பீ.ஜ.யை கொலை செய்ய ஜிகாத்திகள் என்னை அணுகினார்களா?

புகை மூட்டம் போட்டால் எல்லாம் தானாக வெளியே வந்து முடிந்து விடும்  என்றால்  என்ன  அர்த்தம்?

காமில் சம்பந்தி எமக்கு எழுதிய பதில் என்ன?

ஆடியோவுக்கு என்னதான் முடிவு?

காமில் தரமும் அவரை ஆதரிப்பவர்களின் 
தரமும்  என்ன? என்பதை காமில் கரத்தாலும் நாவாலும் நிரூபித்து வருகிறார். காமில் பாய் என்று பேசியவர்களில் நல்லவர்கள் முகம் சுழித்து தலையை தொங்க போட்டு விட்டனர். காமில் எழுத்தில் உள்ள மாதிரியான தரத்தில் உள்ளவர்கள் தான் காமிலுடன் இருப்பார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_23.html

காழ்ப்புணர்ச்சியின் உச்சம்தான் வெறி. காமில் கூட்டம் என் மீது கொலை வெறியில் அலைவதற்கு காரணம் என்ன? அல்லாஹ்வுக்காக தங்களை உயிரை அர்ப்பணிப்பவர்கள் தான் ஜிகாதிகள். 




காமில் கூட்டமோ ஜிகாதிகள் என்று சொல்லிக் கொண்டு  காசுக்காக ஆடியோ வெளியிட்டவர்கள். இந்த உண்மையை வெளியில் கொண்டு வந்ததே அவர்கள் கொலை வெறி பிடித்து அலைவதற்கு காரணம் காரணம். அவர்களிடம் உண்மை இருந்தால், உண்மையான ஜிகாதிகள் என்றால் ஏன் காசுக்காக ஆடியோ வெளியிட வேண்டும்? கோர்ட்டுக்கு வர பயப்பட வேண்டும்?

என்னிடம் உண்மை உள்ளதால் காமில் கூட்டத்தை திட்டியோ காமில் கூட்டத்தினர் மாதிரி அசிங்கமாகவோ எழுதவில்லை.  அசிங்கம் பிடித்தவர்களாலேயே அசிங்கமாக எழுத முடியும். அது ஹதீஸ்படி காமில் கூட்டத்தில் உள்ளவர்களுக்கே திரும்பும். நான், அவர்கள் காசுக்காகத்தான் ஆடியோ வெளியிட்டார்கள் என்ற உண்மையை மட்டுமே எழுதி வருகிறேன்.

நான் பீ.ஜே.யை சிறையில் தள்ள கடும் முயற்சி செய்தேன். போலீஸில் கம்ளைண்ட் செய்தேன். குரல் டெஸ்ட்டுக்கு போனேன். காமில் அணி தான் ஒத்துழைக்கவில்லை. ஆடியோவை காசுக்காக வெளியிட்டவர்கள் என்பதால் தான் அவர்கள் கோர்ட்டுக்கு வர பயந்து நடுங்கி பின் வாங்கி ஓடினார்கள். இவை யாவும் காமில் மூலமே நிரூபணம் ஆகி வருகிறது. 


பீ.ஜே. மீது உள்ள தனிப்பட்ட வெறுப்பால் காமிலை ஆதரிப்பவர்கள் பூதம் வந்தது, புலி வந்தது  என்று  ஏதேதோ எழுதி சந்தோஷப்பட்டு தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள். காமில் ஆடியோவை வைத்து பீ.ஜே.யை எப்படியாவது உள்ளே தள்ள ஏகப்பட்ட முயற்சிகள் செய்தேன் என்று நானே பல முறை எழுதி விட்டேனே.

ஆடியோ பற்றி செய்தி மெகாஸினில் மட்டும் வந்தால் கோர்ட்டில் நிற்காது. நாளிதழிலும் வர வேண்டும் என்று ஒரு I.B. அதிகாரி ஆலோசனை சொன்னார். ஆகவே நண்பர் மூலம் நாளிதழிலும் செய்திகள் வர வைத்தேன்.  

ஹைகோர்ட் வக்கீல்களில் பெரிய வக்கீலாகத் தேடினேன். அதற்காக கருணாநிதி குடும்ப வக்கீலும் பார் கவுன்ஸில் தலைவருமான மாணிக்கம் என்ற பெரிய வக்கீலை நண்பர் மூலம் பார்த்தேன். 

