செய்யாத குற்றத்தை செய்ததாக எவனாவது ஒப்புக் கொள்வானா?

காமிலின் இரண்டாவது வழக்கான கொடுங்கையூர் வழக்கு பற்றிக் கூறிய காமில் முதல் வழக்கு பற்றி கூறாதது ஏன்? 

பாபாவின் இறப்புக்கு வர முடியாத அளவுக்கு காமில் ஜெயிலில் இருந்த காமிலின் தரத்தை வெளிப்படுத்திய முதல் வழக்கு என்ன வழக்கு?

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_29.html

காமில் பிடித்த முயலுக்கு எத்தனை கால்கள்? 

ஒரு கால் இல்லாத முயலை பிடித்துக் கொண்டு நான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். 

4 கால் கால்கள் உள்ள முயலின் ஒரு காலை தன் கையால் பிடித்துக் கொண்டு. மற்ற 3 கால்களை மட்டும் 1, 2. 3. என எண்ணி விட்டு. தன் கைப்பிடிக்குள் இருக்கும் காலை எண்ணிக்கையில் சேர்க்காத அதிபுத்திகளும்(?) இருக்கிறார்கள்.  

அவர்களும் தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று சத்தியம் செய்து சாதிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதில் காமில் எந்த ரகம்?

22-09-2017 அன்று நடந்த 24 கூட்டமைப்புக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்று காமில் என்னிடம் சொன்னார்.
காமில் சொல்லுக்கு மாற்றமாக எனக்குத் தெரிந்த உண்மையான சரியான தகவல்களை காமிலிடம் சொன்னேன். 

காமில் அதை ஏற்க மறுத்தார். கூட்டமைப்புக் கூட்டத்தின் உள்ளே இருந்தவர்கள் சொன்ன தகவலா? என்று கேட்டார் இல்லை என்றேன். 

காமிலோ, தான் உள்ளே இருந்தவர்களிடம்  நேரடியாகக் கேட்ட தகவல் என்று தவறானதைக் கூறி சாதித்தார்.

சில மாதங்கள் கழித்து நீங்கள் சொன்ன தகவல்களே உண்மை என்று என்னிடம் ஒப்புக் கொண்டார். 

அதேபோல்தான் 1997ல் காமில் ஜெயிலின் உள்ளே இருந்தபொழுது உள்ளே இருந்தவர்கள் சொன்னதாக சொல்லி உள்ள தகவல்களின் நிலை. 

அதில் ஒன்று பாஷா பாயும் அவரது மருமகனும் சொன்னது. அதில் எனக்குத் தெரிந்த விஷயமான பாஷா பாய்  வருத்தம் தெரிவித்தது.

அதை நேரடியாகச் சொல்லாமல் பீ.ஜே. சொல்லி உள்ளாரே என்று காமிலிடமே சொன்னேன். அது வேறு விஷயம் என்றார் காமில். 

இந்த மாதிரி பீ.ஜே. த.மு.மு.க. அமைப்பாளராக இருந்தபொழுது அவர் தரப்பில் உள்ள நியாயங்களை காமிலிடம் பதிலாக சொல்லியே வந்துள்ளேன்.

அதையெல்லாம் முன் பின் எடிட் செய்தே வெளியிட்டு வருகிறார்.

1997ல் த.மு.மு.க. தலைமையினருக்கு எதிராக  காமில் நோட்டீஸ்கள் போட்டார். அதை அவரே சமீபத்தில் வெளியிட்ட 62:5 ன் J.S. ரிபாஇ சம்பந்தமான பதிவு மூலம் ஒப்புக் கொண்டார்.

அந்த 
நோட்டீஸ்களை அவர் மீள் பதிவு செய்தால் புதிய தமுமுகவினரும் காமிலை புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும். காமில் அதைச் செய்வாரா?

த.மு.மு.க.வை விட்டு பீ.ஜே. வெளியேறிய பின்  பீ.ஜே.க்கும் TNTJவினருக்கும் எதிராக செயல்பட்டார். 

பீ.ஜே.
 ததஜவிலிருந்து ராஜினாமா செய்த பிறகு பீ.ஜே.க்கும்  பீ.ஜே. தரப்பில் உள்ள நியாயத்தை சொல்பவர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். 

காமிலின் இந்த விஷயத்தில், குர்ஆன் ஹதீஸுகளுக்கு விரோதமான ஏகத்துவ எதிரிகளை  அடையாளம் காட்டி எதிர்த்து நிற்கும் பெரும் பொறுப்பை அல்லாஹ்வின் உதவியால் நான் ஏற்று நிற்கிறேன்.  

அதனால் நிதானமா செயல்பட வேண்டிய நிலையில் உள்ளேன். அல்லாஹ்வின் பேரருளால் உண்மைகள் தானாக வந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் உண்மைகள் தானாக வர அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். 

காமில் கொடுங்கையூர்  வழக்கில் கைதானது பற்றி தானாக சொல்லிக் காட்டி விட்டார். பாபா இறந்தது 1997 ஜனவரி 29ல்.  
காமில் சொல்லி உள்ள  
கொடுங்கையூர்  வழக்கு 1997 மார்ச்சில் உள்ளது. 

