ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்துள்ள அண்ணனுக்கும் அல் உம்மாவுக்கும் என்ன பிரச்சனை?

அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சணை  என்ற  தலைப்பில் பி.ஜே. தனது ஆன்லைனில் வரலாறு எழுதியுள்ளார். அதில் தொடர் பாகம் 2ல்.

தடா எனும் கொடும் சட்டத்தின் கீழ் பாஷா அவர்களும், மற்றும் சில சகோதரர்களும் கைது செய்யப்பட்டு பலஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது எந்தக் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்திருக்கவில்லை. டிசம்பர் 6ல் பேருந்தில் கல் வீசியதற்காகத் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி அவர்கள் மீது தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருந்தது என்று அவர் எழுதிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். 

நடந்தது என்ன? என்ற உண்மை வரலாற்றை நாம் ஆதாரத்துடன் சொன்னாலும் தம்பிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே அண்ணன் இறைநேசன் என்ற பெயரில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த உணர்வில் பாக்கர் விடுதலை சம்பந்தமாக வந்த செய்தியையும் இணைத்துள்ளோம்.  




1995 ஆகஸ்டு 15 பாக்கர் கைத்துக்குப் பிறகு பி.ஜே.தான் அடுத்து என்ற நிலையில் பி.ஜே.யைக் காப்பாற்ற சென்னை முஸ்லிம்கள் பேரணி நடத்தப்பட்டது. பிறகு காரைக்காலில் உள்ள ஜாக்குக்கு சொந்தமான ஜாமிஆ புஷ்ரா பெண்கள் அரபிக் கல்லுாரி முதல்வராக இருந்த மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி கைது செய்யப்பட்டார். இதையெல்லாம் பி.ஜே.யே பல இடங்களில் பேசியுள்ளார். 

அதையெல்லாம்  மறைத்து வரலாறு இல்லாத வரலாறு தெரியாத புதிய தம்பிகளை ஏமாற்றிட  டிசம்பர் 6ல் பேருந்தில் கல் வீசியதற்காகத் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி அவர்கள் மீது தடா சட்டத்தைப் பயன்படுத்தி இருந்தது என்ற பொய்யை எழுதி ஏமாற்றியுள்ளார்.

1) 1993 ஆகஸ்ட் 8  சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பு வழக்கில்தான் சம்பந்தம் இல்லாத கோவை பாஷா பாய் மற்றும் மேலப்பாளையத்தைச் சார்ந்த 5 இளைஞர்கள் உட்பட மேலும்  பலர் தடாவில் கைது செய்யப்பட்டார்கள்

குண்டு வெடிப்பு வழக்கில்தான் தடாவில் போட்டார்கள். இதுதான் உண்மை என்பதற்கு தடாவில் இருந்தவர்கள் கையெழுத்து ஆதாரங்கள் உள்ளன. 

 2) 10.10.1994ல் மதுரையில்  இந்து முன்னணியின் மாநில தலைவர்  ராஜகோபாலன் கொலை செய்யப்பட்டார். 

இதை கிட்டா பாயெல்லாம் பாராட்டுகிறார். சீனி நைனா முஹம்மதை போலீஸ் பிடித்து விட்டது. அடுத்து என்னை நோக்கித்தான் போலீஸ் வரும் என்று மதுரை அவனியாபுரம் மஸ்ஜித் முபாரக்கில் பதுங்கி உளறிக் கொண்டிருந்த இரட்டை வேஷக்கார கோழை. காட்டிக் கொடுத்த கயவன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக. 

இந்தக் கொலை வழக்கில்தான் பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். பி.ஜே. தன்னைக் காத்துக் கொள்வதற்காக மதுரை ராஜா உசேனை சரண் அடையச் செய்தார்.
3) 1995 ஏப்ரல் 14 - சென்னை சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் குண்டு வெடித்தது.

இந்தக் குண்டு வெடிப்பில்தான் முஸ்தபா ரஷாதி உடல் சிதறி இறந்தார். எவன் இவர்களை  காரைக்காலில் தங்க வைத்து குண்டு வைப்பது மார்க்கம் என்று போதித்து விட்டு பொய்ப்படுத்தி நிற்கிறானோ அந்த பொய்யன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக. 

4) 1995 ஜூலை 3 - நாகூரில்  பார்சல் குண்டு வெடித்தது.
5) 1995 ஜூலை 4 -  மயிலாடுதுறை போஸ்ட் ஆபீஸில் பார்சல் வெடிகுண்டு பிடிபட்டது.

இந்த இரு பார்சல் குண்டுகள் வழக்கில்தான் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ  கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் சென்று முதன் முதலில் பார்த்த  ஆட்கள் பி.ஜே. அனுப்பிய ஆட்கள்தான். பார்த்த உடன் முதன் முதலில் கேட்ட கேள்வி தெரியுமா?  அண்ணனைப் பற்றி எதுவும் கேட்டார்களா? என்ன பதில் சொன்னீர்கள்? என்பதுதான் 

சுகமான சுமைகள் சினிமாவைப் பார்த்து விட்டு அதில் வருகின்ற மாதிரி குண்டு தயாரிக்கச் சொன்னவன் ஒருத்தன். சிறை சென்றவர்களோ வேறு வேறு ஆட்கள். பார்சல் குண்டு செய்ய ஆலோசனை சொன்னவன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

6) 1995 ஜூலை 10 சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள பம்பாய் பட தயாரிப்பாளர் மணிரத்னம் வீட்டில் 2  பைப் வெடிகுண்டுகள் வீசப்பட்டது

91-96 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் எந்தக் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்திருக்கவில்லை. என்று பி.ஜே. எழுதியுள்ளாரோ அதன் உண்மை வரலாறுதான் இது. 