நல்ல பீஸ் தருகிறேன் புதிதாக வர உள்ள 3 ஆடியோக்களை வைத்து பொது நல வழக்குப் போட்டு எப்படியாவது பீ.ஜே.யை உள்ளே தள்ள வேண்டும் என்றேன். 

வக்காலத்தில் கையெழுத்துப் போட குறித்த நேரத்தில் மதுரைக்கு கம்பம் ஜபருல்லா போன்றவர்கள் வரவில்லை. ஆகவே 4 வக்காலத்து பேப்பர் வாங்கி விட்டு வந்தேன். 

மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு கம்பம் ஜபருல்லா வந்ததும் வக்காலத்து பேப்பரில் கையெழுத்து வாங்கினோம். இவர் தான் ரைசுத்தீன். அவரது கொள்கையில் நமக்கு உடன்பாடு கிடையாது. அவரை வைத்து என்ன பயன் பெற முடியுமோ அதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிமுகப்படுத்தினேன்.. 

வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைப்படி  பொது நல வழக்கு போட முடியாமல் போனதற்கு காரணம். காமில் பணம் வாங்கி விட்டு வாக்களித்தபடி 3 ஆடியோக்கள் தராததும். தந்த ஒரு ஆடியோவும் சரி இல்லை என்பதும் தான். 

மத்திய அமைச்சர் மேனகா காந்தி வரை சந்திக்க ஏற்பாடு செய்து. ஆடியோவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுக்க என பல்வேறு ஏற்பாடுகள் செய்தும் பேரம் பேசியபடி காமில் 3 ஆடியோக்கள் தராதது. அது மட்டுமன்றி தந்த ஒரு ஆடியோவும் கோர்ட்டிலும் மினிஸ்ட்ரியிலும் நிற்காது என்றும் ஆகி விட்டது. 

பேரம் பேசியபடி பணம் வாங்கிக் கொண்டு கோர்ட் விஷயத்தில் ஒத்துழைக்காத இந்த ஜிகாத்திகள் தான்பீ.ஜ.யை கொலை செய்ய என்னை அணுகினார்கள்.

இந்த உண்மையை நான் சொன்னதும். இலாஹி பொய் சொன்னதாக ஜிகாத் கமிட்டி காமில் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி இலாஹி சத்தியம் செய்வாரா?  என்று  கேட்டுள்ளார்.


பீ.ஜ.யை கொலை செய்ய 2002ல் இருந்து என்னை பலரும் பல முறை அணுகி இருக்கிறார்கள். காமிலோடு கள்ள உறவில் இருக்கும் கள்ள தவ்ஹீதிகளாக இருந்தால்  2002ல் இருந்து அணுகியவர்களை  மனதில் கொண்டு பொய்  சத்தியம் செய்து  ஏமாற்றி  இருப்பார்கள்.

பீ.ஜ.யை கொலை செய்ய ஜிகாத்திகள்  என்னை அணுகினார்கள் என்று நான் இப்பாழுது சொல்லி உள்ளது என்னைப் போன்றவர்கள் கொடுத்த  காசுக்காக ஆடியோ  வெளியிட்ட  பிறகு  நடந்தவைதான்.

பணத்திற்காக  ஆடியோ வெளியிட்ட அல்லாஹ்வின் சாபத்துக்குரிய கூட்டத்தைச் சார்ந்தவர்களில் ஒருவர்.  இன்றும் காமில் அணியில் இருப்பவர். லாட்ஜுக்கு வந்து என்னை சந்திப்பார்.  அவரது ஆபீஸுக்கு கூட்டிப் போவார்.   லாட்ஜ் போடாதீர்கள் என்று கூறி அவரது உறவினர் வீட்டில் தங்க வைப்பார்.

அப்படிப்பட்டவர்,  அன்றைய தினம்  லாட்ஜ்,  வீடு  வேண்டாம்.  போனில் பேச  முடியாது. நேரில்தான் பேச முடியும் என்று கூறி ஒரு ரோட்டுக்கு வரச் சொன்னார். சாலை ஓரத்தில் நின்று பேசினோம்.

பீ.ஜே. காரியத்தை முடிக்க பணம் வேண்டும்.  3 மாதம் சென்னையில் தங்கி இருந்து செய்ய வேண்டிய பணி அது. அத்தோடு பீ.ஜே. பைலை குளோஸ் பண்ணி விடுவோம், ஒரேயடியாக முடித்து விடுவோம்.  இப்படி  மூடலாகப் பல வார்த்தைகளைச் சொன்னார். ஓபனாகச் சொல்லவில்லை.

