2:44 இவர்கள் பிரச்சாரம் செய்யலாமா?

பொய்யன் உண்மையும் சொல்வானா?
இதில்  அன்னாஸ என்ற வார்த்தை உள்ளது.  இதற்கு மக்கள்,  மனிதர்கள்  என்பது நடை முறைத் தமிழாக உள்ளது. 

1950களில் உள்ள தர்ஜமாக்களில் ஜன என்ற வட மொழியும்  ங்கள் என்ற  தமிழும் கலந்து ஜனங்கள் என்று இருக்கும். ஜன(ம்) என்பது வடமொழி சொல் என்பதை எளிதில்  புரிவதற்கான  வார்த்தை  ஜனசங்கம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/244.html



2:44 ல் இடம் பெற்றுள்ள இன்னொரு வார்த்தை கிதாப்.  இதற்கு நேரடி பொருள்  _BOOK -புத்தகம் என்பதுதான்.



அரபிகள் ஜீப் அல் கிதாப் என்றால் வேதத்தை குறிக்காது. எந்த புத்தகமாக  இருந்தாலும் அரபிகள் அதை கிதாப் என்றுதான் சொல்வார்கள்.

அல்லாஹ்விடம் இருந்து இறக்கி அருளப்பட்டதை  வேதம், இறைமறை  என்று   சொல்லும் வழக்கம்   எல்லா மக்களிடமும் உள்ளது.

நம்ம மக்களிடம் இன்னுமொரு பழக்கம் இருக்கிறது. என்ன நீ இன்னும் குர்ஆன் தான் ஓதுகிறாயா? கிதாப் ஓதுகிறாய் என்றல்லவா நினைத்தேன் என்பார்கள்.

அல்லாஹ் குர்ஆனை கிதாப் என்றே சொல்கிறான். ஆனால் அரபு கல்லுாரியில் படித்துக் கொடுக்கப்படும் புத்தகங்களுக்கு   கிதாப் என்று சொல்லும் வழக்கம் மக்களிடம்  உள்ளது.

மக்களிடம் உள்ளவையெல்லாம் சரியான கருத்துக்கள்  - கொள்கைகள் இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

தங்களுக்குப் பிடிக்காதவர்களை பிரச்சாரம் செய்யக் கூடாது என்று  சொல்லக் கூடியவர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் கூற்றுக்கு இது போன்ற வசனங்களை எடுத்துக் கொண்டு பேசுவார்கள்.

இவர்களின் கூற்று தவறு என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையில் உள்ள கட்டளை ஒன்று போதும்.

பல்லிஃகூ அன்னி வலவ் ஆயா. இது சமீபத்தில் அதிகமாகவே வாட்ஸப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹதீஸ்

எனது சொல் ஒன்றாக இருந்தாலும் மக்களுக்கு எத்தி வைத்து விடுங்கள் என்பது இதன் பொருள். 

கியாம நாள்வரை வர உள்ள தனது சமுதாயத்திற்கு நபி(ஸல்) அவர்கள் பொதுவாக  இட்டக் கட்டளை இது.  நபியை மதிப்பவர்களுக்கு இந்த ஒரு ஆதாரம் போதும்.

நரகில் தூக்கி வீசப்படும் ஒருவன் குடல் சரிந்த நிலையில் திருகையை  சுற்றி வருவது போல்  சுற்றி வருவான். 

நரகக் காவலர்களான மலக்குகள் (வானவர்கள்) நெருப்புக் கத்தரிக் கோலால் இது போன்றவர்களது உதடுகளை கத்தரிப்பார்கள்.  


மார்க்கத்தை  பிரச்சாரம்   செய்த   அறிஞன்   என்ற   அடிப்படையில்  சொர்க்கத்தைக்  கேட்கும்  அறிஞனிடம்,  நீ மக்கள் உன்னை மார்க்க  அறிஞன்  என  புகழ  வேண்டும்  என்பதற்காகவே  பிரச்சாரம்   செய்தாய்  எனவே  நீ  போ  நரகிற்கு  என கூறப்படும்.

இந்த பல விதமான வேதனைகளெல்லாம்  இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு நல் உபதேசம் செய்யக் கூடாது  என்ற அடிப்படையில் சொல்லப்பட்டது அல்ல.  அவர்கள் நல் உபதேசம் செய்யக் கூடாது  என்று தடுக்கப்பட்டதும் அல்ல.

