கண்ணம்மா பேட்டை இந்து மயானத்தில் எரிக்கப்பட்ட முஸ்தபா ரஷாதிக்கும் பீஜெ க்கும் என்ன தொடர்பு...???

யார் இந்த ஷஹீத் முஸ்தபா ரஸாதி...??  பீஜெ வுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு...??? என்ற தலைப்பில்  அப்த் அந் நதீர் அச்சுருத்தி எச்சரிப்பவனின் அடிமை  அவர்கள்  வெளியிட்டுள்ளது வாட்ஸப் மூலம் வந்தது. 


அதைக் காணும் முன்பாக இன்றைய   (23.10.17) செய்தியையும் பார்த்துக் கொள்ளுங்கள். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது





இந்தப் படங்களைக் காண்பவர்கள்  உள்ளங்களும் பற்றி எறியத்தான் செய்யும் சரி தலைப்புக்கு வருவோம்.


1953 பிப் 10ம் தேதி உலகமே வியக்கும் மார்க்கமேதை தொண்டியில் அவதரித்தார்.. என்று  பி.ஜே.யின் புகழ்? பாடி தலைப்பு துவங்குகிறது. இருந்தாலும் அதில் கடைசியாக உள்ள  ஷஹீத் முஸ்தபா ரஸாதி்...!!  அவர்கள் பற்றியுள்ள விபரத்தை முதலில் தருகிறோம்.


கன்னியாகுமரி (மாவட்டம்) திட்டுவிளை ரஹ்மானியா தெருவை சேர்ந்த ஜெயினுலாபுதீன் அவர்களின் இரண்டாவது மகன்தான் ஷஹீத் முஸ்தபா ரஸாதி.  ஜெயினுலாபுதீன் அவர்கள் சென்னை மண்ணடியில் உள்ள ராம்நாடு துணிக்கடையில் வேலை செய்து, தன்னுடைய மூன்று மகன்களில் இருவரை பட்டதாரியாக்கினார். இரண்டாவது மகன் முஸ்தபாவை ஒரு ஆலிமாக்க வேண்டும் என்பது அவர் ஆசை. 

தொண்டி பீஜெ வைப் போல முஸ்தபா பள்ளிக்கூடம் போகாமல் தறுதலையாக திரிந்ததால் மதரஸாவிற்கு அனுப்பப்பட்டவரல்ல.

முஸ்தபா 10 வது படித்து முடித்ததும் பெங்களூரில் உள்ள மதரஸாவில் படித்து ரஸாதி பட்டம் பெற்றார். 1994 முதல் 1995 ல் ஷஹீதாகும் வரை நாகூர் சியா மரைக்காயர் தெருவில் உள்ள  (J.A.Q.H)  மஸ்ஜித் தெளஹீத் இல் இமாமாக இருந்தவர் 

3.2.95 அன்று சென்னை புதுப்பேட்டையில் இந்துமுன்னணி பயங்கரவாதிகள்  காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா ?(நவூதுபில்லாஹ்) கன்னிமேரியா ?(நவூதுபில்லாஹ்) மணியம்மையா ? என்ற தலைப்பிட்டு பட்டிமன்றம் நடத்தி இஸ்லாமியர்கள் தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கும் காதீஜா( ரலி) குறித்தும் அன்னை மர்யம்  (அலை) குறித்தும் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள். (  மன்னிக்கவும் பேசியது வேறு நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது)

(போஸ்டர் இனைக்கப்பட்டுள்ளது)

அடுத்த இரண்டு மாதத்தில்  1995 ஏப் 14 அன்று காவிகளின் கூடாரம் கிடுகிடுத்தது. இதில் இமாம் முஸ்தபா ரஸாதி அவர்கள் ஷஹீதானார்கள். 

(இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த நிகழ்வின் படத்தை மீண்டும் பார்த்துக் கொள்ளுங்கள். முஸ்தபா ரஸாதி சிதறி எதிர்த்த வீட்டு மாடியில் போய் வீழ்ந்ததை எண்ணிப் பாருங்கள். ரஸாதி உங்கள் குடும்பத்துக்காரராக இருந்தால் உங்கள் மனம் எப்படி இருக்கும்? இலாஹி பி.ஜே.யை விட மாட்டார் போல என்று எழுதுபவர்கள் சிறிது அசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்)

சிதைந்து உருக்குலைந்து போன அவர் உடலைக்கூட வாங்கக்கூட பத்வா கொடுத்த சொக்கத்தங்கம் அனுமதிக்கவில்லை.