கொலை செய்யப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு ஒரு முறை இரண்டு பக்கமும் திரும்பி பார்த்து விட்டு மவுனம் காத்தார்.  தெளிவாகச் சொல்லுங்கள் என்றதும். புகை மூட்டம் போடப் போகிறோம். புகை மூட்டம் போட்டால் எல்லாம் தானாக வெளியே வந்து முடிந்து விடும் என்றார். இந்த பரிபாஷை எனக்குப் புரியவில்லை.

அதை ஜிகாத் கமிட்டி காமிலிடம்  சொன்னேன். ஜிகாத் கமிட்டி காமில்  விசாரித்து விட்டு, அது  சட்ட விரோத செயல் என்றார். என்ன செயல் என்று அவர்  சொல்லவில்லை.

இன்னொரு   ஜிகாதி  தந்த விளக்கம்.  புகை மூட்டம் எப்படி வரும்?  வெடி குண்டு போட்டால் புகை மூட்டம் வரும். ஒரு மனிதன் மீது வெடி குண்டு வீசினால் உடலுக்குள் உள்ள குடல் எல்லாம் தானாக வெளியே வந்து விடும் என்றார்.


மற்றுமொரு ஜிகாத்தி தெளிவான வார்த்தையில் சொன்னார்.  நீங்கள் சொல்லுங்கள்  நாங்கள்  பீ.ஜே.யைக் கொலை செய்து விடுகிறோம் என்று.

நான், எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று கூறி விட்டேன். இந்தச் செய்திகளை பொய் என்று கருதுபவர்கள் எனக்கு எதிராக  விரும்பியபடி துஆ கேட்டுக் கொள்ளட்டும்.

யா  அல்லாஹ் பீ.ஜே. அவர்களை கொலை செய்ய ஜிகாதிகள் என்னை தொடர்பு கொண்டது உண்மை என்று உன் மீது சத்தியம் இட்டுக் கூறுகிறேன்.

பணத்திற்காக ஆடியோ வெளியிட்ட பின். அந்த ஆடியோவைக் காரணம் காட்டி  பீ.ஜே.யை  கொலை செய்ய என்னிடம்  பண  உதவி கேட்டது உண்மை.

ஆகவே  யா அல்லாஹ் இதைப் பொய்ப்படுத்தக் கூடிய  காசுக்காக ஆடியோ வெளியிட்ட காமில் கூட்டத்தார் மீதும் அவர்களை ஆதரிக்கக் கூடிய ஒவ்வொருவர் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை  கூண்டோடு  அழித்தொழிப்பாயாக  ஆமீன்.

இது போன்றவற்றை வைத்துக் கொண்டு  ஆடியோ விஷயத்தில்  சத்தியம் செய் என்று காசுக்காக ஆடியோ வெளியிட்ட காமில் அவரது கூட்டத்தாரை ஏவி  விட.  பலர்  என்னிடம் சத்தியம் செய்யுங்கள் என்னிடம் சத்தியம் செய்யுங்கள் என்று  ஒவ்வொருவராக வருகிறார்கள்.

பீ.ஜே.யை  கொலை செய்வது சம்பந்தமான இந்தப் பிரச்சனை எனக்கும் காசுக்காக ஆடியோ வெளியிட்ட கள்ள ஜிகாதிகளுக்குமானது. இதை ஒட்டி என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காசுக்காக ஆடியோ வெளியிட்டவர்கள்  மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சத்தியத்தின் மூலம் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது.

காமில் சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா ஆகியோர் உதவி கேட்டு ஹோட்டலுக்கு வந்தார்கள். அது பற்றி காமில் பினாமி கம்பம் ஜபருல்லா எழுதிய பொய் இணைப்பில் உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்.  

அதை காமில் சம்பந்தி பாத்திமா  இஸ்மாயில் அவர்களுக்கு அனுப்பினேன், அவர்கள் தந்த பதில். ஆங்கிலத்தில் உள்ளது.

சரி பாய்.  பிரச்சினைகள் இல்லை . அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சிரமங்களிலிருந்து பாதுகாக்கட்டும். தயவு செய்து உங்கள் சொந்த சகோதரி மற்றும் குடும்பத்தினரைப் போல அல்லாஹ்வின் பொருட்டு அடக்கத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் எங்கள் இமானை பலப்படுத்துவானாக.