பாபா இறந்து இரண்டு மாதத்திற்கு பிறகு உள்ள வழக்குதான் கொடுங்கையூர்  வழக்கு. 
நவ்ஷாத் மூலம் 
காமில் ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு வழக்கு 1996ல் உள்ளது. 


பழனி பாபாவின் இறப்புக்கு வர முடியாத அளவுக்கு காமில் ஜெயிலில் இருந்தார் என்று நவ்ஷாத் கூற, காமிலும் அவரது ஆதரவாளர்களும் ஒப்புக் கொண்டு விட்ட வழக்கு. இது என்ன வழக்கு? காமிலும் அவரது ஆதரவாளர்களும் சொல்லத் தயங்குவது ஏன்?

இது எந்த நேரத்தில் நடந்தது?  தமுமுக சார்பில் எனக்கு போன் போட்ட 62:5 ன் J.S. ரிபாஈ,

பாஷாபாய் போன்றவர்களுக்கு தடாவிலிருந்து ஜாமீன் கிடைக்க உள்ளது. உடனே ஒண்ணரை லட்சம் வேண்டும் என்றார். 


நிர்வாகிகளையும் இயக்கத்தவர்களையும் கூட்டி மஷுரா பண்ணி வசூல் செய்து அனுப்பனும் என்றால் காரியம் கை கூடாது.

இந்த மாதிரி நேரங்களில் எனக்கு அவசரமாக உதவக் கூடியவர்களில் 
காயல்பட்டிணம் நண்பரிடம் 62:5 ன் J.S. ரிபாஈ கேட்டுள்ளதை எனது கணக்கில் கடனாகக் கொடுக்கச் சொன்னேன். ஒண்ணரை லட்சம் ரூபாயைக் கொடுத்தார்.

இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், 62:5 ன் J.S. ரிபாஈ கேட்ட ஒண்ணரை லட்சம் கொடுத்த அந்த நேரத்தில்தான் (ஏறக்குறைய 1996 ஜுன் வாக்கில் தான்) ஆஷுரா இண்டர் நேஷனல் டிராவல்ஸ் விஸா மோசடி வழக்கில் காமில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனார். 


காமில் முதலில் கைதான வழக்கின் உண்மைத்தன்மை என்ன? இவர்கள் உளறித் திரிவது போல் அன்றைய தமுமுகவும் பீ.ஜே.யும் பிடித்து கொடுத்ததா? காட்டிக் கொடுத்ததா? அல்லது போலீஸால் போடப்பட்டதா?  

இரண்டாவது முறையாக 97 ல் கைதான கொடுங்கையூர் வழக்கை சொல்லிக் காட்டும் காமில். தனது தரத்தை வெளிப்படுத்திய ஜட்டியுடன் கைதான வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?  

இரண்டாவது கைதான வழக்கு காமில் வாதப்படி காட்டிக் கொடுக்கப்பட்டது என்றால், முதல் வழக்கின் நிலை என்ன? இயல்பானதா இல்லையா? 

அல்லாஹ்வின் சாபத்துக்குரிய வழிகெட்ட கொள்கை உடையவர்கள் வைக்கும் கேள்வி. செய்யாத குற்றத்தை செய்ததாக எவனாவது ஒப்புக் கொள்வானா? என்பது.

இதற்கு காமில் வாழ்க்கையிலேயே பதில் இருக்கிறது. அதாவது அந்தக் கேள்விக்கு காமில் தனது பதிவு மூலம் தந்துள்ள பதில். இணைப்பில் உள்ளது.




அந்த வெடிக்காத குண்டு  வழக்கில் (காமிலாகிய) என் மீது குற்றம் நிரூபிக்க முடியாது என்ற நிலையிலும், நான் நீதிமன்றத்தில் வழக்கில் என் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என பகிரங்கமாக கூறினேன். இது போல நீ சினிமாவில் கூட பார்க்க முடியாது.

அந்த வெடிக்காத குண்டு வழக்கில் காமில் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டதாகக் கூறி உள்ளார்.

அது அவருக்கு இருந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒப்புக் கொண்டுள்ளார். 

காமிலை குற்றவாளியாகக் காட்ட வேண்டும் என்பதற்காக. செய்யாத குற்றத்தை செய்ததாக எவனாவது ஒப்புக் கொள்வானா? என்ற முட்டாள்தனமான கேள்வியை நாம் கேட்க மாட்டோம்.  

காமில் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டதால் தான் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.


கொடுங்கையூர் வழக்கில்  இவரை மாட்டி விட்டது  தமுமுக அமைப்பாளராக இருந்த பீ.ஜே.தான் என்று காமில் கூறி வருகிறார். என்னிடமும் கூறி இருக்கிறார். உண்மையில் அது பீ.ஜே. மாட்டி விட்டது இல்லை.