1997 இல் ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்த குணங்குடி அனிபா (நிறுவனர் த.மு.மு.க.) அவர்களும் மற்றும் பொதுச் செலாளராக இருந்த தடா.ஜெ.ரஹிம் அவர்களும் அந்த உடலை வாங்கி இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முன்வந்தபோது, எங்கே அந்த உடலை வாங்கினால் தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில், சொக்கத்தங்கம் (திருட்டுபய) பினாபி பெயரில் கோர்ட்டில் ஸ்டே வாங்கி விட்டார்.

சுமார் 13 ஆண்டுகள் கேட்பாரற்று கிடந்த உடல் கடைசியில் சென்னை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அனாதைப் பிணமாக எரிக்கப்பட்டது.(இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிவூன்)

அன்று மளிகைக்கடை வைத்து நஷ்டமாகி, பிழைப்புக்கு ஆலிமாகி குர்ஆன் ஹதீஸ் பேசிப் பிழைத்து இன்று கோடீஸ்வரனாகி காமவெறிபிடித்து அலைகிறார் ஒரு ஜெயினுலாபுதீன் எனும் பீஜெரினாநந்தா..

அந்த போலி ஆலிம் கொடுத்த பத்வாவால், ஷஹீதாகி அனாதைப் பிணமாக எரிக்கப்பட்டுவிட்டார் முஸ்தபா ரஸாதி..
(அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக)

பீஜெ எனும் காமவெறி பிடித்த போலி ஆலிம், ஷஹீத் முஸ்தபா ரஸாதி அவர்களின் பெயரைக் கூட உச்சரிக்க அச்சப்படுகிறான். 



ஷஹீத் முஸ்தபா ரஸாதி அவர்களை நினைவு கூறுவோம் . அல்லாஹ் அவருக்கு ஷஹீத் அந்தஸ்தை அளிக்க துவா செய்வோம்...!!

இவ்வாறு உள்ளது பி.ஜே. முஸ்தபா ரஷாதி பற்றி முன்பு நமது  தளத்தில் வந்தவைகளையும் பார்த்து விட்டு தொடருக்கு போவோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பீ.ஜே. யார் தெரியுமா? தனக்கு அரசாங்க செலவில் ஏ.கே. 47 போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் முயற்சி செய்தார்அதில் ஒன்று

தான் உபயோகித்த கார் கண்ணாடியை தானே ஆள் வைத்து உடைத்து விட்டு புகார் செய்தார். அரசு செலவில் பாதுகாப்பு பெற்றார். அரசியல்வாதியை விட கேவலமான இந்த செயலை செய்து விட்டு அரசியல் ஆசை இல்லை என்கிறார்.



TNTJ தலைமையே உங்கள் TNTJ தலைமை பற்றி கூறியது. தவ்ஹீது வியாபாரியே தவ்ஹீது வியாபாரி பற்றி கூறியது. பழனி பாபாவை கொலை செய்ய பத்வா கொடுத்து விட்டு கொலை செய்யப்பட்டதும் கண்ணீர் விட்டு அழுது ஷஹீது என புகழ்ந்தவர்தான் பீஜே.


பழனி பாபாவை கொலை செய்ய பீ.ஜே. பத்வா கொடுத்து விட்டார் என்று சொன்னவர் யார்? ஷம்சுல்லுஹாதான். இதை சத்தியம் செய்து மறுக்கச் சொன்னால் லுஹா எளிதில் மறுத்து விடுவார். மறுப்பதாக இருந்தால் லுஹாவாகிய  என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கூறி லுஹா மறுக்கட்டும் என்று லுஹா ஊரைச் சார்ந்தவர் லுஹா வீட்டுக்கு அருகில் கூட்டம் போட்டு அறிவித்து வருடங்கள் உருண்டோடி விட்டன. பேசியவர் லுஹாவுக்கு சம்பளம் பேசி தவ்ஹீது வேலையில் சேர்த்தவர்தான். இதுவரை லுஹா சாபம் கேட்டு மறுக்கவில்லை. டி.என்.பி.ஜேயினர் உண்மையாளர்கள் என்றால் இது விஷயமாக லுஹாவையும் பிஜேயையும்  சாபம் கேட்டு மறுக்கச் செய்யுங்கள்.


