ரோட்டில் கடந்து கத்திய த.த.ஜ. தலைமை துஆ கேட்கும்படி கூற தயங்குவது ஏன்?

த.த.ஜ. மக்களிடம் பரப்பிய  பொய்யை உண்மைபடுத்த போட்ட நாடகம். 05.06.2015 வெள்ளி அன்று வழக்கமாக செருப்பு போடும் இடத்தில் செருப்புகளை போட விடாமல் தடுத்தார்கள். அதை அன்று தொழுகை இடமாக ஆக்கி போட்டோ எடுத்தார்கள். அந்த போட்டோவைத்தான்  கீழே பார்க்கிறீர்கள்


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் எந்த செயலை செய்தாலும், உலக அளவில் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்து விடுவோம். இறுதியில் இறைவனிடமே கையேந்துவோம், இறைஞ்சுவோம். இதுதான் இறை நம்பிக்கையாளர்களின் இனிய பண்பு. அந்த இனிய பண்பு உடையவர்களுக்கே இந்த வேண்டுகோள் மடல்.


பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை இல்லை. இதை அறிந்த பலர் மன வேதனையோடு அநியாயத்திற்கு எதிராக அல்லாஹ்விடம் துஆக் கேட்டு பலன் பெற்ற அனுபவசாலிகளாக இருப்பீர்கள்

ஆகவே மேலப்பாளையம் விஷயமாக துஆக் கேளுங்கள். புனிதமிக்க ரமழானில் அதிகம் அதிகம் கேளுங்கள். அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக கூலி கொடுப்பான்.


1. ஜுன் முதல் நாள் 2015 அன்று மேலப்பாளையம் போலீஸ்  மீது யாரும் கை வைக்காத நிலையில் போலீஸை அடித்து விட்டதாக தங்கள் மேல் அதிகாரிக்கு பொய்யான தகவல் யார் கொடுத்தார்களோ அவர்களை நீ நாசமாக்கு!


2. ஆஸ்பத்திரி முன் நடந்த தகராறுக்குப் பிறகு ...வினர் மேலப்பாளையம் போலீஸ்  ஸ்டேஷனை முற்றுகை இட்டதாக மேல் அதிகாரிக்கு  யார் பொய்யான தகவல்  கொடுத்தார்களோ அவர்களை நீ நாசமாக்கு!


3. அதன் பிறகு பள்ளியை பாழ் படுத்தும் வண்ணம் திட்டமிட்டு யாரெல்லாம் பள்ளிக்குள் தொழுகை நடைபெறும் இடத்திற்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்திருந்தார்களோ அவர்களது கால்களை  யா அல்லாஹ் நீ  நாசாமாக்கு.


4. பள்ளியில் தொழுது கொண்டிருந்தவர்களையும் ஊனமுற்றவர்களையும் வயதானவர்களையும்  அடித்த போலீஸை யா அல்லாஹ் நீ  நாசாமாக்கு.


5. அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்களையும் பொய் சாட்சி சொல்ல துாண்டியவர்களையும் துணை நின்றவர்களையும்  யா அல்லாஹ் நீ  நாசாமாக்கு.


6. பழனி பாபா உட்பட பல முஸ்லிம்களை  கொலை செய்து விட பத்வா கொடுத்தவனையும் அவனுக்கு  பின்னால் நிற்பவர்களில் ஒருவனையும் யா அல்லாஹ் நீ  விட்டு விடாதே நாசாமாக்கு.


நீ நாசமாக்கு! என கேட்க தயக்கமா சரியான பாடம் புகட்டு என கேளுங்கள். மனம் கொதித்த நிலையில் நீங்கள் கேட்கும் போது அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.  அல்லாஹ் மகா நீதியாளன் நேர்மையாளன் உள்ளத்தைப் பார்ப்பவன். 

நீங்கள் கெட்டவன் என எண்ணிக் கொண்டு நல்லவனுக்கு எதிராகத் துஆச் செய்தாலும். உங்கள் எண்ணப்படி கெட்டவர்களுக்கு எதிரான துஆவாகவே அதனை ஏற்றுக் கொள்வான்.