இதற்கு என்ன அர்த்தம், காமில் மாதிரி நான் எழுதி விடக் கூடாது என்பதே. நாம் அப்படி எழுத மாட்டோம். அவர்கள் கண்ணியமான குடும்பத்தினர். காமில் மாதிரி அல்ல.

இந்த விஷயத்தில் காமில் பினாமி கம்பம் ஜபருல்லா சொன்னது உண்மை என்றால். இலாஹி சொல்லி உள்ளது பொய் என்று. காமில் சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா. காமில் மகனார் ஏஜாஸ் அஹ்மத் காசிம் ஆகியோர் சாபம் கேட்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும்.

இஜாஸ் காமில் எதற்கு சாபம் கேட்டு சத்தியம் செய்ய வேண்டும்? எனில், உண்டியல் வியாபாரியிடமும் உண்டியல் வியாபார கணக்கை எப்படி எழுதுவது என்பது சம்பந்தமாக ஆடிட்டரிடமும் இஜாஸ் காமில் மாமனார் போனில் பேசும்போது உடன் இருந்தவர் அவர். ஆகவே அவரும் சாபம் கேட்டு சத்தியம் செய்ய வேண்டும்.  

அவர்கள் சாபம் கேட்டு பொய் சத்தியம் செய்து விட்டால். யா அல்லாஹ்! இதில்  பொய் சத்தியம் செய்துள்ள காமில் சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா, இஜாஸ், காமில், கம்பம் ஜபருல்லா குடும்பத்தார் மீதும் மற்றும் காமில் அணியை  ஆதரிக்கக் கூடிய அத்தனை பேர் குடும்பத்தார் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்துடன் அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று நான் துஆ கேட்பேன். காமில் கூட்டம் அவர்கள் விருப்பப்படி துஆ கேட்டுக் கொள்ளட்டும். 

அனஸ் பாயை ஏமாற்றி அவர் அக்கா மகளான MBBS டாக்டரை உனது மகனுக்கு கட்டியதோடு அல்லாமல்.  அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் நீ பிஸினஸ் செய்வதாக ஆட்டய போட்டுள்ளாய். திருடிய பணத்தை பதுக்கிய நீ எல்லாம் தியாகி போராளி தூ.....  இப்படி ரைசுத்தீன் எழுதி உள்ளது பொய் என்று அனஸ் பாய், காமில் சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா ஆகியோர் சாபம் கேட்டு சத்தியம் செய்யட்டும்.  சத்தியம் செய்து விட்டால்.

யா அல்லாஹ்! இதில்  பொய் சத்தியம் செய்துள்ள அனஸ் பாய், காமில் சம்பந்தி இஸ்மாயில், பாத்திமா குடும்பத்தார் மீதும் காமில் அணியை  ஆதரிக்கக் கூடிய அத்தனை பேர் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ்!  உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்துடன் அழித்தொழிப்பாயாக ஆமீன் என்று நான் துஆ கேட்பேன். காமில் கூட்டம் அவர்கள் விருப்பப்படி துஆ கேட்டுக் கொள்ளட்டும். பிரச்சனை முடிந்து விடும். 



ஆடியோ விஷயம் அப்படி அல்ல. பணம் கொடுத்து  வெளியிட வைக்கப்பட்ட ஆடியோதான் ஆதாரம் என்று கூறி  பீ.ஜே.யை  TNTJயிலிருந்து நீக்கியதாக அறிவிக்க  வைத்தோம், அறிவித்தார்கள்.

அதற்கு முன்னதாக அவரைச் சுற்றி பல வகையில், பல வழிகளில்  சூழ்ச்சிகள்  செய்து நெருக்கடி கொடுத்தோம். நாம் செய்த சூழ்ச்சிகளால்  பீ.ஜேராஜினாமா செய்து விட்டு போய் விட்டார். 

பீ.ஜே. தானாக ராஜினாமா செய்து விட்டு போனதாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தோம். அதனால் ன்னால் இயக்கப்பட்டவர்கள். என்னிடம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக காசு வாங்கிக் கொண்டு செயல்பட்ட விலை மாடன்கள் மூலம் நெருக்கடி கொடுத்தோம். விலை மாடன் என்று நான் எழுதியதும் இப்பொழுது பலருக்கு பொறி தட்டி இருக்கும் புரிந்திருக்கும்.

