அநியாயமாக சிறை செல்லாமல் இருக்க வேண்டுமா?


இதில் தனி நபர் விமர்சனம் கிடையாது. சிறைவாசிகளாக ஆவதிலிருந்து  உங்கள் வாரிசுகளான  பிள்ளைகளைக்  காக்க வேண்டாமா? உங்கள் பேரன்கள் அநியாயமாக  சிறை  செல்லாமல்  இருக்க  இந்தப் படிப்பினை தரும்  வரலாற்றைப் படியுங்கள்.  

இந்த கதி உங்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள். எப்படி மீள்வீர்கள்?

எப்படியாவது கோவை பாஷா பாய், அல் உம்மா தலைவர் அன்சாரி போன்றவர்களை விடுதலையாக்கி விட வேண்டும் என்று கடும் முயற்சி  மேற்கொண்டோம்.  
அதற்காக, இந்திய பிரதமர் ,மாநில  முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் என யாரிமும் எளிதாகப் பேசக் கூடிய நமது சமுதாய பிரமுகரான செல்வந்தரை சந்தித்தோம். முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக முயற்சி செய்ய வேண்டினோம்

2005ல் நடந்த அந்த முதல்   முயற்சியில்   என்னுடன்  வந்தவர்களில்   காயல்  SK  இறந்து விட்டார்கோட்டை   தங்கப்பா  இருக்கிறார். அந்த சமுதாயப் பிரமுகர் பெயரைக் கேட்க வேண்டாம்.  

இப்படி ஒரு முயற்சி நடந்ததா இல்லையா? என்பதை     கேட்டுத்  தெரிந்து   கொள்ளுங்கள்.    இனி  யாரும் இந்த மாதிரி செய்ய மாட்டார்கள்   என்று  உறுதி  தாருங்கள் என்றார். மூவரும் உறுதி அளித்தோம். 

முதல் முயற்சி தோல்வியுற்றது என்றாலும் அடுத்தடுத்து முயற்சிகளை தன் நம்பிக்கையுடன் செய்து கொண்டிருந்தேன் சற்று மனம் இறங்கி  வந்தார்  சமுதாய  ப் பிரமுகரான  அந்த செல்வந்தர்.

சிறைவாசி,  சிறைவாசி என்று  ஆதாயமோ விளம்பரமோ  தேடியவன் அல்ல நான். கோவை வழக்கைப் பொறுத்தவரை  கீழ் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும்  வழக்கு நடத்தியது CTMதான். இப்பொழுது சுப்ரீம் கோர்ட்டிலும் நடத்திக்  கொண்டிருப்பது CTMதான். 2004ல் ரொம்பவும் இக்கட்டான  நேரத்தில்  என்னை அணுகினார்கள்.  

இந்த வழக்கில் அநியாயமாக என்னைப் பற்றி பொய்யான வாக்கு மூலம் கொடுத்து விட்டீர்கள். அதனால் முடியாது என்று சொன்னேனா? இல்லை. காயல் S.K, கோட்டை தங்கப்பாவுக்கு விஸா கொடுத்து துபைக்கு வரவழைத்து 2005ல் வசூலுக்கு அழைத்துச் சென்றேன். 

சென்ற இடத்தில்  ஒருவர் எழுதிய கடிதம் கண்டோம். CTMல் வசூலுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் எல்லா வழக்குகளையும் நடத்துவதாகச்  சொல்வார்கள்.  வருடம் தோறும் எனக்கு தனியாக அனுப்புவது போல் தனியாக  அனுப்பி  விடுங்கள் என்று இருந்தது அந்தக் கடிதம்.

ஆண்டு தோறும் சிறைவாசி என்ற பெயரால்  வசூலில்  ஈடுபட்ட அந்த நபர் இன்று வரை அந்த வசூலை விட்டபாடில்லை. எந்த வழக்கு வகைக்கு அவர் செலவு செய்தார்? இப்படி எழுதினால் தனி நபர் விமர்சனமாக  ஆகி விடும்.  தனி நபர் விமர்சனம் செய்ய மாட்டேன் என்று சொன்னதால் இதில் எழுத மாட்டேன்.  இவர் யார் என்பதற்கு தனி பதிவு உள்ளது.  

உண்மையான முஜாஹிதீன்கள். கஷ்டத்தோடு கஷ்டமாக பொது வெளியில் கையேந்தாமல்  இருக்கிறார்கள்.   அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது உண்டாகட்டுமாக ஆமீன்.  நீங்களும் துஆச் செய்யுங்கள்.