தங்களை மறந்த அவர்களுக்கான எச்சரிக்கை தான். இவர்கள் தங்களையும்  கவனத்தில் கொள்ள வேண்டும் என்றே அவர்களுக்கு இந்த வசனம் உபதேசம் செய்து அவர்களுக்கு  எச்சரிக்கிறது.

நீண்ட ஹதிஸின் சுருக்கம். பைத்துல்மால் பாதுகாப்பாளராக அபுஹுரைரா (ரலி) அவர்கள் இருந்தபோது 3 ஆம் நாளும் திருடியவன். நான் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுத் தருகிறேன் என்கிறான். 

என்ன? என கேட்க இரவில் படுக்கும்போது ஆயத்துல் குர்ஸி ஓது உன்னை ஷய்த்தான் நெருங்க மாட்டான் என்கிறான் விட்டு விடுகிறார்கள். 

இந்த சம்பவத்தை நபி(ஸல்) அவர்கள் இடத்தில் அபுஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், அவன் பொய்யன் உன்னிடம் உண்மை சொல்லி உள்ளான் என்று கூறி அவன் ஷய்த்தான் எனவும் அடையாளம் காட்டுகிறார்கள். 

சொன்னவன் ஷய்த்தான் தான் என்றாலும் சொல்லப்பட்ட விஷயம் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்படவில்லை என்றால் அதை ஏற்றுக் கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம். அவர்கள்  பிரச்சாரம்  மூலம் மக்கள் பயன் பெறத்தான் செய்வார்கள்.  

தீயவர்களைக் கொண்டும் அல்லாஹ் தன் மார்க்கத்தை நிலை நாட்டுவான்.  இந்த மாதிரி  நபிமொழிகளை எடுத்துச் சொன்ன பிறகும் என் மனம் ஏற்கவில்லை என்பவர் தங்கள் மனோ இச்சைகளை பின்பற்றக் கூடியவர்களே.  இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது 2004ல் நாம் எழுதிய பதில்தான்.

இனி வார்த்தைக்கு வார்த்தை


أَتَأْمُرُونَ -  ஃஅதஃமுரூன 

ஏவுகின்றீர்களா?

النَّاسَ - அன்னாஸ 
மக்களுக்கு -  மனிதர்களுக்கு 

بِالْبِرِّ - பில் பிர்ரி 
நன்மையை

وَتَنسَوْنَ - வதன்ஸவ்ன 
மறக்கிறீர்கள் - மறந்து விட்டு

أَنفُسَكُمْ - அன்Fபுஸகும் 
தங்களை - உங்களை

وَأَنتُمْ - வஅன்தும் 
நீங்கள்

تَتْلُونَ தத்லுான 
ஒதுகிறீர்கள்

الْكِتَابَ - அல் கிதாப
 வேதம் - இறை மறை 

أَفَلَا- அFலா 
இல்லையா? - மாட்டீர்களா? - வேண்டாமா?  

 تَعْقِلُونَ- தஃகிலுா(ன)ன்
நீங்கள் சிந்திப்பீர்கள் - உங்களுக்கு புரிகிறது.

أَفَلَا تَعْقِلُونَ அFலா தஃகிலுா(ன)ன்
நீங்கள் சிந்திக்க வேண்டாமா? -  சிந்திக்க மாட்டீர்களா? -  புரிய மாட்டீர்களா? - ஒரு போதும் சிந்திக்க மாட்டீர்களா? - உணர வேண்டாமா? - விளங்கிக் கொள்ள வேண்டாமா?


أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ 

ஃஅதஃமுரூனன்னாஸ பில் பிர்ரி வதன்ஸவ்ன அன்Fபுஸகும் வஅன்தும் தத்லுானல் கிதாப  Fலா தஃகிலுா()ன்
மொழிப்பெயர்ப்புகள்:

நீங்கள்  (மற்ற)  மனிதர்களை மட்டும் நன்மை செய்யுமாறு ஏவி, உங்களை  மறந்து  விடுகின்றீர்களே! இறைமறையையும் ஓதிக் கொள்கின்றீர்கள்! (என்னே முரண்பாடு?) நீங்கள் சிந்தித்து அறிவு பெறக் கூடாதா? - (அதிரை ஜமீல்)
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?- (PJதொண்டி)

நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டுஉங்களை நீங்களே மறந்தவார்களாக (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா?  நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?  (டாக்டர். முஹம்மது ஜான்)

நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 
பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு, உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறிதளவும் (இதைப் பற்றி) சிந்திப்பதில்லையா? (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)







நீங்கள் வேதத்தை ஒதிக்கொண்டு உங்களை மறந்து விட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? இதனை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.