பீ.ஜேததஜவிலிருந்து நீக்கப்பட்டார் என்று இருக்க  வேண்டும். சிறு தவறு செய்து விட்டார் என்பது இருக்கக் கூடாது. வேறு எந்த மாதிரி வாசகங்கள் இருக்க வேண்டும்? மீண்டும் பொறுப்புக்கு வர முடியாத அளவுக்கு நீக்கம் இருக்க வேண்டும் என்ற வாசகமெல்லாம் யாருடையது? 

TNTJ தலைமை உடையது அல்ல. பீ.ஜெ.யை எதிர்த்து களம் கண்ட எங்களுடையது. TNTJ தானாக துாக்கி எறிந்தது என்று கூறுபவர்கள் மகா மகாப் பொய்யர்கள்.


TNTJயினர் பி.ஜே.யிடம் அந்தரங்கத்தில் கெஞ்சினார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் பி.ஜே. எழுதியதையெல்லாம் அறிஞர்குழு என போட்டுக் கொள்ள பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 

துாக்கி எறிந்தவர்களால் பேச்சு வார்த்தை நடத்த முடியுமா? 
துாக்கி எறியப்பட்டவர்தான பேச்சு வார்த்தைக்கு  உடன்பட்டிருப்பாரா?

அதே ரமழானில் ததஜ தலைமையில் சூரத்துல் யாஸீனுக்கு தப்ஸீர் செய்த அப்துல் கரீம் பீ.ஜே.யிடம்  குறிப்புகள் வாங்கி பேசினாரா இல்லையா? 

இதுதான் துாக்கி எறிந்தவர்கள் செய்யும் செயலா? துாக்கி எறிந்தவர்களுக்கு யார் தான் குறிப்பு கொடுப்பார்கள்?


இன்று பீ.ஜே. பயான் செய்வதற்கு எதிர்ப்பாக உள்ளவர்கள் அன்று பீ.ஜே.யிடம் கள்ளத்தனமாக குறிப்புகள் வாங்கி பயான் செய்தார்களா? இல்லையா?

அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காமல் வைத்திருந்தார்கள்

எங்களுக்கு தவ்ஹீதை சொல்லிக் கொடுத்து நரகத்தை விட்டு காப்பாற்றியவர் பீ.ஜேஎன்றார்கள். 

நாங்கள் என்றுமே பீ.ஜேபக்தர்கள்தான்அவர் ஒன்றும் ஷிர்க்கைவிட பெரும் பாவம் செய்யவில்லை என்று எழுதினார்கள். இவர்கள் தான் துாக்கி எறிந்தவர்களா? 

மூன்று மாதங்களாக இதைத்தானே ததஜவில் உள்ள ஒவ்வொருவரும் காப்பி பேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்

பீ.ஜே. விலகிய பின் நடந்த TNTJ பொதுக்குழுவில் காட்டப்பட்டது கள்ளக் கணக்கு என்று முதன் முதலில் சொன்னவன் நான்.

அதன் பிறகு TNTJ பொதுக்குழுவில் காட்டப்பட்ட கள்ளக் கணக்கு மற்றும் பண மோசடிகளைப் பற்றி பீ.ஜே. வாய் திறந்தார். அதுவரை நரகத்தை விட்டு காப்பாற்றிய பீ.ஜே. என்றவர்கள் அவரை  இழிவுபடுத்தி எழுத ஆரம்பித்து விட்டார்கள்அப்படியானால் இவர்கள் யார்?

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் TNTJ  தாங்களாகவே தூக்கி எறிந்தோம் என்ற  பொய்யை அரங்கேற்றினார்கள். அப்பவே 2018 சொன்னோம்.
  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் TNTJ  தாங்களாகவே தூக்கி எறிந்தது என்பது உண்மையானால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன். 

பல வகையில், பல வழிகளில்  நாம் கொடுத்த கடுமையான நெருக்கடி தான் காரணம் என்றால் TNTJ யில் உள்ள அத்தனை பேர் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை  இறக்கி  கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். என்று எழுதி. TNTJ யினர் சாபம் கேட்கத் தயாரா? என  2018ல் இருந்து சவால் விட்டு வருகிறோம். 