2005ல் 10  லட்சத்துக்கு மேல்  கோவை வழக்கு வகைக்கு என  வசூல் செய்து கொடுத்தோம். 2006ல் நான் தயாகத்தில் இருக்க  நான் அறிமுகப்படுத்தியவர்களைிடம்  உதவுமாறு போனில் வேண்டினேன். 10 லட்சம் வரை. உதவினார்கள்.  இப்படி செய்த  என்னைத்தான்  சிறைவாசிகளை  இழிவுபடுத்தியதாகச் சொல்கிறார்கள்.

இந்த வசூல்
 சம்பந்தமாக 2 முறையும் காட்டிக் கொடுக்கப்பட்டு யு... இந்தியா  இரண்டு நாடுகளிலும் விசாரணைக்குள்ளானோம்

அப்பொழுது அதை  சைட்டில் எழுதி காட்டிக் கொடுத்ததுமுகவை   ரைசுத்தீன்  என்றார்கள். CTM சர்ச் பண்ணி   பார்த்து   விட்டு   அது     பொய்  என்பதை  எழுத்து  மூலமாகத் தந்தார்கள். அது  இணைப்பில் உள்ளது.

சிறைவாசிகளின் பிள்ளைகளுக்கு ஸ்கூல் செலவுகளை கொடுத்து விட்டதாக ஒரு அரசியல் கட்சி T.V.ல் படம் காட்டியது. எந்த அரசியல் கட்சி என்று எழுதினால் ஒரு கட்சியைப் பற்றிய விமர்சனம் போல் ஆகி விடும். 

அந்தக் கட்சியை நம்பி இருந்த நிலையில் அவர்கள் வெறும் நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே தந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். வேறு வழியில்லை உடனே பணம் வேண்டும் என்றார் கோட்டை தங்கப்பா.  1,40,000 அனுப்பிக் கொடுத்தோம். இணைப்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுவெல்லாம் எப்போது செய்தோம்? என்னையும்  கோவை குண்டு வெடிப்பு  வழக்கில் அநியாயமாக சேர்த்தார்கள் என்று தெரிந்த பிறகுதான். 

அதிலிருந்து கஷ்டப்பட்டு மீண்ட பிறகு   தான்.  அந்த வழக்கு வகைக்கு பணம் நிர்ப்பந்தம் என்று சிறைவாசிகள் என்னை அணுகியதும் மறுக்காமல் உதவினோம். அது மட்டுமல்ல சிறைவாசிகள் குடும்பத்தவர்களுக்கு விஸா அனுப்பி அரபு நாட்டில் வேலை வாங்கியும்  கொடுத்தோம். இது என் பெருமை பேச எழுதவில்லை. மற்றவர்கள்  அநியாயமாக   சிறை  செல்லாமல்    இருக்க, காக்கவே  இந்தப் படிப்பினைகள் தரும்  வரலாறு.

இலாஹி பெருந்தொகை வாங்கினார் என்று 2002 ஜுனில்  சொன்னவர்களில்  மவுலவி ஹாமித் பக்ரியும்  ஒருவர்.  அதே 2002 டிசம்பரில் ஹாமித்  பக்ரி கைதானார்உடனே மேலப்பாளையம்காயல்பட்டிணம்குத்தாலம்,  இளையான்குடி, திருப்பணந்தாள்   என   பல   ஊர்   சகோதரர்களை   திரட்டி  அவரது விடுதலைக்கு முயற்சி செய்தோம்.

பயங்கரமான  சூழலில்  பக்ரிக்கு  ஆதரவாக  நோட்டீஸ்கள்  போட்டேன்.  தமிழகத்திலும்  யு.ஏ.இ.யிலும்    பொதுக்   கூட்டங்கள்  நடத்த வழி வகுத்தேன்.

ஹாமித் பக்ரி தலைமையிலானவர்கள் விடுதலைக்கு அஸ்திவாரம்  மேலப்பாளையம்,  காயல்பட்டிணம்,  குத்தாலம்,  இளையான்குடி என  பல ஊர் சகோதரர்கள் என்னுடன் செயல்பட்டது தான்.

