தங்கள் பெயரைக் கூறத் தயாராக இல்லாதவர்கள் தந்த தகவல் வாபஸ்


முனீரா பெண்கள் கல்லுாரி சீனி அப்பாஸ் பாகவி சம்பந்தமாக சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் பலர் நம்மிடம் சொன்னதன் அடிப்படையில் சில செய்திகளை பதிவு செய்தேன். சீனி அப்பாஸ் பாகவி மீது குற்றச்சாட்டுக்கள் கூறிய  சுன்னத் ஜமாஅத் பொது மக்களும் சரி ஆலிம்களும் சரி எங்கள் பெயரை சொல்லி விடாதீர்கள் என்று உறுதி வாங்கிக்  கொண்டுதான் குற்றச்சாட்டுக்களை கூறினார்கள். அதை வெளிட்ட நான் எந்த அமைப்பு பெயரையும் பயன்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் காவல்துறையில் கம்ளைண்டும் செய்தேன்https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post.html
இதன் பிறகு பல மவுலவிகள் இது பொய் என்று கூறினார்கள். குறிப்பாக T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி, அப்துல்லாஹ் பத்ரி போன்ற மவுலவிகள்  தங்கள் பெயரை குறிப்பிட்டு சீனி அப்பாஸ் பாகவி விஷயமாக நற்சான்று கூறினார்கள். நாங்கள் நற்சான்று கூறியதை எங்கள் பெயரைக் கூறி நீங்கள் வெளியிடலாம். குற்றச்சாட்டுக் கூறியவர்கள். அவர்கள் பெயரை வெளியிட சம்மதிப்பார்களாஎன்றனர்

சீனி அப்பாஸ் பாகவி மீது குற்றச்சாட்டுகள் கூறிய ஆலிம்களும் ஆலிம் அல்லாதவர்களும் எங்கள் பெயரைக் கூறாதீர்கள் என்று கூறி விட்டனர். ஆகவே தங்கள் பெயரைக் கூறத் தயாராக இல்லாதவர்கள் தந்த தகவல் அடிப்படையில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறுவதுடன் எனது பதிவுகளிலிருந்தும் நீக்கி விட்டேன். மேலும் காவல்துறையில் கொடுத்த கம்ளைண்டையும் வாபஸ் பெற்று விட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.