ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளரே நீங்கள் ஏன் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்?


கடித எண் 10J.S.ரிபாஈ அவர்களே அல்லாஹ்வுக்காக என்றால் அது மக்களுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக என்பதுதான். அல்லாஹ்வுக்காக உருவாக்கிய ரய்யான் பள்ளியை உங்களுக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக பயன்படுத்தி ஆக்கிக் கொண்டீர்கள். அது போல் உங்களுக்கு பெருநாள் திடல் வேண்டும் என்பதற்காகவும் ரய்யான் பெயரால் தனி திடல் உருவாக்கச் செய்தீர்கள்.

நானும் சேர்ந்து உருவாக்கிய பசார் திடல் இருக்க, அல்லாஹ்வுக்காக என்று திடலை உருவாக்காமல்  J.S.ரிபாஈ என்ற தனி மனிதருக்காக ரய்யான் பெயரால் தனி திடல் உருவாக்க முயன்றதாலும்தான் எதிர்த்தோம் என்றேன்.

அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன? பசார் திடலில் 10 ஆண்டுகளாக நான்தான் தொழுகை நடத்தி வந்தேன். அதை த.மு.மு..வினர் எடுத்துக் கொண்டார்கள். அதில் போய் சண்டையிட வேண்டாம் என்றுதான் தனியாக திடல் ஏற்பாடு செய்தோம் என்றீர்கள்.

ஆக J.S.ரிபாஈ என்ற தனி மனிதருக்காகத்தான் ரய்யான் பெயரால் தனி திடல் தொழுகை உருவாக்கினீர்கள் என்பதை J.S.ரிபாஈயாகிய நீங்களே உங்கள் வாயால் 2 பேர் சாட்சியாக ஒப்புக் கொண்டு விட்டீர்கள்.

இதன் மூலம் அல்லாஹ்வுக்காகமக்களுக்காக என்று நாமியா ஹசன், காசிம் பிர்தவ்ஸி போன்றவர்கள் சொன்னது பொய் என்றும் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். அந்தப் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று சொன்ன நான், அடுத்து என்ன கேட்டேன்?
------------------------------------------------------------------------------------
J.S. ரிபாய் அவர்களே! பசார் திடலில் 10 ஆண்டுகளாக நான்தான் தொழுகை நடத்தி வந்தேன் என்று சொன்னீர்களே அந்த திடல் தொழுகையை உருவாக்கியது யார்? நீங்களா? நீங்கள் சொன்ன 10 ஆண்டுகளுக்கு முன் TNTJ ஹஜ்ஜுப் பெருநாளை ஒரு நாள் பிற்படுத்தியது அப்பொழுது தவ்ஹீது சகோதரர்கள் என்னை தொடர்பு கொண்டு திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள்.

.மு.மு..வில் இருந்த உங்களை தொடர்பு கொண்டு த.மு.மு.. சார்பில்  பசார் திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யச் சொன்னேன். நீங்கள் ஏற்பாடு செய்யவில்லை. இன்று கிழக்கு மாவட்ட தலைவராக உள்ள (காசியார்) ரசூல் அவர்களிடம் சொல்லுங்கள் என்றீர்கள்.

காசியார் ரசூல் அவர்களை தொடர்பு கொண்டு த.மு.மு.. சார்பில்  பசார் திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யச் சொன்னேன் செலவு ஆகுமே என்றார்கள். செலவு பற்றி கவலைப்படாதீர்கள். தொழ வருபவர்களிடம் வசூல் செய்து விடலாம். பற்றாக்குறை எவ்வளவு ஏற்பட்டாலும் நான் தருகிறேன் என்றேன். அட்வான்ஸ் பணமும் அனுப்பிக் கொடுத்தேன்.

எனது முயற்சியில் காசியார் ரசூல் அவர்கள் த.மு.மு.. சார்பில்  பசார் திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்தார்கள். த.மு.மு..வில் இருந்ததால் நீங்கள் தொழுகை நடத்தினீர்கள். இதுதான் உண்மை என்றேன்.
-----------------------------------------------------------------------------------
J.S. ரிபாய் அவர்களே 3 மாதம் டயம் தந்தப் பிறகு மற்றவர்களும் என்னிடம் பேச விரும்பியதாகச் சொன்னீர்கள். 15-07-2018 ஞாயிறு அன்று அனைவரும் இருந்து பேசுவதாகக் கூறி அன்று முழுவதையும் காலை மதியம் மாலை இரவு என நேரத்தை கடத்தி ஏமாற்றினீர்கள். ஆகவே 2 மவுலவிகளும் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்றார்கள்.

2002 வரை எவ்வித ரிகார்டிங் சாதனங்களும் இன்றி மேனுவலாக போன் ரிகார்டு செய்து வந்த நான். 2002ல் உங்களைப் போன்ற தவ்ஹீது மவுலவிகள் பற்றி லுஹா சொன்ன பிறகு ரிகார்டு செய்வதை விட்டு விட்டேன். 2018ல் கம்பம் ஜபருல்லாஹ் வற்புறுத்தலால் ரிகார்டிங் சாப்ட்வேர் போட்டேன்.

