முஸ்லிம்களும் கிறிஸ்துமசும்.

from Abdullah Muqrin
date Dec 26, 2007 3:06 AM
subject முஸ்லிம்களும் கிறிஸ்துமசும்
mailed-by gmail.com
அன்பான முஸ்லிம்களே! நாம் ஒரு பன்மைச் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம். தொழில் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாம் மாற்று மத அன்பர்களுடன் நட்பு கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒருபோதும் அவர்களுடன் கொண்ட நட்பு இறைக் கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கிவிடக்கூடாது. இதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணமாக நம்மிடம் பழகும் கிறிஸ்தவ நண்பர் HAPPY CHRISTMAS என்று கூறும்போது அல்லது நம்மைக் கிறிஸ்துமஸ் விருந்துக்கு அழைக்கும்போது அல்லது கிறிஸ்துமசிற்காக படைக்கப்பட்ட பலகாரங்களை வழங்கும்போது நம்மில் பலரும் ஒரு கணம் சருகி அவரிடம் திரும்ப அதே வார்த்தையைக் கூறிவிடுகின்றோம். அல்லது கிறிஸ்துமஸ் விருந்துக்குச் செல்கின்றோம் அல்லது கிறிஸ்துமசிற்காகப் படைக்கப்பட்ட உணவை உண்டுவிடுகின்றோம்.

இன்னும் சிலரோ பட்டும் படாமல் வேண்டா வெறுப்புடன் அவர்களை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றோம். அல்லது அவர்கள் தரும் உணவை வாங்கி வைத்து விட்டு அதனை உண்ணாமல் அவர்களுக்குத் தெரியாமல் அதனைக் கொட்டி விடுகின்றோம்.

கிறிஸ்தவ நண்பர்கள் மனம் புண்படக்கூடாது என்று நினைத்து நாம் செய்யும் செயல் நாம் அறியாத விதத்தில் நம்மைப் படைத்த கருணையாளனின் கோபத்துக்குரிய செயல் ஆகிவிடக் கூடாது. கிறிஸ்தவ நண்பன் உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் உங்களுக்கு நண்பனானான். இன்று உங்களோடிருப்பவன் நாளை எங்கிருப்பான் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வோ நீங்கள் அறியாத விதத்தில் உங்களைப் படைத்தவன். அவனிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். அப்போது நிச்சயமாக இதுபற்றி உங்களை அவன் விசாரிப்பான்.

உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான் ; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (16:78 )

கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். (19:95 )

ஒரு தடவை நபித்தோழர் ஒருவர் அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி நடந்தது என்று கூறியபோது, அல்லாஹ்வுக்கு என்னை இணையாக்குகின்றாயா ? என்று கூறிவிட்டு அல்லாஹ் மட்டும் நாடினான் , பின்னர் நீங்களும் நாடினீர்கள் என்று கூறுமாறு எச்சரித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அன்பர்களே! அல்லாஹ் ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்டான் என்ற மிகப்பெரிய சொல்லைப் பறை சாற்றும் கொண்டாட்டம் அன்றோ கிறிஸ்துமஸ் ? அல்லாஹ்வோடு தன்னைச் சேர்த்துக் கூறியதையே அல்லாஹ்வின் தூதர் எச்சரித்துள்ள நிலையில் இதற்கு வாழ்த்துக் கூறுவதை அல்லது அதனைஆமோதிக்கும் வகையில் அதில் கலந்து கொள்வதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ?

ஆனால் இதனைவிட மிகச்சிறந்த செயலை அல்லாஹ்வின் விருப்பத்துக்குரிய செயலை நீங்கள் செய்ய முடியும். அதுதான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு அழைப்புப்பணி செய்வதாகும்.

ஒரு கிறிஸ்தவ நண்பர் உங்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினால் நீங்கள் பின்வரும் கூற்றைக் கூறலாமே.

எங்களுக்கு இரண்டே பண்டிகைகள்தான் எங்களது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டு பெருநாட்களாகும்.

நாங்கள் முஸ்லிம்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது.