இறைவனிடம் கையேந்த இறை நம்பிக்கையாளர்களால் மட்டுமே முடியும். இயக்க வெறியர்களால் முடியாது. ரோட்டில் கடந்து கத்திய த.த.ஜ. தலைமை துஆ கேட்கும்படி கூற தயங்குவது ஏன்? துஆ கேட்கும் முன் இறை நம்பிக்கையாளர்கள் தெரிய வேண்டியவை.


1. எஸ். ஐ. ஷேக் அப்துல்காதர்தான் போலீஸை அடித்து விட்டதாக தங்கள் மேல் அதிகாரிக்கு பொய்யான தகவல் கொடுத்ததார் என பள்ளிவாசலில் சொல்லிக் காட்டி உள்ளார்கள். எஸ். ஐ. போன் பேசுகிற காட்சியை அதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளார்கள்.


மேலப்பாளையம் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.யாக பணி புரியும் இன்னோசென்ட் என்ற கிறிஸ்தவ அதிகாரியை ஆஸ்பத்திரியில் வைத்து லுஹா மகன் உஸாமா தள்ளி விட்டார். 

லுஹா மகன் உஸாமா தள்ளி விட்டவுடன் தன்னால் சமாளிக்க முடியாது ஸ்டென்த் வேணும் என எஸ்.எஸ்.ஐ. இன்னோசென்ட் தான் மேலிடத்திற்கு கூறி உள்ளார். உடனே போலீஸ் ஸ்டென்த் மேலப்பாளையம் நோக்கி புறப்பட்டிருக்கிறது.

அப்பொழுது எஸ். ஐ. ஷேக் அப்துல்காதர் அங்கு இல்லை. பிறகுதான் எஸ். ஐ. அங்கு வந்ததார் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.


இனோசென்ட் ssi யை லுஹா மகன் உஸாமா தள்ளி விட்டதாக கூறுவது பொய் எனில் அதற்கு எதிராகவும் துஆச் செய்யுங்கள்.


2. பள்ளிக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்ததாக காட்டப்படும் வீடியோவில் பள்ளியின் வலது புறம் உள்ள செருப்புகளை கழட்டி போடும் இடத்திற்குள் போலீஸார் நுழைவதையும் அங்கு நிற்பதையும்தான் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். 

செருப்பு கழட்டி போடும் இடத்தை ஒட்டியுள்ள பள்ளி ஆபீஸின் அருகில் 2 அதிகாரிகள் நிற்பதை காட்டுகிறார்கள். நன்கு கவனித்து பாருங்கள்.  ஒழுச் செய்யும் இடத்தை தாண்டியோ ஆபீஸை தாண்டியோ போன மாதிரி காட்சிகள் இல்லை. 


துஆ எப்படி கேட்டாலும் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். இதில் யார் வரம்பு மீறி உள்ளார்களோ அவர்களை அல்லாஹ் நாசமாக்குவான். 

இதில் குறிப்பிட்டு இன்ன பெயருடையவருக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என நான் சொல்லவில்லை. 

யார் வரம்பு மீறி உள்ளார்களோ, யார் பொய்யர்களோ, யார் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி கூறி உள்ளார்களோ அவர்களுக்கு எதிராக துஆச் செய்யவே சொல்லி உள்ளேன். 

எனவே யார் வரம்பு மீறி உள்ளார்களோ, யார் பொய்யர்களோ, யார் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி கூறி உள்ளார்களோ அந்த கூட்டத்தை சாா்ந்தவர்களே எனது இந்த எழுத்துக்கு எதிராக கோபப்படுவார்கள். நல்லவர்கள் துஆச் செய்வார்கள். 



http://mdfazlulilahi.blogspot.in/2015/05/blog-post_19.htmlhttp://mdfazlulilahi.blogspot.in/2015/05/blog-post_19.html 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.