உங்கள் விபச்சாரம் சம்பந்தமாக உங்களிடம் போனில் பேசினால் அது ரிக்கார்டு ஆகி விடும். மனித இயல்புப்படி அதை பரப்பி விடுவோம் என்று அஞ்சிய நான் தங்களிடம் தனியாகப் பேச உங்கள் வீட்டுக்கு வந்தேன். நீங்கள் வீட்டில் இல்லை என்றும் போனையும் வீட்டில்  வைத்து விட்டு போய் விட்டார் என்றும் உங்கள் வீட்டில் சொன்னார்கள்.
=====================================================================
உங்களுக்கு நான் செய்த நன்மை பற்றிய ஆதாரத்தை மட்டும் காட்டவே இந்த சந்திப்பு 10 நிமிடம் மட்டும் ஒதுக்கினால் போதும் வெளியில் நின்றே பேசணும் என்றாலும் சரியே என 15.07.18 மாலை 6.18க்கு வாட்ஸப்பில் செய்தி வைத்தேன். நாளை (16.07.18) மாலை சந்திப்போம் என பதில் தந்தீர்கள்.

நாளை (16.07.18)  மாலை சந்திப்போம் என்று சொல்லி விட்டு 16.07.18 அன்று மாலை 5.48.க்கு செல்லை ஆப் செய்து வீட்டிற்குள் இருந்து விட்டீர்கள் என்றே எண்ணினேன். நான் உங்கள்  வீட்டு வாசலில் காத்து நின்று திரும்பினேன். 


ஞாயிறு அன்று கல்யாணத்திற்கு போனதாக சொன்ன நீங்கள்  இரவு 9 மணிக்கு வந்ததாக சொல்லிவிட்டு சந்திப்புக்கு டைம் இல்லை என்று சொல்லி விட்டீர்கள்.  

நான் உங்களிடம்   காட்ட இருந்த உங்கள் விபச்சார ஆதாரங்களை காண மறுத்து விட்ட நிலை. ஆகவே நான் யு.ஏ.இ. புறப்படும் நேரத்தில் உங்கள் சார்பில் இரண்டு பேரை அனுப்பி வைத்தீர்கள்.

ரய்யான் என்ற பெயரை நான் தேர்வு செய்து சொல்லி இருக்க வேறு யாரோ சொன்னதாக நீங்கள் சொன்னீர்கள் அல்லவா அது போல  அசனும் அஷ்ரபும் எனது திட்டத்தில் த.மு.மு.க.வினருடன் சேர்ந்து உருவாக்கிய பள்ளியை ரிபாய் திட்டத்தில் உருவான பள்ளி என்றும் அதில் நான் வந்து இணைந்ததாகவும் வாதம் வைத்தார்கள்.

நீங்கள் உருவாக்கும் பள்ளிக்கு நான் எப்படி அட்வான்ஸ் அனுப்பி இருப்பேன்? நான் உங்களை அழைத்துக் கொண்டு சவூதி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள உதவி பெறுதல் சம்பந்தமாக பல மவுலவிகளிடம் சென்று பேசியது. எல்லாம் கூலிக்கு மாரடிப்பவர்களை உருவாக்குவதற்கு அல்ல. கூலிக்கு மாரடிக்க வந்தவர்களுக்கு இது தெரியாது.

அசனிடம் உங்கள் விபச்சார  ஆதாரங்களைக்  காட்டாமல் வேறு ஆதாரங்களை காட்டினேன். என்னை சந்திக்க முடியாத உங்கள் நிலைப்பாடு அல்லாஹ்வின் நாட்டம்.

உங்கள் கூற்றுப்படி நீங்கள் நிர்வாகிகள் என்று கூறியவர்களுடன் என்னை சந்தித்து இருந்தால் ரிபாஈக்கு தலைவர் பதவி வேண்டும். ரிபாஈயை தலைவர் தலைவர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் ரிபாஈயிடம் எஞ்சி நிற்கிறது. தஃவா நோக்கம் அறவே இல்லை என்று உங்களைப் பற்றி ஒரு நிர்வாகி கூறியதை நேரில் வைத்து கேட்டது போல், உங்கள் விபச்சாரம் பற்றி பேசிய நிர்வாகியை நேரில் வைத்து கேட்டிருப்பேன். நீங்கள் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்.
 நீங்கள் ஏன் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்?

கடித எண் 9. 


இது எப்படி குத்திக் காட்டியதாக ஆகும்?


கடித எண் 7.

பொழப்புக்காக ம.ஜ.க.வில் சேர்ந்த ரிபாஈ அவர்களே!



கடித எண் - 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?

கடித எண் 4

J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடிதம் -3 JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.