இந்திய பிரதமர்  போன்றவர்களிடம்    எளிதாகப்    பேசக்   கூடிய   முஸ்லிம்  பிரமுகரான  செல்வந்தர் 2008ல்  ஒரு மாநில அமைச்சருக்கு விருந்தளித்தார்.  அதில் கலந்து கொண்ட நான் மீண்டும் நினைவூட்டினேன்.  

3வது சந்திப்பில் சற்று மனம் இறங்கி  இருந்த அவர் 2007ல் இருந்து தொடராக நடந்த கொலைகளால் இனி சாத்தியம் இல்லை என்று மத்திய மாநில அமைச்சர்கள் சொல்லி விட்டதாகக் கூறி இனி கோவை வழக்கு சிறைவாசிகள்  விடுதலை பற்றி பேசாதீர்கள் என்று முடித்து விட்டார்.


அதே கால கட்டத்தில் தான் அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞரிடமும் அதிகாரிகளிடமும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விஷயமாக பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அவர்களும் கடைசியில் இந்தக் கொலைச் சம்பவங்களைக் காரணம் காட்டிதான் மறுத்தார்கள். 

அதற்கு முன்னதாக 2006ல் உங்கள் விடுதலை விஷயமாக இப்படி ஒரு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இனி சம்பவங்கள் செய்யாதீர்கள் என்று மதுரை, திருச்சி, கோவை, பாளை, சென்னை இப்படி ஒவ்வொரு சிறையாகப் போய் பார்த்துச் சொன்னேன். 

வெளியில் இருந்தவர்களிடம் நேரில் சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக இனி சம்பவங்கள் செய்ய மாட்டோம் என்று என்னிடம் சத்தியம் செய்தார்கள். 

அதில் ஒருவர் சிறையில் வைத்து சரி சரி என சொல்லி விட்டு எனது சந்திப்பை அரசியல் நாடகம் என்று அதே 2006ல் நோட்டீஸ் போட்டார். முன்னதாக அவரது சகோதரருக்கும் விஸா எடுத்து கொடுத்து இருந்தேன்.

நீங்கள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு முயற்சி செய்யுங்கள். நாங்கள் இனி சம்பவங்கள் செய்ய மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணை இட்ட அந்த முன்னாள் சிறைவாசிகளைச் சார்ந்தவர் தான். கொலைகள் செய்ய வைத்தார். இந்தச் செயல்கள் தான் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை முழுமையாகப் பாதித்தது.

மேலும் கொலை செய்தவர்கள் ஒரு சாரார். மாட்டி விடப்பட்டவர்கள் அப்பாவி இளைஞர்கள், மாணவர்கள். இப்படி மாட்டி விடப்பட்ட இளைஞர்களும் மாணவர்களும் நீங்கள் பெற்ற பிள்ளைகளாக இருந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கு?  எண்ணிப் பாருங்கள்.

இந்த சதிச் செயல்களையும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை பாதித்த கொலைகளையும் கண்டித்துப் பேசினேன்

யாருடைய விடுதலைக்காக பாடுபட்டேனோ அவர்களில் சாராரே என்னை மிரட்டினார்கள். இந்தக் கொலைகளால் உங்கள் விடுதலைதானே பாதிக்கிறது என்றேன்.  அதற்கு அவர்கள் சொன்ன பதில். உங்கள் விஷயத்தில் நாங்கள் வேறு முடிவு எடுக்க வேண்டியது இருக்கும் என்பதுதான்.

ஆனால் அல் உம்மா தலைவர் அன்சாரி அவர்களோ, ”நாங்கள் 10 ஆண்டுகளாக சிறையில் நொந்து நுாலாகி இருக்கிறோம். எங்கள் விடுதலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சம்பவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டார். 

இந்த நிலையில் கொலைகளை துாண்டி விட்ட கூட்டத்தின் தலைவர். எனது நண்பர் ஒருவர் மூலம் என்னை சந்திக்க விரும்புவதாக துாது அனுப்பினார்

உங்கள் வீடும் வேண்டாம்
, அவர் இடமும் வேண்டாம். எனது இடமும் வேண்டாம். பொதுவான இடத்தில் சந்திக்க வேண்டும் என்பதும் நிபந்தனை. இதில் உள்ள சூழ்ச்சிகளை அறியாத நான் அந்த நிபந்தனையை ஏற்று சந்திந்தேன். 

சிறைவாசிகள் என்ற அடிப்படையில் தான் உதவுகிறேன். உங்கள் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. என்று என் வீட்டில் நடந்த முன்னாள் சிறைவாசிகள் கூட்டத்தில் பேசியதை நினைவு கூறி அதுதான் என் நிலை. 