மேற்கண்ட பதிவில்

வழக்கில் உன்மையாக தொடர்பில் இருப்பவர்கள் வழக்கை நடத்த விடாமலும் , வழக்கில் தொடர்பு இல்லாதவர்களும், குறைந்த அளவு தொடர்பில் இருந்தவர்களும் வழக்கை நடத்த போராடுவதும் ஒவ்வொரு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையே சண்டை சச்சரவு இருந்தது. 

என்றும் சிறைவாசிகளை கொச்சைப்படுத்தியும் எழுதிய காமிலின் இது போன்ற பித்னா செயலால்,  காமில் தன் கைகளால் தேடிக் கொண்ட வினை அது.

உண்மையான ஜிஹாதிகள் பற்றி  ஜிகாத்துக்கு சம்பந்தம் இல்லாத காமில் செய்த பித்னாவால்  பாதித்த அவர்கள் தங்களுக்குள்  பேசி வைத்திருந்தார்கள்.

ஏதேனும் வழக்கில் பிடிபடும் சூழல் இருப்பின் காமில் பேரை சொல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள். காமிலும் அந்த நேரம் ஃபித்னா பண்ணிக் கொண்டு இருந்தார். 

ஆகவே காமில் பம்பாயில் வைத்து 500 ரூபாய் கொடுத்தார் என்றார்கள். காமில் கைதானார்.

இந்த உண்மையை இனியாவது காமில் உணர்ந்து  விசாரித்து அறிந்து  திருந்துவாரா? தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்ற நிலையிலேயே இருப்பாரா?

குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமாக செயல்பட்டு  நரகத்தில் போய் சேர்ந்தாலும் சரி. பீ.ஜே.யை எப்படியாவது குற்றவாளியாக ஆக்கியாக வேண்டும் என்றுள்ளவர்களில்  சிலர் கீழக்கரையிலும் இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் பீ.ஜே. பற்றி குற்றச்சாட்டுக்களை அனுப்பிக் கொண்டிருந்தார். மற்றவர்களது குற்றச்சாட்டுக்களை நம்பிய நான் அவரது குற்றச்சாட்டை நம்பவில்லை.

காரணம், கீழக்கரையில் முஸ்லிம் அல்லாத  டிரைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் பல முஸ்லிம்  பெண்கள் கொலை வழக்கில் மாட்டினார்கள்.

வழக்கு வகைக்கு என்று கொடுக்கப்பட்ட பணத்தை  வக்கீலுக்கு அவர் கொடுக்கவில்லை. ஆனால் வேறு ஒருவர் ஆட்டை போட்டு விட்டார் என்று  பரப்பி விட்டார்.

அது சம்பந்தமாக ஹைகோர்ட் வக்கீல் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. இது நமக்கு தெரிந்ததால் அவர் கூறிய குற்றச்சாட்டை நாம் ஏற்கவில்லை.

அதே ஆள் குறித்த இன்னொரு பஞ்சாயத்து. இதில் பஞ்சாயத்து பண்ணியவர் சொன்ன விஷயம். 

ஒருவர் வீட்டில் கறுப்புப்பணம் 70 லட்சம் வைத்துள்ளார். வருமான வரி ரைடு வந்தவுடன் அவர் --- வுக்கு போன் போட்டு உங்கள் வீட்டின் மாடியில் இதை வீசி விடுகிறேன். பின்னர் வாங்கிக், கொள்கிறேன் என்று கூறி பக்கத்து வீட்டில் இருந்த ---- வீட்டு மடியில் போட்டு விட்டார்.

பின்னர் கேட்ட போது அப்படி எந்த பையும் வரவில்லை என்று ----- மறுத்து விட்டார். பிறகு ------ ஆபீசில் ------- உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இரு தரப்பாரும் அழைத்து பேசியதில் பை போடப்பட்டதை ஒப்புக் கொண்டு அதில் 35 லட்சம் தான் உள்ளது என்று சொல்லி அதைக் கொடுத்துள்ளார். 

இது பெரிய சண்டையாகி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார் பணம் போட்டவர் மனம் நொந்து போய் விட்டார். இப்படிப்பட்டவர்களின் ஆட்கள் தான் தங்களது இமேஜை காப்பாற்ற காசுக்காக ஆடியோ வெளியிட்ட கூட்டத்தை ஆதரித்து நிற்கிறார்கள். 

காசுக்காக வெளியிடப்பட்ட  அடியோக்கள் தான்.
3 ஆடியோவுக்கு என பணம் வாங்கி விட்டு ஒரு ஆடியோ மட்டும் தந்து ஏமாற்றியவர்கள் தான்.
அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்தான் என்பதை காமிலே நிரூபித்து விட்டார்.

பீ.ஜே.யை கொலை செய்வது சம்பந்தமாக பேசியவர் பெயர்.  ஆடியோ விற்ற பணத்தில் பங்கு கேட்டு காமிலிடம் சண்டை போட்ட ஜிகாதி பெயர் இது போன்றவற்றை முன் பின் கட் செய்து காமில் வெளியிட்டாலும் அறிவுள்ளவர்கள் உண்மையை அறிந்து வருகிறார்கள்.


“அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” 7:44.

அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

38:78. “இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).

28:42. இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

15:35. “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.