அன்றிலிருந்து நான்  எனது பதிவுகளில் TNTJக்கு எதிராக பதிவு போட்டு வந்தேன். TNTJயினருடன்  கள்ள உறவில் இருந்த காமில் TNTJக்கு ஆதரவாகவும் பதிவு போட்டு வந்தார். 

TNTJ தலைமை தாங்களாகவே தூக்கி எறிந்தது என்று சொல்லும் பொய்யர்கள் அனைவர் வாயிலும் புழு புழு வாக வரட்டுமாக ஆமீன்  என்று TNTJயினர் துஆ கேட்கத் தயாரா?  

இந்த மாதிரியெல்லாம் 2018ல் இருந்து சவால் விட்டு வருகிறேன். அல்தாபிக்கு எதிராக முபாஹலா சாபம் கேட்க சுற்றுலா செல்வது போல் வந்த TNTJயினர் இந்த சாபத்தை இருந்த இடத்திலேயே இருந்து கேட்க என்ன தயக்கம்? 

பணம் கொடுத்து ஆடியோ வெளியிட வைத்தது சரியா?  இதற்கு முதலில் விடை வேண்டும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த முடிவுக்கு வரக்  காரணமே டொன்டி (20)கள் கொடுத்த பத்வாதான்.

2002ல் நம்பத் தகுந்தவரிடம் பழுலுல் இலாஹி பெருந்தொகை வாங்கினார் என்று நோட்டீஸ் போட்டுள்ளீர்களே உண்மையா? என்று கேட்டதற்கு. பெண்கள் மதரஸாவில் தப்பாக நடந்ததாக லுஹாவால் குற்றம் சாட்டப்பட்ட  J.S. ரிபாயி, M.S. சுலைமான்  M. I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற இன்னும் பல டொன்டி  தாஇகளும்  லுஹாவும் சொன்ன பதில்.

தாஇகளை இலாஹி இழிவுபடுத்தி விட்டார். அதனால் எங்களுக்குள் சண்டை. போரில் (சண்டையில்)  பொய் சொல்லலாம் அல்லவா? ஆகவே தான் அந்த பொய்யான  நோட்டீஸ் என்று பதில் கூறினார்கள்.

ஆம் எனக்கு வழி காட்டி விட்டார்கள். ஆனால் நான் எதையும் இட்டுக்கட்டவில்லை. லுஹா, J.S. ரிபாயி போன்ற  டொன்டி மவுலவிகள் கூறிய குற்றச்சாட்டுகளையே கையிலெடுத்தேன்.

நான் உருவாக்கிய பள்ளியில் இருந்து,  நான் உருவாக்கிய கூட்டமைப்பை (இன்றைய TNTJயை) விட்டு,  நான் காத்து வந்த துபை  IACயை  விட்டு பொய்யான குற்றச்சாட்டுக் கூறி வெளியேற்றினார்கள்.

அதற்கு  TNTJவை  வளர்த்த PJ    தான் காரணம். எந்த மவுலவிகளை காப்பாற்ற பீ.ஜே. எனக்கு எதிராக நோட்டீஸ் போட்டாரோ அதே மவுலவிகள் கூட்டத்தைக் கொண்டு அதே வழியில் பதிலடி கொடுத்து விட்டேன்.

பத்வா தந்தது டொன்டி(20)கள் கூட்டம்தான். துபையில் பீ.ஜே. நிகழ்ச்சிகளை தடை செய்து விட்டு. ஏன் தடையானது என்பதற்கு நான் பரப்பி விட்ட பொய்க் காரணங்களை நம்பி அவர்களே  சொல்லவும் உணர்வில் எழுதவும் செய்தார்கள். இது  டீம் ஒர்க் செய்தால் பீ.ஜே.யை  வீழ்த்தி விடலாம் பழிக்குப் பழி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

நாம் வளர்த்த நிறுவனங்களில் இருந்து  வெளியேற்றியது போல் அவர் வளர்த்த   TNTJயை) விட்டு  வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன்.

ஆடியோ வந்தது. உண்மை என்று நம்பி அதைக் கொண்டு பீ.ஜே.யை சிறையில்  தள்ள கடும் முயற்சிகள் செய்தேன். ஆடியோ வெளியிட்டவர்கள் தான் பின் வாங்கி ஓடினார்கள். கோர்ட் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவில்லை.

