மேலப்பாளையம் த.மு.மு.க.சார்பில் சிலம்பாட்ட கலைக்குழு ஆரம்பம்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் சமுதாய பிரமுகர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்கள் முயற்சியில் சிலம்பாட்ட கலைக்குழு 30.12.2007 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இக்கலைக்குழுவை த.மு.மு.க மாநிலப் பொதுச் செயலாளரும் வக்ஃபு வாரிய தலைவருமான S.ஹைதர் அலி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். நெல்லை வண்ணாரப் பேட்டை சுற்றுலா மாளிகையில் நடந்த இந்நிகழ்வில் மாநில துணை பொதுச் செயலாளர் மவுலவி J.S.ரிபாயீ ரஸாதி, மேலப்பாளையம் பிரமுகர் தீன் சுடர் சம்சு, சிலம்பு வாத்தியார் ஹபீப், இனமான சிங்கம் முன்னாள் துபை முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளர் துணை வாத்தியார் காயங்கட்டி கமால், மாநில துணை செயலாளர் மைதீன் சேட்கான்,நெல்லை மாவட்ட துணைத் தலைவர் பாளை பாரூக், நகர த.மு.மு.க தலைவர் K.S.ரசூல் மைதீன், செயலாளர் A.M.மைதீன் பாதுஷா, பொருளாளர் A.காஜா, E.M.அப்துல் காதர், அப்துல் அஜீஸ், மகபூப் ஜான், ஹக்கீம், கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிலம்பம் வாத்தியார் ஹபீப் அவர்களிடம் சிலம்பம் அளிக்கிறார் த.மு.மு.க மாநிலப் பொதுச் செயலாளரும் வக்ஃபு வாரிய தலைவருமான S.ஹைதர் அலி அவர்கள்.

இனமான சிங்கம் முன்னாள் துபை முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளர், சிலம்பம் துணை வாத்தியார் காயங்கட்டி கமால்அவர்களிடம் சிலம்பம் அளிக்கிறார் த.மு.மு.க மாநிலப் பொதுச் செயலாளரும் வக்ஃபு வாரிய தலைவருமான S.ஹைதர் அலி அவர்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.