இறைவனுக்கு மகன் இல்லை என்று இஸ்லாம் கூறுகின்றது. அவனுக்கு பெற்றோரோ பிள்ளைகளோ கிடையாது. அவன் தனித்தவன் , தன்னிகரற்றவன். இயேசுவை இறைவனின் தூதர் என்றே நாங்கள் கூறுகின்றோம் , அவர் இறைவனின் புதல்வர் அல்ல. இப்படியிருக்க இறைவனுக்கு அவர் மகனாகப் பிறந்தார் என்ற அடிப்படையில் அவருக்கு நாங்கள் எவ்வாறு பிறந்த நாள் கொண்டாட முடியும் ? நாங்கள் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையே கொண்டாடுவதில்லை. எங்களுக்கோ எங்கள் பிள்ளைகளுக்கோ நாங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. ஏன் கிறிஸ்தவர்களிலேயே சில பிரிவினர் (பெந்தகோஸ்தே) கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லையே ?

மாற்று மதத்தவருடன் நல்லமுறையில் நடந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை கிறிஸ்துமஸ் அல்லாத தினங்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தினையோ அழைப்பையோ நாங்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வோம். ஏன் உங்கள் திருமண நிகழ்ச்சிகளில் கூட நாங்கள் கலந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் மிகவும் உறுதியான இறைக் கொள்கையைக் கூறுகின்றது. இறைவனுக்குப் பிள்ளை உண்டு என்று கூறுவதைப் பெரும் பாவம் என்கிறது. இறைவனுக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் அத ¬ னை வணங்குவதில் நானே முதலாமவனாக இருப்பேன் என்று கூறுமாறு நபிகள் நாயகத்திடம் இறைவன் கூறிய வசனம் திருக்குர்ஆனில் உள்ளது. இயேசு கிறிஸ்துவை நாங்கள் வணங்காத நிலையில் கிறிஸ்துமஸை நாங்கள் எப்படிக் கொண்டாடுவோம் ?

மேலும் இது சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி அவர்களை இஸ்லாமின்பால் அழைக்கலாம். முஸ்லிம்களே முன்வாருங்கள்.

அழைப்புப் பணிக்கு மிகப்பெரிய ஆயுதம் திருக்குர்ஆனும் நபிமொழியுமே!

( நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீங்கள் கீழ்படிய வேண்டாம். மேலும் இதனை (குர்ஆனை)க் கொண்டு மிகப்பெரிய ஜிஹாதை மேற்கொள்வீராக! (25:52)

இறைபணியில் இறுதிமூச்சு இருக்கும்வரை

முக்ரின்

Comments

tmmk raja said…
asalam...
thiru pj and baakar avarkaluku..
tmmk pathi pesuratha neruthunka..neenka tmmk pathi thappa solla solla athan mathippu kudi konde than pokum..
UNARVIL ISSUE PANNA MATTER ELLAI ENDRAL UNGAL MANAVIN FIRST ANUBAVAM PATHI ELUTHUNGAL...
OR BAAKARUKU EN SUNNY KALAMBALA ENDRU ELUTHUNGA..
ATHU MATTUM ELLAI TMMK PATHI POOTA UNGA NEWS PAPER POKATHU..SO
ONE GOOD IDEA...
UNKA MANAVIN NERVANA PHOTOVAI PODUNGA..ATHU THAN UNKA FANSKU NEENGA KUDUKUM SANMAANAM...
NAANGA THINIYA PUDICHI NADAKUM POTHU ENGA SUNNYA PUDICHI NADANTHA NAATHARI NAYE ETHU THAN UNNAKU LAST WARNING
ETHAN PIN TMMK PATHI NE PESUNA UN MANAVIYAI NERVAANA PHOTO ANUPA PADUM
TAKE CARE,,,
BAAKAR MAMA HOW IS NANTHINI
tmmk raja said…
TO TMMK...
ETHU UNGALUKU WARING..
PJ KETKURAN ,,BAAKAR KETKURAN ENDRU NEENGAL KANAKO,AVANUKU BATHILO ANUPINA ENGAL KEZAI KALAIKA PADUM..
NAANGAL UNNAGALI NAMBUROM..
SO DONT CARE ABOUT THAT FOOLS..
PADIKATHA NAAIGAL..
DO OUR WORK ..ALLAH GIVE GOOD THINGS TO US...
IDAR ALI AVARKALUKU VARIYA PATHAVI KUDUTHA POTHU ETHIRTHAARGAL,TMMK KU AMBULANCE KODUTHA POTHUM ETHIRTHAARGAL EN ENDRAL AVARGALUKU KUDUKA VILLAI SO ONLY..
BY
TMMK THONDAN...

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.