பள்ளிவாசலில் இமாமாக இருந்த மவுலவி முஸ்தபா ரஷாதி அவர்களை இமாம் அலிஹைதர் அலி போன்றவர்களுடன் ஜிஹாதில் ஈடுபடுத்தியவர் பீ.ஜே. குண்டு வெடிப்பில் முஸ்தபா ரஷாதி இறந்த பின்னரும் உயிரோடு இருக்கின்ற மாதிரி காட்ட சில காலம் ஆள் வைத்து பணம் அனுப்பி ஏமாற்றியதும் பி,ஜெ.அன்கோ என்றும் அந்த தவ்ஹீதுவாதி பகிரங்கமாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாபம் கேட்டு உள்ளார். 


இதற்கு வாதம் வைத்து பிதற்றாமல் நேரடியாக சத்தியம் செய்து பொய் என்றால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று  பீ.ஜேயை சொல்லச் சொல்லுங்கள்.



மேலும் இந்த கூற்றுக்கள் உண்மையானால் ஜிஹாது என்ற பெயரால் இந்த மாதிரி செய்த சமுதாய துரோகிகளை யா அல்லாஹ் நீ நாசமாக்கு. பொய்யாக இருந்தால் இட்டுக்கட்டியவர்களை நாசமாக்கு. TNTJ யின் தலைமையில் உள்ள பீ.ஜேலுஹாதென்காசி சுலைமான்அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸிஅல்தாபி உட்பட யார் பொய் சத்தியம்  செய்து பொய் சாட்சி சொல்லி இருந்தாலும். அவர்களை யா அல்லாஹ் நீ நாசமாக்கு என்று துஆச் செய்யும்படி TNTJ யின் தலைமையை அறிக்கை விடச் செய்யுங்கள். செய்து விட்டால்  உங்கள் சாட்சியத்தை எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
.............................................................................................................................
ஒரு பள்ளியில் பேஷ் இமாமாக பணிபுரிந்து கொண்டிருந்த மவுலவி முஸ்தபா ரஷாதி என்பவரை கடத்திக் கொண்டு வைத்து ஜிஹாது உணர்வு ஊட்டி சாகடித்தவர் பி.ஜெ. முஸ்தபா ரஷாதி இறந்த தகவல் அவரது வீட்டுக்கு தெரியாமல் இருக்க மவுலவி முஸ்தபா ரஷாதி அனுப்புவது போல் ஆள் வைத்து வீட்டுக்கு மாதம் 2000 ரூபாய் மணியார்டர் அனுப்பி ஏமாற்றி வந்தவர் பி.ஜெ.. இந்த மாதிரி பல கொலைகளில் அறியப்பட்டவராக பி.ஜெ. இருக்கிறார். இந்த மாதிரி கொடூரமான கொலைகளில் அறியப்பட்டவர்களாக எந்த அமைப்பு நிர்வாகிகளும்  இல்லை.


----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆலீம் பிணத்தை அடையாளம் தெரியாத அனாதை பிணம் போல் ஆக்கி விட்டார்.

பள்ளிவாசலில் பேஷ் இமாமாக இருந்த முஸ்தபா ரஷாதி என்ற ஆலிம்ஸாவை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியவர் பி.ஜெ. சிந்தாதிரிப் பேட்டை குண்டு வெடிப்பில் முஸ்தபா ரஷாதி உயிரிழக்க காரணமாக இருந்தவர் பி.ஜெ. உயிரிழந்தது முஸ்தபா ரஷாதி என்பது அவரது குடும்பத்தாருக்கு தெரியாமல் இருக்க முஸ்தபா ரஷாதிபணம் அனுப்புவது போல் குறிப்பிட்ட காலம் வரை பணம் அனுப்பி ஏமாற்றினார். தான் பிடிபடாமல் இருக்க முஸ்தபா ரஷாதி என்ற ஆலீம் பிணத்தை அடையாளம் தெரியாத அனாதை பிணம் போல் ஆக்கி விட்டார். இன்று வரை அடக்காமல் ஐஸ் பெட்டியில் வைக்கச் செய்திருக்கிறார். இதை மறைக்க அனாதை பிணங்களை அடக்குவது போலும் விபத்தில் இறந்தவர்களுக்கு உதவுவது போலும் நடித்து வருகிறார். இது 
Monday, September 03, 2007 ல் வந்தது. கண்ணம்மா பேட்டை இந்து மயானத்தில் எரித்தது 2013ல்.
----------------------------------------------------------------------------------------------------------------
தொடருக்கு வருவோம் 1953 பிப் 10ம் தேதி உலகமே வியக்கும் மார்க்கமேதை தொண்டியில் அவதரித்தார்..