சிறைவாசிகள் என்பதால் தான் உதவுகிறேன். ஜிகாத் என்ற பெயரால் செய்யும் இந்த செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி  விட்டு வந்தேன். 

அடுத்த நாள் காவல் துறை உளவுத்துறை என என்னை அறியாத கீழ்மட்ட அதிகாரிகளின் சோதனை விசாரணை என என்னைச் சூழ்ந்தது. நீங்கள் தான் கொலைகள் செய்யச் சொல்லி பணம் கொடுத்து பத்வாவும் கொடுத்து வந்துள்ளீர்கள். 

மேடையில் வெளிரங்கமாக எதிர்ப்பது போல் பேசுவேன். அதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது என்று கொலை செய்யக் கூடிய கூட்டத்தாரிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் யாரை கண்டித்து பொதுக் கூட்டங்களில் பேசினீர்களோ அந்த ஜிகாத்திகள் அமீர் தந்த முன் தகவல் இது. 

அடுத்த முறை கொலை செய்யச் சொல்லி ரகசியமாக சந்தித்து பணம் கொடுக்க வருவார். எங்கே சந்திப்பு எப்பொழுது சந்திப்பு என்று முன் கூட்டியே கூற மாட்டார். இனி எப்பொழுது அழைத்தாலும் காவல்துறைக்கு தகவல் தருகிறேன் என்று கூறி இருந்தார். அதன்படி நீங்கள் சந்திக்க உள்ள தகவல் தந்தார். சந்தித்ததையும் பார்த்து வீடியோ பண்ணி விட்டோம் என்றார்கள்.

உடனே சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பருக்கு போன் போட்டு கேட்டேன். அல்லாஹ் மீது ஆணையாக தனக்கு  இந்த சூழ்ச்சி தெரியாது என்றார். 2007, 2008 எட்டுகளில் சிறைவாசிகள் வீட்டு பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் கட்ட என்று இவர்களும் பணம் கேட்டார்கள் கொடுத்து உதவினேன். 

சிறைவாசிகள் வீட்டு பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் கட்ட கொடுத்த பணத்தைத்தான் கொலைகள் செய்ய கொடுத்ததாக கூறி உள்ளார். இந்த கதி உங்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள். எப்படி மீள்வீர்கள்? இப்படி நீங்கள் மாட்டிக்  கொண்டதாகவே சிறிது எண்ணிப் பாருங்கள்.

இவர் தலைமையில் உள்ள ஜிகாத்திகள் என் வீட்டிற்கு வந்து இனி சம்பவங்கள் செய்ய மாட்டோம் என்று சத்தியம் செய்து அவர்கள் கைப்பட எழுதி தந்த பிறகுதான் அவர்கள் கேட்ட சிறைவாசிகள் வீட்டு பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் கட்ட என்று த.மு.மு.க. மூலம் பணம் கொடுத்துள்ளேன்.  

அப்படி பணம் கொடுத்த விபரங்களை, இந்த இந்த உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறேன். அவர்கள் தந்த கடிதங்களையும் அனுப்பி இருக்கிறேன் என்றேன். அல்லாஹ் அருளால் காப்பாற்றப்பட்டேன். 

2019ல் தாயகத்தில் இருந்தபோதும்  சிறைவாசிகள் விடுதலை விஷயமாக  பல அரசியல் கட்சி பிரமுகர்களையும்  அதிகாரிகளையும் சந்தித்தேன். அவர்கள் சொன்ன செய்திகளை பெயர் குறிப்பிடாமல் எழுதினால் தனி நபர் விமர்சனமாக  ஆகாது  ஆகவே அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தான் சிறைவாசிகள் விடுதலை, சிறைவாசிகள் விடுதலை என்று அலைகிறீர்கள்.  அவர்களில் கஷ்ட நிலையில் உள்ள சிறு கூட்டம்தான் எப்படியாவது விடுதலை ஆக வேண்டுமே என்ற கவலையில் உள்ளார்கள். மற்றவர்கள் நிலை நீங்கள் அரபு நாட்டுக்கு போய் வந்து இருப்பது போல்  தான் உள்ளது.

