு.மு..  தலைவர்கள் ஜவாஹிருல்லாஹ்,  ஹைதர் அலி  எல்லாம்  அதிகாரிகளிடம்  பேசிய  பின்  சரண்  அடைந்தார்

.மு.மு..  தலைவர்கள் ஜவாஹிருல்லாஹ்,  ஹைதர் அலி  ஆகியோர்  அதிகாரிகளிடம் லுஹாவை அடிக்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்ததால் லுஹாவை அடிக்கவில்லை.

எந்த  குற்றமும்   செய்யாமல்  கொலைகாரனாய்  போலீஸ்  ஸ்டேஷனில்   விட்டு சட்டையை  கழட்டுடா  என லுஹாவை நிர்வாணமாக்கினார்கள். எப்படியான நிர்வாணம் என்பதை  மூஸா நபி வரலாற்றில் நிர்வாணம் சம்பந்தமான சப்ஜக்ட் வரும்போது அவரே விளக்குவார்  அப்பொழுது  போலீஸ்  ஸ்டேஷனில்  லுஹாவுடன்  நெருக்கமாக பழகிய பல  அதிகாரிகள்  பார்த்துக்  கொண்டுதான்  நின்றார்கள். இதுதான்  காவல்துறை  என்ற  யானை.

யானைக்கு  முன்னால்  பாகனின்  பலம்  என்ன?  யானை சத்தியத்துக்கு  கட்டுப்பட்டு   இருக்கு  என்பார்கள். பொறுமைக்கும்  எல்லை  உண்டு.  எப்பொழுதுமே உணவளிக்கும்  பாகன்களையே எல்லை  மீறியதும்  கயிறாக ஆக்கிய  கதிகளை  பார்த்து  இருப்பீர்கள்.  எப்போதாவது உணவளிப்பன்  வரம்பு  மீறினால்  சும்மா விடுமா யானை.

பெங்களூர்  வழக்கில்  கிச்சான்  புகாரி  கைது செய்யப்பட்டபொழுது  ஆர்ப்பாட்டங்கள்  நடந்தது. ஆர்ப்பாட்டதில்  போலீஸை  கண்டித்து  பேச  போகும்  முன். ஐயா  உங்க  நடவடிக்கையெல்லாம்  சரிதான்  நாங்க அரசியல்வாதிகள்  ஆர்ப்பாட்டத்தில்  கலந்து  கொள்வோம். தப்பாக  எடுக்காதீர்கள்.  இப்படி அதிகாரிகளிடம்  சொல்லிவிட்டு  மேடையில்  முங்கியவர்கள்  இருக்கிறார்கள்.

சிறுமி  சமீரா  பிரச்சனையில்  ஐயா  உங்களைப்  பற்றி எங்களுக்குத்  தெரியும்.  நாங்கள்  இயக்கம்  வளர்க்கணும். எனவே  கண்டித்து  போஸ்ட்டர்  ஒட்டப்  போகிறோம் என்றார்கள்.  போட்டோ  வேண்டுமானாலும்  தருகிறோம் அதையும்  போட்டு  ஒட்டுங்கள்  என்று  பதில்  கூறி இருக்கிறார்கள்.

இது  மாதிரி  நிறைய  பட்டியல்  இருக்கு.  இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு  போன்  போட்டு  ஆறுதல்  கூறி  இருக்கலாம் பள்ளிக்குள்   தொழுகை  நடைபெறும்  இடத்திற்குள்  பூட்ஸ்  காலுடன்  போலீஸ்  வந்தார்கள்.  பள்ளியில்   தொழுது  கொண்டிருந்தவர்களையும் ஊனமுற்றவர்களையும்  வயதானவர்களையும்   அடித்தார்கள்.  போன்ற  பொய்களையும்  மக்களிடம் பரப்புரை செய்திருப்பார்கள்.

முன்னால்   ஒன்று   பின்னால்  ஒன்று  பேச  மாட்டேன்உங்களுக்கு ஆதரவாக வேஷம் போட்டவர்கள் தஃவா பணிக்கு உங்கள் நுால்களையோ உரைகளையோ பயன்படுத்துவதில்லை. காரணம் உங்களை காபிர்களாகவே கருதுகிறார்கள். 

நான் மொழி பெயர்ப்பு நல்ல  தமி்ழ்மொழி பெயர்ப்பு.  நடைமுறைத் தமிழ் என்பதோடு. மொழி பெயர்த்தவன் ஷைத்தான்தான். ஜிஹாதுக்கு துாண்டி விட்டு காட்டிக் கொடுத்தவன்தான் இந்த பி.ஜே.யும் லுஹாவும் என்பதை அடையாளம் காட்டித்தான் கொடுப்பேன்.

த.த.ஜ.வில் உள்ள சிலரை கூப்பிட்டு காலில் செருப்பு போட்டு தொழலாமா? உன் கொள்கை என்ன என்று கேட்டேன். த.த.ஜ. கொள்கைப்படி செருப்பு போட்டு தொழலாம் என்றார்கள். பிறகு ஏன் பூட்ஸ் கால் கோஷம் போட்டீர்கள். அது வேஷம்தானே.

மஸ்ஜிதுர்றஹ்மானுக்கு தொழ வரும் த.தஜ. நிர்வாகிகள் அவர்களது செருப்பை வெளியில் கழட்டி போடுகிறார்களா? பள்ளியினுள் கொண்டு வைக்கிறார்களா? என்று கேட்டேன். பள்ளியினுள்தான் வைக்கிறார்கள் என்றான்.