தொண்டி அரசு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது,  பாதியியே பள்ளிக்கூடம் போகாமல் இரண்டு வருடம் தக்குறி தறுதலையாக ஊரை சுத்தி வந்தவரை பார்த்து கவலைப்பட்ட பீர் முகமது-மரியம்பீபி தம்பதிகள், மகனை மதரஸாவுல  சேர்த்து விட்டால் உருப்புடுவான்னு முடிவுக்கு வந்தாங்க.. திருச்சி காந்தி மார்கெட்ல பீர் முகமது காய்கறி வியாபாரம் செய்து வந்ததுனால சிறுவன் ஜெயினுலாபுதீனையும் திருச்சி காஜா நகர்ல இருக்குற அன்வாரில் உலூம் மதரஸாவில் சேத்துவிட்டார்..


 அங்க மூன்று ஆண்டுகளும், அத்திக்கடை VK மதரஸாவில ஒரு வருடமும், கூத்தாநல்லூர் மன்ப உல் உலூம் மதரஸாவில் மூன்று ஆண்டுகளும் ஆக மொத்தம் 7 ஆண்டுகள் படித்து(.??)உலவி பட்டம் பெற்று சொந்த ஊர் தொண்டி திரும்பினார் உத்தம வில்லன் உலக மேதாவி பீஜெ..


ஆலிம் பட்டம் பெற்றாலும்கூட ஆரம்பத்தி் என்னமோ நம்ம உலகமே உத்து நோக்கும்  மார்க்க அறிஞர்  அல்லாஹ்வே இல்லைனு நாத்திக கொள்கையிலதான் இருந்தாரு என்பதை அவரே மேடையில சுட்டிக் காட்டிருக்காரு


ஆகவே நம்ம சொக்கத்தங்கம் தொண்டில பெட்டிக்கடை ஆரம்பிச்சாரு அதுல நஷ்டமானதால, 1974 ஆம் ஆண்டு காரைக்கால்ல திருவேட்டக்குடியில மளிகைக்கடையை மூன்று ஆண்டுகள் நடத்தினாரு. அதிலும் நஷ்டமானதால மாயவரம் - பொறையார் ரோட்டிலுள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் 1977 -1979 வரை மூன்று வருடங்கள் மளிகைக்கடையை நடத்தினாரு அங்கும் வியாபாரத்தில் நஷ்டம் . ஒரு மனுஷனுக்கு முதலீடு போட்டு தொழில் ஆரம்பிச்சு நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வந்தா என்னதான் பண்ணுவாரு பாவம்..!


முதலீடு இல்லாத தொழில் எதுன்னு யோசிச்சாரு  ? 
அப்பதான் பொறி தட்டுச்சு நம்ம மன்னடி மைனருக்கு
ஆன்மீக வியாபாரம் ஒன்னுதான் முதலீடு இல்லாத வியாபாரம்னு..


நாத்தீகத்தை கைவிட்டு, மளிகைக்கடையை இழுத்து மூடிவிட்டு 1979 வருடக்கடைசியில கிளியனூர் ரஹ்மானியா மதரஸாவுல ஆசிரியராக வேலை செய்தார். 1980 இல் திருமணம். குடும்பம் நடத்த சம்பளம் போதவில்லை என்பதால் அடுத்து 1981 இல் கூத்தாநல்லூர் மன்ப உல் உலூம் மதரஸாவில் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போனார் உலகம் போற்றும் மார்க்க அறிஞர் போன நேரம் ஒரு வருசத்திலேயே அந்த மதரசாவையே இழுத்து மூடிவிட்டார்கள். (அட பாவத்த)

(மதரஸா  மாணவனோடு தவறாக நடந்து மாணவர் கொலை செய்யப்பட்டார் இது விடுபட்டுள்ளது)


 அப்போது சொக்கத்தங்கத்தின் அண்ணன் மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்கள் சங்கரன்பந்தல் மதரஸாவில் முதல்வராக இருந்ததால அந்த மதரசாவிலேயே தன் தம்பிக்கு வேலை கொடுத்தார். அதனால் சொக்கத்தங்கத்துக்கு சோத்துப் பஞ்சமில்லாமல் இருந்தது.