நீங்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை  ஒரு மாத லீவில் வருகிறீர்கள். அவர்கள் ஒரு மாத பரோலில் வருகிறார்கள். அவர்கள் சிறையில் இருப்பதால் தான் சிறைவாசிகள் என்ற அனுதாபத்தில் வசூல் செய்ய முடிகிறது. ஆகவே இவர்களைப் போன்றவர்கள் விடுதலையை விரும்புவதில்லை. விடுதலை ஆகாமல் இருக்க  என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

வேறு வழக்குகளில் விடுதலையானவர்களில் எத்தனை பேர் உழைத்து சாப்பிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்? கட்ட பஞ்சாயத்து செய்வது. மிரட்டுவது.  போன்ற  சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

சிறை சென்று வந்து விட்டவர்கள் என்றால் அவர்களைப் பார்த்து மக்கள் பயப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் பற்றி இந்த மாதிரி புகார்கள் எல்லாம்  முஸ்லிம்களிடம் இருந்துதான் வருகிறது. அவர்களால் மிரட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் தான்.

அரபுநாட்டு வேலையில் உள்ளவர்கள் வீடுகளில் கூட இன்னும் ஏ.ஸி. இல்லாத வீடுகள்  உள்ளன.  20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர் என்பவர்களுடைய  வீடுகளில்  ஏ.ஸி. எப்பொழுதோ வந்து விட்டது. கார் வைத்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் 35 லட்சம் ரூபாய் கார் வாங்க 30 லட்சம் ரெடி 5 லட்சம் நீ கொடு என மேலப்பாளையத்தை சார்ந்தவருக்கு கட்டளை இட்ட செய்தி  வந்தது. ஆகவே குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களை MGR, அண்ணா பிறந்தநாளை ஒட்டி கருணை அடிப்டையில்  விடுதலை செய்ய அரசு பயப்படுகிறது.

மற்ற வழக்கில் உள்ள முஸ்லிம்கள் கருணை அடிப்டையில்  விடுதலை ஆகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோவை போன்ற வழக்கில்  கோர்ட் மூலம் விடுதலை என்ற ஒரு வழிதான் இருக்கிறது.

இதையெல்லாம்  சொன்னவர்கள்  பெயர் கூறியே சொன்னார்கள். அல் உம்மா அன்சாரி 2008ல் சொன்னது போல் 10 ஆம் ஆண்டில் நொந்து நுாலாகியவர்கள். 22 ஆண்டுகளை தாண்டிய நிலையில் எப்படி இருப்பார்கள்? இவர்கள் விடுதலை ஆகாமல் இருக்க  யாருடைய செயல்பாடுகள் காரணமாக இருக்கின்றனவோ அவர்கள் உருப்படுவார்களா?

ஆகவே,  நாம் கேட்கச் சொல்லும் துஆ யாருடைய பெயரையும் குறிப்பிட்டு அல்ல. செயலைக் குறிப்பிட்டே. செயல் சமுதாய துரோகச் செயல்தான் என உங்கள் உள்ளம் ஒத்துக் கொண்டால் உளமார துஆச் செய்யுங்கள்

யா அல்லாஹ் 1980களிலிருந்து  இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டும் காட்டிக் கொடுத்தும் மாட்டி விட்டும் பொய் சாட்சியம் சொல்லியும் முஸ்லிம் சமுதாயத்திற்கு கேடு விளைவித்த ஒவ்வொரு பாவிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு காசு பார்ப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் கூட்டத்தார் மீதும். ஏவி விட்டு காட்டிக் கொடுத்து காசு பார்த்தவனின் கூட்டத்தார் மீதும். காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் மீதும். அவனது கூட்டத்தார் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

காசுக்காக உளவுத்துறையின் கைக் கூலியாக இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் அநியாயமாக அப்பாவிகளை மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  அநியாயமாக மாட்டி விட்டவனுக்கு பதவி  கொடுத்த கட்சியில் உள்ள அனைவர் மீதும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் ஒவ்வொரு நிர்வாகிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். இவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்

ஹை கோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் யாருடைய செயல்பாடுகளால் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தடையாக உள்ளதோ அவர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். துஆ செய்யுங்கள்

சம்பந்தம் இல்லாதவர்களை அநியாயமாக மாட்டி விட்ட அந்தக் கூட்டத்தைச் சார்ந்த கூட்டணியினர் மீதும் அவர்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வாருவர் மீதும் யா உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு எழுதவில்லை. ஆகவே இது தனி நபர் விமர்சனம் கிடையாது.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.