பயங்கரவாதி நக்கீரன் கோபால் யார் இந்த கோபால் மாமா என்றெல்லாம் நக்கீரனுக்கு எதிராக எழுதியதில் ஒன்று மட்டும் உண்மை இவர்கள் கூறுவதில் ஒரு விஷயம் மட்டுமே உண்மை என்ற உட்தலைப்பில் 



1992 டிசம்பர் ஆறில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சட்டமும் அரசும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காதுநாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தேன். ஆக்ரோஷமாக பேசியுள்ளேன். அல் ஜன்னத்தில் கடுமையான தலையங்கங்களை எழுதியுள்ளேன்.


ஒட்டுமொத்த முஸ்லிம்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தான் இருந்தனர். அவ்வாறு தான் இருந்தேன். அதன் காரணமாக சட்டமும் அரசும் நமக்கு எதிராகவே உள்ளன. நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சமுதாயமும் அன்றைக்கு எண்ணியது. அதையே நானும் பிரதிபலித்துள்ளேன். அந்தப் பேச்சுக்களும் அரசுக்கு எதிராகத் தான் இருந்ததே தவிர பிறசமய மக்களுக்கு எதிராக இருக்கவில்லை. புரிந்து கொள்ளாத சிலர்  அந்த நேரத்தில் சிலர் வேறு பாதைக்குச் சென்றிருக்கலாம் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.


மேலும் வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது.

நான் தீவிரமான எண்ணப் போக்கில் இருந்த போது தான் சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன். அந்தக் கருத்தில் நான் இருந்த போது அது சரியானது என்று பட்டதால் நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். 

வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு தெரியாத காலத்தில் செய்த செயல்களில்

30.7.96 அன்று பிராட்வேயில் உள்ள லைட் ஆப் ஆசியா லாட்ஜில்  குண்டு வெடித்தது.


27.9.1996-ல் எக்மோர் இம்பீரியல் ஹோட்டல்

25.10.1996-ல் மண்ணடி லக்கி ஹோட்டல்

ஆகிய  முஸ்லிம்களின் ஹோட்டல்களில் நடந்த  குண்டு வெடிப்புகள்  அடங்குமா? அடங்காதா?

காரைக்காலில் இமாம் அலி போன்றவர்களை தங்க வைத்து இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தது. அடங்குமா? அடங்காதா?

1996 நாகூர் ஆலிம் ஜார்ஜ்ஸை கொலை செய்ய கொடுத்த பத்வா 

1997 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று கொலை செய்யப்பட்ட பழனி பாபா அவர்களை கொலை செய்து விடும்படி கொடுத்த பத்வா 


1997  சென்னை கேகே நகர் பள்ளிவாசல் இமாம் கமருஸ்மான் அவர்களை கொலை செய்ய கொடுத்த பத்வா 

1997 டிசம்பர் 6-ந்தேதி பாண்டியன், சேரன், ஆலப்புழை ரயில்களில் வைக்கப்பட்ட குண்டு ஆகியவை  வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு தெரியாத காலத்தில் செய்த செயல்களில் அடங்குமா? அடங்காதா?
மேட்டுப்பாளையம் டைலர் கார்த்திகேயன் கொலை, திருப்பூர் விளக்கு பூஜை  பொன்றவற்றையெல்லாம் பட்டியல் இடவில்லை. 

இப்படி பல குற்றங்களை செய்ய இளைஞர்களை தூண்டிவிட்டது.  பத்வா கொடுத்து அனுப்பியது.,  ஆபத்து வந்ததும் அவர்களை கைவிட்டது. முடிந்த வரை  சிலரை போலீசில் மாட்டி விட்டது. சரண் எனற பெயரால் பிடித்து கொடுத்தது. இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தி தன்னை நல்லவனாகக் காட்டிக் கொண்டது. யாவும் குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக ஆய்வுகள் செய்த போது கிடைத்த தெளிவுகளா?

இவற்றுக்கு பதில் கிடைக்காதவரை துஆச் செய்யுங்கள். இஸ்லாத்தின் பெயரால் எவன் பத்வா கொடுத்து இளைஞர்களை துாண்டி விட்டு வாழ்வை நாசப்படுத்தி விட்டு பொய் சொல்கிறானோ அவன் மீதும் அவனைச் சார்ந்து நிற்பவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

விபச்சாரகன் மீதும் விபச்சாரகன் என்று மனதால் தெரிந்த பின்பும் பொய் என மறுத்து விபச்சாரகளை தலைவனாக ஏற்றுள்ள  ஒவ்வொருவன் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆச் செய்யுங்கள். 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.