1970 களின் இறுதியில் தமிழக இஸ்லாமியர்களிடம் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்து சீர்திருத்த பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டது. (ஆரம்பித்தது இவன் இல்ல)


நாத்திகனாக இருந்து பல ஊர்களில் மளிகைக்கடை வைத்து நஷ்டமாகி பிழைப்புக்கு ஆலிமாகிய சொக்கத்தங்கம் 1980களில் இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஐந்துக்கும் பத்துக்கும் ஓதிப் பிழைப்பதாக ஆலிம்களை கேலி செய்துவந்த சொக்கத்தங்கம், அதே குர்ஆன் ஹதீஸ் களை எழுதியும் பேசியும் பிழைத்து வந்தார்.


1980 களில் இஸ்லாமிய இளையதலைமுறையிடம் ஷஹீத் பழனிபாபா அவர்களின் பேச்சு மிகுந்த எழுச்சியூட்டுவதாக இருந்தது.


இளைஞர்களிடம் குறிப்பாக வெளிநாடுகளில் வேலைக்கு சென்றுள்ள முஸ்லிம் தொழிலார்கள் தான் இயக்கங்களின் நிதி ஆதாரம் . இவர்களிடத்தில் ஷஹீத் பழனிபாபா அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. 


பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது. 1993  சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் தலைமையக குண்டுவெடிப்பு வழக்கில் ஷஹீத் பழனிபாபா அவர்களும் ஒரு எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் சென்னை மற்றும் கோவை வழக்கில் சுமார் 35 முஸ்லிம் இளைஞர்கள் மீது தடா சட்டம் போடப்பட்டிருந்தது. 


இந்த தடா கைதிகளின் ஒரு சாராரிடம், பழனிபாபா தங்களுக்கு உதவி செய்வதில்லை எனவும், பீஜெ தான் தங்களுக்கு சட்ட உதவியும் குடும்பத்துக்கு உதவியும் செய்வதாகவும் , ஆகவே பழனிபாபா க்கு வசூல் கொடுக்காமல் பீஜே மூலம் தங்களுக்கு உதவி செய்யுமாறு கடிதம் எழுதி வாங்கி வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம்களிடம் பழனிபாபா வை மட்டம்தட்டி (குற்றச்சாட்டுக்கள் கூறி) பீஜே வசூல் செய்து வந்தார். (எழுத்துப்பூர்வ ஆதாரம் இருக்கு மக்களே)


ஒவ்வொரு சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி வளர்ந்து  அதில் ஆதாயம் காணும் சொக்கத்தங்கம், பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு இஸ்லாமிய இளைஞர்களிடையே இருந்த கொந்தளிப்பான நிலையையும் பயன்படுத்திக் கொண்டார்.


 ஜிஹாத் குறித்த பயான்களில் அனல்பறந்தது..(போர் ஆமா போர்) குழுக்கள் அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. 


இந்துத்துவா பயங்கரவாதிகள் மீது மட்டுமல்ல, சிர்க் அனாச்சாரங்கள் செய்ததாக குற்றச்சாட்டி இஸ்லாமியர்கள் மீதும் பத்வாக்கள் கொடுக்கப்பட்டது. கொலைகள் குண்டுவெடிப்புக்கள் நடத்தப்பட்டது. 


இலக்கை தேர்வு செய்து தாக்குதல் நடத்த பத்வா கொடுத்த சொக்கத்தங்கம், ஒருகாலகட்டத்தில் ஆபத்து வந்ததும் அந்த இளைஞர்களையே காட்டிக் கொடுத்து விட்டார் . வழக்கில் சிக்கியவர்களை கைவிட்டுவிட்டார். 

இதுமட்டுமல்ல, தன்னால் பத்வா கொடுத்து அனுப்பப்பட்டு ஷஹீதான ஒரு இமாமின் உடலை வாங்கினால் எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அந்த இமாமின் உடலைக்கூட வாங்க விடாமல் தடுத்து விட்டார். அதுபற்றி பார்ப்போம்.

இவண்:
அப்த் அந் நதீர்
அச்சுருத்தி எச்சரிப்பவனின் அடிமை
http://mdfazlulilahi.blogspot.ae/2017/10/blog-post_23.html 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.