28 நிமிடம் மாதிரி 3 அடியோக்கள் இருக்கிறது 2 லட்சம் என்ற ஜிகாத் கமிட்டி காமில் தனது  மனைவி ராபியா பெயருக்கு ஒரு லட்சம் அனுப்பச் சொன்னார். எதற்காக பணம் அனுப்பினேன்? ஆடியோவை  போலீஸில் கொடுத்து புகார் அளித்து  கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

3 ஆடீயோக்கள்  கைக்கு வரும் முன்பே ஜிகாத் கமிட்டி காமில் 3 ஆடீயோக்கள் தருவார் என்ற  நம்பிக்கையுடன் மேலப்பாளையம் போலீஸில் முன்னதாகவே கம்ளைண்ட் எழுதி கொடுத்தேன். அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் அவர்களை பொய்யர்கள் என்பதை புரிய வைத்தது.

ஜிகாத்திகள் என்ற பெயரால் அடுத்தவர்கள் வீடு புகுந்து திருடியவர்கள்.

பிக்பாக்கட் அடித்தவர்கள்,

வழிப்பறி கொள்ளையர்கள்.

இது  தான் காசுக்காக ஆடியோ தந்தவர்கள்  தரம்  என அறிந்தபொழுது ச்சீ என்று ஆகி விட்டது.

ஜிகாத் கமிட்டி காமில்  50 ஆயிரம் அவருக்கு அனுப்பினேன். 50 ஆயிரம் இவருக்கு அனுப்பினேன் என்பது தத்லீஸா இல்லையா?

அவர்கள் யார் என்று தெரிந்தால்தானே சமுதாயம்  அவர்கள் தரத்தை அறிந்து முடிவு செய்யும்.

அவர் போட்டுள்ள 50+50  காசுக்காகத்தான் பலரால் ஆடியோ வெளியிடப்பட்டது என்பதற்குரிய  ஆதாரமாகும்.

நான்  மட்டுமல்ல பலரும் பீ.ஜே.க்கு எதிராக ஆடியோ வெளியிட பணம் கொடுத்துள்ளார்கள்.

நான் கொடுத்த காசுக்காக  செயல்பட்டவர்களில் ஒருவரான வேலுார் இப்றாஹீம் தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக பதிவு போட்டார்.  இரண்டு நாளில் வீடியோ வெளியிடுவேன் என்றார்.

நான் போன் போட்டு கேட்டதற்கு  வீடியோவெல்லாம் இல்லை  என்றார். இலங்கை அமீர்ஷாஹிதும் வீடியோ இருப்பதாகக் கூறினார்.  ஆக எல்லாமே பொய் என்றாகி விட்டது.


குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான வழிகெட்ட கொள்கை உடையவர்கள்  தங்கள் கொள்கையை நிலைநாட்ட வேறு வழியின்றி இதை  துாக்கிப் பிடித்தார்கள்.

ஜிகாத் கமிட்டி காமிலும் வரம்பு மீறி கொள்கைக்கு எதிராக பிரச்சார களம் கண்டார். தனி நபர் சந்திப்புகள் செய்தார்.   உண்மை தானாக வெளி வந்தது.

பொது விசாரணைக்கு நான் தயார் என்று சொல்லும்  பொறம் போக்குகளிடம் நிரூபிப்பதால் எந்த பயனும் கிடையாது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால்தான் நீக்கியதாக, தாங்களாகவே தூக்கி எறிந்ததாகச் சொல்லும் TNTJ தலைமையில்  வர வேண்டும். அவர்கள் அணியில் ஆடியோ உண்மை என்பவர்கள்  யார் வேண்டுமானாலும்  வரட்டும்.

ஆடியோ பொய் என்பவர்கள் NTF அல்லது  பீ.ஜே.அணியில் வரட்டும். இரண்டு அணி தான் இருக்க வேண்டும்.   இதுதான் முடிவு 

நான் பீ.ஜே.யை சிறையில் தள்ள செய்த முயற்சிகள்.. போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தது.. குரல் டெஸ்ட்டுக்கு போனது என அனைத்து விபரங்களையும் வெளியிட்டு காமில் TNTJ கூட்டணி முகத்திரையை கிழிப்பேன். முடிவு வந்து விடும். 

மீண்டும் சொல்கிறேன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் TNTJ  தாங்களாகவே தூக்கி எறிந்தது என்பது உண்மையானால் அவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன். பொய் என்றால் TNTJ யில் உள்ள அத்தனை பேர் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை  இறக்கி  கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.