பிறகு சொன்னேன்  த.த.ஜ.காரன் குர்ஆனில் உள்ளது என்று சொல்கிறானா குர்ஆனில் இருக்கிறதா என பார்த்து மக்களிடம் பரப்பு.. ஹதீஸ் என்கிறானா ஹதீஸ் நுாலில் இருக்கிறதா பார் மக்களிடம் எத்தி வை நன்மை. 

தனிப்பட்ட முறையில் மனிதர்கள் பற்றி குறை கூறுகிறானா ஒதுங்கிவிடு. இல்லை. செய்த நன்மைகளை இழந்து நரகம் போவாய் என எச்சரித்து கொண்டுதான் இருக்கிறேன்.

இதையும் மீறி யானைக் காலால் மிதி பட்டுத்தான் சாகணும் என்று இருந்தால் அவனை நம்மால் காப்பாற்ற முடியாது. 


பெயருக்கு முன்னால் கம்யூட்டர் வரும் அதிகாரி உங்களை குருவிக்குத்தான் ஒப்பிட்டுள்ளார். மரத்தில் உள்ள குருவிகள் கூட்டத்தை கலைக்க ஒரு குருவியையும் அடிக்க வேண்டாம். ஒரு பொடி கல்லை மரத்து இலையில் போட்டால் அவ்வளவும் பறந்து விடும். 

அது போல் குருவியை சுடும் துப்பாக்கியை துாக்கி வானை நோக்கி சுட்டால் எல்லாரும் ஓடி இருப்பார்கள். இதுதான் அதற்கு அர்த்தம்.  சும்மா சொல்லவில்லை அனுபவ ரீதியாகவே சொல்லி உள்ளார்

15ஆண்டுகளுக்கு முன் பசார் திடலில் நடந்த கண்டன கூட்டத்தில் பீ.ஜே. வீரமாகப் பேசினார். பெயருக்கு முன்னால் கம்யூட்டர் வரும் அதிகாரியை எழுத முடியாத வார்த்தைகளால் அசிங்கப்படுத்திப் பேசினார். பேச்சை முடிக்கும் போது மேடையை போலீஸார் சூழ்ந்து விட்டார்கள்.

பதறிப் போன பீ.ஜே. மேடையை விட்டு கீழே இறங்கவில்லை. த.மு.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஹைதர் அலிக்கு போன் போட்டார். வாய் தவறி கொஞ்சம் வார்த்தைகளை விட்டு விட்டேன். சூழ்நிலை சரி இல்லை. உடனே  அவருக்கு போன் போட்டு வருத்தம் தெரிவித்து சமாதானப்படுத்துங்கள். என்றார். 

எத்தனையோ விஷயங்களில் காப்பாற்றி விட்ட த.மு.மு.க ஹைதர் அலி இதிலிருந்தும் காப்பாற்றி விட்டார். பேசி விட்டேன் என ஹைதர் அலி அவர்களிடமிருந்து போன் வந்த பிறகுதான் மேடையை விட்டு இறங்கினார். வந்த வண்டியில் போகாமல் வேனில் ஏறிப் போன பீ.ஜே. மதுரையில் கொண்டும் விடச் சொன்னார். இப்படிப்பட்ட மைக் மாவீரரின் தம்பிகளை சிட்டுக் குருவிக்கு ஒப்பிடாமல் சிங்கத்திற்கா ஒப்பிடுவார்கள்.

என்னிடம் வந்த த.த.ஜவினரிடம் லுஹா மகன் போலீஸை தள்ளிவிட்டது. செருப்பு காலுடன் உஸாமா உட்பட 3 த.தஜ.வினரும் பள்ளியினுள் இருந்து வந்தது. போலீஸை நா கூசும் வாத்தைகளால் திட்டியது. இப்படி வரிசையாக பட்டியலிட்டு அல்லாஹ் மேல் சத்தியம் செய் என்றேன். சத்தியம் செய்ய மாட்டேன் என்றார்கள். 

இதில் யார் வரம்பு மீறி உள்ளார்களோ அவர்களை யா அல்லாஹ் நாசமாக்கு என சொல் என்றேன்.. அதையும் சொல்ல மாட்டேன் என்றார்கள்.

1.6.15அன்று நடந்ததில் உண்மையை மறைத்து பொய்ளைச் சொல்லி, அந்த பொய்களை வேகமாக பரப்பி மக்களின் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணடித்து உயிரிழப்புக்கும் காரணமானவர்களை  அல்லாஹ்  நாசமாக்குவானாக. என  துஆச் செய் என்றேன்  மாட்டேன்  என்றார்கள்.

த.த.ஜவினர் தங்கள் தலைமை சொன்னது அத்தனையும் பொய் என்று விளங்கியே உள்ளார்கள். ஆகவே அநியாயவான்களுக்கு எதிராக நியாயவான்கள் புனித ரமழானில் துஆச் செய்வோம். அரசியல்வாதிகளை வைத்து பொய் சொல்லி போலீஸ் பிடியிலிருந்து காப்பாத்தலாம்.

பொய்யர்களையும் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் துணை நிற்பவர்களையும் அல்லாஹ்வின் பிடியிலிருந்தும் நரக நெருப்பிலிருந்து காப்பாத்த முடியுமா?

இந்த அபாயகரமான கூட்டதின் பிடியிலிருந்து உங்கள் பிள்ளைகளை காப்பது பெற்றோர்களே உங்கள். கடமை. எங்கள் கடமை எத்தி வைத்து விட்டோம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.